Thursday, September 12, 2019

யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் கூறிய திருதராஷ்டிரன்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 01

Dhritarashtra consoled Yudhishthira! | Aswamedha-Parva-Section-01 | Mahabharata In Tamil

(அஸ்வமேதிக பர்வம் - 01)


பதிவின் சுருக்கம் : கங்கைக் கரையில் பீஷ்மருக்குத் தர்ப்பணம் செலுத்தப்பட்டது; உறவுகளின் அழிவினால் துயரடைந்த யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் சொன்ன திருதராஷ்டிரன்; விதுரனின் சொற்களைப் புறக்கணித்ததே துன்பத்துக்குக் காரணமாக அமைந்தது எனச் சொன்ன திருதராஷ்டிரன்...


ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னன் திருதராஷ்டிரன் (பீஷ்மரின் ஆத்மாவுக்கு) நீர்க்காணிக்கைகளை {தர்ப்பணங்களைச்} செலுத்திய பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், புலன்கள் தடுமாறும் நிலையில் கண்களில் நீர் ததும்ப இருந்தவனுமான யுதிஷ்டிரன், முன்னவனை {திருதராஷ்டிரனைத்} தன் முன்னே விட்டு, (ஆற்றின்) கரையில் ஏறி, வேடனால் துளைக்கப்பட்ட ஒரு யானையைப் போலக் கங்கைக் கரையின் கீழே விழுந்தான்.(1,2) அப்போது கிருஷ்ணனால் தூண்டப்பட்ட பீமன், மூழ்கிக் {விழுந்து} கொண்டிருந்த அவனைத் தாங்கி {ஏந்திக்} கொண்டான். பகைக்கூட்டங்களைக் கலங்கடிப்பவனான கிருஷ்ணன், "இவ்வாறு கூடாது" என்று சொன்னான்[1].(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தர்மனின் மகனான யுதிஷ்டிரன், கலக்கமடைந்து தரையில் கிடப்பதையும், மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பதையும் பாண்டவர்கள் கண்டார்கள்.(4) மன்னன் மனச்சோர்வுற்றவனாகவும், பலமற்றவனாகவும் இருப்பதைக் கண்ட பாண்டவர்கள், துயரத்தில் மூழ்கியவர்களாக அவனைச் சூழ்ந்து கீழே அமர்ந்தனர்.(5)


[1] கும்பகோணம் பதிப்பில், "பகைவரின் படையை அழிப்பவரான கோவிந்தரும், அவரைப் பார்த்து, "இவ்விதம் (துயரப்பட) வேண்டாம்" என்று சொன்னார்" என்றிருக்கிறது.

உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவனும், ஞானப்பார்வை கொண்டவனுமான மன்னன் திருதராஷ்டிரன், தன் மகன்களுக்காகப் பெரிதும் துயரில் பீடிக்கப்பட்டவனாக அந்த ஏகாதிபதியிடம் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குருக்களில் புலியே, எழுவாயாக.(6) உன் கடமைகளைக் கவனிப்பாயாக. ஓ! குந்தியின் மகனே, க்ஷத்திரிய நடைமுறையின் படியே நீ இந்தப் பூமியை வென்றாய்.(7) ஓ! மனிதர்களின் தலைவா, இனி நீ உன் தம்பிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அவளை {பூமியை} அனுபவிப்பாயாக. ஓ! அறவோரில் முதன்மையானவனே, நீ எதற்காகத் துயரப்பட வேண்டும் என்பதை {என்பதற்கான காரணத்தை} நான் காணவில்லை. ஓ! பூமியின் தலைவா, கனவில் பெற்ற வளங்களைப் போல நூறு மகன்களை இழந்த காந்தாரியும், நானும் தான் வருந்த வேண்டியவர்கள்.(8) பிறழுணர்வுகளைக் கொண்ட நான், நம் நலத்தை வேண்டிய உயர் ஆன்மாவான விதுரனின் பொருள் பொதிந்த சொற்களைக் கேட்காமல் (இப்போது) வருந்திக் கொண்டிருக்கிறேன்.(9)

அறம் சார்ந்தவனும், தெய்வீக உள்நோக்குப்பார்வை {ஆன்ம அறிவைக்} கொண்டவனுமான விதுரன், "துரியோதனனின் குற்றத்தால் உமது குலம் அழியப் போகிறது.(10) ஓ! மன்னா, உமது குலத்தின் நன்மையை நீர் விரும்பினால் என் ஆலோசனையின்படி செயல்படுவீராக. தீய மனம் கொண்ட ஏகாதிபதியான இந்தச் சுயோதனனைக் கைவிடுவீராக,(11) எவ்வகையிலும் அவனைக் காண கர்ணனையோ, சகுனியையோ அனுமதியாதீர். ஆரவாரமில்லாமல், அவர்களின் சூதாட்டத்தைத் தடுத்து, ஒடுக்கி,(12) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பட்டஞ்சூட்டுவீராக. புலன்களைக் கட்டுப்படுத்தியவனான அவனே நீதியுடன் பூமியை ஆள்வான்.(13) ஓ! ஏகாதிபதி, குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரனை நீர் ஏற்கவில்லையென்றால், ஒரு வேள்வியைச் செய்து நாட்டின் பொறுப்பை நீரே ஏற்றுக் கொண்டு,(14) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, ஓ! குலத்தை முன்னேற்றுபவரே, அனைத்து உயிரினங்களையும் சமமாகக் கருதி, உமது உறவுகளை உமது அருளில் வாழச் செய்வீராக" என்றான் {விதுரன்}.(15)

ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, தொலைநோக்குப் பார்வை கொண்ட விதுரன் இதைச் சொன்ன போதும், மூடனான நான் தீயவனான துரியோதனனைப் பின்தொடர்ந்தேன்.(16) அமைதியான அவனது {விதுரனது} இனிய பேச்சைக் காது கொடுத்துக் கேளாததன் விளைவாகவே நான் இந்தப் பெரும் துயரத்தை அடைந்து, துன்பக் கடலில் மூழ்கியிருக்கிறேன்.(17) ஓ! மன்னா, முதியவர்களான உன் தந்தையும் {நானும்}, தாயும் {காந்தாரியும்} துயரில் மூழ்கியிருப்பதைக் காண்பாயாக. ஓ! மனிதர்களின் தலைவா, நீ துயரமடைவதற்கான எந்நிகழ்வையும் நான் காணவில்லை" என்றான் {திருதராஷ்டிரன்}".(18)

அஸ்வமேதபர்வம் பகுதி – 01ல் உள்ள சுலோகங்கள் : 18

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்