Monday, July 22, 2019

கபர்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 157

Kapas! | Anusasana-Parva-Section-157 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 157)


பதிவின் சுருக்கம் : பூமியும், சொர்க்கமும் கபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது; தேவர்கள் பிராமணர்களால் அவற்றைத் திரும்பப் பெற்றது; கார்த்தவீரியார்ஜுனனுக்குப் பிராமணர்களால் ஏற்படப்போகும் அச்சம் ஆகியவற்றைக் குறித்து கார்த்தவீரியார்ஜுனனுக்குச் சொன்ன வாயு தேவன்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "காற்றின் தேவனுடைய இவ்வார்த்தைகளைக் கேட்ட {கார்த்தவீரிய} ஆர்ஜுனன் அமைதியாக இருந்தான். இதன்பேரில் காற்றின் தேவன் மீண்டும் அவனிடம், "இந்திரனின் தலைமையிலான சொர்க்கவாசிகள் அசுரன் மதனின் வாய்க்குள் தங்களைக் கண்டபோது, சியவனர் அவர்களிடம் இருந்து பூமியை அடைந்தார்.(1,2) ஏற்கனவே சொர்க்கத்தை இழந்தவர்களும், இப்போது பூமியை இழந்தவர்களுமான தேவர்க்ள உற்சாகமிழந்தனர். உண்மையில், அந்த உயர் ஆன்மாக்கள் துன்பத்தால் பீடிக்கப்பட்டு, பெரும்பாட்டனின் பாதுகாப்பின் கீழ் தங்களை நிறுத்திக் கொண்டனர் {பிரம்மனைத் தஞ்சமடைந்தனர்}.(3)


தேவர்கள் {பிரம்மனிடம்}, "ஓ! அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவரே, பூமியானது எங்களிடமிருந்து சியவனரால் எடுத்துக் கொள்ளப்பட்டது, ஓ! பலமிக்கவனே, அதே வேளையில் சொர்க்கமும் கபர்களால் அபகரிக்கப்பட்டது.(4)

பிரம்மன், "சொர்க்கவாசிகளே, இந்திரனின் தலைமையில் விரைவாகச் சென்று பிராமணர்களின் பாதுகாப்பை நாடுவீராக. அவர்களை நிறைவடையச் செய்வதன் மூலம் நீங்கள் முன்பு போலவே இரண்டு உலகங்களையும் பெறுவீர்கள்" என்றான்.(5)

பெரும்பாட்டனால் இவ்வாறு சொல்லப்பட்ட தேவர்கள், பிராமணர்களிடம் சென்று, அவர்களது பாதுகாப்பை அடைய வேண்டினார்கள். பிராமணர்கள் மறுமொழியாக, "நாங்கள் யாரை வசப்படுத்த வேண்டும்?" என்று கேட்டனர். இவ்வாறு கேட்கப்பட்ட தேவர்கள், அவர்களிடம், "கபர்களை அடக்குவீராக" என்றனர்.(6)

பிராமணர்கள், "முதலில் அவர்களைப் பூமிக்குக் கொண்டு வந்து, அதன் பிறகு அவர்களை விரைவில் அடக்குகிறோம்" என்றனர். அதன் பிறகு, கபர்களின் அழிவை நோக்கமாகக் கொண்ட ஒரு சடங்கை அந்தப் பிராமணர்கள் தொடங்கினர். இதைக் கேட்ட உடனேயே கபர்கள், தனி என்ற பெயர் கொண்டவனைத் தங்கள் தூதுவனாக அந்தப் பிராமணர்களிடம் அனுப்பி வைத்தனர்.(7)

