Tuesday, July 02, 2019

ஹிருதயத்தூய்மை! - அநுசாஸனபர்வம் பகுதி – 127

Purity of heart! | Anusasana-Parva-Section-127 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 127)


பதிவின் சுருக்கம் : சூரியன், ஸ்ரீதேவி, கார்க்யர், தௌம்யர் மற்றும் ஜமதக்னி ஆகியோர் வெளியிட்ட பரமரகசியங்கள்...


{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்},
"விபாவசு (சூரியன் என்றும் அழைக்கப்படுபவன்), "இரு காணிக்கைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று கைநிறைய நீரையும், மற்றொன்று நெய் கலந்த அரிசி தானியங்கள் அடங்கிய அக்ஷதையையும் கொண்டவையாகும். ஒருவன் ஒரு முழு நிலவு {பௌர்ணமி} நாளில், அந்தப் பிரகாசமான கோளத்தை {சந்திரனை} நோக்கி நின்று கொண்டு கை நிறைய நீர் மற்றும் அக்ஷதை என்றழைக்கக்கூடிய நெய்கலந்த அரசிதானியங்கள் என்ற குறிப்பிட்ட இரு காணிக்கைகளையும் அளிக்க வேண்டும். இந்தக் காணிக்கைகளை அளிக்கும் மனிதன் தன்னுடைய புனித நெருப்பைத் துதிப்பவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில், அவன் (அடிப்படையான) மூன்று நெருப்புகளில் ஆகுதிகளை ஊற்றியவனாகக் கருதப்படுகிறான்.(1,2) ஒரு புது நிலவு {அமாவாசை} நாளில் பெரும் மரத்தை வெட்டும் அற்ப புத்தி கொண்டவன், பிராமணக் கொலை செய்த பாவத்தால் {பிரம்மஹத்தி தோஷத்தால்} களங்கப்படுகிறான்.(3) புது நிலவு {அமாவாசை} நாளில் பற்குச்சியை மெல்லும் மூட மனிதன் அத்தகைய செயலின் மூலம் சந்திர தேவனுக்குத் தீங்கிழைத்தவனாகக் கருதப்படுகிறான்.(4) முழு நிலவு {பௌர்ணமி} மற்றும் புது நிலவு {அமாவாசை} நாட்களில் அத்தகைய மனிதனால் ஊற்றப்படும் ஆகுதிகளைத் தேவர்கள் ஏற்பதில்லை. அவனது பித்ருக்கள் அவனிடம் சினம் கொள்கின்றனர், அவனது குலமும், குடும்பமும் ஒழிந்து போகின்றன" என்றான் {சூரியன்}.(5)


ஸ்ரீ {லட்சுமி}, "எந்த வீட்டில் உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய பாத்திரங்கள், இருக்கைகள், படுக்கைகள் ஆகியன சிதறிக் கிடக்கின்றனவோ, எங்கே பெண் அடிக்கப்படுகிறாளோ,(6) அந்த வீட்டில் இருந்து தேவர்களும், பித்ருக்களும் அருவருப்புடன் வெளியேறுகின்றனர். உண்மையில், அத்தகை வீடுகளின் உரிமையாளர்களால் அளிக்கப்படும் காணிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் தேவர்களும், பித்ருக்களும் அத்தகைய பாவம் நிறைந்த வசிப்பிடத்தில் இருந்து விலகி ஓடுகின்றனர்" என்றாள்.(7)

அங்கிரஸ், "ஓர் ஆண்டு முழுவதும், ஒவ்வொரு இரவிலும் ஏற்றுவதற்கு ஒரு விளக்குடன் கரஞ்சக {புங்கை} மரத்தின் அடியில் நின்று கொண்டும், தன் கைகளில் ஸுவர்ச்சலைக் கொடியின் வேரை வைத்துக் கொண்டும் இருப்பவனுடைய சந்ததி பெருகும்" என்றார்[1].(8)

[1] "கரஞ்சக மரம் மற்றும் சுவர்ச்சலை கொடி ஆகியவை எவை என அடையாளம் காண்பது கடினம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கரஞ்சகம் என்பது புங்கை மரமாகவும், ஸுவர்ச்சலைக் கொடி என்பது பிரம்ம கமலம் மலரும் கொடியாக இருக்க வேண்டும்.

