Tuesday, October 22, 2019

எழுவகைப்படைப்பு! - அஸ்வமேதபர்வம் பகுதி – 20

Sevenfold creation! | Aswamedha-Parva-Section-20 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 05)


பதிவின் சுருக்கம் : பூதங்கள், பிராணன் முதலியவற்றைக் குறித்து ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடந்த உரையாடலை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...


வாசுதேவன் {அர்ஜுனனிடம்}, "ஓ! பிருதையின் மகனே, இது தொடர்பாகப் பழங்கதையில் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(1) ஒரு குறிப்பிட்ட பிராமணரின் மனைவியானவள், அனைத்து வகை ஞானவிஞ்ஞானங்களில் முழுத் தேர்ச்சியடைந்தவரும், தனியாக அமர்ந்திருந்தவரும், தன் கணவருமான அந்தப் பிராமணரைக் கண்டு, அவரிடம்,(2) "(அறச்) செயல்கள் அனைத்தையும் கைவிட்டு அமர்ந்திருப்பவரும், என்னிடம் கடுமையாக நடந்து கொள்பவரும், {உம்மைத் தவிர வேறு கதி இல்லாதவளான என்னை} எண்ணியுணராதவருமான உம்மைக் கணவராக அடைந்திருக்கும் நான் எந்த உலகத்திற்குச் செல்வேன்?[1](3) கணவனால் அடையப்படும் உலகங்களையே மனைவியும் அடைகிறாள் என நாம் கேள்விப்படுகிறோம். உண்மையில், உம்மைக் கணவராகப் பெற்ற நான் அடையாப்போகும் கதி யாது?" என்று கேட்டாள்.(4)


[1] "’அவிசக்ஷணம்’ என்பது குறைகளுடன் கூடிய தம்மைத் தவிர வேறொரு புகலிடமில்லாத மனைவியே இவ்வாறு கேள்வி கேட்பவள் என்று எண்ணி உணராத கணவர் என்ற பொருளைத் தரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இவ்வாறு கேள்வி கேட்கப்பட்டவரும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவருமான அந்தப் பிராமணர் புன்னகைத்தவாறே அவளிடம், "ஓ! அருளப்பட்ட மங்கையே, ஓ! பாவமற்றவளே, நீ சொல்லும் இந்த வார்த்தைகளால் நான் புண்படவில்லை.(5) பிறரின் உதவியுடன் செய்யப்படுபவதும், (செய்யப்படும் பெருந்திரள் தன்மையால்) காணப்படுபவதும் {கண்ணுக்குத் தெரிவதும்}, உண்மையானதுமான எந்தச் செயலும், செயல்களில் அர்ப்பணிப்புள்ள மனிதர்களால் செய்யப்படுகிறது[2].(6) ஞானம் இல்லாதவர்கள், தங்கள் செயல்களின் மூலம் திரிபுக்காட்சியையே {மாயையே} திரட்டுகின்றனர். ஒருக்கணமும் செயல்களில் இருந்து விடுதலை என்பது இவ்வுலகில் அடையப்பட முடியாததாகும்.(7) பிறப்பு முதல் வேறு வடிவம் அடைவது வரை, உடல், மனம் அல்லது வாக்கால் செய்யப்படும் நல்ல மற்றும் தீய வினைகளை அனைத்து உயிரினங்களும் செய்கின்றன.(8) (சோமச்சாறு மற்றும் ஆகுதிகளுக்கான நெய் போன்ற) புலப்படத்தக்கப் பொருட்களால் வகைப்படுத்தப்படும் அந்த (செயல்) பாதைகள் ராட்சசர்களால் அழிக்கப்பட்டதால், அவற்றில் இருந்து விலகி என் ஆன்மாவின் துணையுடன் உடலில் உள்ள இருக்கையைக் கண்டடைந்தேன்[3].(9) முரண்பட்ட இரட்டைகள் {இருமைகள்} அனைத்தையும் கடந்த பிரம்மம் வசிப்பது அங்கேயே, அக்னியுடன் கூடிய சோமன் இருப்பதும் அங்கேயே; அனைத்து உயிரினங்களையும் தாங்குபவனும், புத்தியைத் தூண்டுபவனுமானவனும் (வாயுவும்) அங்கே இருந்து நகர்ந்து கொண்டிருக்கிறான்[4].(10)

[2] "நான் நீலகண்டரைப் பின்பற்றுகிறேன். தெலங்க் அவர்கள் அர்ஜுன் மிஷ்ரா அவர்களைப் பின்பற்றி, (தீண்டல், காட்சி அல்லது கேள்வி முதலியவற்றால்) பற்றப்படும் எந்தச் செயலும் எனப் பொருள் கொள்கிறார். நீலகண்டரின் படி கிராஹ்யம் என்பது பிறரின் உதவியுடன் செய்யப்படும் தீக்ஷை முதலியவற்றைப் போன்ற செயல்களையே குறிப்பிடுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கிரஹிக்கத்தக்கதும், பார்க்கத்தக்கதும், கேட்கத்தக்கதுமாக எந்தக் கர்மம் இருக்கிறதோ அதனையே கர்மஞ்செய்பவர்கள் ‘கர்மா, கர்மா’ என்று நிச்சயிக்கின்றனர்" என்றிருக்கிறது.

