Friday, July 05, 2019

பரிகாரங்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 136

Expiations! | Anusasana-Parva-Section-136 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 136)


பதிவின் சுருக்கம் : கொடை பெறுவதாலும், உணவை உண்பதாலும் அடையும் பாவத்தைக் கழிப்பதற்குரிய பரிகாரணங்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "யாரிடம் உணவை ஏற்கலாம், யாரிடம் கூடாது என்பதை எனக்கு நீர் முழுமையாகச் சொன்னீர்.(1) ஆனால் எனக்கு ஒன்றில் பெரும் ஐயம் நிலவுகிறது. ஓ! ஐயா, ஒரு பிராமணன் பல்வேறு வகை உணவுகளை, அதிலும் குறிப்பாகத் தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் படைக்கப்படும்போதும், இறந்து போன மூதாதையருக்குப் பலியுணவு படைக்கப்படும்போதும் ஏற்றுக் கொள்ளும்போது, (அவன் ஈட்டும் பாவத்திற்கு) என்ன பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்லி தெளிவுபடுத்துவீராக" என்றான்.(2)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! இளவரசே, உயர் ஆன்ம பிராமணர்கள், பிறரிடம் இருந்து உணவை ஏற்பதால் இழைக்கப்படும் பாவத்தை எவ்வாறு கழிப்பது என்பதை உனக்குச் சொல்வேன்.(3) தெளிந்த நெய்யை ஏற்கும்போது, சாவித்திரி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவது பரிகாரமாகிறது. ஓ! யுதிஷ்டிரா, எள்ளை ஏற்கும்போதும் அதே பரிகாரம் செய்யப்பட வேண்டும்.(4) இறைச்சியையோ, தேனையோ, உப்பையோ ஏற்றுக் கொள்ளும் பிராமணன், சூரியன் எழும்வரை நின்று கொண்டிருப்பதன் மூலம் தூய்மையடைகிறான்.(5) ஒரு பிராமணன் எவரிடம் இருந்தாவது தங்கத்தை ஏற்றுக் கொண்டால், பொதுமக்கள் முன்னிலையில் தன் கரத்தில் இரும்புத் துண்டை {இரும்புப் பாத்திரத்தைப்} பிடித்துக் கொண்டு வேத (காயத்ரி) துதியை அமைதியாகச் சொல்வதன் மூலம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான். பணம், துணிமணிகள், பெண்கள் அல்லது தங்கத்தை ஏற்கும்போது முன்சொன்னது போலவே செய்து தூய்மையடைய வேண்டும்.(6,7)

உணவு, அல்லது பால் மற்றும் சர்க்கரையுடன் கொதிக்க வைக்கப்பட்ட அரிசி {பாயஸம்}, {வெல்லம், சர்க்கரை}, கரும்பு, எண்ணெய், வேறு புனித பொருட்களை ஏற்கும் ஒருவன், காலை, நடுப்பகல் மற்றும் மாலை ஆகிய மூன்று வேளைகளில் நீராடுவதன் மூலம் தூய்மையடைகிறான்.(8) நெல், மலர்கள், கனிகள், நீர், மாப்பண்டம், பால், தயிர், அல்லது வேறு உணவையோ, மாவுகளையோ ஏற்றக் கொண்டால், நூறு முறை காயத்ரி துதியைச் சொல்வதே பரிகாரமாகும்.(9) ஈமச்சடங்குகளில் கொடுக்கப்படும் காலணிகள் மற்றும் உடைகளை ஏற்றால், அதே {காயத்திரி} மந்திரத்தை பக்தியுடன் நூறு முறை சொல்வது பாவத்தை அழிக்கும்.(10) கிரகணக் காலத்திலோ, தூய்மையற்ற காலத்திலோ நிலக்கொடை பெற்றால், அடுத்தடுத்து மூன்று நாட்கள் தொடர்ந்து உண்ணா நோன்பிருத்தல் பரிகாரமாகும்.(11) இறந்து போன மூதாதையருக்குக் காணிக்கையளிக்கப்படும் பலியுணவுகளை உண்ணும் பிராமணன், தேய்பிறை காலம் முழுவதும் பகலும், இரவும் முழுமையாக உண்ணா நோன்பு இருப்பதன் மூலம் தூய்மையடைகிறான்.(12)

