Wednesday, July 03, 2019

லோமசர் சொன்ன ரகசியங்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 129

The mysteries revealed by Lomasa! | Anusasana-Parva-Section-129 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 129)


பதிவின் சுருக்கம் : லோமசர் வெளியிட்ட சொன்ன பரமரகசியங்கள்...


லோமசர், "தனக்காக மனைவிகளைத் திருமணம் செய்து கொள்ளாமல், அடுத்தவர் மனைவிகளை வசப்படுத்தும் மனிதர்களின் பித்ருக்கள் சிராத்தத்திற்கான நேரம் வரும் போது ஏமாற்றம் அடைகின்றனர்.(1) அடுத்தவர் மனைவிகளை வசப்படுத்துபவன், மலட்டுப் பெண்ணிடம் பாலியல் கலவியில் ஈடுபடுபவன், ஒரு பிராமணனுக்குச் சொந்தமானவற்றை அபகரிப்பவன் ஆகியோர் இணையான பாவம் நிறைந்தவர்களே.(2)


அத்தகையோரின் பித்ருக்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பாமல் அவர்களிடம் இருந்து தங்களை அறுத்துக் கொள்கின்றனர். அவர்கள் அளிக்கும் காணிக்கைகள் தேவர்களையும், பித்ருக்களையும் நிறைவடையச் செய்வதில் தவறுகின்றன.(3) எனவே, பிறர் மணந்து கொண்ட பெண்களுடனும், மலட்டுப் பெண்களுடனும் ஒருவன் எப்போதும் பாலியல் கலவியைத் தவிர்க்க வேண்டும். தன் நன்மையை விரும்பும் மனிதன் ஒரு பிராமணனுக்குச் சொந்தமானவற்றை அபகரிக்க மாட்டான்.(4)

அறத்தைப் பொறுத்தவரையில் அனைவராலும் அறியப்படாத மற்றொரு புதிரை இப்போது சொல்கிறேன் கேட்பீராக. நம்பிக்கையுடன் கூடிய ஒருவன் எப்போதும் தனது ஆசான் மற்றும் வேறு பெரியோர்களின் ஆணைகளைச் செய்ய வேண்டும்.(5) ஒவ்வொரு மாதமும், பனிரெண்டாம் சந்திர நாளிலும் {துவாதசியிலும்}, முழு நிலவு {அமாவாசை} நாளிலும் ஒருவன் நெய்யையும், அக்ஷதையால் அமைந்த காணிக்கைகளையும் பிராமணர்களுக்குக் கொடையாக அளிக்க வேண்டும். அத்தகைய மனிதன் அடையும் பலனின் அளவை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(6)

அத்தகைய செயலால் ஒருவன் சோமத்தையும், பெருங்கடலையும் பெருகச் செய்வதாகச் சொல்லப்படுகிறது. தேவர்களின் தலைவனான வாசவன் {இந்திரன்}, அவனுக்குக் குதிரை வேள்வி செய்த பலன்களில் நான்கில் ஒரு பகுதியை அளிக்கிறான்.(7) அத்தகைய கொடைகளைக் கொடுப்பதன் மூலம் ஒரு மனிதன் பெரும் சக்தியையும், ஆற்றலையும் அடைகிறான். தெய்வீகமான சோமன் அவனிடம் நன்கு நிறைவடைந்து, அவனுடைய விருப்பங்கள் கனியும் நிலையை அருள்கிறான்.(8)

பெரும் பலனை உண்டாக்கவல்லதும், கடமை நிலைத்திருக்கும் அடித்தளமுமான மற்றுமொரு கடமை குறித்து இப்போது சொல்கிறேன் கேட்பாயாக. கலியுகத்தில் அந்தக் கடமை செய்யப்பட்டால் மனிதர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும்.(9) விடிவதற்கு முன்பு எழுந்து, நீராடல் மூலம் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, வெள்ளுடைகளை உடுத்திக் கொண்டு, குவிந்த கவனத்துடன் பாத்திரங்கள் நிறைந்த எள்ளைப் பிராமணர்களுக்குக் கொடையளிப்பவனும்,(10) பித்ருக்களுக்கு எள்ளும் தேனும், நீரும் கொடுப்பவனும், கிருச்ரம் என்றழைக்கப்படும் உணவையும், விளக்குகளையும் கொடுப்பவனுமான மனிதன், அடுத்தடுத்து நல்ல பலன்களையே அடைகிறான். அந்தப் பலன்கள் யாவை எனச் சொல்கிறேன் கேட்பீராக(11)

தெய்வீக தண்டனை அளிப்பவனான பாகன் {இந்திரன், தாமிரப் பாத்திரங்களையும், எள் நிறைந்த வெண்கலப் பாத்திரங்களையும் கொடையளிப்பதன் பலன்களைக் குறிப்பிட்டிருக்கிறான். பசுக்கொடை, நித்திய பலனை விளைவிக்கவல்ல நிலக்கொடை ஆகியவற்றை அளிப்பவன்,(12) தக்ஷிணையின் வடிவில் பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளை அளிக்கும் அக்னிஷ்டோம வேள்வியைச் செய்தவன் ஆகியோர் அனைவரும் எள் நிறைந்த பாத்திரங்களைக் கொடையளிப்பதன் மூலம் அடைவதற்கு இணையான பலன்களை அடைந்தவனாகத் தேவர்கள் அனைவராலும் கருதப்படுகிறான்.(13)

நீருடன் சேர்த்து எள் காணிக்கையளிக்கப்படும் கொடைகள் நித்தியமான நிறைவை அளிப்பவையாகப் பித்ருக்களால் கருதப்படுகின்றன. விளக்குக் கொடை மற்றும் கிருசரக் கொடைகளில் பாட்டன்கள் {மூதாதையர்} அனைவரும் உயர்ந்த நிறைவை அடைகிறார்கள்.(14) இவ்வாறு பித்ருக்கள் மற்றும் தேவர்களால் தங்கள் தங்களுக்குரிய உலகங்களில் உயர்வாக மெச்சப்பட்டதும், முனிவர்களால் விதிக்கப்பட்டதுமான பழைமையான விதியைச் சொன்னேன்" என்றார் {லோமசர்}".(15)

அநுசாஸனபர்வம் பகுதி – 129ல் உள்ள சுலோகங்கள் : 15

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்