Saturday, October 26, 2019

மனமும், இந்திரியங்களும்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 22

Mind and the attributes of senses! | Aswamedha-Parva-Section-22 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 07)


பதிவின் சுருக்கம் : மனத்துக்கும், புலன்களுக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்...


பிராமணர், "ஓ! அருளப்பட்டவளே, வேள்விப்புரோஹிதர்கள் எழுவரின் அமைப்பு {விதி} எத்தகையது என்பது தொடர்பாக ஒரு பழங்கதைச் சொல்லப்படுகிறது.(1) மூக்கு {க்ராணம்}, கண்கள் {சக்ஷுஸ்}, நாவு {ஜிஹ்வை}, தோல் {துவக்கு}, ஐந்தாவதாகக் காதுகள் {ஸ்ரோத்ரம்}, மனம் மற்றும் புத்தி ஆகியவை ஒன்றுக்கொன்று மாறுபட்ட தனித்துவம் கொண்ட ஏழு வேள்விப்புரோஹிதர்களாகும்.(2) நுட்பமான வெளியில் வசிக்கும் அவை ஒன்றையொன்று காண்பதில்லை. ஓ! அழகியே, இந்த ஏழு வேள்விப் புரோஹிதர்களையும் அதனதன் இயல்பின்படி அறிந்து கொள்வாயாக" என்றார்.(3)


அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, "நுட்பமான வெளியில் இருக்கும் இவை ஒன்றையொன்று காணாமல் இருப்பதெவ்வாறு? ஓ! புனிதமானவரே, அவற்றின் (அவை ஒவ்வொன்றின்) இயல்புகள் என்னென்ன? ஓ! தலைவா, இவற்றை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டாள்.(4)

பிராமணர், "(எந்தப் பொருளின்) குணங்களையும் அறியாதிருப்பது, (அந்தப் பொருளைக் குறித்த) அறியாமையே {அவிஜ்ஞானம்} ஆகும்; அதே வேளையில், அந்தக் குணங்களை அறிவது அறிவாகும் (அறிவு {அபிஜ்ஞதை} என்று அழைக்கப்படுகிறது). இந்த ஏழில் எந்த ஒன்றும் மற்றொன்றின் குணங்களை அறிவதிலோ, புரிந்து கொள்வதிலோ ஒருபோதும் வெல்வதில்லை.(5)

நாக்கு, கண்கள், காதுகள், தோல், மனம் புத்தி ஆகியன மணங்களை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. மூக்கு மட்டுமே அவற்றை உணர்கிறது.(6) மூக்கு, கண்கள், காதுகள், தோல், மனம் மற்றும் புத்தி ஆகியன சுவைகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. நாக்கு மட்டுமே அவற்றை உணர்கிறது.(7) மூக்கு, நாக்கு, காதுகள், தோல், மனம் மற்றும் புத்தி ஆகியன நிறங்களை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. கண்கள் மட்டுமே அவற்றை உணர்கின்றன.(8) மூக்கு, நாக்கு, கண்கள், காதுகள், புத்தி மற்றும் மனம் ஆகியன தீண்டல் உணர்வுகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. தோல் மட்டுமே அவற்றை உணர்கிறது.(9) மூக்கு, நாக்கு, கண்கள், தோல், மனம் மற்றும் புத்தி ஆகியன ஒலிகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. காதுகள் மட்டுமே அவற்றை உணர்கின்றன.(10) மூக்கு, நாக்கு, கண்கள், தோல், காதுகள் மற்றும் புத்தி ஆகியன ஐயங்களை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. மனம் மட்டுமே அவற்றை உணர்கிறது.(11) மூக்கு, நாக்கு, கண்கள், தோல், காதுகள் மற்றும் மனம் ஆகியன (உறுதியான அறிவைத்) தீர்மானிக்கும் உணர்வுகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை {அவை ஒரு தீர்மானத்தை அடைவதில்லை}. புத்தி மட்டுமேஅவற்றை உணர்கிறது {புத்தியே தீர்மானிக்கிறது}.(12)

ஓ! அழகிய மங்கையே, இது தொடர்பாகப் புலன்களுக்கும், மனத்திற்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(13)

