Wednesday, June 12, 2019

உபவாஸம், விகஸம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 93அ

Fast, Vighasa! | Anusasana-Parva-Section-93a | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 93)


பதிவின் சுருக்கம் : உண்ணாநோன்பின் குறியீடுகள்; தவங்களுக்கும் உண்ணாநோன்புகளுக்கும் இடையிலான வேறுபாடு; ஒருவன் விகஸம் உண்பவனாகும் நிலை ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒரு பிராமணரின் அழைப்பின் பேரில், (உண்ணா) நோன்பை நோற்கும் பிராமணர்கள், (அந்தச் சிராத்தத்தில் அளிக்கப்படும்) ஹவியை உண்டால், தங்கள் நோன்பு தவறிய வரம்புமீறலுக்காக அவர்கள் குற்றம் சுமத்தப்படலாமா? (அல்லது அவர்கள் அத்தகைய அழைப்பைப் பெறும்போது அந்தப் பிராமணரின் அழைப்பை மறுக்க வேண்டுமா?) ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "வேதங்களில் குறிப்பிடப்படாத அத்தகைய நோன்புகளை {அவேதோக்த விரதங்களை} நோற்கும் பிராமணர்கள் தங்கள் விருப்பத் தூண்டுதலின் பேரில் உண்ணலாம். எனினும், வேதங்களில் குறிப்பிடப்படும் நோன்புகளை நோற்கும் பிராமணர்களைப் பொறுத்தவரை, ஓ! யுதிஷ்டிரா, சிராத்தம் செய்பவனின் வேண்டுகோளுக்கு இணங்க சிராத்த ஹவியை உண்பதன் மூலம் அவர்கள் தங்கள் நோன்பைக் கெடுத்த குற்றம்புரிந்தவராகக் கருதப்படுவார்கள்" என்றார்.(2)

யுதிஷ்டிரன், "சில மனிதர்கள் உண்ணா நோன்பை {உபவாஸத்தை} தவம் என்கின்றனர். உண்மையில் தவமானது உண்ணா நோன்புடன் அடையாளங்காணத் தக்கதா? இல்லையா? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(3)

பீஷ்மர், "ஒரு மாத காலமோ, அரை மாத {ஒரு பக்ஷ} காலமோ தொடர்ந்து உண்ணா நோன்பிருப்பதைத் தவம் என்றே மக்கள் கருதுகிறார்கள். எனினும், தன் உடலைத் துன்புறுத்திக் கொள்பவன் தவசியாகவோ, கடமைகளை அறிந்தவனாகவோ கருதத்தக்கவனல்ல என்பதே உண்மை[1].(4) எனினும், துறவானது தவங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு பிராமணன் எப்போதும் உணவைத் தவிர்ப்பவனாகவும், பிரம்மச்சரியம் என்றழைக்கப்படும் நோன்பை நோற்பவனாகவும் இருக்க வேண்டும்[2].(5) ஒரு பிராமணன் வாக்கையும் {பேச்சையும்} தவிர்த்து எப்போதும் தன்மறுப்பைப் பயின்று வேதமுரைக்க வேண்டும். அந்தப் பிராமணன், அறமீட்டும் விருப்பத்தால், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளும், உறவினர்களும் சூழ இருக்க வேண்டும். அவன் உறங்கக்கூடாது {எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கக்கூடாது}.(6) அவன் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். அவன் எப்போதும் வேதங்களையும், சாத்திரங்களையும் படிக்க வேண்டும். அவன் எப்போதும் வாய்மை பேசி, தன்மறுப்பைப் பயில வேண்டும்.(7) அவன் விகசம் (தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் படைத்த பிறகு எஞ்சும் உணவை) உண்ண வேண்டும். உண்மையில் அவன் தன் வசிப்பிடத்திற்கு வரும் அனைவரையும் விருந்தோம்பலுடன் வரவேற்க வேண்டும். அவன் எப்போதும் அமுதம் (விருந்தினர், பணியாட்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் உண்ட பிறகு எஞ்சும் உணவை) உண்ண வேண்டும். அவன் சடங்குகள் அனைத்தையும் முறையாக நோற்று, வேள்விகளைச் செய்ய வேண்டும்" என்றார்.(8)

[1] "அஃதாவது, உடலைத் துன்புறுத்தும் உண்ணா நோன்பானது தவத்திற்கு இணையானதாகக் கருதத்தக்கதல்ல. உண்மைதவம் என்பது வேறாகும். அத்தகைய உண்ணா நோன்பை நோற்பவனை ஒரு தவசியாகக் கருத முடியாது. மேலும், அத்தகைய உண்ணா நோன்புகள் பலன் தருவதற்குப் பதிலாகப் பாவம் நிறைந்தவையாகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். இங்கே மூலத்தில் ஆத்மதந்திரோ என்று இருக்கிறது. "உடலின் வடிவத்தைக் கெடுப்பவன் என்பது இதற்கான பொருளாகும்" என்று கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.

