Wednesday, July 24, 2019

ஸதருத்ரீயம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 161

Sata-rudriya! | Anusasana-Parva-Section-161 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 161)


பதிவின் சுருக்கம் : சதருத்ரீயம் மற்றும் சிவலிங்கப் பெருமை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...


வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரரே, ருத்திரனின் பல்வேறு பெயர்களையும், அந்த உயர் ஆன்மாவின் உயர்ந்த அருள்நிலையையும் சொல்கிறேன் கேட்பீராக.(1) முனிவர்கள் மஹாதேவனை அக்னி என்றும், ஸ்தாணு என்றும், மஹேஸ்வரன் என்றும், ஒற்றைக் கண்ணன் என்றும், அண்ட வடிவம் கொண்ட முக்கண்ணன் என்றும், சிவன் அல்லது மங்கலமானவன் என்றும் சொல்கிறார்கள்.(2) வேதங்களை அறிந்த பிராமணர்கள் இரு வடிவங்களைக் கொண்டவன் அந்தத் தேவன் என்று சொல்கின்றனர். ஒன்று பயங்கரமானதும், மற்றொன்று மங்கலமான மென்மை நிறைந்ததுமாகும். அவ்விரு வடிவங்களும் இன்னும் பல வடிவங்களாகப் பகுக்கப்படுகின்றன.(3) கடுமையான பயங்கர வடிவம், அக்னி, மின்னல் மற்றும் சூரியனோடு ஒப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. மென்மையான மங்கல வடிவம் அறம், நீர் மற்றும் சந்திரனோடு ஒப்பிடத்தகுந்ததாக இருக்கிறது.(4)

மேலும் அவனது பாதி உடல் நெருப்பெனவும், பாதி உடல் சோமன் (அல்லது சந்திரன்) எனவும் சொல்லப்படுகிறது. மென்மையான மங்கல வடிவம் பிரம்மச்சரிய நோன்பில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது.(5) மிகப் பயங்கரமான மற்றொரு வடிவம் அண்டத்தை அழிக்கும் அனைத்து இயக்கங்களிலும் ஈடுபடுகிறது. அவனே பெரியவன் (மகத்), அனைத்து உயிரினங்களுக்கும் உயர்ந்த தலைவன் (ஈஸ்வரன்) என்பதால் அவன் மஹேஸ்வரன் என்றழைக்கப்படுகிறான்.(6) அவன் எரிக்கிறான், ஒடுக்குகிறான், கடுமையாக இருக்கிறான், பெருஞ்சக்தியுடன் கூடியவனாக இருக்கிறான், சதை, குருதி, மஜ்ஜை ஆகியவற்றை உண்பவனாகவும் இருக்கிறான் என்பதாலேயே அவன் ருத்திரன் என்று சொல்லப்படுகிறான்.(7) தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனாக இருப்பதாலும், அவனுடைய ஆட்சிப் பகுதியும், செல்வங்களும் மிகப் பெரியவையாக இருப்பதாலும், அவன் பாதுகாக்கும் அண்டம் மிகப் பெரியதாக இருப்பதாலும் அவன் மஹாதேவன் என்றழைக்கப்படுகிறான்.(8)

புகையின் வடிவம் அல்லது நிறத்தில் அவன் இருப்பதன் காரணத்தால் அவன் தூர்ஜடி {தூர்ஜடை} என்றழைக்கப்படுகிறான். தன் செயல்கள் அனைத்தாலும் அனைவருக்குமான வேள்விகளைச் செய்வதாலும்,(9) அனைத்து உயிரினங்களின் நன்மையை நாடுவதாலும் அவன் சிவன் அல்லது மங்கலமானவன் என்றழைக்கப்படுகிறான். (ஆகாயத்தில்) நின்று கொண்டு அனைத்து உயிரினங்களையும் அழிப்பதையும் தவிர அவன் வழுவாத குறிப்பிட்ட ஒரு பாதையில் நிலைத்திருக்கிறான்.(10) அவனுடைய சின்னம் {லிங்கம்} நிலையானது, எக்காலத்திலும் அழிவற்றது. இந்தக் காரணங்களினால் அவன் ஸ்தாணு என்றழைக்கப்படுகிறான். அவன் பல்வேறு வடிவங்களைக் கொண்டவனாக இருக்கிறான். கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அவனே.(11) அசைவனவும், அசையாதனவும் அவனே. இதன் காரணமாக அவன் பஹுரூபன் என்றழைக்கப்படுகிறான். விஷ்வேதேவர்கள் என்றழைக்கப்படும் தேவர்க்ள அவனது உடலில் வசிக்கிறார்கள். இதன் காரணமாக அவன் (அண்ட வடிவம் கொண்ட) விஷ்வரூபன் என்றழைக்கப்படுகிறான்.(12)

