Monday, July 01, 2019

சாமச்சிறப்பு! - அநுசாஸனபர்வம் பகுதி – 124

The excellence of conciliation! | Anusasana-Parva-Section-124 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 124)


பதிவின் சுருக்கம் : இன்சொல்லின் சிறப்புக் குறித்து ஒரு ராட்சசனுக்கும் ஒரு பிராமணருக்கும் இடையில் நடந்த உரையாடல்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "இன்சொல் {சாமம்}, அல்லது கொடை {தானம்} ஆகியவற்றில் எது மேன்மையான திறனைக் கொண்டது? ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, இவை இரண்டில் மேன்மையான திறன் கொண்டது எது என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "சிலர் இன்சொல்லில் {சாமத்தில்} நிறைவடைகின்றனர், வேறு சிலர் கொடைகளால் நிறைவடைகிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன் இயல்பின்படி இவை ஒன்றாலோ, அடுத்ததாலோ நிறைவடைகிறான்.(2) ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மிகக் கொடூரமான உயிரினங்களும் தணிவை அடையும் இன்சொல்லின் {சாமத்தின்} பலன்களை உனக்கு விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(3) இது தொடர்பாகக் காட்டில் ஒரு ராட்சசனால் கைப்பற்றப்பட்ட ஒரு பிராமணன், (இன்சொல்லின் உதவியால்) விடுதலையடைந்த பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(4)

நாநயமும், புத்தியும் கொண்ட ஒரு குறிப்பிட்ட பிராமணன், தனியாகக் காட்டில் சென்ற போது, அவனை உண்ண நினைத்த ஒரு ராட்சசனால் பிடிக்கப்பட்டுத் துன்பத்தில் விழுந்தான்.(5) புத்தியும், கல்வியும் கொண்ட அந்தப் பிராமணன் கலக்கமடையாமல் இருந்தான். பயங்கரமான அந்த மனிதவூனுண்ணியைக் கண்டதும் கலங்காமல், இன்சொல்லைப் பயன்படுத்தி அதன் விளைவுகளை அந்த ராட்சசனிடம் காணத் தீர்மானித்தான்.(6)

அது வரை சொல்லப்பட்ட {இனிய}சொற்களுக்காக அந்தப் பிராமணனை மதிப்புடன் வணங்கிய அந்த ராட்சசன் இந்தக் கேள்வியை அவனிடம் கேட்டான்: "நீர் தப்பிக்கலாம், ஆனால் நான் ஏன் வெளுத்தும், இளைத்தும் இருக்கிறேன் என்பதற்கான காரணத்தை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(7) சிறிது நேரம் இது குறித்துச் சிந்தித்த அந்தப் பிராமணன், அந்த ராட்சசனின் கேள்வியை ஏற்று, நன்கு பேசப்பட்ட பின்வரும் சொற்களால் பதில் கூறினான்.(8)

அந்தப் பிராமணன் {ராட்சசனிடம்}, "உன் வசிப்பிடத்தில் இருந்து தொலைவான ஓரிடத்தில் வசித்து, உனக்குச் சொந்தமில்லாத பகுதியில் திரிந்து, உன் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின் தோழமை இல்லாமல் நீ பெரும் செல்வத்தை அனுபவித்து வருகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(9) ஓ! ராட்சசா, உண்மையில் உன் நண்பர்கள் உன்னால் நன்றாக நடத்தப்பட்டாலும், உன் தீய இயல்பின் விளைவால் உன்னிடம் நல்ல மனம் கொண்டவர்களாக இல்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(10) நீ பலனும் {புண்ணியமும்}, ஞானமும் நன்கு அமைக்கப்பட்ட ஆன்மாவும் கொண்டவனாக இருக்கிறாய். இருப்பினும், பலனும், ஞானமும் இல்லாதவர்கள் உன்னைவிட அதிக முன்னுரிமை பெற்று கௌரவிக்கப்படுவதை நீ பார்க்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(11) உன்னைவிட மிக அதிகமான செல்வமும் செல்வாக்கும் கொண்டிருந்தாலும், சாதனைகளில் உன்னைவிடத் தாழ்ந்தவர்களாக இருக்கும் மனிதர்களால் நீ அவமதிக்கப்பட்டிருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(12)