[2] இரண்டாம் வரியில் வரும் உபவாசம் என்பது குறிப்பிடப்படும் இரு நேரங்களுக்கிடையில் உண்ணாமல் இருப்பதைக் குறிக்கிறதேயன்றி, உடலைத் துன்புறுத்தும் உண்ணாநோன்பைக் குறிக்கவில்லை. மேலும் ஒருவன் பற்றில்லாமலேயே மிக ஆடம்பர உணவையும் உண்ணலாம். ஒருவன், உண்ணாமல் தவிர்த்தாலும், மிக ஆடம்பர உணவை உண்மையில் அனுபவிப்பவனாகவே கருதப்படுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒருவன் எப்போதும் உண்ணா நோன்புகளை நோற்பவனாகக் கருதப்படுவது எவ்வாறு? அவன் நோன்புகள் நோற்பவனாவது எவ்வாறு? ஓ! மன்னா, அவன் விகசத்தை உண்பவனாவது எவ்வாறு? எதைச் செய்வதன் மூலம் அவன் விருந்தினர்களுக்குப் பிடித்தமானவன் ஆகிறான்" என்று கேட்டான்.(9)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "காலையிலும், மாலையிலும் குறிப்பிடப்படும் நேரங்களில் மட்டுமே உணவை எடுத்துக் கொண்டு இடைப்பட்ட நேரத்தில் எந்த உணவையும் தவிர்ப்பவன், உணவைத் தவிர்ப்பவனாக {உண்ணா நோன்பிருப்பவனாகச்} சொல்லப்படுகிறான்.(10) ஒருவன் தான் மணந்து கொண்ட மனைவியிடம் மட்டும், அவளது பருவகாலங்களில் மட்டும் கலவி புரிபவனாக இருந்தால் அவன் பிரம்மச்சரிய நோன்பை நோற்பவனாகச் சொல்லப்படுகிறான். எப்போதும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வாக்கில் {பேச்சில்} வாய்மைநிறைந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(11) {வேள்வியில்லாமல்} ஒன்றுமில்லாமல் கொல்லப்படும் விலங்குகளில் இருந்து கிட்டும் இறைச்சிகள் அனைத்தையும் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் இறைச்சியைத் தவிர்ப்பவனாகிறான்[3]. கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். பகல் நேரத்தில் உறக்கத்தைத் தவிர்ப்பதன் மூலம் அவன் எப்போதும் விழிப்புடன் இருப்பவனாகக் கருதப்படுகிறான்.(12) விருந்தினர்கள், பணியாட்களின் தேவைகளுக்குத் தொண்டாற்றிய பிறகு எஞ்சுவதையே எப்போதும் உண்பவன், எப்போதும் அமுதத்தை உண்பவனாகச் சொல்லப்படுகிறான்.(13)

[3] "வேள்வியில் கொல்லப்படும் விலங்குகளின் இறைச்சி அனுமதிக்கப்படுகிறது. அத்தகைய இறைச்சியை உண்பதன் மூலம் ஒருவன் இறைச்சி உண்பவனாவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பிராமணர்கள் (உணவை) உண்ணும் வரை உண்ணாமல் தவிர்ப்பவன், அத்தகைய தவிர்த்தலின் மூலம் சொர்க்கத்தையே வெல்பவனாகக் கருதப்படுகிறான்.(14) தேவர்கள், பித்ருக்கள், உறவினர்கள், சார்ந்திருப்பவர்கள் ஆகியோருக்குப் படைத்த பிறகு எஞ்சுவதை உண்பவன் விகசம் உண்பவனாகச் சொல்லப்படுகிறான்.(15) அத்தகைய மனிதர்கள், பிரம்மனின் வசிப்பிடத்தில் பேரின்ப உலகங்கள் பலவற்றை அடைகிறார்கள். ஓ! மன்னா, அங்கே அவர்கள் அப்சரஸ்கள் மற்றும் கந்தர்வர்கள் ஆகியோருடன் வசிக்கிறார்கள்.(16) உண்மையில், அவர்கள் தேவர்கள், விருந்தினர்கள், பித்ருக்கள் துணையுடனும், தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் சூழவும் திளைத்து அனைத்து வகைகளிலும் அந்த உலகங்களில் இன்புற்றிருக்கிறார்கள். இதுவே அவர்களுடைய உயர்ந்த கதியாகிறது" என்றார் {பீஷ்மர்}.(17)

அநுசாஸனபர்வம் பகுதி – 93அ வில் உள்ள சுலோகங்கள் : 17/147

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்