Sunday, July 21, 2019

அகத்தியர் மற்றும் வசிஷ்டரின் பெருமை! - அநுசாஸனபர்வம் பகுதி – 155

The greatness of Agastya and Vasishtha! | Anusasana-Parva-Section-155 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 155)


பதிவின் சுருக்கம் : பிராமணர்களான அகஸ்தியர் மற்றும் வசிஷ்டரின் பெருமையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம் பேசினான், "ஓ! மன்னா, பிராமணரான அகஸ்தியரின் பெருமையைக் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில் தேவர்கள் அசுரர்களால் அடக்கப்பட்டதால் அவர்கள் உற்சாகமிழந்தவர்களாக இருந்தனர். தேவர்களுக்கான வேள்விகள் அனைத்தும் கொள்ளையடிக்கபட்டன, பித்ருக்களின் ஸ்வதாவும் அபகரிக்கப்பட்டது.(2) உண்மையில், ஓ! ஹைஹயர்களின் தலைவா, மனிதர்கள் செய்யும் அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்தும் தானவர்களால் தடுக்கப்பட்டன. தேவர்கள் செழிப்பிழந்து பூமியில் திரிந்தனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3) ஒரு நாள் அவ்வாறு அவர்கள் திரிந்து வருகையில் உயர்ந்த நோன்புகளையும் பெருஞ்சக்தியையும், சூரியனைப் போன்ற சுடர்மிக்கக் காந்தியையும் கொண்ட பிராமணரான அகஸ்தியரைக் கண்டனர்.(4)


அவரை முறையாக வணங்கிய தேவர்கள், மதிப்புக்குரிய வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர். பிறகு, ஓ! மன்னா, அந்த உயர் ஆன்மாவிடம் {அகஸ்தியரிடம்},(5) "நாங்கள் போரில் தானவர்களால் வீழ்த்ததால் செழிப்பையும், செல்வாக்கையும் இழந்தவர்களாக இருக்கிறோம். எனவே, ஓ! தவசிகளில் முதன்மையானவரே, பேரச்சந்தரும் இந்நிலையில் இருந்து நீர் எங்களை மீட்பீராக" என்று வேண்டினர்.(6)

தேவர்களின் அவலநிலையை இவ்வாறு அறிந்த அகஸ்தியர் (தானவர்களிடம்) பெருங்கோபம் கொண்டார். பெருஞ்சக்தி கொண்ட அவர், அண்டப் பேரழிவின் போது தோன்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்பைப் போல உடனே சுடர்விடத் தொடங்கினார்.(7) அம்முனிவரிடம் இருந்து வெளிப்பட்ட சுடர்மிக்கக் கதிர்களில் தானவர்கள் எரியத் தொடங்கினர். உண்மையில், ஓ! மன்னா, அவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஆகாயத்திலிருந்து விழத் தொடங்கினர்.(8) அகஸ்தியரின் சக்தியில் எரிந்த தானவர்கள், சொர்க்கத்தையும், பூமியையும் கைவிட்டு, தெற்குத் திசை நோக்கித் தப்பி ஓடினர்.(9)

அந்நேரத்தில் தானவ மன்னன் பலி, பாதாளலோகத்தில் ஒரு குதிரை வேள்வியைச் செய்து கொண்டிருந்தான். பூமியின் குடல்களுக்குள் இருந்த அந்தப் பகுதியில் அவனோடு வசித்து வந்த பேரசுரர்கள் எரியாமல் இருந்தனர்.(10) தேவர்கள், தங்கள் பகைவர்கள் அழிந்ததும், முற்றிலும் அச்சம் விலகியவர்களாகத் தங்கள் உலகங்களை மீட்டனர். அவர்களுக்காக அவர் சாதித்த காரியத்தின் மூலம் ஊக்கமடைந்த அவர்கள், பூமியின் குடல்களுக்குள் பாதாள லோகத்தில் தஞ்சம் அடைந்த அசுரர்களை அழிக்குமாறு அம்முனிவரை வேண்டினர்.(11)

தேவர்களால் இவ்வாறு வேண்டப்பட்ட அகஸ்தியர், அவர்களிடம், "ஆம், பூமிக்கடியில் வசிக்கும் அசுரர்களையும் எரிக்க நான் முழுத் தகுதி கொண்டவனாக இருந்தாலும், அக்காரியத்தைச் செய்தால் என் தவங்கள் பழுதடையும். எனவே, நான் என் சக்தியைப் பயன்படுத்தமாட்டேன்" என்றார்.(12)