வாழ்வாதாரங்கள் இல்லாமல் துன்புற்றிருந்தாலும், உயர்ந்த நிலையில் இருக்கும் உன் ஆன்மாவால் வழிநடத்தப்பட்டு, உன் வாழ்வாதாரங்களை ஈர்ப்பதில் வெளிப்படையாகத் தெரியும் வழிமுறைகளை அலட்சியம் செய்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(13) அறத்தின் விளைவால் பிறருக்கு நன்மை செய்து உன்னை நீயே களங்கம் செய்திருக்கிறாய். ஓ! அறம் சார்ந்த ராட்சசா, இருப்பினும் மற்றவன் நீ அவனை வஞ்சித்துவிட்டதாகவும், அடக்கிவிட்டதாகவும் நினைக்கிறான். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(14) காமம் மற்றும் கோபத்தில் நிறைந்த ஆன்மாக்களைக் கொண்டோர் இவ்வுலகில் படும் துன்பத்திற்காக நீ வருந்துகிறாய் என நினைக்கிறேன். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(15) ஞானம் கொண்டவனாக இருந்தாலும், அது முற்றிலும் இல்லாதவனைப் போல நீ பிறரால் கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும். உண்மையில் தீய ஒழுக்கம் கொண்ட மனிதர்கள் உன்னை நிந்திக்கிறார்கள். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(16)

நட்பின் நாவைக் கொண்ட உன் பகைவன் எவனோ ஒருவன், முதலில் அறம்சார்ந்த ஒருவனைப் போல உன்னிடம் நடந்து கொண்டு, பிறகு கபடன் போல உன்னை வசிந்துவிட்டுச் சென்றிருக்க வேண்டும். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(17) உலக நடைமுறைகளை நீ நன்கறிந்திருக்கிறாய். புதிர்கள் அனைத்திலும் நீ நல்ல திறம்பெற்றவனாக இருக்கிறாய். நீ தகுதியுடன் கூடியவனாக இருக்கிறாய். இத்தகையவனாக உன்னை அறிந்தவர்கள் உன்னை மதிப்பதும், புகழ்வதும் இல்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(18) ஏதோ காரியத்தில் ஈடுபட்டிருக்கும் தீய மனிதர்களுக்கு மத்தியில் உள்ள நீ அவர்களுடன் பேசி அவர்களுடைய ஐயங்களைக் களைந்திருப்பாய். இவை யாவும் செய்தாலும் அவர்கள் உன் மேன்மையான தகுதிகளை ஏற்றுக் கொள்ளதிருக்கிறார்கள். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(19) உண்மையில், செல்வமும், புத்தியும், வேத ஞானமும் இல்லாதிருந்தாலும் நீ உன் சக்தியால் மட்டுமே ஏதோ பெரிதான ஒன்றைச் சாதிக்க விரும்புகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(20)

காட்டுச் சென்று கடுந்தவம் செய்யத் தீர்மானத்திருந்தாலும், உன் திட்டத்தை உற்றார் உறவினர் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(21) பெருஞ்செல்வமும், இளமையும், அழகிய குணங்களும் கொண்ட உன் அண்டைவீட்டுக்காரன் உன் அன்புக்குரிய மனைவியின் மேலம் ஆசை கொண்டிருக்க வேண்டும். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(22) செல்வந்தர்களுக்கு முன் உன்னால் சொல்லப்பட்ட சொற்கள் சிறப்புடையவையாக இருப்பினும், ஞானமுள்ளவையாகவோ, சரியான நேரத்தில் சொல்லப்பட்டவையாகவோ கருதப்படவில்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(23) உன் அன்புக்குரிய உறவினனும், புத்தியற்றவனுமான ஒருவன், சாத்திரக் கல்வியை மீண்டும் மீண்டும் புகட்டினாலும், கோபக்காரனாகவே இருக்கிறான். நீ அவனைத் தணிப்பதில் வெல்லவில்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(24)