தனி, அவர்களிடம் வந்து பூமியில் அமர்ந்து, கபர்களால் சொல்லப்பட்ட செய்தியை இவ்வாறு சொன்னான், "கபர்களும் உங்கள் அனைவரையும் போன்றோரே. (அவர்கள் உங்களில் எவரையும் காட்டிலும் தாழ்ந்தவர்களல்ல). எனவே, நீங்கள் நிறைவேற்றப் பார்க்கும் சடங்குகள் என்ன விளைவை ஏற்படுத்தப் போகின்றன?(8) அவர்கள் அனைவரும் வேதங்களை அறிந்தவர்களாகவும், ஞானம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் வேள்விகளில் கவனம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வாய்மையைத் தங்கள் நோன்பாகவும் கொண்டிருப்பதால் பெரும் முனிவர்களுக்கு இணையானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(9) செழிப்பின் தேவி அவர்களுக்கு மத்தியில் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவர்களும் பதிலுக்கு அவளை மதிப்புடன் ஆதரிக்கின்றனர். அவர்கள் கனியற்ற கலவிகளுக்காகத் தங்கள் மனைவியரை நாடுவதில்லை, மேலும், அவர்கள் வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருபோதும் உண்பதில்லை.(10) அவர்கள் (ஒவ்வொருநாளும்) சுடர்மிக்க வேள்வித்தீயில் ஆகுதிகள் ஊற்றி, தங்கள் ஆசான்கள் மற்றும் பெரியோரின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் ஆன்மாக்களை முற்றிலும் கட்டுப்படுத்தியவர்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முறையாகப் பகர்ந்து கொடுக்காமல் ஒருபோதும் எந்த உணவையும் உட்கொள்வதில்லை.(11) அவர்கள் எப்போதும் தேர்களிலும், பிற வாகனங்களிலும் ஒன்றாகச் சேர்ந்தே செல்கிறார்கள் (அவர்களில் எவரும், பிறர் கால்நடையாகச் செல்லும்போது வாகனம் செலுத்திச் செல்வதில்லை). அவர்கள் தங்கள் மனைவியர் மாத விலக்குக் காலத்தில் இருக்கும்போது அவர்களிடம் ஒருபோதும் கலவியில் ஈடுபடுவதில்லை. மறுமையில் இன்பலோகங்களை அடையும் வழியிலேயே அவர்கள் அனைவரும் செயல்படுகின்றனர்.(12) பெண்கள் கருவுற்றிருக்கும்போதோ, முதியோர் உண்ணாதிருக்கும்போதோ, அவர்கள் ஒருபோதும் உண்பதில்லை. அவர்கள் முற்பகலில் எவ்வகை விளையாட்டுகளிலும் ஈடுபடுவதில்லை. ஒருபோதும் அவர்கள் பகலில் உறங்குவதில்லை.(13) கபர்களிடம் இவையும், இன்னும் பிற நல்லொழுக்கங்ளும், சாதனைகளும் இருக்கும்போது, ஏன் நீங்கள் அவர்களை அடக்க முயல்கிறீர்கள்? இம்முயற்சியை நீங்கள் தவிர்க்க வேண்டும். உண்மையில், அவ்வாறு தவிர்ப்பதன் மூலம் நீங்கள் நன்மையை அடைவீர்கள்" என்றான்.(14)

பிராமணர்கள், "ஓ, நாங்கள் கபர்களை அடக்கவே போகிறோம். இக்காரியத்தில் நாங்களும் தேவரும் ஒருவரே. எனவே, கபர்கள் எங்கள் கரங்களால் கொல்லப்படுவார்கள். தனியைப் பொறுத்தவரையில் {தனி என்ற உன்னைப் பொறுத்தவரையில்} அவன் எங்கிருந்து வந்தானோ அங்கேயே திரும்ப வேண்டும்" என்றனர்.(15)