கார்க்யர், "ஒருவன் தன் விருந்தினர்களுக்கான விருந்தோம்பல் கடமைகளை எப்போதும் செய்ய வேண்டும். வேள்வி நடைபெறும் கூடம், அல்லது கொட்டகையில் அவன் விளக்குகளை அளிக்க வேண்டும். பகலில் உறங்குவதை அவன் தவிர்க்க வேண்டும். அனைத்து வகை இறைச்சியை, அல்லது இறைச்சியுணவைத் தவிர்க்க வேண்டும்.(9) அவன் பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் ஒருபோதும் தீங்கைச் செய்யக்கூடாது. அவன் எப்போதும் புஷ்கரை தடாகங்கள் மற்றும் பிற புனித நீர்நிலைகளின் பெயர்களைச் சொல்ல வேண்டும். அத்தகைய கடமை நடைமுறையே முதன்மையானதாகும். இதுவே புதிர்களுடன் கூடிய உயர்ந்த அறமாகும். நடைமுறையில் பின்பற்றப்பட்டால் அது நிச்சயம் பெரும் விளைவுகளை உண்டாக்கும்.(10) ஒருவன் நூறு வேள்விகளைச் செய்தாலும், அவற்றில் ஊற்றப்பட்ட ஆகுதிகளால் உண்டான பலன் தீர்ந்து போவதை காணும் நிலையை அடைகிறான். எனினும் நான் சொன்ன கடமைகளை நம்பிக்கையுடன் செய்வதால் அவற்றின் பலன் வற்றாதனவாகின்றன.(11)

பலரின் பார்வையில் இருந்து மறைக்கப்படும் மற்றொருமொரு உயர்ந்த புதிரை {பெரும் ரகசியத்தைக்} கேட்பீராக. சிராத்தங்கள், தேவர்களைக் கௌரவிக்கும் சடங்குகள், சாதாரண நாடகளில் செய்யப்படும் சடங்குகள், குறிப்பாகப் புனிதமான முழு நிலவு {பௌர்ணமி}, புது நிலவு {அமாவாசை} நாட்களில் செய்யப்படும் சடங்குகள் ஆகியவற்றின் போது, மாதவிலக்கான பெண்ணையோ, தொழுநோய் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகளையோ தேவர்கள் பார்த்துவிட்டால் அச்சந்தர்ப்பங்களில் (நெருப்பில் ஊற்றப்படும்) ஆகுதிகளை அவர்கள் உண்பதில்லை.(12,13) தன்னால் செய்யப்பட்ட சிராத்தம் நடைபெறும் இடத்தின் அருகில் இத்தகைய பெண்ணை அனுமதித்த மனிதனுடைய பித்ருக்கள், பதிமூன்று வருடங்கள் அவனிடம் நிறைவடையாமல் இருப்பார்கள்.(14) ஒருவன், வெள்ளுடை உடுத்தி, மனமும், உடலும் தூய்மையடைந்து, பிராமணர்களை அழைத்து, (தான் செய்யும் சிராத்தத்தின் போது) அவர்களை ஆசி கூறச் செய்ய வேண்டும். அத்தகைய தருணங்களில் ஒருவன் பாரதத்தைப் படிக்க வேண்டும். சிராத்தங்களில் இவை அனைத்தையும் பின்பற்றினால் அங்கே அளிக்கப்படும் காணிக்கைகள் அனைத்தும் வற்றாதனவாகின்றன" என்றார் {கார்க்யர்}.(15)

தௌம்யர், "உடைந்த பாத்திரங்கள், உடைந்த கட்டில்கள், சேவல்கள், நாய்கள், வசிக்கும் வீட்டிற்குள் வளரும் மரங்கள் ஆகியவை அனைத்தும் மங்கலமற்ற பொருட்களாகும். உடைந்த பாத்திரத்தில் கலியே இருக்கிறான் {எனவே, கலகம் உண்டாகும்}, அதே வேளையில், உடைந்த கட்டிலால் செல்வத்தின் இழப்பு ஏற்படும். சேவலோ, நாயோ காணப்படும்போது, தேவர்கள் அவர்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளை உண்ணமாட்டர்கள். மரத்தின் வேருக்கடியில் தேள்களும், பாம்புகளும் நிச்சயம் உறைவிடத்தைக் காண்கின்றன. எனவே, ஒருவன் தன் வசிப்பிடத்திற்குள் மரத்தை ஒருபோதும் நடக்கூடாது" என்றார்.(17)

ஜனதக்னி, "தூய்மையற்ற இதயத்தைக் கொண்ட மனிதன், குதிரை வேள்வியிலோ, நூறு வாஜபேய வேள்விகளிலோ, தலைவணங்கிக் கடுந்தவம் இருந்தோ தேவர்களைத் துதித்திருந்தாலும் நிச்சயம் நரகத்திற்குச் செல்வான். இதயத் தூய்மை வேள்விகளுக்கும், வாய்மைக்கும் இணையானதாகக் கருதப்படுகிறது.(18,19) ஓர் ஏழை பிராமணன், மற்றொரு பிராமணனுக்கு மாவாலான பிரசாதத்தை {ஒரு படி மாவை} மட்டுமே கொடுப்பதன் மூலம் பிரம்ம லோகத்தை அடைகிறான். (இதயத் தூய்மையின் முக்கியத்துவத்திற்கு) இது போதுமான சான்றாகும்" என்றார்.(20)

அநுசாஸனபர்வம் பகுதி – 127ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்