Monday, July 22, 2019

அத்ரி மற்றும் சியவனர் பெருமை! - அநுசாஸனபர்வம் பகுதி – 156

The greatness of Atri and Chyavana! | Anusasana-Parva-Section-156 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 156)


பதிவின் சுருக்கம் : பிராமணர்களான அத்ரி மற்றும் சியவனரின் பெருமையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு சொல்லப்பட்ட {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம், "ஓ! ஹைஹயர்களில் முதன்மையானவனே, உயர் ஆன்ம அத்ரியின் சாதனையைச் சொல்கிறேன் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில், இருளில் தேவர்களும், தானவர்களும் ஒருவருக்கொருவர் போரிட்டபோது, சூரியன் மற்றும் சோமன் {சந்திரன்} ஆகிய இருவரையும் ராகு {ஸ்வர்ப்பானு} தன் கணைகளால் துளைத்தான்.(2) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இருளில் மூழ்கிய தேவர்கள் வலிமைமிக்கத் தானவர்களின் முன்பு வீழத் தொடங்கினர்.(3) அசுரர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட சொர்க்கவாசிகள், தங்கள் பலத்தை இழக்கத் தொடங்கினர். அப்போது அவர்கள் தவங்களைச் செல்வமாகக் கொண்டவரும் கல்விமானுமான பிராமணர் அத்ரி கடுந்தவத்தில் இருப்பதைக் கண்டனர்.(4)


புலன்கள் அனைத்தையும் வென்றவரும், கோபமில்லாதவருமான அந்த முனிவரிடம் {அத்ரியிடம்} அவர்கள், "ஓ! முனிவரே, அசுரர்களின் கணைகாளல் துளைக்கப்பட்டிருக்கும் இந்தச் சோமன் மற்றும் சூரியன் ஆகிய இருவரையும் காண்பீராக.(5) இதன் விளைவால் நாங்கள் இருளில் மூழ்கியிருக்கிறோம், பகைவர்களால் நாங்கள் வீழ்த்தப்படுகிறோம். எங்கள் தொல்லைகளுக்கான ஒரு முடிவை நாங்கள் காணவில்லை. ஓ! பெரும்பலத்தில் தலைவரே, இந்தப் பேரச்சத்தில் இருந்து எங்களை மீட்பீராக" என்றனர்.(6)

அதற்கு முனிவர், "உண்மையில், எவ்வாறு நான் உங்களைப் பாதுகாக்க வேண்டும்?" என்றார். அவர்கள், "நீரே சந்திரமாஸாவீராக. நீரே சூரியனாகி, இந்தக் கள்வர்களைக் கொல்வீராக" என்றனர்.(7)

அவர்களால் இவ்வாறு வேண்டப்பட்ட அத்ரி, இருளை அழிக்கும் சோமனின் வடிவை ஏற்றார். உண்மையில் தமது ஏற்புடைய இயல்பின் விளைவால் அவர் சோமனைப் போன்றே அழகானவராகவும் ஒளி நிறைந்தவராகவும் காணப்படத் தொடங்கினார்.(8) இதைக் கண்டவர்களான உண்மையான சோமனும், உண்மையான சூரியனும் பகைவரின் கணைகளால் இருளடைந்தனர். இந்த ஒளிக்கோள்களின் வடிவங்களை ஏற்ற அத்ரி, தமது தவப் பலத்தின் துணையுடன் போர்க்களத்தின் மீது காந்தியுடன் ஒளிரத் தொடங்கினார்.(9) உண்மையில் அத்ரி, இருள் அனைத்தையும் விலக்கி அண்டத்தை ஒளியில் சுடர்விடச் செய்தார். மேலும் தம் பலத்தை வெளிப்படுத்திய அவர், தேவர்களுடைய பகைவர்களின் கூட்டத்தையும் அடக்கினார்.(10)

