Tuesday, June 11, 2019

சிராத்தம் தோன்றிய வரலாறு! - அநுசாஸனபர்வம் பகுதி – 91

History of Shraddha! | Anusasana-Parva-Section-91 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 91)


பதிவின் சுருக்கம் : சிராத்தம் உண்டான வரலாறு மற்றும் சிராத்தத்தில் கைவிட வேண்டியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "சிராத்தம் என்பது முதலில் யாரால், எந்த நேரத்தில் கருதப்பட்டது? அதன் சாரம் என்ன? {அது எவ்வகையானது?} பிருகு மற்றும் அங்கிரஸின் வழித்தோன்றல்கள் மட்டுமே உலகத்தில் இருந்த நேரத்தில் எந்த முனிவர் சிராத்தத்தை நிறுவினார்?(1) சிராத்தத்தில் எச்செயல்களைச் செய்யக் கூடாது? கிழங்குகளும், கனிகளும் காணிக்கையளிக்கப்படும் சிராத்தங்கள் யாவை? சிராத்தங்களில் என்ன வகை அரிசி தவிர்க்கப்பட வேண்டும்? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, சிராத்தம் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டது, அறிமுகம் செய்த காலம், அந்தச் சடங்கின் சாரம் {வகை}, அதைக் கருதிய முனிவர் யார் என்பனவற்றைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(3) ஓ! குரு குலத்தவனே, சுயம்புவான பிரம்மனில் இருந்து அத்ரி உண்டானார். அத்ரியின் குலத்தில் தத்தாத்ரேயர் என்ற பெயரில் ஒரு முனிவர் பிறந்தார்.(4) தத்தாத்ரேயர், தவத்தையே செல்வமாகக் கொண்டவரும், நிமி என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு மகனைப் பெற்றார். நிமி, பெரும் மேனியழகைக் கொண்ட ஸ்ரீமான் என்ற பெயருடைய ஒரு மகனைப் பெற்றார்.(5) முழுமையாக ஓராயிரம் வருடங்கள் கழிந்ததும், கடுந்தவங்களைச் செய்தவரான ஸ்ரீமான் காலத்தின் ஆளுகைக்கு வீழ்ந்து, இவ்வுலகை விட்டுச் சென்றார்.(6) அவரது தந்தையான நிமி, சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கும் சடங்கின் படி தூய்மைக்கான கர்மங்களைச் செய்து, தன் மகனின் இழப்பையே தொடர்ந்து நினைத்துக் கொண்டு பெருந்துயரில் நிறைந்திருந்தார்[1].(7)

[1] "இந்தத் தூய்மை சடங்குங்கள் வழக்கமான இரங்கற்காலத்திற்குப் பிறகு செய்யும் சிரைத்தல், நீராடல் மற்றும் புதிய துணிமணிகளை உடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியவையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அந்தக் கவலையின் காரணத்தை நினைத்துப் பார்த்த அந்த உயர் ஆன்ம நிமி, பதினான்காம் சந்திர நாளில் {சதுர்த்தசியில்} (உணவு பானம் உள்ளிட்ட) ஏற்புடைய பல்வேறு பொருட்களைத் திரட்டினார். அடுத்தக் காலையில் அவர் படுக்கையில் இருந்து எழுந்தார்.(8) துயரமிக்க இதயத்துடன் உறக்கத்தில் இருந்து எழுந்த அவர், ஒரு பொருளில் அஃது {இதயம்} ஈர்க்கப்பட்டிருப்பதிலிருந்து விலகுவதில் வென்றார். அவரது புத்தியானது வேறு காரியங்களில் சுறுசுறுப்பாக இயங்கத் தொங்கியது.(9) அப்போதுதான் அவர் குவிந்த கவனத்துடன் சிராத்தம் செய்யும் கருத்தை அடைந்தார். தவங்களையே செல்வமாகக் கொண்ட அந்தத் தவசியால், கனிகள் மற்றும் கிழங்குகள் உள்ளிட்ட தமது உணவுப் பொருட்கள் அனைத்தும், தமக்கு ஏற்புடைய அனைத்து வகைத் தானியங்களும் மிகக் கவனமாகக் கருத்தில் கொள்ளப்பட்டன.(11) புதுநிலவு {அமாவாசை} நாளில் அவர் துதிக்கத்தக்க எண்ணற்ற பிராமணர்களை (தமது ஆசிரமத்திற்கு அழைத்தார்). பெரும் ஞானம் கொண்ட நிமி அவர்களை (குசப் புற்களாலான) இருக்கைகளில் அமரச் செய்து, அவர்களை வலம் வந்து கௌரவித்தார்.(12) தன் வசிப்பிடத்திற்கு அழைத்து வந்த ஏழு பிராமணர்களை அணுகிய அந்தப் பலமிக்க நிமி, உப்பு கலக்காத சியாமாக அரசியாலான {சாமையரிசியாலான} உணவை அவர்களுக்குக் கொடுத்தார்.(13) உணவுண்டு கொண்டிருந்த அந்தப் பிராமணர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளில் தெற்கு நோக்கிய நுனிகளைக் கொண்ட எண்ணற்ற குசப்புற்கள் {தர்ப்பங்கள்} அவர்களது பாதங்களை நோக்கி வைக்கப்பட்டன.(14) தூய உடல், மனம் மற்றும் குவிந்த கவனத்துடன் கூடிய நிமி, குறிப்பிட்ட வகையில் அந்தப் புனிதப் புற்களை வைத்து, இறந்து போன மகனின் பெயரையும், அவனது குடும்பத்தையும் {கோத்திரத்தையும்} சொல்லி அவனுக்கு அரிசி பிண்டத்தை அளித்தார் {பிண்டப் பிரதானம் செய்தார்}.(15)

