Tuesday, October 08, 2019

ஸித்த காஸ்யப ஸம்வாதம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 16

Discourse between Siddha and Kasyapa! | Aswamedha-Parva-Section-16 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 01)


பதிவின் சுருக்கம் : கீதையை மறுபடியும் உரைக்கும்படி கோவிந்தனிடம் கேட்ட அர்ஜுனன்; சித்தர் மற்றும் காசியபருக்கிடையில் நடந்த உரையாடலைச் சொன்ன கிருஷ்ணன்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பகைவர்களைக் கொன்றுவிட்டு சபா மண்டபத்திற்குச் சென்ற உயர் ஆன்ம கேசவன் மற்றும் அர்ஜுனனுக்கிடையில் என்ன உரையாடல் நடந்தது?" என்று கேட்டான்.(1)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தன் நாட்டை மீட்ட பிருதையின் மகன் (அர்ஜுனன்), தெய்வீக அழகுடைய அந்த அரண்மனையில் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், கிருஷ்ணனின் துணையுடனும் வேறு எதையும் செய்யாமல் தன் காலத்தை இன்பமாகக் கழித்தான்.(2) ஒருநாள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவ்விருவரும் சொர்க்கத்தின் ஒரு பகுதியைப் போலத் தூய்மையாகத் தெரிந்த அந்த அரண்மனையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் சென்றனர். மகிழ்ச்சியில் நிறைந்திருந்த அவர்கள், தங்கள் உறவினர்கள் மற்றும் பணியாட்களால் சூழப்பட்டிருந்தனர்.(3)

கிருஷ்ணனுடனான தோழமையால் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த பாண்டுவின் மகன் அர்ஜுனன், இனிமைநிறைந்த அம்மாளிகையைக் கண்டு, தன் தோழனிடம், "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, போர் அணுகி வந்தபோது உன் பெருமையை நான் அறிந்தேன்.(4) ஓ! தேவகியின் மகனே, அண்டத்தின் தலைவனான உன் வடிவத்தை நான் அறிந்தேன்.(5) ஓ! கேசவா, புனிதனான நீ அந்நேரத்தில் அன்புடன் எனக்குச் சொன்னதனைத்தையும் என் மனத்தின் நிலையின்மையால் மறந்துவிட்டேன்.(6) எனினும், அந்த உண்மைகளை அறிய மீண்டும் மீண்டும் நான் ஆவல் கொள்கிறேன். நீயோ விரைவில் துவாரகை செல்லப் போகிறாய்" என்றான்".(7)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவனால் இவ்வாறு கேட்கப்பட்டதும், வலிமைமிக்கவனும், சக்திமானும், பேசுபவர்களில் முதன்மையானவனுமான கிருஷ்ணன், பல்குனனை {அர்ஜுனனை} ஆரத்தழுவி பின்வருமாறு பதில் கூறினான்.(8)

வாசுதேவன் {அர்ஜுனனிடம்}, "புதிர்கள் {இரகசியங்கள்} எனக் கருதப்படும் உண்மைகளை உன்னைக் கேட்கச் செய்தேன். நிலையான உண்மைகளை நான் உனக்குச் சொன்னேன். அறத்தின் நிலையான வடிவம் {ஸனாதன தர்மத்தின் ஸ்வரூபம்} குறித்தும், நித்திய உலகங்கள் அனைத்தைக் குறித்தும் நான் உனக்குச் சொன்னேன்.(9) நான் உனக்குச் சொன்னதை மடமையினால் நீ புரிந்து கொள்ளவில்லை என்பதை அறிவது பெரும் ஒவ்வாமையைத் தருகிறது. அச்சமயத்தில் நான் உன்னிடம் சொன்னது அனைத்தையும் இப்போது நினைவுகூர்ந்து என்னால் உனக்குச் சொல்ல இயலாது.(10) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நீ நம்பிக்கையற்றவனாகவும், புத்தி கெட்டவனாகவும் இருக்கிறாய். ஓ! தனஞ்சயா, அச்சந்தர்ப்பத்தில் நான் சொன்ன அனைத்தையும் விரிவாக மீண்டும் சொல்ல என்னால் இயலாது.(11)

