Saturday, July 06, 2019

மேலகம் அடைந்தவர்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 137

Those who attained heavenly regions! | Anusasana-Parva-Section-137 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 137)


பதிவின் சுருக்கம் : : தவங்கள், கொடைகள், வேள்விகள் மற்றும் பிற அறச்செயல்களின் மூலம் சொர்க்கத்தையும், பிற மேன்மையான உலகங்களையும் அடைந்தவர்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதரே, இவ்வுலகில் ஈகை {தானம்} மற்றும் அர்ப்பணிப்பு {தவம்} ஆகிய இரண்டில் எது சிறந்தது என்பதை எனக்குச் சொல்ல வேண்டும். இதன் மூலம் என் மனத்தில் உள்ள பெரும் ஐயத்தை நீர் நீக்க வேண்டும்" என்றான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அறத்திற்கு அர்ப்பணிப்புடன், தவங்களால் தங்கள் இதயங்களைத் தூய்மை செய்து கொண்டு, கொடைகளையும் பிற அறச் செயல்களையும் செய்து, வெவ்வேறு தெய்வீக உலகங்களை அடைந்த இளவரசர்களின் பெயர்களைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) ஓ! ஏகாதிபதி, அனைவராலும் கொண்டாடப்படும் முனிவர் ஆத்ரேயர், தமது சீடர்களுக்குத் தடையற்ற பரம்பொருளின் {நிர்க்குண பிரம்மத்தின்} அறிவைப் போதித்துச் சிறந்த தெய்வீக உலகங்களை அடைந்தார்.(3) உசீனரனின் மகனான மன்னன் சிபி, ஒரு பிராமணனின் நன்மைக்காகத் தன் அன்புக்குரிய மகனின் உயிரைக் காணிக்கையளித்து இவ்வுலகில் இருந்து மறுவுலகதிதற்குச் சென்றான்.(4) காசியின் மன்னனான பிரதர்த்தனன் ஒரு பிராமணருக்குத் தன் மகனைக் கொடுத்ததன் மூலம் இவ்வுலகிலும், மறுவுலகிலும் தனக்கெனத் தனிப்பட்ட இறவாப்புகழை அடைந்தான்.(5) சங்கிருதியின் மகனான ரந்திதேவன், உயர் ஆன்ம வசிஷ்டருக்கு முறையாகக் கொடைகளை அளித்து உயர்ந்த சொர்க்கத்தை அடைந்தான்.(6) தேவவிரதன், ஒரு வேள்வியில் நூறு விலாக்கள் கொண்ட சிறந்த தங்கக் குடை ஒன்றை ஒரு பிராமணனுக்குக் கொடுத்துச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(7) வழிபடத்தகுந்த அம்பரீஷனும், பெருஞ்சக்தியைக் கொண்ட ஒரு பிராமணனுக்குத் தன் நாடு முழுவதையும் கொடையாக அளித்துத் தேவர்களின் உலகை அடைந்தான்.(8)

சூரிய குலத்தைச் சேர்ந்த மன்னன் ஜனமேஜயன் பிராமணர்களுக்குக் காது குண்டலங்களையும், சிறந்த வாகனங்களையும், பசுக்களையும் கொடையளித்துச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(9) அரச முனியான விருஷாதர்ப்பி, பிராமணர்களுக்குப் பல்வேறு நகை ஆபரணங்களையும், அழகிய வீடுகளையும் கொடையளித்துச் சொர்க்கதிதற்குச் சென்றான்.(10) விதர்ப்பத்தைச் சேர்ந்த மன்னன் நிமி, உயர் ஆன்ம அகஸ்தியருக்குத் தன் மகளையும், நாட்டையும் கொடையாள அளித்துத் தன் மகன்கள், நண்பர்கள் மற்றும் பசுக்களுடன் சொர்க்கத்தை அடைந்தான்.(11) பெரும்புகழைக் கொண்டவரும், ஜமதக்னியின் மகனுமான ராமர், பிராமணர்களுக்கு நிலக்கொடைகளை அளித்து, எதிர்பார்ப்பைக் கடந்த நித்திய உலகங்களை அடைந்தார்.(12)

பிராமணர்களின் இளவரசரான வசிஷ்டர், பர்ஜன்ய தேவன் பூமியில் தன் அருள் மழையைப் பொழியாமல் இருந்த போது நேர்ந்த பெரும்பஞ்சத்தில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாத்து, அந்தச் செயலின் மூலம் நித்திய அருளை தாமே அடைந்தார்.(13) இவ்வுலகில் மிக உயர்ந்த புகழைக் கொண்டவனும், தசரதனின் மகனுமான ராமன், வேள்விகளில் பெருஞ்செல்வத்தைக் கொடையளித்து நித்திய உலகங்களை அடைந்தான்.(14) பெரும் புகழைக் கொண்டவனும், அரசமுனியுமான கக்ஷஸேனன், முறையாக உயர் ஆன்ம வசிஷ்டருக்குச் செல்வத்தைக் கொடுத்துச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(15) அவிக்ஷித்தின் மகனும், கரந்தமனின் பேரனுமான மருத்தன், அங்கிரசுக்குத் தன் மகளைக் கொடுத்ததன் மூலம் உடனே சொர்க்கத்திற்குச் சென்றான்.(16)