முனிவர்களில் முதன்மையான அவர் {நிமி}, இதைச் செய்துவிட்டு, (தம் அறிவுக்கு எட்டிய வரையிலும்) எந்தச் சாத்திரத்திலும் விதிக்கப்படாத செயலைச் செய்துவிட்டோமெனக் கருதி வருத்தத்தால் நிறைந்தார். உண்மையில் இவ்வாறு வருத்தத்தால் நிறைந்த அவர், தாம் செய்ததை நினைக்கத் தொடங்கினார்.(16) "ஐயோ, இதற்கும் முன்பு முனிவர்களால் ஒருபோதும் செய்யப்படாததைச் செய்திருக்கிறேன். (விதிக்கப்படாத ஒரு செயலைச் செய்து வினோதமான சடங்குகளை அறிமுகம் செய்தவன் என்ற வகையில்) பிராமணர்களின் சாபங்களை எவ்வாறு நான் தவிர்க்கப் போகிறேன்" என்று அவர் நினைத்தார்.(17) அப்போது அவர் தம் குலத்தின் அசல் மூதாதையரை நினைத்தார். அவர் நினைத்த மாத்திரத்தில், தவங்களைச் செல்வமாகக் கொண்ட அத்ரி அங்கே வந்தார்.(18) இறப்பற்றவரான அத்ரி, மகன் நிமித்தமாகத் துன்பத்தில் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கும் அவரை {நிமியைக்} கண்டு, ஏற்புடைய ஆலோசனைகளின் மூலம் அவருக்கு ஆறுதல் வழங்கினார்.(19)

அவர் {அத்ரி} அவரிடம் {நிமியிடம்}, "ஓ! நிமியே, உன்னால் செய்யப்பட இந்தச் சடங்கு பித்ருக்களைக் கௌரவிக்கும் ஒரு வேள்வியாகும். ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவனே, அச்சமேதும் உனதாக வேண்டாம். பழங்காலத்தில் பெரும்பாட்டனே {பிரம்மாவே} இதைக் கண்டடைந்தார்.(20) நீ செய்த இந்தச் சடங்கு சுயம்புவாலேயே விதிக்கப்பட்டதாகும். சுயம்புவை {பிரம்மாவைத்} தவிர வேறு எவரால் சிராத்தத்திற்கான இந்தச் சடங்கை விதிக்க இயலும்?(21) ஓ! மகனே, சிராத்தங்கள் குறித்து விதிக்கப்பட்ட அந்தச் சிறந்த விதியை நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! மகனே, சுயம்புவால் விதிக்கப்பட்டதையே நீயும் பின்பற்றுவாயாக. முதலில் நான் சொல்வதைக் கேட்பாயாக.(22) ஓ! தவங்களைச் செல்வமாகக் கொண்டவனே, மந்திரங்களின் உதவியுடன் புனித நெருப்பில் முதலில் கரணம் செய்த பிறகு, அடுத்ததாக ஒருவன் நெருப்பின் தேவனுக்கும் {அக்னிக்கும்}, சோமன் வருணன் போன்ற தேவர்களுக்கும் எப்போதும் ஆகுதிகளை ஊற்ற வேண்டும்.(23) அடுத்ததாகப் பித்ருக்களின் துணைவர்களான விஸ்வேதேவர்களுக்கும் சுயம்பு காணிக்கைகளில் {அவிர்ப்பாகத்தில்} ஒரு பகுதியை விதித்தார்.(24)

சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளைத் தாங்கும் தேவியான பூமாதேவியும் அப்போது வைஷ்ணவி, காசியபி, வற்றாதவள் {அக்ஷயை} என்ற பெயர்களில் புகழப்பட வேண்டும்.(25) சிராத்தத்திற்கான நீர் இறைக்கப்படும்போது, பெரும்பலம் கொண்டவனான வருணன் புகழப்பட வேண்டும். ஓ! பாவமற்றவனே, அதன் பிறகு அக்னி மற்றும் சோமன் ஆகிய இருவரும் மதிப்புடன் இருப்புக்கு அழைக்கப்பட்டு (ஆகுதிகளால்) நிறைவடையச் செய்யப்பட வேண்டும்.(26) பித்ருக்கள் என்ற பெயரால் அழைக்கப்படும் தேவர்கள் சுயம்புவாலேயே படைக்கப்பட்டனர். உயர் ஆன்மாவைக் கொண்ட உஷ்மபர்களும் அவராலேயே படைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளில் பங்குகள் {அவிர்ப்பாகங்கள்} விதிக்கப்பட்டிருக்கின்றன.(27) சிராத்தங்களில் இந்தத் தேவர்கள் அனைவரும் துதிக்கப்படுவதன் மூலம், {துதிப்பவரின்} மூதாதையர்கள் தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறார்கள். சுயம்புவால் படைக்கப்பட்டவர்களான மேலே குறிப்பிடப்படும் பித்ருக்கள் எண்ணிக்கையில் எழுவராவர்.(28) அக்னியைத் தங்கள் வாயாகக் கொண்டிருக்கும் விஸ்வேதேவர்கள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். இப்போது சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளின் பங்குகளுக்கு {அவிர்ப்பாகங்களுக்குத்} தகுந்த உயர் ஆன்ம தேவர்களின் பெயர்களைச் சொல்லப் போகிறேன்.(29)

பலன் {ஸஹன்}, திருதி {கிருதி}, விபாப்மன், புண்ணியக்ருத், பாவனன், பார்ஷ்னி {கிராம்யன்}, க்ஷேமன் {க்ஷேம்யன்}, ஸமூஹன், திவ்யஸானு,(30) விவஸ்வத் {விவஸ்வான்}, வீரியவத் {வீர்யவான்}, ஹ்ரீமத் {ஸ்ரீமான்}, கீர்த்திமத் {கீர்த்திமான்}, கிருதன், ஜிதாத்மன், முனிவீர்யன், தீப்தரோமன், பயங்கரன்,(31) அனுகர்மன், பிரதீதன் {பிரீதன்}, பிரதாத்ரி {பிரதாதா}, அம்சுமான், சைலாபன், பரமன், குரோதி, தீரோஷ்ணி, பூபதி,(32) ஸ்ரஜஸ் {ஸ்ரஜன்}, வஜ்ரின் {வஜ்ரீ}, வரி ஆகியோர் நித்திய விஷ்வேதேவர்களாவர். வித்யுத்வர்ச்சஸ், ஸோமவர்ச்சஸ், ஸூர்யஸ்ரீ என்ற பெயர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர்.(33) அவர்களுக்கு மத்தியில் உள்ளவர்களான ஸோமபன், ஸூர்யஸாவித்ரன், தத்தாத்மன், புண்டரீயகன், உஷ்ணீநாபன், நபோதன், விஷ்வாயு, தீப்தி,(34) சமூஹரன், ஸுரேசன், வியோமாரி, சங்கரன், பவன், ஈசன், கர்த்திரி {கர்த்தா}, கிருதி, தக்ஷன், புவனன், திவ்யகர்மக்ருத்,(35) கணிதன், பஞ்சவீர்யன், ஆதித்யன், ரஷ்மிமத் {ரஷ்மிவான்}, ஸப்தக்ருத், ஸோமவர்ச்சஸ், விஷ்வக்ருத், கவி,(36) அனுகோப்திரி {அனுகோப்தா}, சுகோப்திரி {ஸுகோப்தா}, நப்திரி {நப்தா}, ஈஷ்வரன் ஆகிய இவர்கள் அனைவரும் விஸ்வேதேவர்களாவார்கள். நித்தியமானவர்களான அவர்கள், காலத்தில் நேர்வது அனைத்தையும் அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.(37)