இதன் பிறகு, கபர்களிடம் திரும்பிய தனி, அவர்களிடம், "பிராமணர்கள் உங்களுக்கு எந்த நன்மையும் செய்பவர்களாக இல்லை" என்றான். இதைக் கேட்ட கபர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, பிராமணர்களை நோக்கிச் சென்றனர்.(16) தேரின் கொடிமரங்கள் உயர்த்தப்பட்டு, தங்களை எதிர்த்து வரும் கபர்களைக் கண்ட பிராமணர்கள், கபர்களின் உயிர் மூச்சுகளுக்கு அழிவை உண்டாக்குவதற்காகக் குறிப்பிட்ட சுடர்மிக்க நெருப்புகளை உண்டாக்கினர்.(17) வேத மந்திரங்களின் துணையுடன் உண்டாக்கப்பட்ட அந்த நித்திய நெருப்புகள், கபர்களை அழித்து, (பொன்) மேகங்கள் பலவற்றைப் போல ஆகாயத்தில் ஒளிரத் தொடங்கின.(18) போரில் ஒன்றுகூடிய தேவர்கள், பல தானவர்களைக் கொன்றனர். பிராமணர்களே அவர்களுக்கு அழிவை உண்டாக்குகிறார்கள் என்பதை அந்நேரத்தில் அவர்கள் அறியவில்லை.(19)

ஓ! மன்னா, பெரும் சக்தி கொண்ட நாரதர் அங்கே வந்து, (தேவர்களால் அல்லாமல்) பிராமணர்களின் வலிய சக்தியின் மூலம் தங்கள் பகைவர்களான கபர்கள் எவ்வாறு உண்மையில் கொல்லப்பட்டனர் என்பதைத் தேவர்களுக்குச் சொன்னார்.(20) தேவர்களின் சொற்களைக் கேட்ட சொர்க்கவாசிகள் பெரும் நிறைவை அடைந்தனர். அவர்கள் பெரும்புகழைக் கொண்ட தங்கள் மறுபிறப்பாளக் கூட்டாளிகளை மெச்சினார்கள்.(21) பிறகு, தேவர்களின் சக்தியும் ஆற்றலும் பெருகத் தொடங்கின, அவர்கள் உலகங்கள் அனைத்திலும் வழிபடப்பட்டார்கள், அழிவின்மை என்ற வரத்தையும் அவர்கள் அடைந்தார்கள்" என்றான் {வாயு}.(22)

காற்றின் தேவன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, அவனை முறையாக வழிபட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன், அவனிடம் இந்த வார்த்தைகளில் பதிலளித்தான். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஏகாதிபதி, {கார்த்தவீரிய} அர்ஜுனன் என்ன சொன்னான் என்பதைக் கேட்பாயாக.(23)

{கார்த்தவீரிய} அர்ஜுனன் {வாயு தேவனிடம்}, "ஓ! பலமிக்கத் தேவா {வாயுவே}, எப்போதும், அனைத்து வழிமுறைகளிலும் நான் பிராமணர்களுக்காகவே வாழ்கிறேன். அவர்களிடம் அர்ப்பணிப்புள்ள நான் எப்போதும் அவர்களை வழிபட்டு வருகிறேன்.(24) தத்தாத்ரேயரின் அருளின் மூலம் நான் என்னுடைய இந்த வலிமையை அடைந்திருக்கிறேன். அவருடைய அருளின் மூலமே உலகில் பெருஞ்சாதனைகளைச் செய்தேன், உயர்ந்த பலன்களையும் அடைந்தேன்.(25) ஓ! காற்றின் தேவா, உன்னால் விரிவாகவும், கவனத்தைக் கவரும் வகையிலும் சொல்லப்பட்ட பிராமணர்களின் சாதனைகளை நான் கவனத்துடன் கேட்டேன்" என்றான்.(26)

காற்றின் தேவன், "பிறப்பால் உனதான க்ஷத்திரியக் கடமைகளை நீ செய்யும்போது, பிராமணர்களைப் பாதுகாத்து, அவர்களைப் பேணி வளர்ப்பாயாக. உன் புலன்களைக் காப்பது போலவே நீ அவர்களைக் காப்பாயாக. பிருகுவின் குலத்தில் இருந்து உனக்கு ஆபத்து இருக்கிறது. எனினும், நெடுங்காலம் கழித்தே அவை அனைத்தும் நடந்தேறும்" என்றான் {வாயு}".(27)

அநுசாஸனபர்வம் பகுதி – 157ல் உள்ள சுலோகங்கள் : 27

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்