Wednesday, July 24, 2019

சங்கரன் மகிமை! - அநுசாஸனபர்வம் பகுதி – 160

The greatness of Sankara! | Anusasana-Parva-Section-160 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 160)


பதிவின் சுருக்கம் : சிவனின் பெருமையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...


யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! மதுசூதனா, துர்வாஸரின் அருள்மூலம் நீ அடைந்த அறிவை எனக்கு விளக்கிச் சொல்வதே உனக்குத் தகும்.(1) ஓ! நுண்ணறிவுமிக்கவர் அனைவரிலும் முன்மையானவனே, அந்த உயர்ந்த அருள், அந்த உயர் ஆன்மாவின் பெயர்கள் அனைத்தையும் விளக்கமாக நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்[1].(2)


[1] துர்வாஸர் மஹாதேவனின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறார். எனவே, துர்வாஸர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டாலும் யுதிஷ்டிரன் உண்மையில் மஹாதேவனையே கேட்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகறார்.

வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, "அந்த உயர் ஆன்மாவின் அருள் மூலம் நான் வென்ற புகழ் மற்றும் அடைந்த நன்மைகளை உமக்குச் சொல்கிறேன். உண்மையில், கபர்தினை வணங்கிய பிறகு இது குறித்து நான் உமக்குச் சொல்கிறேன்.(3) ஓ! மன்னா, ஒவ்வொரு நாள் படுக்கையில் இருந்து எழுந்ததும் நான் சொல்லும் சதருத்ரீயத்தை உமக்குச் சொல்கிறேன் கேட்பீராக.(4) அனைத்து உயிரினங்களின் பெருந்தலைவனும், தவங்களையே செல்வமாகக் கொண்டவனுமான பிரம்மனே, சில காலம் சிறப்புத் தவங்களைச் செய்து இந்த மந்திரங்களைத் தொகுத்தான். ஓ! ஐயா, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்துடன் கூடிய இந்த அண்டத்தைச் சங்கரனே படைத்தான்.(5) ஓ! ஏகாதிபதி, மஹாதேவனை விட உயர்ந்தவன் வேறு எவனும் இல்லை. உண்மையில், மூவுலகங்களில் உள்ள அனைத்திலும் உயர்ந்தவன் அவனே.(6) அந்த உயர் ஆன்மாவின் எதிரே நிற்கவல்லவர்கள் வேறு எவரும் இல்லை. உண்மையில், அவனுக்கு நிகராக மூவுலகங்களிலும் ஒருவனும் இல்லை.(7)

போர்க்களத்தில் சினத்தால் நிறைந்தவனாக அவன் நிற்கும்போது, அவனது மேனி மணமே பகைவர்கள் அனைவரின் நினைவையும் இழக்கச் செய்யும். கொல்லப்படாதவர்கள் நடுங்கிக் கீழே விழுவார்கள்.(8) அவனது முழக்கங்கள் மேகங்களுக்கு ஒப்பான பயங்கரமானவை. போர்க்களத்தில் அவனது முழக்கங்களைக் கேட்கும் தேவர்களின் இதயங்களே கூட இரண்டாகப் பிளக்கும்.(9) பினாகைதாரி கோபமடைந்து பயங்கர வடிவை ஏற்று, தேவர்கள், அசுரர், கந்தர்வர், அல்லது பாம்பின் மீது வெறுமனே தன் பார்வையைச் செலுத்தினாலும், அவனுக்கு மலைக்குகையில் உறைவிடம் அமைந்தாலும் மனோ அமைதியை அடையத் தவறுவான். உயிரினங்கள் அனைத்தின் தலைவனான தக்ஷன் வேள்வி செய்ய விரும்பி, தன் வேள்வியைப் பரப்பியபோது,(10,11) அச்சமற்ற பவன், (தக்ஷனைக் கண்டு) கோபமடைந்து, (உடல்படைத்த) வேள்வியைத் துளைத்தான். தன்னுடைய பயங்கர வில்லில் இருந்து கணையை ஏவி உரக்க முழங்கினான்.(12) உண்மையில் மஹாதேவன் கோபமடைந்து உடல்வடிவம் கொண்ட வேள்வியைத் தன் கணையால் திடீரெனத் துளைத்தபோது, தேவர்கள் மகிழ்ச்சியையும், இதய அமைதியையும் இழந்து துன்பத்தில் நிறைந்தனர்.(13)