[3] "இந்த இருக்கையானது, அவிமுகம் என்றழைக்கப்படுகிறது என்றும் அது கண் புருவங்களுக்கும், மூக்குக்கும் இடையில் இருக்கிறது என்றும் நீலகண்டர் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பார்க்கவும், கேட்கவும் கூடிய கர்மங்கள் ராக்ஷஸர்களால் கெடுக்கப்படும்போது அதனால் நான் (வைராக்யமடைந்து) ஆத்மாவுக்கு இருப்பிடமான ஓர் இடத்தைப் புத்தியினால் பார்த்துக் கொண்டேன்" என்றிருக்கிறது.

[4] "இந்த இடத்தில் பிரம்மம் இருக்கிறது; இடங்கலை, பிங்கலை இருக்கின்றன; புத்தியைத் தூண்டுபவனும், உயிரினங்கள் அனைத்தையும் தாங்குபவனுமான வாயுவும் அங்கேயே இருக்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவ்விடத்தில் ஸோமன், அக்னியுடன் வஸிக்கிறான். புத்தியைத் தூண்டுகிறவனும், பிராணிகளைத் தரிக்கிறவனுமான வாயு எப்போதும் ஸஞ்சாரம் செய்கிறான்" என்றிருக்கிறது.

பெரும்பாட்டனான பிரம்மனும், பிறரும் அந்த இருக்கையை அடைவதற்காகவே {இடத்திற்காகவே} யோகத்தில் குவிந்து அழிவற்றவனை வழிபடுகிறார்கள். கல்விமான்களும், சிறந்த நோன்புகளையும், அமைதியான ஆன்மாக்களையும் கொண்டவர்களும், புலன்களை முற்றாக வென்றவர்களுமான மனிதர்களும் அந்த இருக்கைக்காகவே முயற்சி செய்கிறார்கள்.(11) மணப்புலனால் {மூக்கால்} அதை {பிரம்மத்தை} நுகர இயலாது; நாவால் சுவைக்கவும் முடியாது; தீண்டல் புலன்களால் தொடவும் முடியாது. மனத்தால் மட்டுமே அஃது அடையப்படுகிறது.(12) கண்ணால் அதை வெல்ல முடியாது. கேள்விப் புலனை {காதுகளை} அது கடந்திருக்கிறது. மணம், சுவை, ஊறு, {ஒலி} மற்றும் வடிவம் ஆகிய குணங்களற்றதாக அஃது இருக்கிறது.(13) அதனிலிருந்தே நன்கு விதிக்கப்பட்ட அண்டம் எழுகிறது, மேலும், அதனிலேயே {பிரம்மத்தையே} அது {அண்டம்} நிலைத்துமிருக்கிறது. பிராணன், அபானன், சமானன், வியானன், உதானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகள்,(14) அதனிலிருந்தே {பிரம்மத்திலிருந்தே} பாய்கின்றன, மேலும் அதற்குள்ளேயே அவை மீண்டும் நுழைகின்றன. பிராமணன் மற்றும் அபானன் என்ற மூச்சுகள், சமானன் மற்றும் வியானனுக்கிடையிலேயே நகர்கின்றன.(15) ஆன்மா உறங்கும்போது, சமானன் மற்றும் வியானன் ஆகிய இரண்டும் உள்ளீர்க்கப்படுகின்றன. அபானனுக்கும், பிராணனுக்கும் இடையில் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் நிலையில் உதானன் வசிக்கிறது.(16)

எனவே, பிராணனும், அபானனும், உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனைக் கைவிடுவதில்லை. இவ்வாறு உயிர்க் காற்றுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மூச்சானது உதானன் என்றழைக்கப்படுகிறது.(17) எனவே பிரம்மத்தை ஓதுபவர்கள் {பிரம்மவாதிகள்} என்னையே தங்கள் இலக்காகக் கொண்டு தவங்களைச் செய்கிறார்கள்[4]. ஒன்றையொன்று வழிங்கி உடலுக்குள் நகர்ந்து கொண்டிருக்கும் அந்த உயிர் மூச்சுகள் அனைத்திற்கும் மத்தியில் ஏழு தழல்களால் ஆன வைஸ்வாநரன் என்றழைக்கப்படும் நெருப்பு {அக்னி} சுடர்விட்டெரிகிறது. மூக்கு, நாக்கு, கண்கள், தோல், ஐந்தாவதாகக் காது,(18,19) மனம் மற்றும் புத்தி ஆகிய இந்த ஏழும் வைஸ்வாநரனுடைய தழலின் ஏழு நாவுகளாக விளங்குகின்றன. முகரத்தக்கது, காணத்தக்கது, பருகத்தக்கது {குடிக்கத்தக்கது}, தீண்டத்தக்கது, கேட்கத்தக்கது,(20) நினைக்கத்தக்கது, புரிந்து கொள்ளத்தக்கது ஆகிய இவையே எனக்கான ஏழு வகை விறகுகளாகின்றன. முகர்வது, உண்பது, காண்பது, தொடுவது, ஐந்தாவதாகக் கேட்பது,(21) நினைப்பது, புரிந்து கொள்வது ஆகிய இவையே ஏழு பெரும்புரோகிதர்களாகும்.(22)