(அப்போது நான் உனக்குச் சொன்ன) அந்த அறம் பிரம்மத்தைப் புரிந்து கொள்ளப் போதுமானதற்கும் காலம் அதிகமானதாகும். அது குறித்து மீண்டும் விரிவாக என்னால் சொல்ல முடியாது.(12) யோகத்தில் என்னை நானே குவித்துக் கொண்ட பிறகு பரப்பிரம்மம் குறித்து உன்னிடம் உரையாடினேன். எனினும், அதே காரியம் குறித்த ஒரு பழைய வரலாற்றை நான் உனக்குச் சொல்கிறேன்.(13) ஓ! கடமையை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நான் சொல்லப் போகும் அனைத்தையும் என் போதனைக்கு ஏற்ற புத்தியுடன் கேட்டால், உன்னால் உயர்ந்த கதியை அடைவதில் வெல்ல முடியும்.(14) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, ஒரு சந்தர்ப்பத்தில் சொர்க்கத்தில் இருந்து ஒரு பிராமணர் எங்களிடம் வந்தார். தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட அவர் பிரம்ம லோகத்தில் இருந்து வந்தார். எங்களால் அவர் முறையாகக் கௌரவிக்கப்பட்டார்.(15) ஓ! பிருதையின் மகனே, சொர்க்க வடிவங்களுக்கு ஏற்புடைய வகையில் எங்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் எவ்வகையான ஐயுணர்வுக்கும் வசப்படாமல் கேட்பாயாக" என்றான் {கிருஷ்ணன்}.(16)

பிராமணன், "ஓ! கிருஷ்ணா, (உன் சொந்த நன்மைக்காக அல்லாமல்) அனைத்து உயிரினங்களிடம் கொண்ட கருணையால் உந்தப்பட்டு, மோக்ஷ அறம் தொடர்பாக நீ என்னிடம் எதைக் கேட்டாயோ, மாயைகள் அனைத்தையும் எது அழிக்குமோ, ஓ! உயர்ந்த பலத்தைக் கொண்டவனே,(17) ஓ! மதுசூதனா அதை நான் உனக்கு முறையாகச் சொல்லப் போகிறேன். ஓ! மாதவா, நான் சொல்வதைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(18) தவம் செய்தவரும், கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், காசியபர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பிராமணர் அறப்புதிர்கள் {தர்மங்கள் குறித்த சாஸ்திர ரஹஸ்யங்கள்} அனைத்தையும் அறிந்த மற்றொரு பிராமணரிடம் சென்றார்.(19) உண்மையில், பின்னவர், உயிரினங்களின் மரணம் மற்றும் மறுபிறவிகள் குறித்துச் சாத்திரங்கள் போதிக்கும் அறிவு அனைத்திலும், யோகம் தரும் அனைத்துப் பொருட்களின் நேரடி அறிவு ஆகியவற்றிலும் தேர்ச்சி அடைந்தவராக இருந்தார். அவர் உலகம் தொடர்பான காரியங்களில் உள்ள உண்மைகள் அனைத்திலும் நல்ல நிபுணராக இருந்தார். இன்ப, துன்பங்களின் உண்மையையும் நன்கு அறிந்தவராக இருந்தார்.(20) அவர் பிறப்பு மற்றும் மரணம் குறித்தும், நிறை {புண்ணியம்} மற்றும் குறை {பாவம்} ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகளையும் அறிந்திருந்தார். தற்செயல்களின் {சுய கர்மத்தின்} விளைவால் உயர்ந்த மற்றும் இழிந்த உடல் கொண்ட உயிரினங்களால் அடையப்படும் கதிகளைக் காண்பவராக இருந்தார்.(21)

