Wednesday, June 12, 2019

செரிமானத் துணைவன் அக்னி! - அநுசாஸனபர்வம் பகுதி – 92

Agni helping digestion! | Anusasana-Parva-Section-92 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 92)


பதிவின் சுருக்கம் : சிராத்தம் செய்த முனிவர்கள்; செரிமானம் அடையாத தேவர்களும், பித்ருக்களும்; துணை செய்த அக்நி; ஹோமத்தோடு சிராத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "மேற்குறிப்பிட்ட வகையில் நிமி செயல்பட்டபிறகு, விதிகளில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி (சிராத்தம் என்றழைக்கப்படும்) பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையிலான வேள்வியைப் பெருமுனிவர்கள் அனைவரும் செய்யத் தொடங்கினர்.(1) கடமைகள் அனைத்தையும் செய்வதில் உறுதியாகவுள்ள முனிவர்கள் சிராத்தங்களைச் செய்து, புனித நீர் காணிக்கைகளை (பித்ருக்களுக்குக்) கவனமாக அளிக்கத் தொடங்கினர்.(2) எனினும், அனைத்து வகை {வர்ண} மனிதர்களாலும் (பித்ருக்களுக்கு) அளிக்கப்படும் காணிக்கைகளின் விளைவாக, அவ்வுணவைப் பித்ருக்கள் செரிக்கத் தொடங்கினர்.(3) விரைவில் அவர்களும், தேவர்களும் செரியாமையால் பீடிக்கப்பட்டனர். உண்மையில், அனைத்து மனிதர்களும் அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கிய உணவுக் குவியல்களால் பீடிக்கப்பட்ட அவர்கள் {பித்ருக்களும், தேவர்களும்} சோமனிடம் சென்றனர்.(4)


சோமனை அணுகிய அவர்கள், "ஐயோ, சிராத்தங்களில் எங்களுக்கு அளிக்கப்படும் உணவின் விளைவால் உண்டான எங்கள் துன்பம் பெரிதாக இருக்கிறது. எங்கள் சுகத்திற்குத் தேவையானதை நீ விதிப்பாயாக" என்றனர்.(5)

அவர்களிடம் சோமன், "தேவர்களே, சுகமடைய விரும்புபவர்களே, நீங்கள் சுயம்புவின் {பிரம்மனின்} வசிப்பிடத்திற்குச் செல்வீராக. அவர் உங்களுக்கான நன்மையைச் செய்வார்" என்று பதிலளித்தான்.(6)

ஓ! பாரதா, சோமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்களும், பித்ருக்களும் மேரு மலைகளின் சிகரத்தில் அமர்ந்திருந்த பெரும்பாட்டனிடம் சென்றனர்.(7)

தேவர்கள், "ஓ! சிறப்புமிக்கவரே, வேள்விகளிலும், சிராத்தங்களிலும் எங்களுக்கு அளிக்கப்படும் உணவால் நாங்கள் பெரிதும் பீடிக்கப்படுகிறோம். ஓ! தலைவா, எங்களுக்கு அருள்புரிந்து எங்களுக்கான நன்மையைச் செய்வீராக" என்று கேட்டனர்.(8)

அவர்களுடைய சொற்களைக் கேட்ட சுயம்பு {பிரம்மன்} அவர்களிடம் மறுமொழியாக, "இதோ என்னருகில் அக்னி தேவன் அமர்ந்திருக்கிறான். அவனே உங்களுக்கான நன்மையைச் செய்வான்" என்றான்.(9)

அக்னி, "ஐயன்மீர், சிராத்தம் செய்யப்படும்போது, நமக்கு அளிக்கப்படும் காணிக்கைகளை நாம் சேர்ந்தே உண்போம். அக்காணிக்கைகளை என்னுடன் சேர்ந்து நீங்கள் உண்டால், அவற்றை எளிதிற் செரிப்பதில் வெல்வீர் என்பதில் ஐயமில்லை" என்றான்.(10)

