Sunday, October 27, 2019

பஞ்சவாயுக்கள்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 23

Five life winds! | Aswamedha-Parva-Section-23 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 08)


பதிவின் சுருக்கம் : பிராணன், அபானன் முதலிய ஐந்து உயிர்க்காற்றுகளின் சிறப்பைக் குறித்த உரையாடலைத் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்...


பிராமணர், "ஓ! அருளப்பட்ட மங்கையே, ஐந்து வேள்விப் புரோஹிதர்களின் அமைப்பு {விதி} எத்தகையது என்பது தொடர்பாக இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) பிராணன், அபானன், உதானன், சமானன் மற்றும் வியானன் ஆகியவையே ஐந்து வேள்விப்புரோஹிதர்கள் என்பதைப் பெருங்கோட்பாடாகக் கல்விமான்கள் அறிகிறார்கள்" என்றார்.(20)


அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, "இயற்கையாக ஏழு வேள்விப் புரோஹிதர்கள் இருப்பதாக முன்னர் நான் எண்ணியிருந்தேன். உண்மையில் வேள்விப் புரோஹிதர்களின் எண்ணிக்கை ஐந்தானதைக் குறிக்கும் பெருங்கோட்பாட்டை எனக்கு அறிவிப்பீராக" என்று கேட்டாள்.(3)

பிராமணர், "பிராணனால் பேணப்படும் காற்றானது {வாயுவானது} பின்னர் அபானனாகப் பிறக்கிறது. அபானனால் பேணப்படும் காற்றானது வியானனாகப் பெருகுகிறது.(4) வியானனால் பேணப்படும் காற்றானது உதானனாகப் பெருகுகிறது. உதானனால் பேணப்படும் காற்றானது பின்னர்ச் சமானனாக உண்டாகிறது.(5) நல்லவையான அவை பழங்காலத்தில் முதல் பிறவியான பெரும்பாட்டனிடம், "எங்களில் முதன்மையானவர் யார் என்பதைச் சொல்வீராக. {நீர் குறிப்பிடும்} அந்த நபரே எங்கள் தலைவன் ஆகட்டும்" என்றன.(6)

பிரம்மன், "(உங்களில்) எவன் அழிந்தால் உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர் மூச்சுகள் அனைத்தும் அழிவடையுமோ, எவனுடைய நகர்வால் அவை நகருமோ அவனே உங்களில் முதன்மையானவன் ஆவான். நீங்கள் விரும்பிய இடத்திற்குச் செல்வீராக" என்றான்.(7)

பிராணன், "நான் அழிந்ததும், உயிரினங்களில் உடல்களில் உள்ள உயிர் மூச்சுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் அசைவதால் அவை மீண்டும் அசைகின்றன. (எனவே) நானே முதன்மையானவன். இதோ அழியப்போகிறேன் பார்ப்பீர்களாக" என்றான் {பிராணன்}".(8)

பிராமணர் தொடர்ந்தார், "பிறகு பிராணன் அழிந்து மீண்டும் நகரத் தொடங்கியது. அப்போது, ஓ! அருளப்பட்டவளே, சமானனும், உதானனும் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்,(9) "நாங்கள் இவை அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பதைப் போல நீ இங்கே வசிப்பதில்லை. ஓ! பிராணனே, நம்மில் நீ முதன்மையானவன் அல்ல. அபானன் மட்டுமே உன் ஆளுகைக்குள் இருக்கிறான். மீண்டும் பிராணன் இயங்கத் தொடங்கியதும், அவனிடம் அபானன் பேசினான்.(10)

அபானன், "நான் அழிவடையும் போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர் காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் திரியும்போது அவை மீண்டும் திரிகின்றன. எனவே, நானே முதன்மையானவனாவேன். இதோ அழியப் போகிறேன் பார்ப்பீர்களாக " என்றான் {அபானன்}".(11)

பிராமணர் தொடர்ந்தார், "வியானன் மற்றும் உதானன் ஆகிய இருவரும், இவ்வாறு சொன்ன அபானனிடம், "ஓ! அபானா, நீ முதன்மையானவனல்ல. பிராணன் (மட்டுமே) உன் ஆளுகையின் கீழ் இருப்பான்" என்றனர். பிறகு அபானன் நகரத் தொடங்கியது.(12)

வியானன் மீண்டும் அவனிடம் {அபானனிடம்}, "(உயிர்க் காற்றுகள்) அனைத்திலும் நானே முதன்மையானவன். அதற்கென்ன காரணம் என்பதைக் கேட்பாயாக.(13) நான் அழிவடையும்போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர்க்காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் நகரும் போது, அவை மீண்டும் நகர்கின்றன. (எனவே) நானே முதன்மையானவனாவேன். இதோ நான் அழியப் போகிறேன், பார்ப்பாயாக" என்றான் {வியானன்}".(14)

பிராமணர் தொடர்ந்தார், "பிறகு வியானன் அழிவடைந்து மீண்டும் நகரத் தொடங்கினான். பிராணன், அபானன், உதானன் மற்றும் சமானன் ஆகியோர் இதற்கு,(15) "ஓ! வியானா, நம்மில் நீ முதன்மையானவன் அல்ல. சமானன் (மட்டுமே) உன் ஆளுகையின் கீழ் இருக்கிறான்" என்றனர்.

