Friday, August 16, 2019

பிரதாப் சந்திர ராய் அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்


துணைநாடி பணிவுடன் அழைப்போரை ஒருபோதும் கைவிடாதவனான ஹரியின் கருணையினால் இறுதியாக நான் அநுசாஸன பர்வத்தின் நிறைவை எட்டிவிட்டேன். மஹாபாரதத்தின் பதினெட்டுப் பர்வங்களில் பதிமூன்றாவதாக அமையும் அநுசாஸனம், அளவில் வன பர்வத்தைவிடச் சற்றே குறைந்ததும், மொத்தத்தில் மூன்றாவது பெரிய பர்வமுமாகும். தொடக்கம் முதல் முடிவு வரை அநுசாஸனம் அறிவுறுத்தும் தன்மையைக் கொண்டதாகவே இருக்கிறது. யுதிஷ்டிரனின் அடுத்தடுத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வாழ்வின் பல்வேறு நிலைகளில் மனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகளை அறிவிக்கிறார் பீஷ்மர். அதன்படியே, பழங்கால இந்தியாவில் புரிந்து கொள்ளப்பட்ட பல்வேறு வகைக் கொடைகளுக்கான பலன்கள் இதில் மிக விரிவாகச் சொல்லப்படுகின்றன. இந்தப் பர்வத்தில் வரும் பல காரியங்கள் மேற்கத்திய வாசகர்களுக்கு விசித்திரமானவையாகத் தோன்றக்கூடும். விசித்திரமானவையாக இருந்தாலும், இந்தியாவில் உள்ள பெரும்பகுதி மக்களால் அவை இன்னும் பேணி வளர்க்கப்படுகின்றன என்பதும் எப்போதும் நினைவில் கொள்ளப்பட வேண்டும். கொடையளிப்பதே பலன்மிக்கக் காரியமாக அவர்களால் கருதப்படுவதன் அடிப்படையில், கிட்டத்தட்ட அதே நடைமுறையிலேயே அவை {கொடைகள்} அளிக்கவும்படுகின்றன.

