Friday, July 26, 2019

நடைமுறை அறம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 164

Practical ethics! | Anusasana-Parva-Section-164 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 164)


பதிவின் சுருக்கம் : அறத்தைப் பின்பற்றும் முறை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒருவன் தானே நல்லது செய்யும்போதும், அல்லது பிறரைச் செய்ய வைக்கும்போதும், அவன் அறத்தகுதிகளை அடைவதை எதிர்பார்க்கலாம். அதேபோல, ஒருவன் தானே தீமை செய்தாலும், பிறரைச் செய்ய வைத்தாலும், அறத்தகுதிகளை அடைவதை அவன் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.(1) எல்லா நேரங்களிலும், காலமே உயிரினங்கள் அனைத்தின் புத்தியிலும் நுழைந்து, அவற்றை அறச்செயல்களையோ, மறச் செயல்களையோ செய்வதில் நிறுவி, அதன் பின் அவற்றுக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ அளிக்கிறது.(2)


ஒரு மனிதன் அறத்தின் கனிகளைக் கண்டு, அறமே மேன்மையானது என்பதைக் காணும்போதுதான், அவன் அறத்தில் நம்பிக்கை கொண்டு அதைப் பின்பற்றுகிறான். எனினும், உறுதியற்ற புரிதல் கொண்டவன் அதில் நம்பிக்கை வைக்கத் தவறுகிறான்.(3) அறத்தில் நம்பிக்கை என்பது இதுதான் (வேறேதுமல்ல). அறத்தில் நம்பிக்கை கொள்தல் என்பது மனிதர்கள் அனைவருக்கும் ஞானத்தின் குறியீடாகும். (எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்ற) இரண்டையும் அறிந்த ஒருவன், வாய்ப்புகளைப் பயன்படுத்தும் நோக்கத்தோடும், கவனம் மற்றும் அர்ப்பணிப்புடனும் சரியானதைச் செய்ய வேண்டும்.(4) இப்பிறவியில் செல்வாக்குடன் அருளப்பட்ட அறவோர், மறுபிறவியில் ஆசை குணம் {ரஜோகுணம்) தலைதூக்கும் பிறவியை அடையாமல் தவிர்க்க தங்கள் இயல்பின்படியே செயல்பட்டு, தங்கள் ஆன்மாக்களில் குறிப்பிட்ட கவனத்தைச் செலுத்த வேண்டும்.(5)

(அனைத்தையும் அகற்றவல்ல) காலத்தால் அறத்தைத் துன்பத்திற்கான காரணமாக ஒருபோதும் மாற்ற முடியாது. எனவே, அறம் சார்ந்த ஆன்மா நிச்சயம் தூய்மையானது (தீமை மற்றும் துயரத்தில் இருந்து விடுபட்டு இருப்பது) என்பதை ஒருவன் அறிய வேண்டும்.(6) மறத்தை {அதர்மத்தைப்} பொறுத்தவரையில், அது பெருமளவில் இருந்தபோதிலும் கூட, காலத்தால் எப்போதும் பாதுகாக்கப்படுவதும், சுடர்மிக்க நெருப்பைப் போல ஒளிர்வதுமான அறத்தைத் தீண்ட முடியாது.(7)

களங்கமில்லா ஆன்மா, மறத்தால் {அதர்மத்தால்} தீண்டப்படாத ஏற்பில்லாமை ஆகிய இரண்டு விளைவுகளும் அறத்தால் அடையப்படுகின்றன. உண்மையில், அறமே வெற்றியைத் தரும். மூவுலகங்களுக்கும் ஒளியூட்டும் அளவிற்கு அது பெரும் பிரகாசம் கொண்டது.(8) ஒரு பாவியைப் பிடித்து அறவோனாக்குதல் ஞானியாலும் முடியாது. அறச்செயல் செய்ய வலுக்கட்டாயமாகத் தூண்டப்படும்போது பாவிகள் அச்சத்தால் தூண்டப்பட்டவர்களாக {உள்ளொன்றும் புறமொன்றாகவும்} கபடமாகவே செயல்படுவார்கள்.(9) சூத்திரர்களில் அறவோர், பரிந்துரைக்கப்பட்ட நான்கு வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} எதையும் பின்பற்றி வாழ சூத்திர வகையினர் அனுமதிக்கப்படவில்லை என்ற முறையீட்டின் மூலம் ஒருபோதும் போலியாக நடந்து கொள்ள மாட்டார்கள்.(10)

நான்கு வகையினருக்கான {வர்ணத்தினருக்கான} உண்மையான கடமைகள் என்னென்ன என்பதை நான் உனக்குக் குறிப்பாகச் சொல்கிறேன். நான்கு வகையை {வர்ணங்களைச்} சேர்ந்த ஒவ்வொருவரும் கொள்ளும் உடல்களைப் பொறுத்தவரையில் ஐம்பூதங்களே அவற்றின் {அவ்வுடல்களின்} உட்பொருட்களாக அமைகின்றன. உண்மையில், அவை அனைத்தும் ஒரே பொருளைச் சார்ந்தவையே.(11) இவ்வாறிருப்பினும் அவற்றுக்கிடையில், வாழ்வு அல்லது உலக நடைமுறைகள் மற்றும் அறக்கடமைகள் ஆகிய இரண்டிலும் வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், அனைவருக்குள்ளும் ஒரு சமநிலையை எட்டக்கூடிய வகையில் செயல்பாடுகளில் போதுமான சுதந்திரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.(12)