ஓ! மன்னா, இவ்வாறே அந்தச் சிறப்புமிக்க முனிவரின் சக்தியால் தானவர்கள் எரிக்கப்பட்டனர். ஓ! ஏகாதிபதி, இவ்வாறே தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அகஸ்தியர், தம் தவங்களின் துணையுடன் அக்காரியத்தைச் சாதித்தார்.(13) ஓ! பாவமற்றவனே, என்னால் விவரிக்கப்பட்டவாறே அகஸ்தியர் இருந்தார். நான் தொடரலாமா? அல்லது, நீ மறுமொழியேதும் கூறப் போகிறாயா? அகஸ்தியரைவிடப் பெரியவனாக எந்த க்ஷத்திரியனும் இருக்கிறானா?" என்று கேட்டான் {வாயு}".(14)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன், அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் {வாயு} மீண்டும், "ஓ! மன்னா, சிறப்புமிக்க வசிஷ்டரின் பெருஞ்சாதனைகளைக் கேட்பாயாக.(15) ஒரு காலத்தில் தேவர்கள், {கங்கையில்} வைகானஸத் தடாகக் கரைகளில் ஒரு வேள்வி செய்வதில் ஈடுப்பட்டிருந்தனர். வேள்வி செய்து வந்த தேவர்கள், வசிஷ்டரின் பலத்தை அறிந்து அவரையே தங்கள் புரோகிதராகத் தங்கள் மனத்தில் நிறுவினர்.(16) அதேவேளையில், மலைகளுக்கொப்பான வடிவங்களைக் கொண்டவர்களும் கலினர்கள் {பலிகள்} என்ற பெயர்படைத்தவர்களுமான தானவ குலத்தினர், தேவர்கள் தங்களின் தீக்ஷையின் விளைவால், மெலிந்து குறைந்திருப்பதைக் கண்டு அவர்களைக் கொல்ல விரும்பினர்.(17)

அந்தப் போரில் தானவர்களில் அங்கம் பழுதுபட்டவர்களும், கொல்லப்பட்டவர்களும் மானஸத் தடாக நீரில் மூழ்கச் செய்யப்பட்டு, பெரும்பாட்டனின் வரத்தின் விளைவால் உடனே உயிரையும், வன்மையையும் பெற்றனர்.(18) பெரியவையும், பயங்கரமானவையுமான மலைச்சிகரங்களையும், பரிகங்களையும், மரங்களையும் எடுத்துக் கொண்டு தடாகத்தின் நீரைக் கலக்கி, நூறு யோஜனை உயரத்திற்கு அவற்றைப் பெருகச் செய்தனர்.(19) பிறகு அவர்கள் எண்ணிக்கையில் பத்தாயிரமான இருந்த தேவர்களை எதிர்த்து ஓடினர். தானவர்களால் பீடிக்கப்பட்ட தேவர்கள், தங்கள் தலைவனான வாசவனின் பாதுகாப்பை நாடினார்கள்.(20) எனினும், சக்ரனும் அவர்களால் விரைவில் பீடிக்கப்பட்டான். அவன் மனத்தளர்வுடன் வசிஷ்டரின் பாதுகாப்பை நாடினான். இதன்பேரில் புனித முனிவரான வசிஷ்டர் தேவர்களின் அச்சங்களை விலக்குவதாக உறுதியளித்தார்.(21)

தேவர்கள் பெரிதும் உற்சாகமிழந்திருப்பதைப் புரிந்து கொண்ட அந்தத் தவசி {வசிஷ்டர்}, தமது கருணையின் மூலம் இதைச் செய்தார். அவர் தமது சக்தியை வெளிப்படுத்தி, கலினர்கள் {பலிகள்} என்றழைக்கப்பட்ட அந்தத் தானவர்களை எந்த முயற்சியுமின்றி எரித்தார்.(22) தவங்களையே செல்வமாகக் கொண்ட அம்முனிவர், கைலாசத்திற்குச் சென்றிருந்த கங்கையை அந்த இடத்திற்கு வரச் செய்தார். உண்மையில் கங்கையானவள், அந்தத் தடாகத்தின் நீரைத் துளைத்தபடி தோன்றினாள்.(23) தடாகமானது அந்த ஆற்றால் துளைக்கப்பட்டது {உடைக்கப்பட்டது}. அந்தத் தெய்வீக ஓடையானவள், அத்தடாகத்தின் நீரைத் துளைத்துத் தோன்றி, சரயு என்ற பெயரில் பாய்ந்தாள். அந்தத் தானவர்கள் வீழ்ந்த இடம் அவர்களின் பெயராலேயே  {கலினம் / பலினம் என்று} அழைக்கப்படலாயிற்று.(24)

இவ்வாறே, இந்திரனின் தலைமையிலான சொர்க்கவாசிகள், வசிஷ்டரின் மூலம் பெரும் துன்பத்தில் இருந்து மீட்கப்பட்டனர். இவ்வாறே, பிரம்மனிடம் வரம்பெற்றவர்களான அந்தத் தானவர்கள், அந்த உயர் ஆன்ம முனிவரால் கொல்லப்பட்டனர்.(25) ஓ! பாவமற்றவனே, வசிஷ்டர் செய்த சாதனையை நான் சொன்னேன். நான் தொடரட்டுமா? அல்லது, நீ ஏதாவது சொல்லப் போகிறாயா? பிராமணரான வசிஷ்டரை விஞ்சியவன் என்று எந்த க்ஷத்திரியனையாவது சொல்ல முடியுமா?" என்று கேட்டான் {வாயு}".(26)

அநுசாஸனபர்வம் பகுதி – 155ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்