வியானன் நகரத் தொடங்கியதும், சமானன் அவனிடம் {வியானனிடம்},(16) "நானே உங்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவேன். அதற்கு என்ன காரணம் என்பதைக் கேட்பாயாக. நான் அழிவடையும்போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர்க்காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் நகரும் போது, அவை மீண்டும் நகர்கின்றன. எனவே, நானே முதன்மையானவன். இதோ நான் அழியப் போகிறேன் பார்ப்பாயாக" என்றான் {சமானன்}.(17)

சமானன் நகரத் தொடங்கியதும்,[1] உதானன் அவனிடம் {சமானனிடம்}, "உயிர்க்காற்றுகள் அனைத்திலும் நானே முதன்மையானவன் ஆவேன். அதற்குக் காரணம் என்னவென்பதைக் கேட்பாயாக.(18) நான் அழிவடையும்போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர்க்காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் நகரும் போது, அவை மீண்டும் நகர்கின்றன. எனவே, நானே முதன்மையானவன். இதோ நான் அழியப் போகிறேன் பார்ப்பாயாக" என்றான் {உதானன்}.(19)

[1] வியானன் மட்டுமே சமானனின் கட்டுப்பாட்டில் இருக்கிறான் என்று மற்ற வாயுக்கள் சொன்னதாக இங்கே சொல்லப்படவில்லை. கும்பகோணம் பதிப்பில், "பிறகு, ஸமானன் லயமடைந்தது; மறுபடியும் ஸஞ்சரித்தது. பிராணனும், அபானனும், உதானனும், வியானனும் அந்த ஸமானனை நோக்கி, "ஸமான! நீ சிறந்தவனல்லன். வியானன்தான் உன் வசத்திலிருக்கிறான்" என்றன" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இவ்வரிகள் இருக்கின்றன.

உதானன் அழிந்து, மீண்டும் நகரத் தொடங்கினான். அப்போது பிராணன், அபானன், சமானன் மற்றும் வியானன் ஆகியோர் அவனிடம், "ஓ! உதானா, நம்மில் நீ முதன்மையானவன் அல்ல. வியானன் (மட்டுமே) உன் ஆளுகையின் கீழ் இருப்பான்" என்றனர்".(20)

பிராமணர் தொடர்ந்தார், "அவ்வாறு திரண்டிருந்த அவர்களிடம் உயிரினங்களின் தலைவனான பிரம்மன், "நீங்கள் அனைவரும் சிறப்புள்ளவர்களாகவும், சிறப்பில்லாதவர்களாகவும் இருக்கிறீர்கள். உங்கள் அனைவரிலும் ஒருவர் மற்றொருவரின் குணத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.(21) நீங்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்குரிய வட்டங்களில் முதன்மையானவர்களாகவும், ஒருவர் மற்றொருவரின் குணங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறீர்கள்" என்றான்.

இவ்வாறே அனைத்து உயிரினங்களின் தலைவன் அங்கே கூடியிருந்த அவர்களிடம் சொன்னான்,(22) "ஒருவன் நிலையாக இருப்பவன்; மற்றொருவன் நகர்பவன். சிறப்புக் குணங்களின் விளைவால் உயிர்க்காற்றுகள் ஐவரும் நகர்கின்றனர். என் தன்மை ஒன்று. அந்த ஒன்றே பல்வேறு வடிவங்களை ஏற்கிறது {ஒருவன் மற்றொருவனுக்கு ஆத்மாவாக இருந்து பல வகைகளில் பெருகுகிறான்}.(23) நீங்கள் ஒருவருக்கொருவர் நட்பாகவும், ஒருவரையொருவர் நிறைவடையச் செய்பவர்களாகவும் ஆகி அமைதியாக விடைபெற்றுக் கொள்வீராக. நீங்கள் அருளப்பட்டிருப்பீராக, நீங்கள் ஒருவரையொருவர் தாங்குவீராக" {என்றான் பிரம்மன்}".(24)

அஸ்வமேதபர்வம் பகுதி – 23ல் உள்ள சுலோகங்கள் : 24

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்