உலகில் இருந்து விடுதலை {முக்தி} அடைந்த ஒருவரைப் போல அவர் வாழ்ந்தார். தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவராகவும், முற்றான ஆன்ம அமைதியை அடைந்தவராகவும் இருந்த அவர், தமது புலன்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். பிரம்ம ஒளியால் சுடர்விடுபவராகவும், {நினைத்தாலே} விரும்பிய இடமெங்கும் செல்லக்கூடியவராகவும் இருந்தார். விரும்பினால் அனைவரின் கண்களின் முன்பும் மறைந்து போகும் அறிவியலை அவர் அறிந்திருந்தார். அவர் புலப்படாத சித்தர்கள் மற்றும் தெய்வீக இசைக் கலைஞர்களின் துணையுடன் திரிபவராக இருந்தார். மனிதர்களின் பரபரப்புக்கு அப்பால் ஏதோவோரிடம் அவர்களுடன் அமர்ந்து உரையாடுபவராகவும் இருந்தார். அவர் காற்றைப் போல அனைத்துப் பொருட்களில் இருந்தும் தொடர்பறுந்தவராக இருந்தார். உண்மையில் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்த காசியபர் அவரைக் காண விரும்பினார். நுண்ணறிவைக் கொண்டவரும், பிராமணர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான அவர் {காசியபர்} அந்தத் தவசியை அணுகினார்.(22-24) தவம் செய்பவரும் புண்ணியம் ஈட்ட விரும்பியவருமான காசியபர், அந்த அற்புதக் குணங்கள் அனைத்தையும் கண்டதும் அந்தத் தவசியின் பாதங்களில் குவிந்த இதயத்துடன் விழுந்தார்.(25) அவருடைய இயல்புக்கு மீறிய சாதனைகளைக் கண்ட காசியபர், ஒரு சீடன் தன் ஆசானுக்காகக் கடமையுணர்வுடனும், மதிப்புடனும் காத்திருப்பதைப் போல அந்த முதன்மையான பிராமணரிடம் காத்திருந்து, அவரைத் தணிப்பதில் வென்றார்.(26) ஓ! பகைவர்களை வாட்டுபவனே {கிருஷ்ணா}, சாத்திரக் கல்வி, சிறந்த ஒழுக்கம் ஆகியவற்றைத் தவிர இந்தச் சாதனைகள் அனைத்தையும் செய்திருந்த அந்தப் பிராமணரை, ஓர் ஆசானிடம் கீழ்ப்படிந்திருக்கும் சீடனைப் போலத் தம் பக்தியால் நிறைவடையச் செய்தார்.(27) காசியபரிடம் நிறைவடைந்த அந்தப் பிராமணர் ஒரு நாள் அவரிடம் உற்சாகமாகவும், உயர்ந்த வெற்றியில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டும் பின்வருமாறு பேசினார். ஓ! ஜனார்த்தனா, அந்த வார்த்தைகளை நான் மீண்டும் சொல்கிறேன் கேட்பாயாக.(28)

வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரான அந்தத் தவசி {சித்தர்}, "ஓ! மகனே {காசியபா}, பல்வேறு செயல்களின் மூலமும், தகுதியின் {புண்ணியத்தின்} துணை மூலமும் இறந்து போகக்கூடிய உயிரினங்கள் இம்மையில் பல்வேறு கதிகளையும், சொர்க்கத்தில் வசிப்பிடத்தையும் அடைகின்றன.(29) எங்கும் உயர்ந்த மகிழ்ச்சி கிடையாது; எங்கும் நிலையான வசிப்பிடம் கிடையாது. துன்பத்துடன் அடையப்பட்ட உயர்ந்த உலகங்களில் இருந்து மீண்டும் மீண்டும் விழ்ச்சிகள் நேரிடும்.(30) பாவத்தில் ஈடுபட்டதன் விளைவாகக் காமமும், கோபமும் நிறைந்தவனாக, பேராசையால் மயக்கப்பட்டவனாக இருந்த நான் பரிதாபகரமான, மங்கலமற்ற பல்வேறு கதிகளை அடைய வேண்டி இருந்தது.(31) நான் மீண்டும் மீண்டும் இறந்து, மீண்டும் மீண்டும் பிறந்தேன். நான் பல்வேறு வகை உணவுகளை உண்டேன், நான் பல்வேறு முலைகளைப் பருகியிருக்கிறேன்.(32)

ஒருவருக்கொருவர் வெவ்வேறான பல்வேறு வகைத் தாய்மாரையும், பல்வேறு வகைத் தந்தைமாரையும் நான் கண்டிருக்கிறேன். ஓ! பாவமற்றவனே, பல்வேறு வகை இன்பங்களையும், பல்வேறு வகைத் துயரங்களையும் எனதாகியிருக்கின்றன.(33) பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் எனக்கு ஏற்புடையவற்றில் இருந்து பிரிக்கப்பட்டு, ஏற்பில்லாதவற்றோடு சேர்க்கப்பட்டிருக்கிறேன். கடும் உழைப்பினால் செல்வத்தை ஈட்டி, அதை இழந்திருக்கிறேன்.(34) அவமதிப்புகள், அதீத துயரங்கள் ஆகியவற்றை மன்னர்களிடம் இருந்தும், உறவினர்களிடம் இருந்தும் நான் அடைந்திருக்கிறேன்.(35) அவமானங்கள், மரணம், மிகக் கடுமையான சூழ்நிலைகளின் கீழ் சிறைவாசம் ஆகியவற்றை நான் அனுபவித்திருக்கிறேன். நரகத்தில் விழுவதும், யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் பெரும் சித்திரவதைகளும் எனதாகியிருக்கின்றன.(36) முதுமையும், நோய்களும் மீண்டும் மீண்டும் என்னைத் தாக்கியிருக்கின்றன, அடிக்கடி அபரிமிதமான அளவில் பேரிடர்கள் நேர்ந்திருக்கின்றன. முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் கருத்துகளில் இருந்தும் பாயும் துன்பங்களை இவ்வுலகில் நான் மீண்டும் மீண்டும் அனுபவித்திருக்கிறேன்.(37)

