Friday, July 05, 2019

உணவு ஏற்றலும் தவிர்த்தலும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 135

Food receiving and avoiding! | Anusasana-Parva-Section-135 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 135)


பதிவின் சுருக்கம் : உணவை எவரிடம் இருந்து ஏற்கலாம், எவரிடம் இருந்து ஏற்கக்கூடாது என்பன உள்ளிட்டவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதா, இவ்வுலகில் ஒரு பிராமணன் தான் உண்ணும் உணவை யாரிடம் இருந்து ஏற்கலாம்? க்ஷத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் ஆகியோரும் முறையே யாரிடம் இருந்து தங்கள் உணவை ஏற்கலாம்?" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒரு பிராமணன், மற்றொரு பிராமணனிடமிருந்தோ, க்ஷத்திரியன் அல்லது வைசியனிடமிருந்தோ தன் உணவை ஏற்கலாமேயன்றி ஒருபோதும் ஒரு சூத்திரனிடமிருந்து உணவை ஏற்கக்கூடாது.(2)

ஒரு க்ஷத்திரியன் தன் உணவை, பிராமணன், க்ஷத்திரியன் மற்றும் வைசியரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். எனினும், அவன் தீய வழிகளுக்கு அடிமையாக இருப்பவர்களும், எந்த ஐயமுமின்றி அனைத்துவகை உணவுகளை உண்பவர்களுமான சூத்திரர்களால் கொடுக்கப்படும் உணவைத் தவிர்க்க வேண்டும்.(3)

ஒவ்வொரு நாளும் தங்கள் புனித நெருப்பை மூட்டுபவர்களும், குணத்தில் களங்கமில்லாதவர்களும், சாதுர்மாஸ்ய நோன்பைச் செய்பவர்களுமான வைசியர்களால் கொடுக்கப்படும் உணவைப் பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் உண்ணலாம்.(4) ஆனால், ஒரு சூத்திரனிடம் இருந்து உணவை உண்ணும் மனிதன், பூமியின் மலத்தை உண்கிறான், மனித உடலின் கழிவுகளைப் பருகுகிறான், உலகம் அனைத்தின் மாசுகளை உண்கிறான்.(5)

ஒரு சூத்திரனிடம் இருந்து பெற்ற உணவை உண்பவன் பூமியின் மாசுகளையே உண்கிறான். உண்மையில், சூத்திரனிடம் இருந்து தங்கள் உணவைப் பெறும் பிராமணர்கள் பூமியின்அழுக்கையே உண்கிறார்கள்.(6)

ஒருவன் சூத்திரனுக்குத் தொண்டு செய்பவனாக இருப்பானேயானால், தன் வகைக்கான அனைத்துச் சடங்குகளையும் முறையாகச் செய்பவனாக இருந்தாலும், அவன் நரகத்தில் விழுவான். பிராமணனோ, க்ஷத்திரியனோ, வைசியனோ இவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் அறச் சடங்களுகளை முறையாகச் செய்பவர்களாக இருந்தாலும் இழிவடைவார்கள்.(7)

வேதங்களைக் கற்பது, மனித குலத்தின் நன்மையை நாடுவது ஆகியன பிராமணனின் கடமை; மனிதர்களைப் பாதுகாப்பது க்ஷத்திரியனின் கடமை; தங்கள் பொருள் செழிப்பை ஊக்கப்படுத்துவதாகும் எனச் சொல்லப்படுகிறது.(8) ஒரு வைசியன், தன் செயல்கள் மற்றும் உழவின் கனிகளைப் பகிர்ந்து கொடுப்பதன் மூலம் வாழ்கிறான். பசுக்களை வளர்த்தல் மற்றும் வணிகமும் நிந்தனையில்லாமல் ஒரு வைசியன் செய்யக்கூடிய நியாயமான பணிகளாகும்.(9)