மனம், "நானில்லாமல் மூக்கு நுகர்வதில்லை. (நானில்லாமல்) நாக்கானது சுவையை உணர்வதில்லை. நான் இல்லாதபோது, கண்கள் நிறத்தைப் பற்றுவதில்லை, தோல் தீண்டலை உணர்வதில்லை,(14) காதுகள் ஒலியை உணர்வதில்லை. நான் நித்தியமானவனாகவும், பூதங்கள் அனைத்திலும் முதன்மையானவனாகவும் இருக்கிறேன்.(15) வசிப்பதற்கு யாருமில்லாத வெற்று வசிப்பிடங்களைப் போலவும், தழல்கள் தணிக்கப்பட்ட நெருப்பைப் போலவும், நானில்லாத போது புலன்கள் ஒருபோதும் ஒளிர்வதில்லை.(16) ஈரமானவையும், உலர்ந்தவையுமாக உள்ள விறகுகளை (நெருப்பை மூட்டத் தவறுவதைப்) போல, நான் இல்லாமல் புலன்கள் முயன்றாலும், குணங்களையும், பொருள்களையும் உணர்வதில் அனைத்து உயிரினங்களும் தவறுகின்றன[1]" என்றது {மனம்}.(17)

[1] கும்பகோணம் பதிப்பில், "நான் எல்லாப் பூதங்களுள்ளும் மிகச் சிறந்தவனும், ஸனாதனனுமாக இருக்கிறேன். ஜனங்களில்லாத வீடுகள் போலவும், ஜ்வாலை தணிந்த அக்னிகள் போலவும் நானில்லாத இந்திரியங்கள் ஒருபோதும் பிரகாசிக்கிறதில்லை. நானில்லாவிட்டால் எல்லாப்பிராணிகளும் முயற்சியுள்ளவைகளான இந்திரியங்களாலும், குணங்களென்னும் விஷயங்களை ஈரமுள்ளவையும், உலர்ந்தவையுமாயிருக்கிற விறகுகள் (ஒன்றையும் அறியாததுபோல) அறிகிறதில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நான் இல்லாமல் புலன்கள் ஒருபோதும் ஒளிர்வதில்லை. வேள்வி நெருப்பின் தழல்கள் அணைக்கப்பட்ட வெறுமையான வீட்டைப் போலவே அவை இருக்கும். நான் இல்லாமல் எந்த உயிரினத்தாலும் குணங்களின் பொருளை புரிந்து கொள்ள முடியாது. அவ்வுயிரினங்கள் முயன்றாலும், உலராத ஈர விறகைப் போலவே அவற்றின் புலன்கள் இருக்கும்" என்றிருக்கிறது.

இச்சொற்களைக் கேட்ட புலன்கள் {இந்திரியங்கள்}, "உண்மையில், நாங்களோ, எங்கள் பொருட்களோ இல்லாமல் உன்னால் இன்பங்களை அனுபவிக்க முடியுமென்றால் இக்காரியத்தில் நீ நினைப்பதே உண்மையாக இருக்கும்[2].(18) நாங்கள் அழிந்த பிறகு, நிறைவும், உயிர்த்தரிப்பும், உன் இன்பங்களும் தொடருமானால் நீ நினைப்பதே உண்மையாகும்;(19) நாங்கள் அழிந்து, பொருள்கள் இருந்து எங்கள் துணையின்றி உன் விருப்பத்தால் மட்டுமே உன்னால் அவற்றை அனுபவிக்க முடியுமென்றால், நீ நினைப்பதே உண்மையாகும்.(20) மேலும், எங்கள் பொருள்களின் மீது உனக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறதென நீ கருதினால், நிறத்தை மூக்கின் மூலமாகவும், சுவையைக் கண்களின் மூலமாகவும் உணர்வாயாக.(21) மணத்தைக் காதுகளின் மூலமாகவும், தீண்டலை நாவின் மூலமாகவும் உணர்வாயாக. மேலும் ஒலிகளைத் தோலின் மூலமாகவும், தீண்டலைப் புத்தியின் மூலமாகவும் உண்ர்வாயாக.(22) பலம் நிறைந்தவர்கள் எந்த விதிகளின் ஆளுகையையும் ஏற்பதில்லை. விதிகள் பலவீனமானவர்களுக்காக மட்டுமே இருக்கின்றன. இதற்கு முன் அனுபவிக்கப்படாத இன்பங்களைப் பற்றுவாயாக; (பிறரால்) முன்பே சுவைக்கப்பட்டவற்றில் இன்புறுவது உனக்குத் தகாது.(23)

