Saturday, June 15, 2019

கிருஹஸ்த தர்மங்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 97

Duties of household mode! | Anusasana-Parva-Section-97 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 97)


பதிவின் சுருக்கம் : இல்லறத்தானின் கடமைகள், பலிக்காணிக்கைகள், மதுபர்க்கத்துடன் கூடிய விருந்தோம்பல், அவற்றுக்குரிய பலன்கள் குறித்து வாசுதேவனுக்கும், பூமாதேவிக்கும் இடையில் நடந்த உரையாடல் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே, இல்லற வகையின் கடமைகள் {கிருஹஸ்தாஸ்ரமத் தர்மங்கள்}அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. மேலும், இவ்வுலகில் செழிப்பையடைவதற்காக ஒரு மனிதன் செய்ய வேண்டிய அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, இது தொடர்பாக வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் பூமாதேவி ஆகியோரைக் குறித்த பழைய கதையை உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) ஓ! பாரதக் குலத்தின் சிறந்த இளவரசே, பலமிக்கவனான வாசுதேவன், பூமாதேவியைப் புகழ்ந்து பாடிய பிறகு, இதே கேள்வியை அவளிடம் கேட்டான்.(3)

வாசுதேவன் {கிருஷ்ணன், பூமாதேவியிடம்}, "இல்லறத்தான் என்ற நிலையைப் பின்பற்றும் நானும் என் போன்றோரும் என்ன செயல்களைச் செய்ய வேண்டும்? அத்தகைய செயல்கள் எவ்வாறு நன்மைபயக்கும்?" எனக் கேட்டான்.(4)

பூமாதேவி {கிருஷ்ணனிடம்}, "ஓ! மாதவரே, ஓர் இல்லறத்தானால் முனிவர்கள், தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் ஆகியோர் வழிபடப்பட வேண்டும், வேள்விகளும் செய்யப்பட வேண்டும்.(5) தேவர்கள் வேள்விகளாலும், மனிதர்கள் விருந்தோம்பலாலும் எப்போதும் நிறைவடைகிறார்கள் என்பதை என்னிடம் இருந்து அறிந்து கொள்வீராக. எனவே, இல்லறத்தான் அவர்கள் விரும்பும் பொருட்களால் அவர்களை நிறைவடையச் செய்ய வேண்டும்.(6) ஓ! மதுசூதனரே, அத்தகைய செயல்களின் மூலம் முனிவர்களும் நிறைவடைகிறார்கள். ஓர் இல்லறத்தான், நாள் தோறும் உணவுண்ணும் முன்னர், தன் புனித நெருப்பையும், தன் வேள்விக் காணிக்கைகளையும் கவனிக்க வேண்டும்[1].(7) ஓ! மதுசூதனரே, தேவர்கள் இத்தகைய செயல்களால் நிறைவடைகின்றனர். ஓர் இல்லறத்தான் நாள்தோறும் பித்ருக்களை நிறைவடையச் செய்வதற்காக, உணவு மற்றும் நீர் மற்றும் உணவுக் காணிக்கைகளையோ,(8) கனிகள், கிழங்குகள் மற்றும் நீர்க்காணிக்கைகளையோ அளித்து விஷ்வேதேவர்களுக்கு வெந்த உணவையும், அக்னி, சோமன் மற்றும் தன்வந்தரி ஆகியோருக்கு தெளிந்த நெய்யையும் காணிக்கையளிக்க வேண்டும்.(9,10)