அவனது வில்லின் நாண்கயிற்றில் உண்டான நாணொலியின் விளைவால் மொத்த அண்டமும் கலக்கமடைந்தது. ஓ! பிருதையின் மகனே, தேவர்களும், அசுரர்களும், உற்சாகத்தை இழந்து கலக்கமடைந்தனர்.(14) பெருங்கடல் கலங்கியது, பூமியானவள் மையம் வரை நடுங்கினாள். மலைகளும், குன்றுகளும் தங்கள் அடித்தளத்தைவிட்டு நகரத் தொடங்கி, அனைத்துப் புறங்களிலும் ஓடின. ஆகாய வெளி உடைந்தது.(15) உலகங்கள் அனைத்தும் இருளில் மூழ்கின. எதையும் காண முடியவில்லை. ஓ! பாரதா, சூரியனுடன் சேர்த்து, ஒளிக்கோள்கள் அனைத்தின் ஒளியும் இருளடைந்தது.(16) அச்சமடைந்த பெரும் முனிவர்கள், தங்களுக்கும், அண்டத்திற்கும் நன்மை செய்ய விரும்பி, அமைதிக்கான வழக்கமான பரிகாரச் சடங்குகளைச் செய்தனர்.(17) அதே வேளையில், பயங்கர ஆற்றலைக்கொண்ட ருத்திரன் தேவர்களை எதிர்த்து விரைந்தான். சினத்தால் நிறைந்த அவன், பகனின் {பக தேவனின்} கண்களைக் கிழித்தெறிந்தான்.(18) சினத்தால் தூண்டப்பட்ட அவன், தன் காலால் பூஷனை {சூரியனைத்} தாக்கினான். (புரோடாசம் என்றழைக்கப்படும்) பெரிய வேள்விப்பிண்டத்தை அமர்ந்து உண்ட போது, அந்தத் தேவனின் {சூரியனின்} பற்கள் அவனால் {ருத்திரனால்} கிழித்தெறியப்பட்டன.(19)

அச்சத்தால் நடுங்கிய தேவர்கள் சங்கரனுக்குத் தலைவணங்கினர். தணிவடையாத ருத்திரன் மீண்டும் தன் வில்லின் நாணில் சுடர்மிக்கக் கூரிய கணையொன்றைப் பொருத்தினான்.(20) அவனது ஆற்றலைக் கண்ட தேவர்களும், முனிவர்கள் அனைவரும் அச்சமடைந்தனர். முதன்மையான தேவர்களான அவர்கள் அவனைத் தணிவடையச் செய்யத் தொடங்கினர்.(21) மதிப்புடன் தங்கள் கரங்களைக் கூப்பிக் கொண்ட அவர்கள், சதருத்ரீய மந்திரங்களைச் சொல்லத் தொடங்கினர். இறுதியாக, இவ்வாறு தேவர்களால் புகழப்பட்ட மஹேஸ்வரன் நிறைவடைந்தான்.(22) பிறகு தேவர்கள் (வேள்விக்காணிக்கைகளில்) ஒரு பெரும் பங்கை அவனுக்கு ஒதுக்கினார்கள். ஓ! மன்னா, அச்சத்தில் நடுங்கிய அவர்கள் அவனது பாதுகாப்பை நாடினார்கள்.(23) இரண்டாகப் பிளக்கப்பட்டிருந்த வேள்வியின் உடல் வடிவமானது ருத்திரன் நிறைவடைந்ததும் மீண்டும் ஒன்று சேர்ந்தது. மஹாதேவனின் கணைகளால் எந்த அங்கங்கள் அழிக்கப்பட்டனவோ அவை மீண்டும் முழுமையாக நலமாகத் திரும்பியது.(24)

