Saturday, July 20, 2019

வெட்டவெளிமெய்! - அநுசாஸனபர்வம் பகுதி – 153

Increate Space is the origin! | Anusasana-Parva-Section-153 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 153)


பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் மேன்மையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்...


காற்றின் தேவன் {வாயு தேவன் கார்த்தவீரியனிடம்}, "ஓ! மூடா, உயர் ஆன்மாக்களைக் கொண்டவர்களான பிராமணர்கள் அனைவரின் குணங்கள் என்னென்ன என்பதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, நீ சொன்ன அனைத்தையும்விடப் பிராமணன் மேன்மையானவன்.(1) பழங்காலத்தில் பூமாதேவியானவள், அங்கர்களின் மன்னனிடம் பகை பாராட்டி பூமியென்ற தன் தன்மையைக் கைவிட்டாள். மறுபிறப்பாளரான கஸ்யபர், அவளை {பூமா தேவியை} முடக்கி, அழிவடையச் செய்தார்[1].(2) ஓ! மன்னா, பிராமணர்களைப் பூமியில் உள்ளதைப் போலவே எப்போதும் சொர்க்கத்திலும் வெல்லப்படமுடியாதவர்கள். பழங்காலத்தில், பெரும் முனிவரான அங்கிரஸ், தன் சக்தியின் மூலம் நீரனைத்தையும் பருகினார்.(3) அந்த உயர் ஆன்ம முனிவர், பாலைக் குடிப்பது போல நீரனைத்தையும் குடித்தும், தன் தாகம் தணிந்தவராக உணரவில்லை. எனவே, அவர் பேரலைகள் எழும்பும் நீர் நிறைந்ததாகப் பூமியை மீண்டும் செய்தார்.(4) மற்றொரு சந்தர்ப்பத்தில், அங்கிரஸ் என்னிடம் கோபமடைந்த போது, நான் உலகத்தைவிட்டுத் தப்பிச் சென்று, அந்த முனிவரிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக, ஒரு பிராமணரின் {உதத்தியரின் / உசத்தியரின்} அக்னிஹோத்ரத்தில் நெடுங்காலம் ஒளிந்திருந்தேன்.(5)


[1] கும்பகோணம் பதிப்பில், "பூமி தேவியானவள் கஸ்பரோடு சண்டைசெய்து பூமியுருவத்தையே இழந்து அழிந்து போனாள். அவளைப் பிராம்மணரான கஸ்யபர் நிலைநிறுத்தினார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பழங்காலத்தில், பூமியானவள் அங்க மன்னனை அறைகூவியழைத்து, தன்னுடைய நிலத்தன்மையை இழந்தாள். பிராமணரான கஸ்யபரால் கலங்கடிக்கப்பட்ட அவள் அழிவை அடைந்தாள்" என்றிருக்கிறது.

சிறப்புமிக்கப் புரந்தரன், அஹல்யையின் உடலில் ஆசை கொண்டதன் விளைவால், கௌதமரால் சபிக்கப்பட்டாலும், அறம் மற்றும் செல்வத்தின் நிமித்தமாக அந்தத் தேவர்களின் தலைவனை அம்முனிவர் முற்றாக அழிக்கவில்லை.(6) ஓ! மன்னா, முற்காலத்தில் தெளிந்த நீரால் நிறைந்திருந்த பெருங்கடல், பிராமணர்களால் சபிக்கப்பட்டு உப்பு நீரின் சுவையை அடைந்தது.(7) பொன்னிறம் கொண்டவனும், புகையற்றிருக்கும்போது, பிரகாசமாகச் சுடர்விடுபவனும், ஒன்றுசேர்ந்து மேலெழும் தழல்களைக் கொண்டவனுமான அக்னியும் கூட, கோபமடைந்த அங்கிரஸால் சபிக்கப்பட்ட போது, இந்தக் குணங்கள் அனைத்தையும் இழந்தான்[2].(8) பெருங்கடலைத் துதிக்க வந்தவர்களும், சகரனின் மகன்களுமான அறுபதினாயிரம் பேரும் பொன்னிறம் கொண்ட பிராமணரான கபிலரின் மூலம் பொடியாக்கப்பட்டதைப் பார்.(9) நீ பிராமணர்களுக்கு நிகரானவனில்லை. ஓ! மன்னா, உன் நன்மையை நாடுவாயாக. பெரும் பலம் கொண்ட க்ஷத்திரியனும், தாயின் கருவறையில் உள்ள பிராமணப் பிள்ளைகளைக்கூட வணங்குகிறான்.(10)

[2] "இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் கவி என்ற சொல் அக்னி என்ற பொருளைத் தருமென உரையாசிரியர் விளக்குகிறார். வட்டார மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் இச்சொல்லை சுக்கிராசாரியரைக் குறிப்பதாக இதை எடுத்துக் கொள்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பொன்னிறமுள்ளதும், ஒன்றுசேர்ந்து எழுந்த ஜ்வாலைளோடு கூடியதும் மகிமை பொருந்தியதுமான அக்னி, அங்கிரஸ் கோபித்துச் சபித்ததனால் இந்தக் குணங்கள் இல்லாமல் போயிற்று" என்றிருக்கிறது.