நெருப்பு தேவனின் இச்சொற்களைக் கேட்ட பித்ருக்களின் இதயம் சுகமடைந்தது. இக்காரணத்தினாலேயே, ஓ! மன்னா, சிராத்தங்களில் காணிக்கை அளிக்கப்படும்போது, முதல் பங்கானது நெருப்பு தேவனுக்கு அளிக்கப்படுகிறது.(11) ஓ! மனிதர்களின் இளவரசே, சிராத்தத்தில் காணிக்கைகளின் முதல் பங்கு நெருப்பு தேவனுக்கு அளிக்கப்பட்டால், மறுபிறப்பாள வகையில் பிறந்த ராட்சசர்களால் அத்தகைய சிராத்தத்திற்கு எந்தத் தீங்கையும் செய்ய முடியாது[1].(12) சிராத்தத்தில் நெருப்பு தேவனைக் கண்டதும் ராட்சசர்கள் அதனைவிட்டுத் தப்பி ஓடுவார்கள். சிராத்த சடங்கென்பது, முதலில் பிண்டத்தை (இறந்துபோன) தந்தைக்கு அளிப்பதாகும். அடுத்ததாக மற்றொன்று பாட்டனுக்கு அளிக்கப்பட வேண்டும்.(13) அடுத்ததாக ஒன்று பூட்டனுக்கு {பெரும்பாட்டனுக்கு} வழங்கப்பட வேண்டும். இதுவே சிராத்த விதியாகும். ஒவ்வொரு பிண்டம் கொடுக்கப்படும் போதும், அந்தக் கொடையாளி குவிந்த கவனத்துடன் சாவித்திரி மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.(14) இந்த மந்திரமானது பித்ருக்களுக்குப் பிடித்தவனான சோமனிடமும் சொல்லப்பட வேண்டும். பருவகாலம் தொடங்கிய ஒரு பெண், அல்லது காதறுந்த ஒருவன் ஆகியோர் சிராத்தம் நடைபெறும் இடத்தில் இருக்க அனுமதிக்கப்படக்கூடாது. அதேபோல, சிராத்தம் செய்யும் மனிதனின் கோத்திரத்தைத் தவிர வேறு கோத்திரப்பெண்ணையும் அங்கே கொண்டுவரக்கூடாது[2].(15)

[1] "ராவணன் மற்றும் புலஸ்திய குலத்தில் பிறந்த பிற ராட்சசர்கள் பிரம்மராட்சசர்கள் அல்லது மறுபிறப்பாள வகையைச் சார்ந்த ராட்சசர்கள் என்று அறியப்படுகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்

[2] "இந்த நாள் வரையிலும் கூட, சிராத்தம் செய்பவரின் கோத்திரத்தைச் சார்ந்த அல்லது அவரது குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண்ணைத் தவிர வேறு யாரும் காணிக்கைக்கான அரிசியைச் சமைக்க அனுமதிக்கப்படுவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓர் ஆற்றைக் கடக்கும்போது ஒருவன் தன் பித்ருக்கள் அனைவரின் பெயர்களையும் சொல்லி அவர்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளிக்க வேண்டும். உண்மையில், வழியில் ஓர் ஆறு வரும்போது ஒருவன் தன் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளித்து அவர்களை நிறைவடைச் செய்ய வேண்டும்.(16) முதலில் தன் சொந்த குலத்தைச் சேர்ந்த மூதாதையருக்கு நீர்க்காணிக்கைகளை அளித்துவிட்டு, அதன் பிறகே (இறந்து போனவர்களான) தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அத்தகைய காணிக்கைகளை அளிக்க வேண்டும்.(17) ஒருவன் ஓர் ஓடையைப் பலவண்ணங்களிலான இரு எருதுகள் பூட்டப்பட்ட தேரில் கடக்கும்போதோ, ஓர் ஓடையைப் படகுகளில் கடக்கும் போதோ அவனுடைய பித்ருக்கள் நீர்க்காணிக்கைகளை எதிர்பார்க்கிறார்கள்.(18) இதையறிந்தவர்கள் எப்போதும் பித்ருக்களுக்குக் குவிந்த கவனத்துடன் நீர்க்காணிக்கைகளை அளிக்கின்றனர். ஒவ்வொரு தேய்பிறையிலும் வரும் அமாவாசை நாளில் ஒருவன் இறந்து போன தன் மூதாதையருக்குக் காணிக்கை அளிக்க வேண்டும்.(19)

பித்ருக்களிடம் அர்ப்பணிப்பு கொள்வதன் மூலம் வளர்ச்சி, நீடித்த வாழ்வு, சக்தி, செழிப்பு ஆகியன அனைத்தும் அடையத்தக்கவையாகின்றன. பெரும்பாட்டனான பிரம்மன், புலஸ்தியர், வசிஷ்டர், புலஹர்,(20) அங்கிரஸ், கிரது, பெரும் முனிவரான கசியபர் ஆகிய இவர்கள், ஓ! குரு குலத்தின் இளவரசே, யோகப் பேராசன்களாகக் கருதப்படுகிறார்கள்.(21) அவர்கள் பித்ருக்களாகவே கணக்கிடப்படுகிறார்கள். ஓ! ஏகாதிபதி, இதுவே சிராத்தம் குறித்த உயர்ந்த சடங்காகும். பூமியில் செய்யப்படும் சிராத்தங்களின் மூலம் ஒருவனுடைய குலத்தைச் சேர்ந்த, இறந்து போனவர்கள், துன்பநிலையில் இருந்து விடுபடுகிறார்கள்.(22) ஓ! குரு குல இளவரசே, இவ்வாறே சிராத்த விதிகள் குறித்துச் சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் நான் விளக்கிச் சொன்னேன்" என்றார் {பீஷ்மர்}.(23)

அநுசாஸனபர்வம் பகுதி – 92ல் உள்ள சுலோகங்கள் : 23

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்