பழங்காலத்தில், பெருஞ்சக்தி கொண்ட அசுரர்கள் ஆகாயத்தில் முந்நகரங்களை {திரிபுரத்தைக்} கொண்டிருந்தனர். அவற்றில் ஒன்று இரும்பாலானது; ஒன்று வெள்ளியாலானது; மற்றொன்று பொன்னாலானது.(25) மகவத்தால், தன்னிடம் இருந்த ஆயுதங்கள் அனைத்தாலும் அந்த நகரங்களைத் துளைக்க இயலவில்லை. அசுரர்களால் பீடிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் அப்போது பெரும் ருத்திரனின் பாதுகாப்பை நாடினார்கள். உயர் ஆன்ம தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவனிடம் {ருத்திரனிடம்}, "ஓ! ருத்ரா, அசுரர்கள் தங்கள் செயல்கள் அனைத்திலும் அழிவாதிக்கத்தைச் செய்ய அச்சுறுத்துகின்றனர்.(27) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, மூவுலகங்களையும் பாதுகாப்பதற்க்காக அந்தத் தைத்தியர்களைக் கொன்று அவர்களது நகரத்தையும் அழிப்பாயாக" என்று கேட்டனர். அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அவன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, விஷ்ணுவைத் தன் கணையின் சிறந்த தலையாக அமைத்தான்.(28) நெருப்பின் தேவனைக் கணை முனையாகவும், சூரியனின் மகனான யமனை அந்தக் கணையின் சிறகுகளாகவும் அமைத்தான். வேதங்களைத் தன் வில்லாகவும், சாவித்ரி தேவியைத் தன் வில்லின் சிறந்த நாணாகவும் கொண்டான்.(29) பெரும்பாட்டன் பிரம்மனையே தன் தேரோட்டி ஆக்கிக் கொண்டான். இவை அனைத்தையும் பயன்படுத்தி, மூன்று பர்வங்கள் மற்றும் மூன்று சல்லியங்களைக் கொண்ட தன் கணையால் அசுரர்களின் முந்நகரத்தைத் துளைத்தான்[2].(30) உண்மையில், ஓ! பாரதா, யுக முடிவில் அனைத்துப் பொருட்களையும் எரிக்கத் தோன்றும் நெருப்பின் சக்தியுடன் கூடியவனும் சூரியனைப் போன்ற வெண்ணிறத்தவனுமான ருத்திரனின் கணையால் அசுரர்களும், அவர்களது நகரங்களும் எரிக்கப்பட்டன.(31)

[2] "ஒரு பர்வம் என்பது ஒரு முடிச்சாகும். நாணல்களும், மூங்கில்களும் வரிசையான முடிச்சுகளைக் கொண்டவையாகும். இரண்டு முடிச்சுகளுக்கு இடைப்பட்ட இடமே ஒரு சல்லியம் என்றழைக்கப்படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஐந்து சடைகளைக் கொண்ட ஒரு குழந்தையாக மாறி பார்வதியின் மடியில் கிடக்கும் மஹாதேவனைக் கண்டு, தேவர்களிடம் அவள் {பார்வதி}, {குழந்தையின் வடிவில் இருக்கும்} அவன் யார் என்று கேட்டாள்.(32) அந்தக் குழந்தையைக் கண்ட சக்ரன், திடீரெனப் கோபம் மற்றும் பொறாமையால் நிறைந்து தன் வஜ்ரத்தைக் கொண்டு அவனைக் கொல்லத் தீர்மானித்தான். எனினும், அக்குழந்தை இரும்புத் தடியைப் போன்ற இந்திரனின் கரத்தையும், அதனுடன் கூடிய வஜ்ரத்தையும் சேர்த்து முடக்கினான்.(33) தேவர்கள் அனைவரும் கலக்கமடைந்தனர், அந்தப் பிள்ளைதான் அண்டத்தின் தலைவன் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில், அவர்கள் அனைவரும், லோகபாலர்களும் அந்தக் குழந்தையின் காரியத்தில் மதி கலங்கியவர்களாகினர்.(34)