சாந்தி பர்வத்தை மொழிபெயர்த்ததில் உள்ள சிரமங்களைவிட அநுசாஸனத்தில் சற்றே குறைவென்றாலும், இதுவும் மிகக் கடினமான பகுதியே ஆகும். வங்கப் பதிப்புகள் இரண்டும் மிகக் கவனக்குறைவாகவே செய்யப்பட்டிருக்கின்றன. வழக்கம்போலவே நீலகண்டர் காட்டும் வெளிச்சம் தெளிவடையச் செய்கிறது. அநுசாஸனத்தில் சில ஸ்லோகங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இல்லையென்றாலும், கிட்டத்தட்ட அவ்வாறானவையாகவே இருப்பதால் அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ளக் குறிப்பிடத்தக்க உழைப்பும், சிந்தனையும் தேவைப்பட்டது. அத்தகைய இடங்களில் நீலகண்டரின் உரை மூலம் பெற்ற உதவி உண்மையில் மதிப்புமிக்கதாகும். அநுசாஸனத்தின் இந்த ஆங்கிலப் பதிப்பின் பெரும்பகுதி நீலகண்டரின் தெளிவுரையை அடிப்படையாகக் கொண்டதே ஆகும். சில சந்தர்ப்பங்களில் மட்டுமே மொழிபெயர்ப்பாளர் {கிசாரி மோகன் கங்குலி}, உரையாசிரியரிடம் {நீலகண்டரிடம்} இருந்து வேறுபடுகிறார். அநுசாஸனத்தின் நிறைவானது, என் பணியை முடிக்க இன்னும் ஆறு, அல்லது ஏழு திரட்டுகள் {சஞ்சிகைகள்} போதும் என்ற புள்ளியில் கொண்டு சேர்த்திருக்கிறது. அந்த ஏழு திரட்டுகளுக்கும், எதிர்பாரா செலவுகள் அனைத்தும் உட்பட மொத்தமாக ரூ.10,000/- {இன்றைய மதிப்புக்குக் கிட்டத்தட்ட ஏழரை இலட்சம் ரூபாய்}[1] செலவாகும். இந்தத் தொகையை எப்படி ஏற்பாடு செய்வது என்பது எனக்குப் பெருங்கவலையை உண்டாக்குகிறது. முன்பு போல் உடல்நலமும், பலமும் எனக்கிருந்தால், நான் ஒருபோதும் கவலையடையமாட்டேன். பேறற்ற நிலையால் நான் கடந்த இரண்டு வருடங்களாக நோயால் பீடிக்கப்பட்டவனாக இருக்கிறேன். ஆறுமாதங்களுக்கும் அதிகமாக நான் முற்றிலும் கிடந்த கிடையாகவே கிடக்கிறேன். நெருக்கமான நண்பர்களால் கூட என்னை உடனே அடையாளம் காணமுடியாத வகையில் உருக்குலைந்திருக்கிறேன். அனைத்து வகை மருத்துவங்களையும் முயன்றும் பயனில்லை. என் பணி நிறைவடையும் வரையாவது உயிரோடு இருப்பேன் என்ற நம்பிக்கை மறைந்துவிட்டது. நிறைவு அருகில் தெரிந்தாலும், நான் அதைக் காண்பனென எனக்கு நம்பிக்கையில்லை. இவ்வளவு இருந்தாலும், ஹரி எப்போதும் சிறந்ததையே செய்வான் என்ற முழு நம்பிக்கையுடன் நான் மிகவும் உற்சாகமாக அவனிடம் சரணடைகிறேன். மூட நம்பிக்கை இஃது எனப் பிறர் கூறலாம், ஆனால், மஹாபாரதப் பணியைச் செய்வோரில் மிகச் சிலரே தங்கள் பணியின் நிறைவை எட்டுவார்கள் என்ற நம்பிக்கை இந்நாட்டில் இருக்கிறது. சில வேளைகளில் இந்த நம்பிக்கை என்னைப் பலவந்தமாக ஆட்கொள்கிறது. எனினும், {இப்பணியின் மூலம்} இடையறாமல் ஹரியின் மகிமையைத் தொடர்ந்து தியானிப்பதால் அஃது அனைத்தையும் கடக்கும் ஆற்றலைத் தந்து, துன்பம் நிறைந்த உலகிலுள்ள மனிதனை தடையில்லா அருளுக்குள் அழைத்துச் செல்கிறது என்பதே இதில் உள்ள ஆறுதல்.

[1] 1894ல் தங்கம் ஒரு அவுன்ஸ் அளவு 20.67 டாலராக இருந்திருக்கிறது. இப்போது அது 1,515.50 டாலராக உள்ளது. ஆக அன்றைக்கு மேற்சொன்ன தொகையான ரூ.10,000/-  இன்றைய மதிப்புக்கு ரூ.7,33,188/- ஆகும்.

அஸ்வமேத பர்வத்தில் உள்ள சிரமங்களும் அதிகமே ஆகும். சாந்தி பர்வத்திற்கு இது சற்றும் குறைந்ததல்ல. அஸ்வமேத பர்வம் அநுகீதையை உள்ளடக்கியதாகும். போரின் தொடக்கத்தில், அர்ஜுனன் மீது கொண்ட அன்பால் ஆன்ம மேன்மையைத்தரும் அறிவரைகள் அடங்கிய கீதையைக் கிருஷ்ணன் அவனுக்குச் சொல்லியிருந்தாலும், போரின் போக்கில் அவன் {அர்ஜுனன்} அந்த உண்மைகளை மறந்து போனான். அவன், அவற்றை மீண்டும் சொல்லுமாறு கிருஷ்ணனைக் கேட்டுக் கொண்டான். எனினும், அவை யோகத்தில் இருந்து கிருஷ்ணனால் சொல்லப்பட்டவையாக இருந்ததால், அப்போது பயன்படுத்திய சொற்களையே மீண்டும் சொல்லாமல், அவன் {கிருஷ்ணன்} அதே உண்மைகளை வேறு மொழிநடையில் சொன்னான். அவன் துவாரகையில் இருந்தபோது ஒரு பிராமணரிடம் கேட்ட உரையாடலை அர்ஜுனனுக்குச் சொன்னான். எனவே, அஸ்வமேத பர்வத்தின் இந்தப் பகுதிகள் அநுகீதை, அல்லது பிராமணக் கீதை என்றழைக்கப்படுகிறது.