அறத்தின் விளைவுகள் அல்லது வெகுமதிகளாக இருக்கும் இன்ப உலகங்களுக்கும் ஒரு முடிவுண்டு என்பதால் அவை நித்தியமானவையல்ல. எனினும், அறம் நித்தியமானது. காரணம் நித்தியமானதாக இருக்கையில், விளைவு {காரியம்} ஏன் அவ்வாறில்லை?[1] அதற்கான பதில் பின்வருமாறு அமையும். கனி அல்லது வெகுமதியில் உள்ள ஆசையால் தூண்டப்படாமல் செய்யப்படும் அறமே நித்தியமானதாகும். (எனினும், வெகுமதி மீது கொண்ட ஆசையால் செய்யப்படும் அறமானது நித்தியமானதல்ல. எனவே, வெகுமதி விரும்பப்படவில்லை என்றாலும், முதல் வகை அறத்தோடு தொடர்புடைய {வெகுமதியான} பிரம்மத்தை அடைதல் என்பது நித்தியமானதாகும். எனினும், கனியில் உள்ள ஆசையால் தூண்டப்பட்டுச் செய்யப்படும் அறத்துடன் தொடர்புடைய வெகுமதியான சொர்க்கம் நித்தியமானதல்ல)[2].(13)

[1] "அறம் இன்ப உலகங்களுக்கு வழிவகுக்கிறது. அறமானது நித்தியமானதாகச் சொல்லப்படுகையில் இன்ப உலகங்கள் அவ்வாறு சொல்லப்படுவதில்லை. கேட்கப்படும் கேள்வி (அல்லது எழுப்பப்படும் ஐயம்) என்பது காரணம் நித்தியமானதாக இருக்கையில், காரியம் ஏன் அவ்வாறில்லை என்பதாகும். அது கீழே விளக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "நிஷ்காமம், ஸகாமம் என்று இருவகை அறங்கள் இருக்கின்றன. நிஷ்காம அறம் பிரம்மத்திற்கு வழிவகுக்கிறது, ஸகாம அறம் சொர்க்கம் மற்றும் இன்பத்திற்கு வழிவகுக்கிறது. பிரம்மம் நித்தியமானது; சொர்க்கமோ, இன்பமோ நித்தியமானதல்ல. நிஷ்காம அறம் நித்தியமானதாக இருப்பதால் நித்திய வெகுமதிக்கு வழிவகுக்கிறது. ஸகமாம அறம் அவ்வாறு இல்லாததால் நித்திய வெகுமதிக்கு வழிவகுப்பதில்லை. இங்கே காலம் என்ற சொல் சங்கல்பம் என்ற பொருளைத் தரும். எனவே, துருவகாலம் என்பது நிஷ்காம தர்மத்தைக் குறிக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உலகம் நிலையற்றதாகவும், தர்மம் மற்றும் நிலைபெற்றதாகவும் சொல்லப்படுவது எப்படியென்றால் காலம் அழியாது. ஆதலால், தர்மம் அழியாது" என்றிருக்கிறது.

உடலுயிரைப் பொறுத்தவரையில் அனைத்து மனிதர்களும் நிகரானவர்களே. மேலும், அவர்கள் அனைவரும் தங்கள் இயல்பின்படியே நிகரான ஆன்மாக்களைக் கொண்டவர்களே. அண்டம் அழியும்போது அனைத்தும் கரைந்துவிடுகின்றன. அறத்தை அடைவதற்கான செயலற்ற விருப்பம் மட்டுமே எஞ்சி நிற்கிறது. உண்மையில் அதுவே (மறுபிறவியில்) மீண்டும் தன்னைத் தோற்றுவித்துக் கொள்ளும்.(14) விளைவு இத்தகையதாயிருக்கையில் (வாழ்வின் இன்பங்களும், துன்பங்களும் முற்பிறவிச் செயல்களின் விளைவுகளாக இருப்பதால்), மனிதர்களுக்கிடையில் காணப்படக்கூடிய சமமின்மைகளை எந்த வகையிலும் முரண்பட்டவையாகக் கருதமுடியாது. அதே போலவே, இருப்பில் உள்ள இடைநிலை உயிரினங்களின் செயல்கள் இந்த உதாரணத்தின்படி சமமாக இருப்பதும் காணப்படுகிறது" என்றார் {பீஷ்மர்}".(15)

அநுசாஸனபர்வம் பகுதி – 164ல் உள்ள சுலோகங்கள் : 15

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்