அப்போது சிறப்புமிக்கப் பெரும்பாட்டன் பிரம்மன், தன் தவங்களின் உதவியால் நினைவுகூர்ந்து, அனைத்திலும் முதன்மையானவனும், உமையின் தலைவனும், அளவிலா ஆற்றல் கொண்டவனுமான மஹாதேவன் அந்தக் குழந்தையே என்பதைக் கண்டறிந்தான். பிறகு அந்தத் தலைவனை அவன் புகழ்ந்தான்.(35) தேவர்களும், உமை மற்றும் ருத்திரன் ஆகிய இருவரின் புகழையும் துதிக்கத் தொடங்கினர். பலனைக் கொன்றவனுடைய {சக்ரனுடைய} (முடக்கப்பட்ட) கரம் மீண்டும் பழைய நிலைமையை அடைந்தது.(36) பெரும் சக்தி கொண்ட பிராமணரான துர்வாசராகப் பிறந்த மஹாதேவன், என் வீட்டில் நெடுங்காலம் வசித்திருந்தான்.(37) என் வசிப்பிடத்தில் வசித்திருந்தபோது அவன் பல்வேறு குறும்புகளைச் செய்தான். பொறுத்துக் கொள்ளக் கடினமாக இருந்தாலும், {அவன் அளித்த} இதயப் பெருந்தன்மையால் அவற்றை நான் பொறுத்துக் கொண்டேன்.(38)

ருத்திரன் அவனே; சிவன் அவனே; அக்னி அவனே; சர்வன் அவனே; அனைவரையும் வெல்பவன் அவனே; இந்திரன் அவனே, வாயுவும், அஸ்வினிகளும், மின்னலின் தேவனும் அவனே.(39) சந்திரமாஸ் அவனே; ஈசானன் அவனே; சூரியன் அவனே; வருணன் அவனே; காலம் அவனே; அழிப்பவன் {மிருத்யு} அவனே; மரணம் {யமன்} அவனே; பகலும், இரவும் அவனே;(40) பக்ஷம் அவனே; பருவகாலங்கள் {ருது} அவனே; {காலை, மாலை என்ற} இரு சந்திப் பொழுதுகள் அவனே; வருடம் அவனே. தாத்ரி அவனே; விதாத்ரி அவனே; விஷ்வகர்மன் அவனே; அனைத்தையும் அறிந்தவன் அவனே.(41) திசைகளின் முக்கிய மற்றும் துணைப்புள்ளிகள் அவனே. அண்ட வடிவில் இருக்கும் அவன் அளவிலா ஆன்மா கொண்டவனாவான். புனிதமானவரும், சிறப்புமிக்கவருமான துர்வாசர் தெய்வீக நிறம் கொண்டவராவார்.(42) சில வேளைகளில் தனியாகவும்; சில வேளைகளில் தன்னை இரண்டாகப் பகுத்துக் கொண்டும்; சில வேளைகளில் பலவாகவும், நூறாகவும், ஆயிரமாகவும், நூறாயிரமாகவும் வெளிப்படுகின்றான்.(43) மஹாதேவன் இவ்வாறானவனே. மேலும், அவன் பிறப்பற்றவன் ஆவான். நூறு வருடங்கள் ஆனாலும் ஒருவனால் அவனது {மஹாதேவனது} குணங்களைச் சொல்லித் தீர்க்க முடியாது" என்றான் {கிருஷ்ணன்}.(44)

அநுசாஸனபர்வம் பகுதி – 160ல் உள்ள சுலோகங்கள் : 44

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்