தண்டகர்களின் பெரும் நாடு ஒரு பிராமணனால் அழிக்கப்பட்டது. வலிமைமிக்க க்ஷத்திரியனான தாலஜங்கன், ஔர்வர் என்ற ஒற்றைப் பிராமணரால் அழிக்கப்பட்டான்.(11) நீயும் கூட, தத்தாத்ரேயரின் அருளின் மூலம், பெரும் நாட்டையும், அடைதற்கரிதானவையான பெரும் வலிமை, அறத்தகுதி, கல்வி ஆகியவற்றை அடைந்திருக்கிறாய்.(12) ஓ! அர்ஜுனா, பிராமணனான அக்னியை நீ ஏன் ஒவ்வொரு நாளும் வணங்குகிறாய்? அண்டத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் வேள்விக் காணிக்கைகளைச் சுமந்து செல்பவன் அவனே. இதை நீ அறிந்தாயில்லையா?(13) உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் ஒரு மேன்மையான பிராமணனே உண்மையில், வாழும் உலகைப் படைத்தவன் என்பதை நீ அறியாமலில்லை எனும்போது, ஏன் இந்த மூடத்தனத்தில் அவதியுறுகிறாய்?(14) புலப்படாதவனும், பலங்கொண்டவனும், மங்கா மகிமை கொண்டவனும், அசையும் மற்றும் அசையாதவற்றுடன் கூடிய எல்லையற்ற அண்டத்தையும் படைத்தவன் அனைத்து உயிரினங்களின் தலைவனான பிரம்மனாவான் (அவனும் ஒரு பிராமணனாவான்).(15)

ஞானமற்ற சிலர், பிரம்மன் ஒரு முட்டையில் இருந்து பிறந்தான் என்று சொல்கின்றனர். மூலமுட்டை வெடித்தபோது, மலைகளும், திசைப்புள்ளிகளும், நீரும், பூமியும், சொர்க்கங்கள் அனைத்தும் இருப்புக்குள் எழுந்தன.(16) அந்தப் படைப்பின் பிறப்பை யாரும் காணவில்லை. அவ்வாறிருக்கையில் பிறப்பில்லாதவனாக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரம்மன், மூல முட்டையில் இருந்து பிறந்தான் என்று எவ்வாறு சொல்லப்படுகிறது? படைக்கப்படாத வெளியே மூல முட்டையெனச் சொல்லப்படுகிறது. படைக்கப்படாத வெளியில் (அல்லது பரமாத்மாவில்) இருந்தே பெரும்பாட்டான் {பிரம்மன்} பிறந்தான்[3].(17) "படைக்கப்படாத வெளியில் இருந்து பெரும்பாட்டன் பிறந்த பிறகு, வேறொன்றும் இருந்திருக்காதே அவன் எங்கே நின்றான்?" என்று நீ கேட்டால், பின்வரும் சொற்களில் பதில் அமையக் கூடும். நினைவு {அகங்காரம்} என்ற பெயரில் ஓர் இருப்பு உள்ளது. வலிமைமிக்க அந்த இருப்பு பெருஞ்சக்தி கொண்டதாகும்.(18) {அப்போது} முட்டை என்று ஏதுமில்லை. எனினும், பிரம்மன் இருந்தான். அவன் அண்டத்தைப் படைத்தவன், அவனே அதன் மன்னன்[4]" என்றான் {வாயு தேவன்}.

[3] கும்பகோணம் பதிப்பில், "பிரம்மதேவர் அண்டத்திலுண்டானவரென்று சில அறவீனர் நினைக்கின்றனர். அண்டம் வெடித்தபின் மலைகளும், திசைகளும், ஜலமும், பூமியும், ஆகாயமும் உண்டாயின. பிரம்மதேவர் இவற்றை அவ்விதமாகக் கண்டவர். பிறப்பில்லாத அவர் பிறப்பதேது? பிரம்மதேவர் எந்த அண்டத்தினின்றுண்டானாரோ அந்த அண்டமாகிய இடம் ஆகாயமன்றோ?" என்றிருக்கிறது. "வெட்ட வெளி தன்னை மெய்யென்றிருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி" என்ற குதம்பைச் சித்தர் பாடலும், " வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக் கிட்டவரத் தேடிக் கிருபை செய்வது எக்காலம்?" என்ற பத்திரகிரியார் பாடலும் இங்கே நினைவுகூரத்தக்கது.

[4] கும்பகோணம் பதிப்பில், "ஆகாயத்தில் அவர் எப்படி நிற்பரென்று சொல்லலாம்? அந்தக் காலத்தில் ஒன்றும் இராதன்றோ? எல்லாச்சக்திகளையுமடைந்த பிரம்மதேவர் அகங்காரமென்று சொல்லப்படுகிறார். அவருக்கு முடிவில்லை. அந்தப் பிரம்மதேவர் உலகங்களைப் படைத்து அவற்றிற்கு ஈஸ்வரராயிருக்கிறார்" என்றிருக்கிறது. இங்கே அகங்காரம் என்ற சொல்லின் அடிக்குறிப்பில், "மகத்திலிருந்து உண்டான அகங்காரம் என்னும் தத்துவம்" என்றிருக்கிறது.

காற்றின் தேவனால் {வாயுவால்} இவ்வாறு சொல்லப்பட்டதும் மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான்".(19)

அநுசாஸனபர்வம் பகுதி – 153ல் உள்ள சுலோகங்கள் : 19

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்