[1] கும்பகோணம் பதிப்பில், "விருப்பத்துடன் நித்ய யாகம் செய்வதினால் தேவர்களையும், நித்யமாக விருந்தளிப்பதினால் மனிதர்களையும் நித்தியமாகத் தர்ப்பணம் செய்வதனால் பித்ருக்களையும் மனிதர்க்ள ஆராதிக்க வேண்டும். குற்றமற்றவரே, அப்படியே பிரம்மசரிய விரதத்தினால் ரிஷிகள் ஸந்தோஷமடைகின்றனர். தினந்தோறும் அக்நியைப் பூஜிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னமே பூதபலியையும், தேவதா பூஜையையும் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தேவர்கள் வேள்விகளிலும், மனிதர்கள் விருந்தோம்பலிலும் எப்போதும் நிறைவடைகிறார்கள். ஒருவன் கொடுப்பதற்குத் தகுந்தவற்றை எப்போதும் மகிழ்ச்சியுடன் கொடுக்க வேண்டும். ஓ மதுசூதனா, இதனால் பெரும் எண்ணிக்கையிலான முனிவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். ஓ மதுசூதனா, உண்பதற்கு முன்பே ஓர் இல்லறத்தான் வேள்வி நெருப்பை மூட்டி, காணிக்கை அளிக்க வேண்டும்" என்றிருக்கிறது.

அவன் தனிப்பட்டவையும், தனித்துவம் வாய்ந்தவையுமான காணிக்கைகளைப் பிரஜாபதிக்கு {பிரம்மனுக்கு} அளிக்க வேண்டும். அவன் தென்பகுதியில் யமனுக்கும், மேற்குப் பகுதியில் வருணனுக்கும், வடக்குப் பகுதியில் சோமனுக்கும், வீட்டுக்குள்ளேயே பிரஜாபதிக்கும், வடகிழக்கில் தன்வந்தரிக்கும், கிழக்கில் இந்திரனுக்குமென முறையான வரிசையில் வேள்விக் காணிக்கைகளை அளிக்க வேண்டும்.(12) வீட்டின் வாயிலில் அவன் மனிதர்களுக்கு உணவுக்காணிக்கை அளிக்க வேண்டும்[2]. ஓ! மாதவரே, இவையே பலிக் காணிக்கைகள் என்றறியப்படுகின்றன. மருத்துகளுக்கும், தேவர்களுக்கும் ஒருவனுடைய வீட்டிற்குள்ளேயே பலிக்காணிக்கை அளிக்கப்பட வேண்டும்.(13) விஷ்வேதேவர்களுக்கு அது திறந்தவெளியிலும் {ஆகாயத்திலும்}, ராட்சசர்களுக்கும், பூதங்களுக்கும் இரவிலும் கொடுக்கப்பட வேண்டும்.(14) இந்தக் காணிக்கைகளை அளித்த பிறகு அந்த இல்லறத்தான், பிராமணர்களுக்குக் காணிக்கை அளிக்க வேண்டும். பிராமணர்கள் எவரும் இல்லையென்றால் உணவின் முதல் பகுதி நெருப்பில் வீசப்பட வேண்டும்.(15)

[2] கும்பகோணம் பதிப்பில், "ஒவ்வொரு நாளும் அன்ன முதலியவற்றினாலும், தர்ப்பண ஜலத்தினாலும், பால், கிழங்கு, கனிகளாலும் சிராத்தம் செய்து பித்ருக்களைத் திருப்தி செய்ய வேண்டும். பாகம் செய்த அன்னத்திலிருந்து அக்நியில் வைசுவதேவமென்னும் ஹோமத்தை முறைப்படி செய்ய வேண்டும். ஆக்நீஷோமம், வைசுவதேவம், தான்வந்தர்யம், அதன் பிறகு பிரம்ம தேவருக்கு ஹோமம் என்று தனித்தனியே விதிக்கப்பட்டிருக்கின்றன. அந்த முறைப்படியே அன்னபலியையும் போட வேண்டும். மாதவரே, தெற்கில் யமனுக்கும், மேற்கில் வருணனுக்கும், வடக்கில் சந்திரனுக்கும், நடுவீட்டில் பிரம்மதேவருக்கும், வடகிழக்கில் தன்வந்தரிக்கும், கிழக்கில் இந்திரனுக்கும் வீட்டின் வாயிலில் மனிதர்களுக்கும் என்று சொல்லிப் பலிபோட சொல்லுகின்றனர்" என்றிருக்கிறது.

