Friday, July 19, 2019

பிராமண மேன்மை! - அநுசாஸனபர்வம் பகுதி – 151

The greatness of Brahmanas! | Anusasana-Parva-Section-151 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 151)


பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் மேன்மையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "வழிபடத்தகுந்தவர் எவர்? நாம் வணங்க வேண்டியவர் எவர்? உண்மையில், எவரிடமும் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? ஓ! பாட்டா, எந்தெந்த வகையினரிடம் எந்தெந்த ஒழுங்கு நடைமுறை களங்கமற்றதாகக் கருதப்படுகிறது?" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பிராமணர்களை அவமதிப்பது, தேவர்களையே அவமதிப்பதாகும். ஓ! யுதிஷ்டிரா, பிராமணர்களை வணங்குவதன் மூலம் ஒருவன் எந்தக் களங்கத்தையும் இழைப்பதில்லை.(2) உண்மையில் அவர்கள் வழிபடத்தகுந்தவர்களாவர். அவர்கள் நாம் வணங்கத்தகுந்தவர்கள் ஆவர். உன் மகன்களிடம் நடந்து கொள்வதைப் போல நீ அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். உண்மையில், பெரும் ஞானம் கொண்ட அம்மனிதர்களே உலகங்கள் அனைத்தையும் தாங்குகிறார்கள்.(3) அனைத்து உலகங்களிலும் அறத்தின் பெரும்பாலங்களாக இருப்போர் பிராமணர்களே. அனைத்து வகைச் செல்வங்களையும் துறப்பதிலேயே அவர்களின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. வாக்கைக் கட்டுப்படுத்தும் நோன்புக்கு அவர்கள் அர்ப்பணிப்புள்ளவர்கள் ஆவர்.(4) உயிரினங்கள் அனைத்திற்கும் இனிமையான அவர்கள் பல்வேறு சிறந்த நோன்புகளை நோற்பவர்களாவர். அவர்கள் இந்த அண்டத்தின் உயிரினங்கள் அனைத்திற்கும் புகலிடமாக இருப்பவர்கள். உலகங்களை ஆளும் விதிமுறைகள் அனைத்தின் ஆசிரியர்கள் அவர்கள். பெரும் புகழைக் கொண்டவர்கள் அவர்கள்.(5)

தவங்களே எப்போதும் அவர்களின் பெருஞ்செல்வமாக இருக்கின்றன. வாக்கே அவர்களது பலமாக இருக்கிறது. அவர்கள் நோற்கும் கடமைகளிலிருந்தே அவர்களது சக்தி பாய்கிறது. அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர்களான அவர்கள், நுட்பமான கருத்துகளையும் அறியும் நுண்பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(6) அவர்கள் நியாயமான ஆசைகளைக் கொண்டவர்கள். கடமைகளை நன்கு செய்து வாழ்பவர்கள் அவர்கள். அறத்தின் பெரும்பாலங்கள் அவர்கள். இருப்பில் இருக்கும் நால்வகை உயிரினங்களும் அவர்களையே தங்கள் புகலிடங்களாகச் சார்ந்திருக்கின்றன.(7) அவர்களே அனைவரும் செல்ல வேண்டிய பாதையாகவோ, சாலையாகவோ இருக்கின்றனர். அவர்களே அனைவரின் வழிகாட்டிகளாக இருக்கின்றனர். அவர்களே வேள்விகள் அனைத்தையும் எப்போதும் தாங்குபவர்கள். அவர்கள் தங்கள் தந்தைமார் மற்றும் பாட்டன்களின் கனமான சுமைகளை எப்போதும் சுமப்பவர்கள்.(8) வலிமைமிக்க மாடுகளைப் போலக் கடினமான சாலைகளைக் கடக்கும்போதும் தங்கள் கனமான சுமைகளால் அவர்கள் ஒருபோதும் சோர்வடைவதில்லை. பித்ருக்கள், தேவர்கள் மற்றும் விருந்தினர்களின் தேவைகளில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். ஹவ்யம் மற்றும் கவ்யத்தின் முதல் பங்கை உண்ணும் உரிமை அவர்களுக்கு உண்டு.(9) அவர்கள் உண்ணும் உணவின்மூலமே மூன்று உலகங்களையும் பேரச்சத்தில் இருந்து விடுவிக்கிறார்கள். அனைத்து உலகங்களுக்குமான தீவாக (புகலிடமாக) அவர்கள் இருக்கிறார்கள். பார்வை கொண்ட மனிதர்கள் அனைவரின் கண்களாக அவர்களே இருக்கின்றனர்.(10)