ஆயிரம் கண் கொண்டவன்; அல்லது எல்லையற்ற கண்களைக் கொண்டவன்; அல்லது எங்கும், தன் உடலெங்கும் கண் கொண்டவன். அவனது சக்தி அவனது கண்களின் மூலம் வெளிப்படுகிறது. அவனது கண்களுக்கு ஓர் எல்லையில்லை {அவன் ஸர்வதஸ்சக்ஷு என்றழைக்கப்படுகிறான்}.(13) உயிரினங்கள் {பசுக்கள்} அனைத்திற்கும் உணவூட்டி வளர்ப்பவனாகவும், அவற்றுடன் விளையாடுபவனாகவும் இருப்பதாலும், அவற்றின் தலைவனாகவோ, அவற்றை ஆள்பவனாகவோ இருப்பதனால் அவன் பசுபதி (அனைத்து உயிரினங்களின் தலைவன்) என்றழைக்கப்படுகிறான்.(14) அவனுடைய சின்னம் {லிங்கம்} எப்போதும் பிரம்மச்சரிய நோன்பை நோற்பதால் உலகங்கள் அனைத்தும் அதை முறைப்படி வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டுச் செயல் அவனுக்குப் பெரும் நிறைவைத் தருவதாகச் சொல்லப்படுகிறது.(15) சிலையை உண்டாக்கி அவனை ஒருவன் வழிபட்டாலும், மற்றொருவன் அவனது சின்னத்தை {லிங்கத்தை} வழிபட்டாலும், பின்னவனே {லிங்கத்தை வழிபட்டவனே} எப்போதும் பெருஞ்செழிப்பை அடைவான்[1].(16)

[1] கும்பகோணம் பதிப்பில், "அந்த மஹாத்மாவின் விக்ரகத்தைப் பூஜிப்பவன் லிங்கத்தையும் பூஜிக்க வேண்டும். நாள்தோறும் லிங்கத்தைப் பூஜிப்பவன் பெரிய ஐஸ்வர்யத்தை அடைவான்" என்றிருக்கிறது.

முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் எப்போதும் நிமிர்ந்து உயர்ந்திருக்கும் அவனது சின்னத்தையே {லிங்கத்தையே} வழிபடுகின்றனர்.(17) தன் சின்னம் {லிங்கம்} வழிபடப்பட்டால், அந்த வழிபாட்டைச் செய்பவனிடம் மஹேஸ்வரன் உயர்ந்த நிறைவை அடைகிறான். தன் பக்தர்களிடம் அன்பு கொண்ட அவன், உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடன் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறான்.(18) அந்தப் பெருந்தேவன் சுடலையில் வசிக்க விரும்புகிறான், அங்கே அவன் சடலங்கள் அனைத்தையும் எரிக்கிறான். அத்தகைய இடங்களில் {சுடலைகளில்} வேள்விகளைச் செய்யும் மனிதர்கள், வீரர்களுக்கெனத் தனியே ஒதுக்கப்பட்ட உலகங்களை இறுதியில் அடைவார்கள்[2].(19) நியாயமாகச் செயல்படுவதில் ஈடுபடும் அவனே உயிரினங்களின் உடல்களில் வசிக்கும் மரணமாக {மிருத்யுவாகக்} கருதப்படுகிறான். மேலும் அவன், பிராணன், அபானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகளாக உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் இருக்கிறான்.(20)

[2] கும்பகோணம் பதிப்பில், "வீரஸ்தானமென்னப்படும் வீரலோகத்தை விரும்புகிற ஜனங்கள் அவரை அங்கே பூஜிக்கின்றனர்" என்றிருக்கிறது.

