Tuesday, October 29, 2019

நாராயணன்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 25

Narayana! | Aswamedha-Parva-Section-25 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 10)


பதிவின் சுருக்கம் : செயல்பாடு மற்றும் செய்பவன் ஆகியவை குறித்தும், நாராயணனே அனைத்தின் ஆன்மா என்பது குறித்தும் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்...


பிராமணர், "இது தொடர்பாகச் சாதுர்ஹோத்ரத்தின் ({சாதுர்ஹோத்ர} வேள்வியின்) அமைப்பு {விதி} என்ன என்பது குறித்த இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) அது குறித்த விதிகளை இப்போது முழுமையாகச் சொல்லப் போகிறேன். ஓ! இனிய பெண்ணே, இந்த அற்புதம் நிறைந்த புதிரை {ரகசியத்தை} அறிவிக்கப் போகிறேன் கேட்பாயாக.(2) கருவி {கரணம்}, இயக்கம் {கர்மா}, இயக்கி {செயல்படுத்துபவன் / கர்த்தா}, விடுதலை {முக்தி / மோக்ஷம்} ஆகிய இவையே அண்டத்தைச் சூழ்ந்திருக்கும் நான்கு வேள்விப் புரோகிதர்களாகும். (இது தொடர்பாக) {அதனதனுக்கு} ஒப்படைக்கப்பட்டிருக்கும் காரணங்களை முழுமையாகக் கேட்பாயாக. (3,4)


மூக்கு, நாக்கு, கண்கள், தோல், ஐந்தாவதாகக் காதுகள், மனம் மற்றும் புத்தி ஆகிய இவை ஏழும் குணங்களின் (குணங்கள் குறித்த அறிவின்) காரணங்கள் {கரணத்தைக் காரணங்களாகக் கொண்டவை} என அறிய வேண்டும். மணம், சுவை, நிறம், ஒலி, எண்ணிக்கையில் ஐந்தாவதாகத் தீண்டல்,(5) {நினைக்கத்தக்க} மனத்தின் நோக்கங்கள், {அறியத்தக்க} புத்தியின் நோக்கங்கள் ஆகிய இவை ஏழும் செயற்காரணங்கள் {கர்மாவைக் காரணங்களாகக் கொண்டவை} ஆகும். நுகர்பவன், உண்பவன், காண்பவன், பேசுபவன், எண்ணிக்கையில் ஐந்தாவதாகக் கேட்பவன்,(6) நினைப்பவன், அறிபவன் ஆகிய இவர்கள் எழுவரும் செயற்பாட்டுக் காரணங்களாக {கர்த்தாவைக் காரணமாகக் கொண்டவர்களாக} அறியப்பட வேண்டும். குணங்களைக் கொண்ட இவை, ஏற்புடையதாகவோ, ஏற்பில்லாததாகவோ உள்ள தங்கள் குணங்களையே அனுபவிக்கின்றன[1].(7)

[1] "இங்கே இவை என்பது இயக்கம், இயக்கி மற்றும் கருவி ஆகியவற்றைக் குறிக்கிறது. இவற்றின் குணங்கள் நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்கள் ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஆத்மாவைப் பொறுத்தவரையில் அது குணங்களற்றதாகும். இவை ஏழும்தான் விடுதலைக்கான காரணங்களாகும். கல்விமான்கள் மற்றும் போதுமான புத்தியைக் கொண்டவர்களிடம் தேவர்களின் நிலையில் உள்ள குணங்கள் உரிய இடத்தில் உள்ளவையும், விதிக்கப்பட்டதற்கு ஏற்புடையவையுமான ஆகுதிகளை உண்கின்றன. கல்வியற்ற ஒருவன், பல்வேறு வகை உணவுகளை உண்டு, அகந்தை புத்தியால் {மமதையால்} பீடிக்கப்படுகிறான்[2].(8,9) தனக்கான உணவை மட்டுமே செரிப்பவன் அகந்தை புத்தியால் அழிவடைகிறான். உண்ணத்தகாத உணவை உண்பதும், மதுவைப் பருகுவதும் அவனை அழிவடையச் செய்கிறது.(10) அவன் (தான் உண்ட) உணவை அழிக்கிறான், அந்த உணவை அழித்து, தன்னையும் அவன் அழித்துக் கொள்கிறான். எனினும், கல்வி கற்றவனும், பலம்பொருந்தியவனுமான மனிதன், தன் உணவை மீண்டும் உற்பத்தி செய்வதற்காக அஃதை அழிக்கிறான்.(11) அவன் உண்ணும் உணவில் இருந்து மிகச் சிறு அத்துமீறலும் நிகழாது.