எவருடைய மறைவுக்காக நாமனைவரும் வருந்துகிறோமோ அந்தத் தகுதிவாய்ந்த அறிஞர் காசிநாத் திரயம்பக் தெலங், பேராசிரியர் மேக்ஸ் முல்லரின் சேக்ரட் புக்ஸ் ஆஃப் த ஈஸ்டுக்காக {Sacred Books of the eastக்காக} இந்தப் பகுதிகளை மொழிபெயர்த்திருக்கிறார். அந்தத் தொகைநூலின் எட்டாம் பாகமாக அப்பதிப்பு இருக்கிறது. திறன்மிக்க அந்த அறிஞரின் பிற படைப்புகளைப் போலவே, ஆங்கிலப்பதிப்பான அந்த அநுகீதையும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாகும். நெருக்கமான மொழிபெயர்ப்பாக இருந்தாலும், அதில் உள்ள குறிப்புகளால் அது மதிப்புமிகுந்ததாகிறது. அர்ஜுன் மிஸ்ராவின் பதிப்பை அடிப்படையாகக் கொண்டே தெலங்கின் பதிப்பில் உள்ள உரை அமைந்திருக்கிறது. பொதுவாகவே அவர் {அர்ஜுன் மிஸ்ரா} நீலகண்டரின் அதிகாரத்தைப் புறந்தள்ளுகிறார். இஃதை ஒரு மறுப்பாக எடுத்துக் கொள்ளலாம். அர்ஜுன் மிஸ்ரா பல சந்தர்ப்பங்களில் உரையைத் தன் விருப்பத்திற்குத் திருத்தியிருக்கிறார். இவ்வகையிலேயே பல சிரமங்களில் இருந்து அவர் விடுபட்டிருக்கிறார். அர்ஜுன் மிஸ்ராவின் உரையானது ஓலைச்சுவடிகள் பலவற்றால் ஆதரிக்கப்படுவதாகவும் இல்லை. ஒப்பீட்டளவில் கல்வி மற்றும் அதன் ஆழத்தில் இந்த உரையாசிரியர்கள் இருவரின் மேன்மையை ஒப்புநோக்க வேண்டியதில்லை என்றாலும் நீலகண்டர், உரையை ஒருபோதும் எதையும் திருத்த முயலாமல் அவற்றை உள்ளபடியே எடுத்துக் கையாண்டிருப்பதை நம்மால் காண முடியும்.

அஸ்வமேத பர்வம் நிறைவடைந்தபிறகு பேசுவேன் என்ற எந்த நம்பிக்கையும் இல்லாததாலும், நிகழ்தகவுகள் அனைத்திலும் இதுவே நான் பொதுவில் சொல்லும் இறுதிச் சொல்லாக இருக்கும் என்பதாலும், தொடக்கம் முதல் என்னை ஆதரித்துவந்த எண்ணற்ற நண்பர்களுக்கும், புரவலர்களுக்கும் என் நன்றியுணர்வை இவ்விடத்தில் வெளிப்படுத்த விரும்புகிறேன். எண்பத்துமூன்றாம் திரட்டில் {சஞ்சிகையில்} வெளிவந்த அறிவிப்பில் அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். சொல்வதற்கு அதிகமாக ஏதும் இல்லாததால், சொல் வேறுபாடுகள் சிலவற்றுடன் அந்தச் சொற்களையே மீண்டும் தர விரும்புகிறேன்.