[2] கும்பகோணம் பதிப்பில், "(மனமே) நாங்களில்லாமல் நீ எங்களுடைய விஷயங்களாகிற போகங்களை அனுபவிப்பாயானால், நீ எண்ணியபடி இஃது இவ்விதமே உண்மையாகும்" என்றிருக்கிறது.

சுருதிகளுக்காக (அவற்றை அடைவதற்காக) ஆசானை நாடி, ஸ்ருதிகளை அடைந்த பிறகு (அவற்றின் விதிகளைப் பின்பற்றுவதன் மூலம்) அவை சொல்லும் கருத்துகளில் வசிக்கும் சீடனைப் போலவே,(24) கடந்த காலத்திலோ, எதிர்காலத்திலோ, உறக்கத்திலோ, விழிப்புநிலையிலோ எங்களால் காட்டப்படும் பொருட்களை உன்னுடையவையென நீ கருதுகிறாய்.(25) மேலும், புத்தி குறைந்த உயிரினங்களின் மனம் திசைத்திரும்பி உற்சாகமற்றதாக இருக்கும்போதும் நாங்கள் எங்கள் பொருள்களில் இயக்கத்தை வெளிப்படுத்தி அவற்றின் {அந்த உயிரினங்களின்} உயிரைத் தாங்கிப் பிடிப்பதும் காணப்படுகிறது[3].(26) ஓர் உயிரினம், கனவுகளில் ஈடுபட்டு, எண்ணற்ற நோக்கங்களை அமைத்துக் கொண்டாலும், அஃது அனுபவிக்கும் விருப்பத்தால் பீடிக்கப்படும்போது, புலன்நுகர் பொருட்களிடம் மட்டுமே ஓடுவதும் காணப்படுகிறது[4].(27) மன நோக்கங்களை மட்டுமே சார்ந்தவையும், உண்மையான புலன் நுகர் பொருட்களின் தொடர்பற்றவையுமான இன்பங்களுக்குள் ஒருவன் நுழையும்போது, விறகு தீர்ந்ததும் தூண்டப்பட்ட நெருப்பைப் போல உயிர்மூச்சுகள் தீர்ந்து அவன் மரணத்தையே சந்திக்கிறான்[5].(28) நாங்கள் எங்களுக்குரிய குணங்களின் தொடர்புடையவர்களாக இருக்கிறோம் என்பது உண்மையே; எங்களில் ஒன்று மற்றொன்றின் குணங்களை அறியாதிருக்கிறோம் என்பதும் உண்மையே. ஆனால், நாங்கள் இல்லாமல் உன்னால் ஒன்றையும் உணர முடியாது. நாங்கள் இல்லாமல் உனக்கு இன்பமேதும் கிடையாது" என்றன {புலன்கள்}.(29)

[3] "சீரற்ற மனத்தை உயிரினங்கள் கொண்டிருந்தாலும், இவ்வாறு எங்களின் மூலம் அவை தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] "மனம் சார்ந்த நோக்கங்களும் கனவுகள் அவனை நிறைவடையச் செய்வதில் தவறுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[5] கும்பகோணம் பதிப்பில், "பாஹ்யேந்திரியங்களில்லாதது போலிருக்கும் ஹிருதயாகாசத்தில் நாள்தோறும் பிரவேசித்து ஸங்கல்ப போகங்களென்னும் விஷயங்களை அனுபவியாமல் மனம் லயமடைந்திருக்கும்போது ஜ்வலிக்கின்ற அக்னியானது விறகு இல்லாதபோது தணிவது போலச் சாந்தியை அடைகிறான்" என்றிருக்கிறது.

அஸ்வமேதபர்வம் பகுதி – 22ல் உள்ள சுலோகங்கள் : 29

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்