சிக்ஷை என்ற பெயரில் அறியப்படும் ஞானத்தின் அனைத்துக் கிளைகளும், ஸ்ருதிகள் அனைத்தும் அவர்களின் செல்வமாகின்றன. பெருந்திறனுடன் கூடிய அவர்கள் பொருட்களின் மிகநுட்பமான உறவுகளை அறிந்தவர்களாக இருக்கின்றனர். அனைத்துப் பொருட்களின் கதியை நன்கறிந்தவர்களாக இருக்கும் அவர்களது எண்ணங்கள் எப்போதும் ஆன்ம அறிவியலிலேயே ஈடுபட்டிருக்கின்றன.(11) அனைத்துப் பொருட்களின் தொடக்கம், நடு மற்றும் முடிவு ஆகியவற்றின் அறிவுடன் கூடியவர்களாகவும், தாங்கள் கொண்ட ஞானத்தில் உள்ள உறுதியுணர்வின் விளைவால் எந்த ஐயமும் இல்லாதவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். உயர்ந்தது எது, தாழ்ந்தது எது என்பதற்கிடையிலான வேறுபாடுகளில் முழு விழிப்புணர்வுடன் இருக்கும் அவர்களே உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(12) அவர்கள் பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்து, உலகப் பொருட்கள் யாவற்றிலும் தொடர்பறுந்தவர்களாக இருக்கிறார்கள். மதிக்கத்தகுந்த அவர்கள், ஞானமும், உயர்ந்த ஆன்மாக்களையும் கொண்ட மனிதர்களால் எப்போதும் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள்.(13) சந்தனம், அழுக்கான சேறு ஆகியவற்றிலும், எது உணவு, எது உணவில்லை என்பதிலும் அவர்கள் சமமான பார்வையைச் செலுத்துவார்கள். மெல்லிய காவி ஆடைகள், நார்மடி பட்டாடைகள், விலங்கின் தோல் ஆகியவற்றில் தங்கள் கண்களைச் சமமாகச் செலுத்துகிறார்கள்.(14) அவர்கள், எந்த உணவையும் பல நாட்கள் உண்ணாமல், வாழ்வதாரங்களை விலக்குவதன் மூலம் தங்கள் அங்கங்களை வற்ற செய்து வாழ்பவர்கள். வேத கல்வி மற்றும் புலனடக்கத்தில் அவர்கள் உள்ளார்வத்துடன் தங்களை அர்ப்பணிக்கிறார்கள்.(15)

அவர்கள் தேவர்களல்லாதவர்களை தேவர்களாகவும், தேவர்களை தேவர்களல்லாதவர்களாகவும் ஆக்குபவர்கள். சினமடைந்தால் அவர்களால் வேறு உலகங்களையும், இருப்பவர்களைத் தவிர்த்து வேறு லோகபாலர்களையும் உண்டாக்க முடியும்.(16) அந்த உயர் ஆன்மாக்களுடைய சாபத்தின் மூலமே பெருங்கடலானது குடிக்க முடியாத வகையில் உப்பானது. அவர்களுடைய கோபமெனும் நெருப்பு காலத்தால் தணிவடையாமல் இன்னும் தண்டகக் காட்டில் எரிந்து கொண்டிருக்கிறது.(17) அவர்கள் தேவர்களின் தேவர்களாகவும், காரணங்கள் அனைத்தின் காரணங்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் அதிகாரங்கள் அனைத்தின் அதிகாரமாக இருக்கின்றனர். புத்தியும் ஞானமும் கொண்ட எந்த மனிதன் அவர்களை அவமதிக்க முயல்வான்?(18) அவர்களில் இளையோரும், முதியோரும் கௌரவங்களுக்குத் தகுந்தவர்களே. அவர்கள் தங்கள் (வயதின் விளைவால் அல்லாமல்) தவங்கள் மற்றும் ஞானத்தில் உள்ள தனிச்சிறப்புகளின் விளைவால் ஒருவரையொருவர் மதிக்கிறார்கள்.(19)

ஞானமற்ற பிராமணனும் தேவனாவான், பிறரைத் தூய்மைப்படுத்தும் உயர்ந்த கருவியாவான். அவர்களுக்கு மத்தியில் அறிவைப் படைத்தவன் உயர்ந்த தேவனும், முற்றாக நிறைந்த பெருங்கடலைப் போன்றவனும் ஆவான்.(20) கல்விமானாகவோ, கல்லாதவனாகவோ இருந்தாலும் பிராமணன் எப்போதும் உயர்ந்த தேவனே. (மந்திரங்களின் துணையால்) புனிதமாகவோ, புனிதமற்றோ இருந்தாலும் நெருப்பு {அக்னி} எப்போதும் பெருந்தேவனே.(21) சுடர்மிக்க நெருப்பானது சுடலையில் எரிந்தபோதும், அஃது எரியும் இடத்தினுடைய தன்மையின் விளைவால் களங்கமடைந்ததாக ஒருபோதும் கருதப்படுவதில்லை. வேள்விப்பீடத்தில் இருந்தாலும், அறையில் இருந்தாலும் தெளிந்த நெய் எப்போதும் அழகாகவே தெரியும்.(22) எனவே, ஒரு பிராமணன் எப்போதும் தீச்செயல்களில் ஈடுபடுபவனாக இருப்பினும் அவன் மதிக்கத்தகுந்தவனாகவே கருதப்பட வேண்டும். உண்மையில், பிராமணனே எப்போதும் உயர்ந்த தேவன் என்பதை அறிவாயாக" என்றார் {பீஷ்மர்}.(23)

அநுசாஸனபர்வம் பகுதி – 151ல் உள்ள சுலோகங்கள் : 23


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்