தனக்குரிய தொழிலைக் கைவிட்டு, சூத்திரனின் தொழிலை எடுத்துக் கொள்ளும் மனிதன், சூத்திரனாகவே கருதப்பட்டு, அவனிடம் இருந்து ஒருபோதும் உணவை ஏற்கக்கூடாது.(10) மருத்துவன், கூலிப்படையினர், வீட்டைப் பாதுகாப்பவனாகச் செயல்படும் புரோகிதன், முழுமையாக ஒரு வருடம் வேதம் ஓதியும் பயன்படாதவன் ஆகியோர் அனைவரும் சூத்திரர்களாகக் கருதப்பட வேண்டும்.(11) சூத்திரனின் வீட்டில் நடைபெறும் விழாக்களில் அளிக்கப்படும் உணவை ஆணவமாக உண்பவன் பயங்கரத் துன்பத்தால் பீடிக்கப்படுவான். தடைசெய்யப்பட்ட உணவை உண்பதன் விளைவால் அவன் தன் குடும்பத்தையும், பலத்தையும், சக்தியையும் இழந்து, இழிந்த விலங்குகளின் நிலையை அடைந்து, அறந்தவறி, அற நோன்புகள் அனைத்தும் அற்றவனாக நாயின் நிலைக்கு இழிந்தவனாகிறான்.(12,13)

ஒரு மருத்துவனிடம் உண்ணும் உணவு மலத்தைப் போன்றதாகும்; விலைமகளிடம் உண்ணும் உணவு சிறுநீரைப் போன்றதாகும்; திறம்பெற்ற இயந்திரக் கைவினைஞரின் {சிற்பிகளின்} உணவு குருதியைப் போன்றதாகும்.(14)

நல்லோரால் அங்கீகரிக்கப்பட்ட பிராமணன் ஒருவன், கல்வியின் மூலம் வாழும் ஒருவனிடம் உணவு உண்டால் அவன் சூத்திரனிடம் இருந்து உணவைப் பெற்றவனாகக் கருதப்படுகிறான். நல்லோர் அனைவரும் அத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும்.(15) அனைவராலும் நிந்திக்கப்படும் மனிதனின் உணவானது, குருதிக்குளத்தில் இருந்து பெறப்பட்ட உணவாகச் சொல்லப்படுகிறது. தீய மனிதனிடம் இருந்து உணவை ஏற்பவன், பிராமணனைக் கொன்றவனைப் போல நிந்திக்கத்தகுந்தவனாகக் கருதப்படுகிறான்.(16)

ஒருவன் கொடையாளியால் முறையாக வரவேற்கப்படாமல் ஆதரிக்கப்படாமல் இருந்தால் அவனுடைய உணவை ஏற்கக்கூடாது. இவ்வாறு செய்யும் பிராமணன் நோயால் பீடிக்கப்படுகிறான், அவனது குலம் அழிகிறது.(17) நகரக் காவலாளியிடம் இருந்து உணவை ஏற்பதன் மூலம் ஒருவன் தள்ளிவைக்கப்பட்ட இழிந்தி நிலைக்குத் தாழ்கிறான்.(18)

பசு அல்லது பிராமணனைக் கொன்ற குற்றம் புரிந்தவன், ஆசானின் மனைவியுடன் கூடாவுறவு கொண்டவன், குடிகாரன் ஆகியோரிடம் இருந்து உணவை ஏற்கும் பிராமணன், ராட்சசர்களின் குலத்தை ஊக்குவிக்கிறான்.(19) ஓர் அலியிடம் இருந்தும், நன்றிமறந்த மனிதனிடமிருந்தும், தன்னிடம்கொடுக்கப்பட்ட செல்வத்தை அபகரித்தவனிடம் இருந்தும் உணவை ஏற்பவன், நடு நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் அமைந்திருக்கும் சவரர்களின் நாட்டில் பிறப்பான்.(20) எவரிடம் இருந்து உணவை ஏற்கலாம், எவரிடம் இருந்து ஏற்கக்கூடாது என்பதை நான் முறையாகச் சொல்லிவிட்டேன். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இன்று இன்னமும் நீ கேட்க விரும்புவதென்ன?" என்று கேட்டார் {பீஷ்மர்}.(21)

அநுசாஸனபர்வம் பகுதி – 135ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்