எந்தத் திறன்மிக்க ஆளுமைகளின் துணை, ஆலோசனை மற்றும் கருணையால் என்னுடைய பணியில் இவ்வளவு தொலைவையும் அடைந்திருக்கிறேனோ, அவர்களுக்கு என் நன்றிக்கடனை வெளிப்படுத்துவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அறப்பணியின் வெற்றிக்கும், நேரடியாக அரசின் தலையீட்டின் கீழ் வரும் செந்தன்மைகள் காரணமாக அமைவதால், அனைத்திலும் முதன்மையாக, கருணை கொண்டவரும், போற்றுதலுக்குரிய வகையில் அரசு செலுத்துபவருமான இந்தியாவின் பேரரசியுமான ராணிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். * * *

சில வருடங்களுக்கு முன்னர், மகிமை பொருந்திய அவரின் {ராணியின்} முன்பு கருணையுள்ள அவருடைய ஏற்புக்காக ஆங்கில மொழிபெயர்ப்பின் ஒரு நகலை வைக்கும் அனுமதியை நான் பெற்றேன். அந்த அருள் நிறைந்த ஏற்பை உடனடி வெகுமதியாகவும், நற்சகுனமாகவும் எப்போதும் நான் கருதி வந்திருக்கிறேன்.

நான் சார்ந்த அரசுக்கு அடுத்தபடியாக, கிழக்கத்திய அறிஞர்கள் மற்றும் கற்றறிஞர்களின் மத்தியில், ஒரு மொழிபெயர்ப்பைக் கொண்டு வருவதற்கான தொடக்க ஏற்பாடுகளைச் செய்ததற்காகப் பேராசிரியர் மேக்ஸ் முல்லருக்கு நான் பெரிதும் கடன்பட்டிருக்கிறேன் என்பதைச் சொல்ல வேண்டும். தம் கைப்பட எழுதி, எதிர்காலப் பயன்பாட்டுக்காக வைத்திருந்த ஒரு மாதிரி மொழிபெயர்ப்பை அவர் எனக்குக் கொடுத்து உதவினார். அந்த மாதிரி எனக்குப் பெரும் பயனைத் தந்தது. எளிமை மற்றும் நேர்த்திக்கான கூறுகளை மறக்காமல் ஒரு நேரடி மொழிபெயர்ப்பைச் செய்வதற்கான வழியைச் சுட்டிக்காட்டுவதில் அஃது உதவியது.

பேராசிரியர் மேக்ஸ் முல்லருக்கு அடுத்தபடியாக, கல்விமானும், இந்திய அலுவலகத்தின் நூலகருமான டாக்டர் ரோஸ்ட் {Dr. Rost}-க்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்திய அரசின் செயலாளர், ஹார்டிங்டனைச் சேர்ந்த மார்க்கிஸ் {Secretary of State for India, Viz., the Marquis of Hatington} அவர்களின் ஆணைப்படி எனக்கெழுதப்பட்ட கடிதத்தில், மஹாபாரதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான கருத்தை முதலில் முன் வைத்திருந்தார். தொடக்கத்திலிருந்தே டாக்டர் ரோஸ்ட் அவர்கள் என் நண்பர்களில் மிகுந்த அன்புக்குரியவராக இருந்திருக்கிறார். கடந்த பத்து வருடங்களில் முக்கியத் தருணங்களில் அவரது பரிவும், ஆலோசனைகளும் மதிப்புமிக்கவையாக இருந்திருக்கின்றன. தளர்ந்து போகும் தருணங்களில் இதயப்பூர்வமான ஊக்கத்துடனும், அன்புடனும், உயிர்மூச்சைக் கொடுக்கும் வார்த்தைகளைச் சுமந்தபடியும் வரும் டாக்டர் ரோஸ்டின் ஒரு கடிதமே கூட, என் கண்களுக்கு முன்பு தெரிந்த துன்பத்தின் இருளையும், ஐயங்கள் எனும் பனியையும் விலக்கி உடனடியாக என்னை நம்பிக்கையில் நிறைத்துவிடும்.