அத்ரியினால் எரிக்கப்படும் அந்தப் பேரசுரர்களைக் கண்ட தேவர்களும், அத்ரியின் சக்தியால் பாதுகாக்கப்பட்டவர்களாக, அவர்களை {தானவர்களை} விரைவில் அகற்றத் தொடங்கினர்.(11) தமது சக்தி அனைத்தையும் திரட்டி, தம் ஆற்றலை வெளிப்படுத்திய அத்ரி இவ்வழியிலேயே நாளின் தேவனுக்கு ஒளியூட்டி, தேவர்களை மீட்டு, அசுரர்களைக் கொன்றார்.(12) புனித நெருப்பைத் துணையாகக் கொண்டவரும், அமைதியாக மந்திரங்களை ஓதுபவரும், மான் தோல் உடுத்தியவருமான அந்த மறுபிறப்பாளரால் செய்யப்பட்ட சாதனை இதுவே. ஓ! அரசமுனியே, கனிகளைமட்டுமே உண்டு வாழ்ந்த அந்த முனிவர் செய்த சாதனையைக் காண்பாயாக.(13) உயர் ஆன்ம அத்ரியின் சாதனையை நான் விரிவாக உனக்கு உரைத்தேன். நான் தொடரலாமா? அல்லது, நீ ஏதாவது சொல்லப் போகிறாயா? இந்த மறுபிறப்பாள முனிவரைவிட மேன்மையான க்ஷத்திரியன் யாரேனும் உண்டா?" என்று கேட்டான் {வாயு}.(14)

இவ்வாறு சொல்லப்பட்ட {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம், "ஓ! மன்னா, (பழங்காலத்தில்) உயர் ஆன்ம சியவனரால் செய்யப்பட்ட சாதனையைக் கேட்பாயாக.(15) அஸ்வினி இரட்டையர்களுக்கு உறுதி மொழி அளித்த சியவனர், பாகனைத் தண்டித்தவனிடம் {இந்திரனிடம்}, "வேறு தேவர்கள் அனைவருடன் சேர்ந்து அஸ்வினிகளையும் சோமம் பருகுபவர்களாகச் செய்வாயாக" என்றார்.(16)

இந்திரன் {சியவனரிடம்}, "அஸ்வினிகள் எங்களால் கைவிடப்பட்டவர்கள். அவர்களைப் பிறரோடு சேர்ந்து சோமம் பருக வேள்வி வட்டத்திற்குள் எவ்வாறு அனுமதிக்க முடியும்? அவர்கள் தேவர்களோடு கணக்கிடப்படுவதில்லை. எனவே, எங்களிடம் அவ்வாறு சொல்லாதீர்.(17) ஓ! பெரும் நோன்புகளைக் கொண்டவரே, அஸ்வினிகளுடன் சேர்ந்து நாங்கள் சோமம் பருக விரும்பவில்லை. ஓ! கல்விமானான பிராமணரே, நீர் சொல்லும் வேறு எதையும் நாங்கள் நிறைவேற்றத் தயாராக இருக்கிறோம்" என்றான்.(18)

சியவனர், "அஸ்வினி இரட்டையர்களும் உங்கள் அனைவருடன் சேர்ந்து சோமம் பருக வேண்டும். ஓ! தேவர்களின் தலைவா, அவ்விருவரும் சூரியனுடைய மகன்களாக இருப்பதால் அவர்களும் தேவர்களே.(19) நான் சொன்னதைத் தேவர்கள் செய்ய வேண்டும். அந்த வார்த்தைகளின்படி செயல்படும்போது, தேவர்கள் பெரும் நன்மையை அறுவடை செய்வார்கள். வேறு வகையில் செய்பட்டால் தீமையே அவர்களை மூழ்கடிக்கும்" என்றார்.(20)

இந்திரன், "ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான் அஸ்வினிகளுடன் சேர்ந்து சோமம் பருக மாட்டேன். மற்றவர்கள் விரும்பினால் அவர்களோடு பருகட்டும். என்னைப் பொறுத்தவரையில், நான் அதைச் செய்யத் துணியேன்" என்றான்.(21)

சியவனர், "ஓ! பலனைக் கொன்றவனே, என் வார்த்தைகளுக்கு நீ கீழ்ப்படியாவிட்டால், இந்த நாளிலேயே என்னால் வற்புறுத்தப்பட்டு வேள்வியில் அவர்களோடு சோமம் பருகுவாய்" என்றார்".(22)