உயர்ந்த பக்தியைக் கொண்ட பாஞ்சால மன்னன் பிரம்மதத்தன், விலைமதிப்புமிக்கச் சங்கு ஒன்றைக் கொடையளித்ததன் மூலம் அருள்வழியை அடைந்தான்.(17) மன்னன் மித்ரஸஹன், தனக்குப் பிடித்த மனைவியான மதயந்தியை உயர் ஆன்ம வசிஷ்டருக்குக் கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(18)

மனுவின் மகனான ஸுத்யும்னன், உயர் ஆன்ம லிகிதருக்கு உரிய தண்டையைக் கொடுத்ததன் மூலம் பேரருள் நிறைந்த உலகங்களை அடைந்தான்.(19) கொண்டாடப்பட்ட அரசமுனியான சஹஸ்ரசித்தன், ஒரு பிராமணனுக்காகத் தன் அன்புக்குரிய உயிரையே தியாகம் செய்ததன் மூலம் அருள் உலகங்களுக்குச் சென்றான்.(20)

மன்னன் சதத்யும்னன், பெரும் அளவிலான இன்பப் பொருட்கள் அனைத்துடன் கூடிய ஒரு பொன்மாளிகையை மௌத்கலருக்கு {மொத்கல்யருக்குக்} கொடுத்ததன் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றான்.(21) பழங்காலத்தில் மன்னன் சுமன்யு, மலை போல் தெரிந்த உணவுக் குவியல்களைச் சாண்டில்யருக்குக் கொடுத்ததன் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றான்.(22) பெருங்காந்தியைக் கொண்ட சால்வ இளவரசன் தியுமத் {தியுமான்} தன் நாட்டை ரிசீகருக்குக் கொடுத்து உயர்ந்த உலகங்களை அடைந்தான்.(23)

அரச முனியான மதிராஸ்வன், கொடியிடையாளான தன் மகளை ஹிரண்யஹஸ்தருக்குக் கொடுத்ததன் மூலம் தேவர்களின் உலகத்திற்குச் சென்றார்.(24)

தலைமைத்துவம் கொண்ட லோமபாதன், தன் மகளான சாந்தையை ரிஷ்யசிருங்கருக்குத் திருமணம் செய்து கொடுத்து, தன் ஆசைக்குகந்த அனைத்துப் பொருட்களையும் பெருமளவில் பெற்றான்.(25)

அரச முனியான பகீரதன், ஹம்ஸி என்ற தன் புகழ்பெற்ற மகளைக் கௌஸ்தருக்குக் கொடுத்து நித்திய உலகங்களுக்குச் சென்றான்.(26) மன்னன் பகீரதன், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான பசுக்களைக் கன்றுகளுடன் சேர்த்துக் கோகலருக்குக் கொடுத்து அருள்மிகுந்த உலகங்களை அடைந்தான்.(27)

ஓ! யுதிஷ்டிரா, இவர்களும், இன்னும் பல மனிதர்களும் தாங்கள் செய்த ஈகை, தவங்கள் ஆகியவற்றால் சொர்க்கத்தை அடைந்து, அங்கிருந்து மீண்டும் மீண்டும் திரும்புகின்றனர்.(28) அவர்களுடைய புகழ் இந்த உலகங்கள் உள்ளளவும் நீடித்திருக்கும். ஓ! யுதிஷ்டிரா, ஈகை மற்று தவங்களின் மூலம் நித்திய உலகங்களை அடைந்த நல்ல இல்லறத்தோரின் கதையை நான் உனக்குச் சொன்னேன்.(29) தங்கள் ஈகையின் மூலமும், தாங்கள் செய்த வேள்விகளின் மூலமும், சந்ததியை உண்டாக்கியதன் மூலமும் இந்த மக்கள் சொர்க்கலோகங்களை அடைந்தனர்.(30) ஓ! குரு குலக்கொழுந்துகளில் முதன்மையானவனே, ஈகைச்செயல்களை எப்போதும் செய்வதன் மூலம் இம்மனிதர்கள் தங்கள் அறம் சார்ந்த புத்தியை வேள்விகள் செய்வதிலும், கொடையளிப்பதிலும் செலுத்தினர்.(31) ஓ வலிமைமிக்க இளவரசே, இரவு வருகிறது, உன் மனத்தில் எழும் எந்த ஐயத்திற்கும் காலையில் நான் விளக்கமளிப்பேன்" என்றார் {பீஷ்மர்}.(32)

அநுசாஸனபர்வம் பகுதி – 137ல் உள்ள சுலோகங்கள் : 32

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்