பாரிஸைச் சார்ந்த திருவாளர்கள் எ.பார்த் மற்றும் செயின்ட் ஹிலைர் {Monsrs. A.Barth and St.Hilaire of Paris}, ஜெர்மனியைச் சார்ந்த பேராசிரியர் ஜேக்கபி {Professor Jacobi of Germany} ஆகியோருக்கும் நான் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர்களும் தங்கள் பரிவின் மூலம் என்னை ஆதரித்து, தங்கள் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் இந்தப் படைப்பை ஐரோப்பிய அறிஞர்களின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். பிரெஞ்சு அரசு, வெளிநாட்டு நூல் வெளியீடுகளுக்குப் பணம் அளிப்பதில்லை, குறிப்பாக அவை நிறைவடையும் முன்பே அளிப்பதில்லை என்றிருந்தாலும், திருவாளர்கள் பார்த் மற்றும் செயின்ட் ஹிலைர் அவர்களின் முயற்சியால் அவ்வரசு 900 ஃபிராங்குகளை எனக்களிக்க ஆணையிட்டது. இதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

அமெரிக்காவில், நான் நன்றிக்கடன்பட்டிருக்கும் நண்பர்கள் கூட்டத்தில் முதன்மையானவர்களாகக் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த திரு.வில்லியம் E.கோல்மேன், அமெரிக்கக் கிழக்கத்திய சமூகச் சங்கத்தின் துணைத்தலைவரான பேராசிரியர் லேன்மேன், அமெரிக்காவின் மாரிலேண்டைச் சேர்ந்த பேராசிரியர் J.W.ரீஸ், ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மொரிஸ் ப்ளூம்ஃபீல்டு, கனடாவின் ஹேமில்டனைச் சார்ந்த திரு.B.விட்டன் ஆகியோரைக் கருதுகிறேன் {Mr. William E. Coleman of San-Francisco, California, Professor Lanman, the Vice-President of the American Oriental Society, Professor J. W. Reese of Maryland, America, Professor Maurice Bloomfield of Hopkins' University, and Mr.B.Witton of Hamilton, Canada}. அமெரிக்காவில் இப்படைப்பு அறியப்பட்டிருப்பதற்கு இந்தக் கனவான்களின் முயற்சிகளே முழுமையான காரணமாகும். அவர்களுடைய பரிவு எனது பெருமதிப்பிற்குரியதாகும்
.
இந்தியாவைப் பொறுத்தவரையில் சர் ஸ்டுவர்ட் பெய்லி, சர் எ.கோல்வின், ஜெனரல் ஸ்டீவர்ட், லார்ட் ராபர்ட்ஸ், சர் சார்லஸ் ஐடிச்சிசன், சர் மோர்டிமர் டுரேண்ட், டாக்டர் டபிள்யு.டபிள்யு.ஹண்டர், திரு.சி.பி.இல்பர்ட், சர் எ.ஸ்கோபிள், சர் லெப்பல் கிரிஃபின், சர் சார்லஸ் இலியட், சர் ஜான் வேர் எட்கர், ரிப்பனின் மார்கிஸ், டஃப்ரின் மற்றும் அவாவின் மார்கிஸ், சர் டொனால்டு மெக்கன்சீ வாலஸ், சர் ஆல்பிரட் கிராஃப்ட் ஆகியோருக்கு {Sir Stuart Bayley, Sir A.Colvin, General Stewart, Lord Roberts, Sir Charles Aitichison, Sir Mortimer Durand, Dr.W.W.Hunter, Mr.C.P.Ilbert, Sir A.Scoble, Sir Lepel Griffin, Sir Charles Elliott, Sir John Ware Edgar, the Marquis of Ripon, the Marquis of Dufferin and Ava, Sir Donald Mackenzie Wallace, and Sir Alfred Croft} நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இவர்களில் சர் சார்லஸ் எலியட் மற்றும் சர் ஆல்பிரட் கிராஃப்டைத் தவிர எஞ்சியோர் அனைவரும் நல்ல காரியங்களுக்காக இந்தியாவை விட்டுச் சென்று விட்டனர். * *

சிறந்த அதிகாரிகளான இவர்கள் அனைவரின் உதவி இல்லாமல் என்னால் இந்தப் படைப்பின் நான்கில் ஒரு பாகத்தைக் கூட நிறைவு செய்திருக்க முடியாது. நான் பெயர் குறிப்பிட்டிருக்கும் இந்த அதிகாரிகளே இந்தப் படைப்பிற்காக ஆன்மாவாகச் செயல்பட்டனர். இந்தப் படைப்பானது, அரசாங்கத்திடம் இருந்து பெற்றிருக்கும் அனைத்து உதவிகளுக்கும் சர் ஸ்டுவர்ட் பெய்லி, சர் எ.கோல்வின், சர் சார்லஸ் ஐடிச்சிசன், சர் எ.ஸ்கோபிள், டஃப்ரின் மற்றும் அவாவின் மார்கிஸ் ஆகியோரின் முயற்சிகளே காரணமாகும்.