ஒரு மனிதன் தன் மூதாதையருக்குச் சிராத்தம் அளிக்க விரும்பினால் அவன், சிராத்தச் சடங்கை நிறைவு செய்யும்போது, தன் மூதாதையர்களை நிறைவடையச் செய்து, முறையான வரிசையில் பலிக்காணிக்கைகளை அளிக்க வேண்டும்.(16) அதன் பிறகு அவன் விஷ்வேதேவர்களுக்குக் காணிக்கைகளை அளிக்க வேண்டும். அடுத்ததாக அவன் பிராமணர்களை அழைத்து, தன் வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு உணவுடன் விருந்தளிக்க வேண்டும்.(17) ஓ! இளவரசே, இச்செயலால் விருந்தினர்கள் நிறைவடைவார்கள். எவன் நீண்ட காலம் வீட்டில் தங்காமல், வந்த குறுகிய காலத்தில் சென்றுவிடுவானோ அவனே விருந்தினன் என்றழைக்கப்படுகிறான்.(18) ஓர் இல்லறத்தான், தன் ஆசான், தந்தை, நண்பன் மற்றும் விருந்தினனிடம், "என் வீட்டில் உமக்குக் கொடுக்க இன்னது வைத்திருக்கிறேன்" என்று சொல்ல வேண்டும். மேலும் அதன்படியே அவன் ஒவ்வொரு நாளும் அதைக் கொடுக்க வேண்டும்.(19,20)

அந்த இல்லறத்தான் அவர்கள் செய்யச் சொல்லும் எதையும் செய்ய வேண்டும். இதுவே நிறுவப்பட்ட வழக்கமாகும். ஓ! கிருஷ்ணா, அந்த இல்லறத்தான், அவர்கள் அனைவருக்கும் உணவளித்த பிறகு இறுதியாகவே உணவை உட்கொள்ள வேண்டும்.(21) அந்த இல்லறத்தான், தன் மன்னன், புரோகிதர், ஆசான், மாமனார், ஸ்நாதகப் பிராமணர்கள் ஆகியோர் ஒரு வருடம் முழுவதும் தன் வீட்டில் தங்கினாலும் மதுபர்க்கக் காணிக்கைகளுடன் அவர்களை வழிபட வேண்டும்.(22) காலையிலும், மாலையிலும் நாய்கள், ஸ்வபசர்கள் {சக்கிலியர்கள்}, பறவைகளுக்குத் தரையில் உணவு காணிக்கையிடப்பட வேண்டும். இது வைஷ்வேதேவ காணிக்கை என்றழைக்கப்படுகிறது[3].(23) இந்தச் சடங்குகளைப் பேரார்வத்துடன் கூடிய தெளிந்த மனத்துடன் செய்யும் இல்லறத்தான் இவ்வுலகில் {இம்மையில்} முனிவர்களின் அருளையும், இறந்த பிறகு {மறுமையில்} சொர்க்கலோகங்களையும் அடைகிறான்" என்றாள் {பூமாதேவி}.(24)

[3] "இவர்களை நாய்களுக்குச் சமைப்பவர்கள், நாய்களுடன் திரிபவர்கள்; மிக இழிந்த வகையைச் சார்ந்தவர்கள் எனக் கொள்ளலாம்"எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நாய்களுக்கும், சண்டாளர்களுக்கும், பக்ஷிகளுக்கும் தரையில் அன்னம் போட வேண்டும். இதுவும் வைச்வதேவம் என்பது. இது காலையும், மாலையும் விதிக்கப்படுகிறது" என்றிருக்கிறது.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பூமாதேவியிடம் இருந்து இவை யாவற்றையும் கேட்ட பலமிக்க வாசுதேவன் {கிருஷ்ணன்} அதன்படியே செயல்பட்டான். நீயும் அதே வழியிலேயே செயல்படுவாயாக.(25) ஓ! மன்னா, ஓர் இல்லறத்தானின் கடமைகளான இவற்றைச் செய்வதன் மூலம் நீ இவ்வுலகில் புகழை அடைந்து, இறந்த பிறகு சொர்க்கத்தை அடைவாய்" {என்றார் பீஷ்மர்}.(26)

அநுசாஸனபர்வம் பகுதி – 97ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்