[4] "உலக வாழ்வு உயிர் மூச்சுகளால் ஒழுங்கமைக்கப்படுகிறது. இவை ஆன்மாவுடன் பிசக்கப்பட்டு, தனிப்பட்ட வெளிப்பாடுகளுக்கு வழிவகுக்கின்றன. உதானன் உயிர் மூச்சுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. உதானன் தவத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தத் தவமே மறுபிறப்பு சுழற்சிகளை அழித்து, பிரம்மத்திற்குள் உள்ளீர்க்கப்படும் நிலைக்கு வழிவகுக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "படுத்துக் கொண்டிருக்கும் புருஷனைப் பிராணனும் அபானனும் விடுகிறதில்லை. பிராணனைக் கெடுக்காத காரணத்தால் அதனை உதானனென்று சொல்லுகிறார்கள். ஆகையால், பிரம்மவாதிகள் தவத்தை அதனிடமிருந்து உண்டானதாக நிச்சயிக்கின்றனர்" என்றிருக்கிறது.

ஓ! அருளப்பட்டவளே, முகரத்தக்கது, பருகத்தக்கது, காணத்தக்கது, தீண்டத்தக்கது, கேட்கத்தக்கது, நினைக்கத்தக்கது, அறியத்தக்கது என்ற ஏழு நெருப்புகளில், ஏழு வழிகளில் ஏழு ஆகுதிகளை முறையாகக் கைவிடும் வேள்வி செய்பவர்களான கல்விமான்கள், அவற்றைத் தங்கள் கருவறைக்குள் உண்டாக்குகிறார்கள்[5]. பூமி, காற்று, ஆகாயம், நீர், ஐந்தாவதாக ஒளி,(23,24) மனம் மற்றும் புத்தி ஆகிய இவை ஏழும் (அனைத்துப் பொருட்களின்) கருவறைகள் என்றழைக்கப்படுகின்றன. வேள்விக் காணிக்கைகளாக அமையும் குணங்கள் அனைத்தும் நெருப்பில் பிறந்த குணத்திற்குள் நுழைகின்றன;(25) அந்த வசிப்பிடத்திற்குள் வசிக்கும் அவை தங்கள் தங்களுக்குரிய கருவறைகளில் மீண்டும் பிறக்கின்றன. அனைத்துப் பொருட்களையும் எது உண்டாக்குமோ அதில் அவை அழிவுக்காலம் வரை உள்ளீர்க்கப்பட்ட நிலையிலேயே நீடித்திருக்கும்.(26) அதிலிருந்தே மணம் உண்டாகிறது, அதிலிருந்தே சுவை உண்டாகிறது, அதிலிருந்தே நிறம் உண்டாகிறது, அதிலிருந்தே தீண்டலுணர்வு உண்டாகிறது;(27) அதிலிருந்தே ஒலி உண்டாகிறது, அதிலிருந்தே ஐயம் எழுகிறது, அதிலிருந்தே அழிவும் உண்டாகிறது. இவ்விதமாகவே இவை ஏழுவகைப் படைப்புகளாக அறியப்படுகின்றன.(28) இவ்வகையிலேயே இவையனைத்தும் பழங்காலத்தவர்களால் புரிந்து கொள்ளப்பட்டன. ஆகுதிகளின் முழுமையான மூன்று காணிக்கைகள் முழுமையடைந்து ஒளியால் நிறைகிறது[6]" என்றார் {பிராமணர்}.(29)

[5] "மகிழ்ச்சியைத் தரத்தக்க பொருட்களைக் கைவிடுபவர்களால் அவற்றைத் தாங்கள் விரும்பும்போது உண்டாக்கவும் முடியும். பூமியைத் தன் உட்பொருளாகக் கொண்ட மணத்தைக் கைவிடும் ஒருவனால், தான் விரும்பும்போது பூமியை உண்டாக்க முடியும் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[6] பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஆகுதிகளின் முழுமையான காணிக்கை அவற்றை முழுமையாக்கி, சக்தியால் அவர்களை நிரப்புகிறது" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "மூன்று முழுமையான இறுதி ஆகுதிகளால் முழுமையடைந்தது ஒளியால் நிறைகிறது" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "இவ்விதம் ஏழுவிதமான ஜன்மாவை அறிகிறார்கள். புராதனர்களான ரிஷிகள் இவ்விதமாகவே அறிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களோ (எங்கும்) நிறைந்த பிரம்மத்தின் ஆஹுதிகளால் நிறைந்தவர்களும், தேஜஸால் நிறைந்தவர்களுமாக இருக்கின்றனர்" என்றிருக்கிறது.

அஸ்வமேதபர்வம் பகுதி – 20ல் உள்ள சுலோகங்கள் : 28

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்