Thursday, July 04, 2019

பிரமதர்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 131

Pramathas! | Anusasana-Parva-Section-131 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 131)


பதிவின் சுருக்கம் : பிரமதர்கள் யாரைப் பீடிப்பார்கள் என்று தேவர்களிடம் சொன்னது...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அப்போது உயர்வாக அருளப்பட்டவர்களான தேவர்கள், பித்ருக்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும் பிரமதர்களிடம்[1],(1) "நீங்கள் அனைவரும் உயர்வாக அருளப்பட்டவர்கள். நீங்கள் இரவில் புலப்படா வகையில் திரிபவர்கள். இழிந்தவர்களும், தூய்மையற்றவர்களும், களங்கமுள்ளவர்களுமான மனிதர்களை நீங்கள் ஏன் பீடிக்கிறீர்கள்?(2) உங்கள் அதிகாரத்திற்குத் தடையாக எச்செயல்கள் கருதப்படுகின்றன? உண்மையில் எந்தச் செயல்களைச் செய்வதன் விளைவால் நீங்கள் மனிதர்களைப் பீடிக்க முடியாதவர்கள் ஆகிறீர்கள்? ராட்சசர்களை அழித்து, மனிதர்களின் வசிப்பிடங்களில் உங்கள் அதிகாரத்தை உறுதிபடுத்துவைத் தடுக்கும் செயல்கள் எவை? இரவுலாவிகளே, இவை அனைத்தையும் நாங்கள் உங்களிடம் இருந்து கேட்க விரும்புகிறோம்" என்றனர்.(4)


[1] "மஹாதேவனின் தொண்டர்களான இவர்கள் பிசாசு வகையைச் சேர்ந்தவர்கள் ஆவர். ’பிரமதர்’ என்ற பெயருக்கான பொருள் ’அடிப்பவர்’ என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பிரமதர்கள், "பாலியல் கலவிச் செயல்களால் மனிதர்கள் தூய்மையற்றவர்களாகக் கொள்ளப்படுகிறார்கள். அத்தகைய செயல்களுக்குப் பின்பு தங்களைத் தூய்மை படுத்திக் கொள்ளாதவர்கள், பெரியோர்களை அவமதிப்பவர்கள், அறியாமையால் பல்வேறு வகை இறைச்சிகளை உண்பவர்கள், மரத்தினடியில் உறங்கும் மனிதன்,(5) உறங்கப் சென்று தன் படுக்கையின் தலையணைக்கடியில் இறைச்சியை வைத்திருப்பவன், கால் வைக்க வேண்டிய இடத்தில் தலையையோ, தலை வைக்க வேண்டிய இடத்தில் காலையோ வைத்து படுப்பவன் ஆகியோர் தூய்மையற்ற மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். உண்மையில் இம்மனிதர்கள் {நாங்கள் நுழையத்தக்க} பல துளைகளைகளைக் கொண்டிருக்கின்றனர்.(6)

நீருக்குள் சளி மற்றும் தூய்மையற்ற {சிறுநீர், மலம் போன்ற} கழிவுகளை வீசுபவர்களும் அதே வகையில் எண்ணப்படுகின்றனர். இந்த மனிதர்கள் எங்களால் கொல்லப்படவும், உண்ணப்படவும் தகுந்தவர்களாவர் என்பதில் ஐயமில்லை.(7) உண்மையில், இத்தகைய ஒழுக்கம் கொண்ட மனிதர்களையே நாங்கள் பீடிக்கிறோம். மாற்று மருந்தாகக் கருதப்படுபவையும், மனிதர்களுக்கு எத்தீங்கையும் விளைவிப்பதில் எங்களைத் தவறச் செய்பவையுமான செயல்களை இப்போது கேட்பீராக.(8)

கோரோசனையை மேனியில் பூசிக்கொண்டவர்களையோ, கரங்களில் வசம்பை வைத்திருப்பவர்களையோ, அக்ஷதை என்ற பெயரில் உள்ள உட்பொருட்களுடன் நெய்யைக் கொடையளிப்பவர்களையோ, நெய்யையும், அக்ஷதையையும் தங்கள் தலைகளில் வைத்துக் கொள்பவர்களையோ,(9) இறைச்சியைத் தவிர்ப்பவர்களையோ எங்களால் பீடிக்க இயலாது. எந்த மனிதனின் வீட்டில் அணையாமல் பகலும் இரவும் புனித நெருப்பு எரிகின்றதோ,(10) எவன் தன் வசிப்பிடத்தில் ஓநாயின் தோலையோ, பற்களையோ, மலை ஆமையையோ வைத்துக் கொள்வானோ, எவனுடைய வீட்டில் இருந்து வேள்விப்புகை மேல்நோக்கிச் சுழன்று செல்கிறது, பழுப்பு, அல்லது எவன் கருப்பு வண்ணத்திலான பூனை அல்லது ஆட்டை வளர்ப்பானோ அவன் எங்கள் அதிகாரத்தில் இருந்து விடுபட்டவன் ஆவான்[2].(11)

[2] கும்பகோணம் பதிப்பில், "கோரோசனையை உடம்பில் பூசிக் கொண்டவரும், வசம்பைக் கையில் வைத்திருப்பவரும், நெய்யோடு சேர்ந்த அக்ஷதையை ஸ்ரத்தையுடன் தலையில் வைத்திருப்பவரும், மாம்ஸம்தின்னாதவருமான மனிதர்களைத் துன்பஞ்செய்ய எங்களால் முடியாது. எவன் வீட்டில் எந்நாளும் இரவும் பகலும் அக்நி ஜ்வலிக்கிறதோ, புலியின் தோலும், பற்களும், மலையாமையும், நெய்ப்புகையும், பூனையும், கறுப்பு அல்லது சிவப்பு ஆடும் எவர் வீடுகளில் இருக்கின்றவோ அந்த வீடுகளை எல்லாலோகங்களிலும் இஷ்டப்படி ஸஞ்சரிக்கும் எம்போன்ற மிகக் கொடிய பூதங்களும் ஆக்கிரமிக்க முடியாது.

உண்மையில், இவற்றைத் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ளும் இல்லறத்தார் அழுகிய பிணங்களை உண்டு வாழும் கடும் பூதங்களாலும் ஊடுருவ இயலாதவையாக அவை {தங்கள் வீடுகள்} இருப்பதைக் காண்பார்கள்.(12) இன்பங்களைத் தேடி பல்வேறு உலகங்களில் திரியும் எங்களைப் போன்றவையாலும் {பூதங்களாலும்} இத்தகைய வீடுகளுக்கு எந்தத் தீங்கையும் செய்ய முடியாது. எனவே, தேவர்களே, ராட்சசர்களுக்கு (ராட்சசர்களுக்கும் வேறு வகையைச் சார்ந்த பிசாசுகளுக்கும்) அழிவைத் தரும் இத்தகைய பொருட்கள் மனிதர்கள் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ள வேண்டும். தேவர்களான நீங்கள் கொண்டிருந்த பெரும் ஐயங்கள் குறித்த அனைத்தையும் நாங்கள் சொல்லிவிட்டோம்" என்றனர் {பிரமதர்கள்}.(13)

அநுசாஸனபர்வம் பகுதி – 131ல் உள்ள சுலோகங்கள் : 13

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்