காற்றின் தேவன் {தொடர்ந்தான்}, "பிறகு, தம்மோடு அஸ்வினிகளை அழைத்துச் சென்ற சியவனர், அவர்களின் நன்மைக்காக ஒரு பேரறச் சடங்கைத் தொடங்கினார். மந்திரங்களின் துணையுடன் சியவனரால் தேவர்கள் அனைவரும் கலங்கடிக்கப்பட்டனர்.(23) சியவனரால் தொடங்கப்பட்ட காரியத்தைக் கண்ட இந்திரன், கோபத்தால் தூண்டப்பட்டான். ஒரு பெரும் மலையைத் தூக்கிக் கொண்டு அவன் {இந்திரன்} அந்த முனிவரை எதிர்த்து ஓடினான்.(24) தேவர்களின் தலைவன் வஜ்ரமும் தரித்திருந்தான். அப்போது, தவங்களுடன் கூடிய சியவனர், அவ்வாறு முன்னேறி வரும் இந்திரனின் மீதும் தம் கோபப் பார்வையைச் செலுத்தினார்.(25) சிறிதளவு நீரைத் தெளித்த அவர் தேவர்களின் தலைவனை அவனது வஜ்ரத்தோடும் மலையோடும் சேர்த்து முடக்கினார். அவரால் தொடங்கப்பட்ட அந்த அறச்சடங்கின் விளைவால் அவர் இந்திரனுக்குப் பகையான ஒரு பயங்கர அசுரனை உண்டாக்கினார்.(26) வேள்வித் தீயில் ஊற்றப்பட்ட ஆகுதிகளால் அமைந்தவனும், அகன்று விரிந்த வாயைக் கொண்டவனுமான அந்த அசுரன் மதன் என்றழைக்கப்பட்டான். மந்திரங்களின் துணையுடன் அந்தப் பெருந்தவசியால் உண்டாக்கப்பட்ட அந்த அசுரன் இவ்வாறே இருந்தான். அவனது வாயில் நூறு யோஜனைகள் தொலைவுக்கு நீளும் ஆயிரம் பற்கள் இருந்தன.(27) பயங்கர முகத் தோற்றத்தைக் கொண்டிருந்த அவனுடைய கோரப் பற்கள் இருநூறு யோஜனைகள் நீளம் இருந்தன. அவனுடைய கன்னங்களில் ஒன்று பூமியில் இருந்தது, மற்றொன்று சொர்க்கங்களைத் தொட்டுக் கொண்டிருந்தது.(28) உண்மையில், வாசவனுடன் கூடிய தேவர்கள் அனைவரும், லேவியாதனத்தின் {பெரிய மீன் ஒன்றின்} அகன்று திறந்திருக்கும் வாய்க்குள் நுழையப் போகும் மீன்களைப் போல அந்தப் பேரசுரனின் நாவின் அடிப்பாகத்தில் {தொண்டையில்} நின்று கொண்டிருந்தனர்.(29)

தேவர்கள், மதனின் வாய்க்குள் நின்று கொண்டிருந்தபோது, அவர்களுள் அவசர ஆசலோசனை செய்து இந்திரனிடம், "இந்த மறுபிறப்பாளரிடம் மதிப்புடன் தலைவணங்குவாயாக.(30) அனைத்து ஐயங்களில் இருந்து விடுபட்டு, அஸ்வினிகளின் துணையுடன் நாங்கள் சோமத்தைப் பருகுவோம்" என்றனர். அதன் பிறகு, சக்ரன் சியவனரிடம் தலைவணங்கி அவரது ஆணைக்குக் கீழ்ப்படிந்தான்.(31) இவ்வாறே சியவனர், அஸ்வினிகளைப் பிற தேவர்களுடன் சேர்ந்து சோமம் பருகுபவர்களாக்கினார். மதனைத் திருப்பி அழைத்துக் கொண்ட அந்த முனிவர், அவன் செய்ய வேண்டிய செயல்களை அவனுக்கு ஒதுக்கினார்.(32) அந்த மதன், பகடையிலும், வேட்டையிலும், குடியிலும், பெண்களிடத்திலும் வசிக்குமாறு பணிக்கப்பட்டான். எனவே, ஓ! மன்னா, இவற்றில் ஈடுபடும் மனிதர்கள் ஐயமில்லாமல் அழிவையே அடைவார்கள்.(33) எனவே, ஒருவன் இந்தக் களங்கங்களை எப்போதும் நெடுந்தொலைவுக்குக் களைய வேண்டும். இவ்வாறே, ஓ! மன்னா, சியவனர் செய்த சாதனையை நான் உனக்குச் சொன்னேன். நான் தொடரட்டுமா? அல்லது, நீ மறுமொழியேதும் சொல்லப் போகிறாயா? பிராமணரான சியவனரைவிட உயர்ந்த க்ஷத்திரியன் எவனும் இருக்கிறானா?" என்று கேட்டான் {வாயு}[1]".(34,35)

[1] இந்தக் கதை ஏற்கனவே வனபர்வத்தில் பகுதி 124 மற்றும் பகுதி 125ல் சொல்லப்பட்டிருக்கிறது.

அநுசாஸனபர்வம் பகுதி – 156ல் உள்ள சுலோகங்கள் : 35

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்