இவை யாவற்றுக்கும் பிறகு, ஒரு நாள், துன்பத்தில் மூழ்கியிருந்த எனக்கு வெறுமையான மனத்தளர்ச்சி {நம்பிக்கையின்மை} ஏற்பட்டது. வடிவமற்ற புகலிடத்தை நான் அடைந்தேன். பெரும் துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த நான் இன்ப துன்பங்கள் நிறைந்த இந்தப் பூமியைக் கைவிட்டேன்[1].(38) இந்தப் பாதையைப் புரிந்து கொண்ட நான், இவ்வுலகில் தானே பயின்று வந்தேன். அதன் பிறகு, ஆன்ம அமைதியின் மூலம் நீ காணும் இந்த வெற்றியை அடைந்தேன்.(39) (இங்கிருந்து நான் சென்ற பிறகு) இவ்வுலகத்திற்கு நான் மீண்டும் வர மாட்டேன். உண்மையில், நிலைத்த பிரம்மத்துக்குள் ஈர்க்கப்படும் நிலையை நான் அடையும் வரை, அண்டத்தின் இறுதி அழிவு வரை எனக்கு நேரும் மகிழ்ச்சிகரமான கதிகளையும், இந்த அண்டத்தில் உள்ள உயிரினங்களின் கதிகளையும் பார்த்துக் கொண்டிருப்பேன்[2].(40) இந்தச் சிறந்த வெற்றியை அடைந்திருக்கும் நான் இவ்வுலகில் இருந்து சென்ற பிறகு, அதற்கு மேலிருப்பது எதுவோ (சத்தியலோகத்திற்கு) செல்வேன். அங்கிருந்து மேலும் உயர்வானதை அடைவேன் (பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படுவேன்).(41) புலப்படாத நிலையான அந்தப் பிரம்ம நிலையை உண்மையில் நான் அடைவேன். இதில் உனக்கு எந்த ஐயமும் வேண்டாம். ஓ! பகைவரை எரிப்பவனே, இறந்து போகும் உயிரினங்களைக் கொண்ட இவ்வுலகிற்கு மீண்டும் நான் திரும்ப மாட்டேன்.(42)

[1] "இங்கே வரும் "நிராகாராக்ருதேனா’ என்பது நீல கண்டரால் பிரம்மத்தைச் சார்ந்து சமாதியை அடைந்து அல்லது உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டின் செயல்பாடுகள் அனைத்தையும் (யோகத்தின் மூலம்) நிறுத்தி, முற்றான நினைவின்மையை அடைவது என்று விளக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "இங்கே சொல்லப்படும் அண்ட அழிவு மஹாபிரளயமாகும், கண்டம் அல்லது அவாந்தரப் பிரளயங்கள் அல்ல. அதுவரை அந்தத் தவசி உயிரினங்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் பிறந்து இறப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! பெரும் ஞானியே, நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன். நான் உனக்குச் செய்ய வேண்டியதென்ன என்பதைச் சொல்வாயாக. நீ இங்கே வந்திருக்கும் நோக்கம் நிறைவேறுவதற்கான காலம் வந்துவிட்டது.(43) நீ என்னை நாடி வந்ததற்கான நோக்கத்தை உண்மையில் நான் அறிவேன். அதனால்தான் நான் உனக்கு இந்தச் சிறு குறிப்பைத் தருகிறேன்.(44) ஓ! பெரும் ஞானமும், அனுபவமும் கொண்டவனே, உன் நடத்தையில் நான் உயர்ந்த நிறைவை அடைந்திருக்கிறேன். நீ என்னைக் கேள்வி கேட்கலாம். உன் விருப்பப்படியே உனக்கு நன்மையானவற்றைக் குறித்து நான் உனக்குச் சொல்வேன்.(45) உன் புத்தி பெரியதென நான் நினைக்கிறேன். அந்தப் புத்தியின் துணையுடன்தான் நீ என்னை அறிந்து கொண்டாய் என்பதால் நான் உண்மையில் உன்னை வெகுவாக மெச்சுகிறேன். ஓ! காசியபா, நீ நிச்சயம் பெரும் நுண்ணறிவைக் கொண்டவனாவாய்" என்றார் {அந்த சித்தர்}.(46)

அஸ்வமேதபர்வம் பகுதி – 16ல் உள்ள சுலோகங்கள் : 46

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்