Friday, June 14, 2019

மழைதருமோ என் மேகம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 95

Showers of rain in my cloud! | Anusasana-Parva-Section-95 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 95)


பதிவின் சுருக்கம் : சூரியனுக்கும் ஜமதக்நி முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடல்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, ஈமச் சடங்குகளில் குடைகள் மற்றும் காலணிகள் கொடையளிக்கும் வழக்கம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது? எந்த நோக்கத்திற்காக அக்கொடைகள் கொடுக்கப்பட்டன? ஈமச் சடங்குகளில் மட்டுமல்லாமல் அவை வேறு அறச்சடங்குகளிலும் கொடுக்கப்படுகின்றன. அறத்தகுதியை அடையும் நோக்கில் அவை பல இடங்களில் கொடுக்கப்படுகின்றன. ஓ! மறுபிறப்பாளரே, நான் இவ்வழக்கத்தின் உண்மையான பொருளை விரிவாக அறிய விரும்புகிறேன்" என்றான்.(1-3)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! இளவரசே, அறச்சடங்குகளில் குடைகளும், காலணிகளும் கொடுக்கும் வழக்கம் எவ்வாறு யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை விரிவாகச் சொல்லப் போகிறேன் கவனமாகக் கேட்பாயாக.(4) ஓ! இளவரசே, இது நிரந்தரமாக நோற்கப்படும் சக்தியை எவாறு அடைந்தது, பலன்தரக்கூடிய {புண்ணியச்} செயலாக எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதைக் குறித்து உனக்கு முழுமையாகச் சொல்லப் போகிறேன்.(5)

இது தொடர்பாகக் குறிப்பிடப்படும் ஜமதக்னிக்கும், உயர் ஆன்ம சூரியனுக்கும் இடையில் நடந்த உரையாடலை உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! பலமிக்க மன்னா, பழங்காலத்தில் பிருகு குலத்தைச் சேர்ந்த சிறப்புமிக்க ஜமதக்னி, விற்பயிற்சி செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.(6) அவர் இலக்கு பாரத்துக் கொண்டே கணைக்குப் பின் கணையாக ஏவி கொண்டிருந்தார். அவரது மனைவியான ரேணுகை, அவ்வாறு ஏவப்படும் கணைகளை எடுத்துக் கொண்டு சுடர்மிக்க சக்தியுடன் கூடிய அந்தப் பிருகுக் குலக் கொழுந்திடம் அவற்றைத் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

தமது கணைகளில் விஸ் ஒலிகளாலும், தமது வில்லின் நாணொலியாலும் நிறைவடைந்த அவர், ரேணுகை தம்மிடம் திரும்பத் தரும் கணைகளை மீண்டும் மீண்டும் மீண்டும் ஏவி தமக்குத் தாமே மகிழ்ச்சியடைந்து வந்தார். ஓ! ஏகாதிபதி, ஜேஷ்ட மூலத்தில் சூரியன் இருந்த மாதத்தில் ஒருநாள் நடுப்பகல் மதிய வேளையில்,(7-9) அந்தப் பிராமணர், தமது அம்புகள் அனைத்தையும் ஏவிவிட்டு, ரேணுகையிடம், "ஓ! அகன்ற விழிகளைக் கொண்ட பெண்ணே, என் வில்லில் இருந்து நான் ஏவிய கணைகளை எடுத்துக் கொண்டு வருவாயாக.(10) ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, அவற்றை மீண்டும் என் வில்லில் இருந்து தொடுக்கப் போகிறேன்" என்றார்.

அந்தப் பெண்மணி அவ்வாறு சென்ற போது, சூரியனின் வெப்பத்தால் தலையும் பாதமும் சுட்டதன் விளைவால் மரநிழலில் அமர்ந்தாள். அருள் நிறைந்தவளும், கருங்கண்களைக் கொண்டவளுமான ரேணுகை, தன் கணவரின் சாபத்திற்கு அஞ்சியதால் ஒரு கணம் மட்டுமே ஓய்வெடுத்து, கணைகளைத் திரட்டிதிரும்பக் கடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். அருள் நிறைந்த குணங்கைக கொண்ட அந்தக் கொண்டாடப்பட்ட பெண்மணி, பாதங்களின் வலியோடும், மனக்கசப்போடும் அவற்றை எடுத்துத் திரும்பி வந்தாள். அச்சத்தால் நடுங்கியவாறே அவள் தன் கணவரை அணுகினாள்.(11-14)