கோத்ரவம் {கேழ்வரகு}, புலகம் என்றழைக்கப்படும் தானிய வகைகளைச் சிராத்தத்தில் காணிக்கையளிக்கக்கூடாது. சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் பெருங்காயம் சேர்ந்த உணவு வகைகள், கிழங்குகள், வெங்காயம், வெள்ளைப்பூண்டு {உள்ளி},(38) முருங்கை, மலையாத்தி, {கஞ்சா, பூசணி வகைகள்}, நஞ்சு தடவிய கணைகளால் கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சி, பரங்கிக்காய், சுரைக்காய், கரியுப்பு வகைகள் அனைத்தும் காணிக்கையளிக்கப்படக்கூடாது.(39) ஊர்ப்பன்றி இறைச்சி, வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சி, கருஞ்சீரகம், இந்துப்பு வகைகள், சீதபாகியென்னும் கீரை,(40) முளை, இறைச்சியைத் துண்டு துண்டாக வெட்டி செய்யப்படும் பலகாரங்கள், சிங்காரக் கொட்டை {சிருங்காடகம்} ஆகியவை சிராத்தத்தில் கைவிடப்பட வேண்டியவை ஆகும். சிராத்தங்களில் அளிக்கப்படும் அனைத்துக் காணிக்கைகளிலும் அனைத்து வகை உப்புகளும், நாவற்கனிகளும் கைவிடப்பட வேண்டும்.(41) உமிழப்பட்ட, கண்ணீர் விழுந்த பொருட்கள் யாவும் சிராத்தங்களில் கொடுக்கப்படக்கூடாது[2]. பித்ருக்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளில், அல்லது ஹவ்யகவ்யங்களோடு தேவர்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளில் சுதர்சனம் என்றழைக்கப்படும் கீரை தவிர்க்கப்பட வேண்டும்.(42) இவை கலந்த ஹவி பித்ருக்களால் ஏற்கப்படுவதில்லை. சிராத்தம் நடைபெறும் இடங்களில் சண்டாளனும், ஸ்வபசனும் {சக்கிலியனும்} தவிர்க்கப்பட வேண்டும்;(43) மஞ்சள் கலந்த துணிகளை அணிந்திருப்பவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், (வரம்புமீறலுக்காக) விலக்கப்பட்டவர்கள், பிராமணக் கொலைக் குற்றவாளிகள், கலப்பு பிராமணன், விலக்கப்பட்ட மனிதனின் உறவினர் ஆகியோரும் தவிர்க்கப்பட வேண்டும். சிராத்தம் நடைபெறும் இடத்தில் இருந்து ஞானம் கொண்ட மனிதர்களால் இவர்கள் அனைவரும் விலக்கப்பட வேண்டும்" என்றார் {அத்ரி}.(44)

[2] கும்பகோணம் பதிப்பில், "சிராத்தத்தில் தும்மலையும், அழுகையையும் விட வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.

பழங்காலத்தில், தவங்களைச் செல்வமாகக் கொண்டவரும், சிறப்புமிக்கவருமான அத்ரி, தம் குலத்தைச் சேர்ந்த முனிவர் நிமியிடம் இச்சொற்களைச் சொல்லிவிட்டு சொர்க்கத்திலுள்ள பெரும்பாட்டனின் சபைக்குத் திரும்பிச் சென்றார்" என்றார் பீஷ்மர்.(45)

அநுசாஸனபர்வம் பகுதி – 91ல் உள்ள சுலோகங்கள் : 45

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்