இந்தச் சிறந்த அதிகாரிகளைத் தவிர, இந்தியாவின் இளவரசர்கள் மற்றும் தலைவர்கள் பலரிடம் இருந்தும் நான் கணிசமான உதவியை அடைந்திருக்கிறேன். மேதகு நிஜாம் மற்றும் மேதகு மைசூர் ஆட்சியாளர் ஆகியோரின் அரசு சார்ந்த நன்கொடைகளுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன். நிஜாம் ஒரு முகமதிய இளவரசராவார். மஹாபாரதம் போன்ற ஒரு படைப்புக்கு அவரிடம் இருந்து பங்களிப்பு வருவதென்பது, இலக்கியம் சொல்லும் நாடு அல்லது சமயத்தைக் கணக்கில் கொள்ளாமல் பொதுவாக இலக்கியத்திற்கான அந்த மேதகையாளரின் பரிவையே குறிப்பிட்டுக் காட்டுகிறது. மேதகு நிஜாமால் ஆளப்படும் மாகாணத்தைப் போல வேறு எந்த மாநிலமும் அறிவொளி பொருந்திய அமைச்சர்களைக் கொண்டிருக்கவில்லை. மேதகு நிஜாமின் அருகில், ஆலோசனை கோரப்படும்போதெல்லாம் வழங்கத் தயாராக நவாப் சையது அலிபில்கிராமி போன்ற ஓர் அதிகாரி இருக்கும் வரையில் அவரது புகழ் தொடர்ந்து ஓங்கிக் கொண்டே இருக்கும்.

இந்தப் படைப்பை நான் தொடர்வதற்குச் சீரான ஊக்கத்தைத் தந்து வந்த இந்திய செய்தித்தாள்களின் பதிப்பாசிரியர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என் சொந்த நாட்டு மக்களின் மத்தியில், "ரெய்ஸ் & ராயட்"-ன் சிறந்த ஆசிரியர் டாக்டர் சம்பு சி.முகர்ஜி, "இண்டியன் மிரர்" ஆசிரியர் பாபு நரேந்திர நாத் சென், பாபு கிருஷ்ண தாஸ் பால், "ஹிந்து பேட்ரியட்"ன் பாபு ராஜ்குமார் சர்வாதிகாரி ஆகியோரின் பெரும் பரிவை அடைந்தேன் {Dr.Sambhu C.Mookerjee, the brilliant Editor of "Reis & Rayyet,"Babu Narendra Nath Sen, the Editor of the "Indian Mirror," and Babu Krishna Dass Pal and, after him, Babu Rajkumar Sarvadhikari, of the "Hindoo Patriot.". "அமிருத பஜார் பத்ரிகா"வின் பாபு சிஷிர் குமார் கோசே அவர்கள் {Babu Sishir Kumar Ghose, of the "Amrita Bazar Patrika,"} எனக்கு உற்சாகமளிப்பதற்காக அதிகம் செய்திருக்கிறார். இந்தியாவில் உள்ள ஐரோப்பிய சமூகத்தின் அங்கங்களான "இங்கிளீஷ்மேன்", "இந்தியன் டெய்லி நியூஸ்", "ஸ்டேட்ஸ்மேன் அண்ட் பிரண்ட் ஆப் இந்தியா" {"Englishman," the "Indian Daily News," and the "Statesman and Friend of India."} ஆகியவற்றின் பேராதரவைப் பெற்றிருக்கிறேன். ("ஸ்டேட்ஸ்மேன்"-ஐச் சார்ந்த) காலஞ்சென்ற திரு.ராபர்ட் நைட் {late Mr. Robert Knight} எப்போதும் இந்தப் பணியில் அதிக ஆர்வத்துடன், இந்தியா எங்கும் உள்ள எண்ணற்ற அறிஞர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். பணவகையிலான உதவியைச் செய்யக்கூடியவர்களின் கவனத்திற்கு இந்தப் படைப்பை எடுத்துச் செல்லம் எந்த வாய்ப்பையும் அவர் தவறவிட்டதில்லை. மேலும், இந்தப் படைப்பு முதன்முதலில் வங்க அரசின் கவனத்தைப் பெறச் செய்ததில் "இங்கிளீஷ்மேன்"-ஐ சார்ந்த ஜெ.ஓ.பி.சௌண்டர்ஸ் {Mr.J.O.B.Saunders}-க்குப் பெரும்பங்கு உண்டு. அதைத் தொடர்ந்து சர் ரிவர்ஸ் தாம்சன் {Sir Rivers Thompson} கணிசமான ஆதரவைத் தந்தார். பயனியர் மற்றும் சிவில் & மிலிட்டரி கெஜட் {The Pioneer and the Civil & Military Gazette} ஆகியவையும் பேருதவி செய்திருக்கின்றன.

இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே டாக்டர் சம்பு சி.முகர்ஜி அவர்களை மரணம் அபகரித்துச் சென்றுவிட்டது. இந்த இழப்பு ஒரு பொதுதுக்கமாகும். சிறந்த பிராமணப் பதிப்பாளரான அவரது மதிப்புமிக்கத் தகுதிகளை வெளிக்கொணர என் சொற்களேதும் தேவையில்லை. சில வருடங்களுக்கு முன்பு வங்க அரசால் கொடுக்கப்பட்ட மேலதிக பணமான ரூ.1,000/- என் பணி நிறைவடையும் தருணத்தில் எடுத்துக் கொள்ளும் வகையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தாலும், கடந்த வருடமே நான் எடுத்துக் கொள்ளுமாறு தன் கருணையால் அனுமதித்த சர் சார்லஸ் எலியட் அவர்களுக்கு நான் பட்டிருக்கும் கடன் இன்னும் அதிகரித்திருக்கிறது. என் சிரமங்களைக் கண்ட சர் சார்லஸ் எலியட் நிறைவுடன் அந்தக் குறிப்பிட்ட தொகையை உடனே எனக்குக் கிடைக்கச் செய்தார்.

இன்னும் 6 அல்லது 7 திரட்டுகளுடன் {சஞ்சிகைகளுடன்} நிறைவடையப் போகும் என் பணிக்கு முன்பே என்னைப் படைத்தவன் என்னை எடுத்துக் கொள்ள விரும்பினால், உண்மையான நண்பர்களும், புரவலர்களும் அடங்கிய என் நாட்டு மக்கள் இந்தப் பணி நில்லாமல் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில், இந்தச் சொற்களுடன் பொதுமக்களுக்கு என் மதிப்புமிக்க வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் விட்டுச் செல்லும் எதுவும் {எந்த செல்வமும்} இந்தப் பணிக்கே அர்ப்பணிக்கப்பட வேண்டும் என என்னுடைய உயிலில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். எனினும் அது மிகச் சொற்பமானதாகவே இருக்கும். அஃது இக்காரியத்திற்குப் போதுமானதாக இருக்காது.

என் நண்பர்கள், புரவலர்கள் மற்றும் அயல்நாடுகளில் உள்ள மஹாபாரத வாசகர்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க, என்னுடைய விருப்பத்தை இந்தத் திரட்டில் {சஞ்சிகையில்} சேர்க்கிறேன். அன்பால் மட்டுமே தூண்டப்பட்டுச் சொல்லப்பட்டதாக இருந்தாலும் நான் இந்த வேண்டுகோளுக்கு இணங்கியிருக்க மாட்டேன் என்றாலும், அவர்கள் முன்பு நான் தோன்றப்போவது இதுவே இறுதிமுறை என்ற நம்பிக்கையில் இதற்கு இணங்கியிருக்கிறேன்.

1, ராஜா குரு தாஸ் தெரு, கல்கத்தா,
டிசம்பர் 31, 1894
- பிரதாப் சந்திர ராய், சி.ஐ.இ.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்