போபத்தால் நிறைந்திருந்த அம்முனிவர், அழகிய முகம் படைத்த தம் மனைவியிடம், "ஓ! ரேணுகையே, நீ திரும்பி வருவதில் இவ்வளவு தாமதமேன்?" என்று மீண்டும் மீண்டும் கேட்டார்.(15)

ரேணுகை, "ஓ! தவங்களைச் செல்வமாகக் கொண்டவரே, சூரியனின் கதிர்களால் என் தலையும் பாதங்களும் சுடப்பட்டன. வெப்பத்தால் ஒடுக்கப்பட்ட நான் ஒரு மர நிழலில் ஒதுங்கினேன்.(16) என் தாமதத்திற்கு இதுவே காரணமாகும். ஓ! தலைவா, காரணத்தைச் சொல்லிவிட்டேன் நீர் என்னிடம் சினம் தவிர்ப்பீராக" என்றாள்.(17)

ஜமதக்னி, "ஓ! ரேணுகையே, சுடர்மிக்கக் கதிர்களைக் கொண்டவனும், இவ்வழியில் உன்னைப் பீடித்தவனுமான பகல் நட்சத்திரத்தை {சூரியனை} நான் இன்றே கடுஞ்சக்தி கொண்ட என் ஆயுதங்களால் அழிக்கப்போகிறேன்" என்றார்".(18)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஜமதக்னி, பல கணைகளை எடுத்துக் கொண்டு, தமது தெய்வீக வில்லை இழுத்து, சூரியனை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, அவனது (நாள்முறை) போக்கில் அவனைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்.(19) ஓ! குந்தியின் மகனே, போரிடத் தயாராக இருக்கும் அவரைக் கண்ட சூரியன், ஒரு பிராமணனின் வேடத்தில் அணுகி, அவரிடம், "நீர் வெறுப்படையும் அளவுக்குச் சூரியன் செய்ததென்ன?(20) ஆகாயத்தில் நகர்ந்து, பூமியின் ஈரப்பத்தத்தை மேலே ஈர்த்து மீண்டும் அதனை அவளிடமே மழையாகப் பொழிகிறான்.(21) ஓ! மறுபிறப்பாளரே, இதன் மூலமே மனிதர்களுக்கு ஏற்புடைய உணவு உண்டாகிறது. உணவே உயிர் மூச்சுகளாகிறது என்று வேதங்கள் சொல்கின்றன.(22) ஓ! பிராமணரே, மேகங்களில் மறைந்து தன் கதிர்களால் சூழும் சூரியன் ஏழு தீவுகளையும் மழைப்பொழிவால் நனைக்கிறான்.(23) ஓ! பலமிக்கவmரே, இவ்வாறு பொழியப்படும் ஈரப்பதமானது, இலைகள், கனிகள், காய்கறிகள், மூலிகை ஆகியவற்றுள் பரவி உணவாக மாறுகிறது.(24)

ஓ! பிருகுவின் மகனே, பிறப்புச் சார்ந்த சடங்குகள் {ஜாதகர்மம்}, அனைத்து வகை அற சோன்புகள் {சௌளம்}, புனித நூலைத் தரித்தல் {உபநயனம்}, பசுக்கொடைகள், திருமணங்கள், வேள்வியை நோக்கமாகக் கொண்ட பொருட்கள் அனைத்தும், மனிதர்கள் ஆட்சி செய்வதற்கான விதிமுறைகள் {தர்மங்கள்}, கொடைகள் {தானங்கள்}, (மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான) அனைத்து வகை உறவுமுறைகள் {திரவியத்தினால் உண்டாகும் ஜனச்சேர்க்கைகள்}, செல்வமீட்டல் ஆகியவை உணவிலேயே தங்கள் பிறப்பிடத்தைக் கொண்டிருக்கின்றன. இதை நன்கறிவீராக.(25,26) அண்டத்தில் உள்ள ஏற்புடைய நல்ல பொருட்கள் யாவும், உயிரினங்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் யாவும் உணவில் இருந்தே உண்டாகின்றன. நீர் நன்கறிந்தவற்றையே நான் முறையாக உமக்குச் சொல்கிறேன். உண்மையில், நான் சொன்ன யாவற்றையும் நீர் அறிவீர்.(27) எனவே, ஓ! மறுபிறப்பாள முனிவரே, உமது கோபத்தைத் தணித்துக் கொள்வீராக. சூரியனை அழிப்பதன் மூலம் உமக்கு லாபமென்ன?" என்று கேட்டான் {சூரியன்}.(28)

அநுசாஸனபர்வம் பகுதி – 95ல் உள்ள சுலோகங்கள் : 28

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்