ஒரு பிராமணன், தூய்மைச் சடங்குகளைச் செய்யாமல் மாலை வேளை துதிகளைச் சொல்லவோ, அறம் சார்ந்த தியானத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவோ, இரண்டாம் முறை உணவை உண்ணவோ கூடாது. அவ்வாறு செயல்படுவதால் அவன் தூய்மையடைகிறான்.(13) இந்தக் காரணத்திற்காகவே, சிராத்தமானது பிற்பகல்வேளையில் விதிக்கப்படுகிறது, இதன் காரணமாகவே சிராத்தத்திற்கு அழைக்கப்படும் பிராமணனும் முன் கூட்டியே உணவருந்தச் செய்யப்படுகிறான்.(14) மரணம் நேர்ந்ததற்கு மூன்றாம் நாளில் இறந்த மனிதனின் வீட்டில் உணவை உண்ணும் பிராமணன், பனிரெண்டு நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மூன்று முறை நீராடுவதால் தூய்மையடைகிறான்.(15) பனிரெண்டு நாட்கள் முடிவடைந்ததும், முறையான தூய்மைச் சடங்குகளைச் செய்து கொண்டு, பிராமணர்களுக்குத் தெளிந்த நெய்யைக் கொடுப்பதன் மூலம் அந்தப் பாவம் அழிவை அடைகிறது.(16)

ஒரு மனிதன் இறந்து பத்து நாட்களுக்குப் பிறகு அவனது வீட்டில் எந்த உணவையும் உண்டால், அவன் முன்பு சொல்லப்பட்டுள்ள அனைத்துப் பரிகாரங்களையும் செய்து, சாவித்திரி மந்திரத்தைச் சொல்லி பாவத்தை அழிக்கும் இஷ்டி மற்றும் கஷ்மாண்ட தவங்களைச் செய்ய வேண்டும்[1].(17) இறந்தவனின் வீட்டில் மூன்று இரவுகள் உணவை உண்ணும் பிராமணன், ஏழு நாட்கள் ஒவ்வொரு நாளும் மும்மூன்று முறை தூய்மைச் சடங்குகளைச் செய்து தூய்மையடைந்து, அதன் மூலம் தன் விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைந்து, ஒரு போதும் ஆபத்துகளில் சிக்காதவனாக இருப்பான்.(18,19) சூத்திரர்களின் துணையுடன் தன் உணவை உண்ணும் பிராமணன், முறையாகத் தூய்மைச் சடங்குகளை நோற்பதன் மூலம் மாசுகள் அனைத்தையும் அழிக்கிறான்.(20) வைசியர்களின் துணையுடன் தன் உணவை உண்ணும் பிராமணன், அடுத்தடுத்து மூன்று இரவுகள் பிச்சையெடுத்து வாழ்வதன் மூலம் தன் பாவத்தைக் கழிக்கிறான்.(21) க்ஷத்திரியர்களுடன் சேர்ந்து தன் உணவை உண்ணும் பிராமணன், தான் உடுத்திய உடையுடனே நீராடுவதன் மூலம் பரிகாரத்தைச் செய்தவனாவான்.(22)

[1] கும்பகோணம் பதிப்பில், "பத்து நாளைச் சாவு தீட்டில் பத்து நாள் சென்ற பிறகு பிராயச்சித்தங்களுக்காகத் தானங்கள் செய்விக்க வேண்டும். ஸாவித்ரம், ரைவதன் என்னும் இஷ்டிகளையும், கஸ்மாண்ட ஹோமத்தையும், அகமர்ஷண ஜபத்தையும் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.

{தகாதவனான} ஒரு சூத்திரனுடன் ஒரே தட்டில் உண்பதன் மூலம் ஒரு சூத்திரன் தன் குடும்ப மதிப்பை இழக்கிறான்; {தகாதவனான} ஒரு வைசியனுடன் ஒரே தட்டில் உண்பதன் மூலம் ஒரு வைசியன் தன் கால்நடைகளையும் {பசுக்களையும்}, நண்பர்களையும் இழக்கிறான். ஒரு க்ஷத்திரியன் தன் செழிப்பையும், ஒரு பிராமணன் தன் காந்தி மற்றும் சக்தியையும் {பிரம்மதேஜஸை} இழக்கின்றனர்.(23) இத்தகைய வழக்குகளில், பரிகாரங்களும் தணிவடையச் செய்யும் சடங்குகளும் செய்யப்பட்டு, தேவர்களுக்குப் பலியுணவுகள் காணிக்கையளிக்கப்பட வேண்டும். பாவத்தை அழிக்கும் நோக்கில் சாவித்திரி மந்திரம் உரைக்கப்பட வேண்டும், ரேவதி சடங்குகளும், கஷ்மாண்ட தவங்களும் செய்யப்பட வேண்டும்.(24) மேற்கண்ட நான்கு வகையினரில் எவரும், வேறு வகை மனிதனால் உண்ணப்பட்ட உணவை உண்டால், நிச்சயம் கோரோசனை, அறுகம்புல், மஞ்சள், சந்தனம் முதலிய மங்கலப் பொருட்களை உடல் முழுவதும் பூசிக் கொள்வதே பரிகாரம்" என்றார் {பீஷ்மர்}.(25)

அநுசாஸனபர்வம் பகுதி – 136ல் உள்ள சுலோகங்கள் : 25

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்