Saturday, July 20, 2019

எவ்வகை உயிரினம்? - அநுசாஸனபர்வம் பகுதி – 152

kind of creature? | Anusasana-Parva-Section-152 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 152)


பதிவின் சுருக்கம் : தத்தாத்ரேயரிடம் இருந்து நான்கு வரங்களை அடைந்த கார்த்தவீரியார்ஜுனன்; பிராமண மகிமை குறித்து வாயு தேவனுக்கும் கார்த்தவீரியார்ஜுனனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மன்னா, ஓ! மேன்மையான நுண்ணறிவைக் கொண்டவரே, பிராமணர்களை வழிபடுவதில் கிட்டும் எந்த வெகுமதியைக் கண்டு நீர் அவர்களை வழிபடுகிறீர்? உண்மையில், பிராமணர்களை வழிபடுவதில் கிட்டும் எந்த வெற்றியால் வழிநடத்தப்பட்டு நீர் அவர்களை வழிபடுகிறீர்?" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, இது தொடர்பாகப் பவனனுக்கும், அர்ஜுனனுக்கும் {கார்த்தவீரியார்ஜுனகுக்கும்} இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(2) ஆயிரங்கரங்களைக் கொண்டவனும், பேரெழில்வாய்ந்தவனுமான வலிமைமிக்கக் கார்த்தவீரியன் பழங்கலாத்தில் உலகம் அனைத்திற்குமான தலைவனானான். மாஹிஷ்மதி நகரம் அவனுடைய தலைநகரமாக இருந்தது.(3) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட அந்த க்ஷத்திரிய குல ஹைஹய {ஹேஹயத்} தலைவன், கடல்களைத் தன் கச்சையாகக் கொண்டவளும், தீவுகள், தங்கச்சுரங்கங்கள் மற்றும் மதிப்புமிக்க ரத்தினச் சுரங்கங்கள் அனைத்துடன் கூடியவளுமான மொத்த பூமியையும் ஆண்டு வந்தான்.(4) க்ஷத்திரிய வகைக்கான கடமைகளைத் தன் முன் கொண்டவனும், பணிவுடனும், வேத அறிவுடனும் கூடிய அம்மன்னன், தத்தாத்ரேய முனிவருக்குப் பெரும் செல்வக்கொடையை அளித்தான்.(5) உண்மையில், கிருதவீரியனின் மகனால் இவ்வாறு துதிக்கப்பட்ட அந்தப் பெருந்தவசி, அவனிடம் நிறைவடைந்தவராக, தம்மிடம் மூன்று வரங்களைக் கேட்குமாறு அவனைக் கேட்டுக் கொண்டார்.(6)

வரங்கள் குறித்து அம்முனிவரால் இவ்வாறு வேண்டப்பட்ட அம்மன்னன், அவரிடம், "நான் என் துருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் போது ஆயிரம் கரங்களைக் கொண்டவனாக இருக்க வேண்டும். எனினும், வீட்டில் இருக்கும் போது, வழக்கம் போலவே இரு கரங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.(7) உண்மையில் போரில் ஈடுபடும்போது, ஆயிரம் கரங்களைப் படைத்தவனாகப் போராளிகள் என்னைக் காண வேண்டும். உயர்ந்த நோன்புகளை நோற்றவனான நான், என் ஆற்றலின் துணையுடன் மொத்த பூமியையும் அடக்குவதில் வெல்ல வேண்டும்.(8) அறம் சார்ந்து பூமியை அடைந்த பிறகு அவளை நான் விழிப்புடன் ஆள வேண்டும். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான்காவது வரத்தையும் நீர் அருள நான் வேண்டுகிறேன்.(9) ஓ! களங்கமற்றவரே, எனக்கு உதவும் மனோநிலையில் நீர் இருப்பதன் விளைவால், எனக்கு அஃதை அருள்வதே உமக்குத் தகும். நான் உம்மையே சார்ந்திருக்கிறேன். தான் தவற நேரும்போதெல்லாம் அறவோர் என்னைத் திருத்தி நிலைபெறச் செய்ய வேண்டும்" என்று கேட்டான்.(10)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணர், அந்த மன்னனிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார். சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட அந்த மன்னனால் அந்த வரங்கள் இவ்வாறே அடையப்பட்டன.(11) நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான காந்தியுடன் கூடிய தன் தேரைச் செலுத்திக் கொண்டிருந்த அந்த ஏகாதிபதி, தன்னுடைய பேராற்றலால் குருடாகி, "பொறுமை, சக்தி, புகழ், வீரம், ஆற்றல் மற்றும் பலம் ஆகியவற்றில் எனக்கு நிகராகக் கருதத்தகுந்தவன் எவன்?" என்றான். அவன் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், ஆகாயத்தில் இருந்து ஒரு புலப்படாத குரல்,(13) "ஓ! இழிந்த மூடா, க்ஷத்திரியனைவிடப் பிராமணன் உயர்ந்தவன் என்பதை நீ அறியமாட்டாயா? பிராமணனால் உதவப்படும் க்ஷத்திரியனே அனைத்து உயிரினங்களையும் ஆள்கிறான்" என்றது.(14)