உண்மையில், ஏதோ ஒரு விரும்பத்தக்க காரியத்தில் உன்னை நிறுவிய ஒருவர் இப்போது அதன் கனியை உன்னிடம் இருந்து இப்போது பறிக்க முயலக்கூடும். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(25) சிறந்த சாதனைகளைக் கொண்டவனாகவும், அதன் காரணமாக அனைவராலும் வழிபடப்படுபவனாகவும் இருந்தாலும், உன் உறவினர்கள் உனக்காக அல்லாமல் தங்களுக்காகவே நீ வழிபடப்படுவதாகக் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(26) உண்மையில், தவிர்க்க முடியாத தாமதத்தால் உன் இதயத்தில் உள்ள ஏதோ ஒரு நோக்கத்தை நிறைவேற்ற முடியாததால் வெட்கத்தினால் நீ அதைக் கைவிட முடியாதவனாக இருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(27) உண்மையில், பல்வேறு வகைப் புத்தி மற்றும் விருப்பங்களுடன் உள்ள மனிதர்களை உன் புத்தியின் துணையுடன் உன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நீ விரும்புகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்[1].(28)

[1] "அத்தகைய நோக்கத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. எனவே நீ வெளுத்தும் இளைத்தும் இருக்கிறாய்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

கல்வியற்றவனும், துணிவில்லாதவனும், அதிகச் செல்வமில்லாதவனுமான நீ, அறிவு, ஆற்றல் மற்றும் கொடைகளால் வெல்லப்பட்ட புகழைப் பெற முனைகிறாய். உண்மையில், இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(29) உன் இதயத்தில் நீண்ட காலம் உள்ள ஏதோ ஒன்றை அடைய முடியாமல் இருக்கிறாய். அல்லது, நீ அடைய முனையும் ஒன்று வேறு எவராலோ தடுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(30) உண்மையில், உன் தரப்பில் எந்தக் களங்கமும் இன்றி நீ வேறு எவராலோ சபிக்கப்பட்டிருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்[2].(31) செல்வமும், சாதனைகளும் இல்லாத நீ, உன் நண்பர்களின் துயரத்தையும், கவலையில் இருக்கும் மனிதர்களின் கவலையையும் விலக்க வீணாக முயல்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(32) அறவோர் இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} நோற்பதையும், அறமற்றோர் காட்டு வாழ்வுமுறைப்படி {வானப்ரஸ்தாஸ்ரமப்படி} வாழ்வதையும், துறவிகள் இல்லத்தாராகவும், நிலைத்த வசிப்பிடங்களில் வாழ்வதையும் கண்டதால் நீ வெளுத்தும், இளைத்துமிருக்கிறாய்.(33)

[2] "நீ முற்றிலும் அப்பாவியாக இருந்தாலும் சபிக்கப்பட்டிருக்கிறாய். அந்தக் கவலையே உன்னை இவ்வாறு ஆக்கியிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அறம், பொருள் மற்றும் இன்பத்தோடு தொடர்புடைய உன் செயல்களும், சரியான நேரத்தில் சொல்லப்பட்ட சொற்களும் உனக்குக் கனி {பலன்} கொடுக்கவில்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(34)

ஞானம் கொண்டவனாக இருந்தாலும், வாழும் விருப்பத்தினால் உந்தப்பட்டு, தீய நடத்தை கொண்ட ஒருவனால் கொடுக்கப்பட்ட கொடையைப் பெற்றுக் கொண்டு செல்வத்துடன் வாழ்கிறான். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(35)

அனைத்துப்புறங்களிலும் மறம் {அறமற்ற நிலை} பெருகுவதையும், அறம் நலிவுறுவதையும் கண்டு நீ துன்பத்தில் நிறைந்திருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(36)

ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு அனைத்துப் புறங்களிலும் சச்சரவு செய்து கொண்டிருந்தாலும், நண்பர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்ய அவர்களால் தூண்டப்படுகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(37) வேத ஞானம் கொண்டோர் முறையற்றச் செயல்களில் ஈடுபடுவதையும், கல்விமான்கள் தங்கள் புலன்களை அடக்காததையும் கண்டு நீ துயரத்தில் நிறைந்திருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்" என்றான்.(38)

இவ்வாறு புகழப்பட்ட அந்த ராட்சசன், கல்விமனான அந்தப் பிராமணனைப் பதிலுக்கு வழிபட்டு, அவனைத் தன் நண்பனாக்கிக் கொண்டு, போதுமான செல்வத்தையும் அவனுக்குக் கொடையாகக் கொடுத்து (அவனை விழுங்காமல்) விடுவித்தான்" என்றார் {பீஷ்மர்}.(39)

அநுசாஸனபர்வம் பகுதி – 124ல் உள்ள சுலோகங்கள் : 39

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்