அவன் சுடர்மிக்கப் பல்வேறு பயங்கர வடிவங்களைக் கொண்டவனாவான். இவ்வுலகத்தில் வழிபடப்படும் அந்த வடிவங்கள் அனைத்தையும், ஞானம் கொண்ட பிராமணர்கள் அறிந்திருக்கிறார்கள்.(21) தேவர்களுக்கு மத்தியில் பெரும் முக்கியத்தவம் வாய்ந்த பல பெயர்களை அவன் கொண்டிருக்கிறான். அந்தப் பெயர்களின் பொருள்கள் அவனது பெருமையில் இருந்தோ, சாதனைகளில் இருந்தோ, ஒழுக்கத்தில் இருந்தோ எடுக்கப்படுகின்றன.(22) வியாசரால் தொகுக்கப்பட்ட வேதங்களில் தோன்றும் சிறந்த சதருத்ரீயத்தை அவனைக் கௌரவிக்கும் வகையில் பிராமணர்கள் எப்போதும் உரைக்கிறார்கள்.(23) உண்மையில், பிராமணர்களும், முனிவர்களும் அனைத்து உயிரினங்களுக்கும் மூத்தவன் என்று அவனை அழைக்கின்றனர்.(24)

தேவர்கள் அனைவரிலும் முதல்வன் அவன், அவனது வாயில் இருந்தே அக்னி உண்டானான். அற ஆன்மா கொண்டவனும், எப்போதும் அனைவருக்கும் பாதுகாப்பை வழங்க விரும்புபவனுமான அந்தத் தேவன், தன்னிடம் பணிவோரை ஒருபோதும் கைவிடாதவன்.(25) அதைவிட அவன் தன் உயிர் மூச்சையே கைவிட்டு, சாத்தியப்படும் துன்பங்கள் அனைத்தையும் தானே ஈட்டிக் கொள்வான். நீண்ட வாழ்வுக்காலம், உடல்நலம், நோயிலிருந்து விடுதலை, செல்வாக்கு, செல்வம் பல்வேறு வகை இன்பங்கள் ஆகியனவற்றை(26) அளிப்பவனும், பறிப்பவனும் அவனே[3]. சக்ரன் மற்றும் பிற தேவர்களிடம் ஒருவன் காணும் தலைமைத்துவம் மற்றும் செல்வாக்கு ஆகியவை உண்மையில் அவனுடையவையே.(27)

[3] கும்பகோணம் பதிப்பில், "அவர் தேவர்களுக்கு முதல்வர், அவர் தம் முகத்திலிருந்து அக்நியையுண்டாக்கினார். அவரே அனேக ப்ராணாயாமங்களினால் மூச்சை அடக்கிவிடுகிறார். ரக்ஷிப்பதில் ஸமர்த்தராகிய அவர் மகிழ்ந்து அனுக்ரஹம் வைத்துச் சரணாகதர்களுக்கு முக்தியளிக்கிறார்" என்றிருக்கிறது.

மூவுலகங்களிலும் நேரும் நன்மை, தீமைகள் அனைத்திலும் ஈடுபடுபவன் அவனே. அனுபவிக்கத் தகுந்த பொருட்கள் அனைத்தையும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் விளைவால் அவன் ஈஸ்வரன் (உயர்ந்த தலைவன், அல்லது உயர்ந்த பொருள்) என்று அழைக்கப்படுகிறான்.(28) மேலும், பரந்த அண்டத்தை ஆள்பவனாக இருப்பதால் அவன் மஹேஸ்வரன் என்றழைக்கப்படுகிறான். மொத்த அண்டமும் பல்வேறு வடிவங்களின் மூலம் அவனால் நிறைந்திருக்கிறது. பெரும் பெண்குதிரைத்தலையின் வடிவில் கடலின் நீரை {வடவாமுகாக்னியாக} எரிப்பவனும், முழக்கங்களை இடுபவனும் அந்தத் தேவனே " என்றான் {கிருஷ்ணன்}".(29)

அநுசாஸனபர்வம் பகுதி – 161ல் உள்ள சுலோகங்கள் : 29

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்