[2] "இவ்விரு ஸ்லோகங்களில் சொல்லப்படுவதென்னவென்றால்: புலன்களே அனுபவிக்கின்றன; ஆன்மா அனுபவிப்பதில்லை. இது கல்விமான்களால் நன்கு அறியப்பட்டது. மறுபுறம், கல்லாதவர்கள், இதுவும், அதுவும் உண்மையில் தங்களில் இருந்து வேறுபட்ட ஒன்றாக இருந்தாலும் இதுவும் அதுவும் தங்களுடையவை என்று எண்ணுகின்றனர். அறியாமையால் அவர்கள் தங்களைத் தங்கள் புலன்களுடன் அடையாளம் கொண்டாலும் கூட, அவர்கள் தங்கள் சுயமேயன்றி தங்கள் புலன்களில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தம் தம் ஸ்தானத்தை விதிப்படி அறிந்த வித்வான்களுக்கு அந்த (இதிரியங்களென்னும்) குணங்கள் தேவதைகளாகி எப்பொழுத்ம ஹவிஸை அனுபவிக்கின்றன. ஹவிஸுகளையும், அன்னங்களையும் புஜிப்பவன் மமதையால் கெடுக்கப்படுகிறான்" என்றிருக்கிறது.

மனத்தால் எண்ணப்படும் எதுவும், வாக்கால் சொல்லப்படும் எதவும்,(12) காதால் கேட்கப்படும் எதுவும், கண்ணால் காணப்படும் எதுவும், தீண்டல் (புலனால் {தோலால்}) தீண்டப்படும் எதுவும், மூக்கால் நுகரப்படும் எதுவும்,(13) புலன்கள் அனைத்தையும், ஆறாவதாக மனத்தையும் கட்டுப்படுத்திய பிறகு, உடலுக்குள் எரிந்து கொண்டிருக்கும் உயர்ந்த தகுதிகளைக் கொண்ட நெருப்பான ஆத்மாவுக்குள் ஊற்றப்பட வேண்டிய தெளிந்த நெய்யாலான ஆகுதியாக அமைகிறது[3].(14) என்னைப் பொறுத்தவரையில், யோகத்தால் அமையும் வேள்வியானது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வேள்வி தொடர்கிற இடத்தில் அறிவு நெருப்பை விளைவிக்கும் ஊற்று உதிக்கிறது. மேல்நோக்கிய உயிர் காற்றான பிராணனே அவ்வேள்வியின் ஸ்தோத்திரமாகும். கீழ்நோக்கிய உயிர் காற்றான அபானனே அதன் சஸ்திரமாகும். அனைத்தையும் துறப்பதே, அந்த வேள்வியின் சிறந்த தக்ஷிணையாகும்.(15)

[3] "இங்கே சொல்லப்படுவது என்னவென்றால்: புலன்களையும், மனத்தையும் கட்டுப்படுத்திய பிறகு, அந்தப் புலன்களுக்குரிய பொருட்களையும், மனத்தையும், உடலுக்குள் ஆத்மாவாக உள்ள புனித நெருப்புக்குள் ஆகுதிகளாக ஊற்ற வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பிரம்மமாக உள்ள நனவு {அகங்காரம்}, மனம் மற்றும் புத்தி ஆகிய ஒவ்வொன்றும், ஹோத்ரியும், அத்வர்யு, உத்காத்ரி ஆகியவையாகும். பிரஸாஸ்திரியும், அவரது சாஸ்திரமும் உண்மையாகும். தனி இருப்பை நிறுத்தல் (அல்லது விடுதலையே {முக்தியே}) தக்ஷிணையாகும்[4].(16) இது தொடர்பாக, நாராயணனை அறிந்த மக்கள் சில ரிக்குகளை உரைக்கின்றனர. பழங்காலத்தில் தெய்வீகமான நாராயணனுக்கு விலங்குகள் காணிக்கயளிக்கப்பட்டன[5].(17) அப்போது சில சாமங்களும் பாடப்படுகின்றன. இதில் ஓர் உரிமை ஏற்படுகிறது. ஓ! மருண்டவளே, தெய்வீக நாராயணனே அனைத்தின் ஆன்மா என்பதை அறிவாயாக" என்றார் {பிராமணர்}.(18)

[4] கும்பகோணம் பதிப்பில், "ஸத்யமானது ப்ரஸாஸ்தாவாகவும் அவருடைய சஸ்த்ரமாகவும், மோக்ஷமானது தக்ஷிணையாகவும் இருக்கின்றன" என்றிருக்கிறது.

[5] "நாராயணன் என்பது வேதம் அல்லது ஆன்மா என நீலகண்டரால் பொருள் கொள்ளப்படுகிறது. பழங்காலத்தில் நாராயணனுக்குக் காணிக்கை அளிக்கப்படும் விலங்குகள் என்பன வேள்விகளில் காணிக்கை அளிக்கப்படும் புலன்களாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நாராயணரை அறிந்தவர்களான ஜனங்கள் இந்த விஷயத்தில் ருக்குகளையும் (பிரமாணமாகச்) சொல்லுகின்றனர். தேவரான நாராயணரை அடைவதற்காக முற்காலத்தில் இந்திரியங்களை வசப்படுத்திக் கொண்டவர்கள் அவர் விஷயத்தில் ஸாமங்களைக் கானம் செய்கிறார்கள்" என்றிருக்கிறது. அதில் நாராயணரை அறிந்தவர்கள் என்பதன் அடிக்குறிப்பில், "வேதத்தை அறிந்தவர்கள், அல்லது ஆத்மாவை அறிந்தவர்கள் என்பது பழைய உரை" என்றிருக்கிறது.

அஸ்வமேதபர்வம் பகுதி – 25ல் உள்ள சுலோகங்கள் : 18

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்