{கார்த்தவீரிய} அர்ஜுனன், "நான் நிறைவடையும்போது, உயிரினங்களைப் படைக்கவல்லவனாக இருக்கிறேன். நான் கோபமாக இருக்கும்போது, அனைத்தையும் அழிக்கவல்லவனாக இருக்கிறேன். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் நானே முதன்மையானவனாக இருக்கிறேன். நிச்சயம் பிராமணன் என்னைவிட உயர்ந்தவனல்ல.(15) பிராமணன் க்ஷத்திரியனைவிட மேன்மையானவன் என்பது முதல் கருத்து. க்ஷத்திரியனே மேன்மையானவன் என்பது எதிர் கருத்து. (ஓ! புலப்படாதவளே, அடிப்படையில் க்ஷத்திரிய மேன்மை வேண்டப்படும் செயலில்) இருவரும் ஒன்று சேர்வதாக நீ சொல்கிறாய். எனினும், இதில் ஒரு வேறுபாடு காணக்கிடைக்கிறது.(16) பிராமணர்கள், க்ஷத்திரியர்களைப் புகலிடமாகக் கொள்வது காணப்படுகிறது. உண்மையில், பூமி முழுவதிலும், வேதங்களைக் கற்பிக்கும் தோரணையில் அத்தகைய புகலிடத்தை ஏற்கும் அவர்கள் {பிராமணர்கள்}, க்ஷத்திரியர்களிடம் இருந்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈர்க்கிறார்கள்.(17) உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் கடமை க்ஷத்திரியர்களுக்குரியது. க்ஷத்திரியர்களிடம் இருந்தே பிராமணர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அடைகின்றனர்[1]. அவ்வாறிருக்கையில் பிராமணன் எவ்வாறு க்ஷத்திரியர்களைவிட மேன்மையானவனாக இருக்க முடியும்?(18) நன்று, உயிரினங்கள் அனைத்தையும் விட மேன்மையாக இருந்தாலும் பிச்சையெடுப்பதைத் தொழிலாகக் கொண்டவர்களும், தற்பெருமை கொண்டவர்களுமான உங்கள் பிராமணர்களை இன்று முதல் என் ஆளுகைக்குள் கொண்டு வருகிறேன்.(19) ஆகாயத்தில் இருந்து கன்னி காயத்ரி சொல்வது உண்மையல்ல. தோலாடை உடுத்திய பிராமணர்கள் சுதந்திரமாகத் திரிகின்றனர். சுதந்திரமாக இருக்கும் அவர்களை என் ஆளுகைக்குள் கொண்டவரப் போகிறேன்.(20) தேவனோ, மனிதனோ, நான் அனுபவிக்கும் இந்த அரசுரிமையில் இருந்து என்னைத் தூக்கி வீச மூவுலகங்களிலும் யாருமில்லை. எனவே, நான் நிச்சயம் பிராமணர்களைவிட மேன்மையானவனே.(21) பிராமணர்களையே முதன்மைவாசிகளாகக் கருதப்படும் இவ்வுலகில், க்ஷத்திரியர்களே முதன்மையானவர்கள் என்பது நிறுவப்படும். போரில் என் வலிமையைப் பொறுத்துக்கொள்ளவல்லவன் எவனுமில்லை" என்றான்[2].(22)

[1] கார்த்தவீரியனின் இக்கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில், "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்" எனும் குறள் நிற்கிறது.

[2] இதன்பிறகு கங்குலியில் இல்லாத ஒரு வரிக் கும்பகோணம் பதிப்பில் இருக்கிறது. அது பின்வருமாறு: "கார்த்தவீரியார்ஜுனனுடைய சொல்லைக் கேட்டு அந்த அசரீர வாக்குச் சொன்ன ராக்ஷஸி பயந்தாள். பிறகு, ஆகாயத்திலிருக்கும் வாயு அவனைப் பார்த்து" பேசத் தொடங்கினான் என்றிருக்கிறது.

அப்போது, வானத்தில் இருந்து அம்மன்னனிடம் பேசிய காற்றின் தேவன் {வாயு}, "பாவம் நிறைந்த இந்த மனோநிலையைக் கைவிடுவாயாக. பிராமணர்களை வணங்குவாயாக. அவர்களுக்குத் தீங்கிழைப்பதன் மூலம் நீ உன் நாட்டுக்குத் தொல்லைகளைக் கொண்டு வரப் போகிறாய்.(24) மன்னனாக இருக்கும் உன்னைப் பிராமணர்கள் கொன்றுவிடுவார்கள், அல்லது பெரும் வலிமை கொண்ட அவர்கள் உன் சக்தியைக் கெடுத்து உன்னை உன் நாட்டில் இருந்து விரட்டிவிடுவார்கள்" என்றான்.(25)

இந்தப் பேச்சைக் கேட்ட மன்னன், அவ்வாறு பேசியவனிடம், "உண்மையில், நீ யார்?" என்று கேட்டான். காற்றின் தேவன், "நான் காற்றின் தேவன் மற்றும் தேவர்களின் தூதுவன். உனக்கான நன்மையே நான் உனக்குச் சொன்னேன்" என்றான்.(26)

{கார்த்தவீரிய} அர்ஜுனன், "ஓ! நீ இன்று பிராமணர்களிடம் கொண்ட உன் பக்தியையும், பற்றையும் காட்டிவிட்டாய். பிராமணன் பூமி சார்ந்த என்ன வகை உயிரினம் என்பதை இப்போது எனக்குச் சொல்வாயாக.(27) ஒரு மேன்மையான பிராமணன் எந்த வகையிலாவது காற்றுக்கு ஒப்பானவனா என்பதை எனக்குச் சொல்வாயாக. அல்லது, அவன் நீரையோ, நெருப்பையோ, சூரியனையோ, ஆகாயத்தையோ போன்றவனா?" என்று கேட்டான்.(28)

அநுசாஸனபர்வம் பகுதி – 152ல் உள்ள சுலோகங்கள் : 28

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்