Wednesday, October 30, 2019

காமசாரி, பிரம்மசாரி! - அஸ்வமேதபர்வம் பகுதி – 26

Kamacharin, Brahmacharin! | Aswamedha-Parva-Section-26 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 11)


பதிவின் சுருக்கம் : : பிரம்மன் ஒரே சொல்லால் பிரம்மத்தை உபதேசித்தது; தேவர்கள் முதலியோர் தத்தமது அறிவுக்குத்தக்கபடி அதைப் புரிந்து கொண்டது ஆகியவற்றைக் குறித்துத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்...


பிராமணர், "ஆட்சியாளன் ஒருவனே. அவனைத் தவிர இரண்டாமவன் வேறொருவனுமில்லை. அந்த ஆட்சியாளன் இதயத்தில் வசிக்கிறான். அவனைக் குறித்து இப்போது சொல்லப்போகிறேன். சாய்தளத்தில் ஓடும் நீரைப் போல அவனால் உந்தப்பட்டும் நான், அவனது வழிநடத்தலின்படியே நகர்கிறேன் {காரியங்களைச் செய்கிறேன்}.(1) ஆசான் {குரு} ஒருவரே. அவரைத் தவிர இரண்டாமவர் வேறொருவருமில்லை. அவரைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். உலகில் உள்ள பாம்புகள் அனைத்தும் அந்த ஆசானால் போதிக்கப்பட்டே எப்போதும் பகை உணர்வுடன் இருக்கின்றன[1].(2) உற்றவன் {உறவினன்} ஒருவனே. அவனைத் தவிர இரண்டாமவன் வேறு ஒருவனுமில்லை. இதயத்தில் வசிக்கும் அவனைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன். அவரால் போதிக்கப்படும் உறவினர்கள் உறவினர்களைக் கொண்டவர்களாகிறார்கள்" {என்றார் பிராமணர்}. {கிருஷ்ணன் தொடர்ந்தான்}, "மேலும், ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}[2], {அந்தப் பிரமாணர் தம் மனைவியிடம்}, "முனிவரெழுவரும் {சப்தரிஷிகளும்} ஆகாயத்தில் ஒளிர்கிறார்கள்.(3)


[1] கும்பகோணம் பதிப்பில், "அந்தக் குருவினால் எப்பொழுதும் உத்தரவு செய்யப்பட்ட தானவர்கள் எல்லோரும் முற்காலத்தில் கொல்லப்பட்டார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நான் அந்த ஆசானாலேயே போதிக்கப்படுகிறேன். அதன் காரணமாகவே தானவர்கள் அனைவரும் வீழ்த்தப்பட்டனர்" என்றிருக்கிறது.
 [2] பிராமணர் உரையைச் சொல்லும் கிருஷ்ணன், இடையில் அர்ஜுனனை அழைத்து, மேலும் பிராமணர் சொன்னதையே தொடர்ந்து சொல்கிறான். அதாவது பிராமணர் தம் மனைவியிடம் பேசியதைக் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

{ஐயங்களை} அகற்றுபவர் ஒருவரே. அவரைத் தவிர இரண்டாமவர் வேறு ஒருவருமில்லை. அவர் இதயத்தில் வசிக்கிறார். அவரைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன். குருவுடன் வாழ்வதற்கு உரிய வாழ்வுமுறையில் {பிரம்மச்சரிய ஆசிரமத்தில்} அந்தக் குருவுடன் வாழ்ந்த சக்ரன் {இந்திரன்}, உலகங்கள் அனைத்தின் ஆட்சியுரிமையை அடைந்தான்[3].(4) பகைவன் ஒருவனே. அவனைத்தவிர இரண்டாமவன் வேறு ஒருவனுமில்லை. அவன் இதயத்தில் வசிக்கிறான். நான் இப்போது அவனைக் குறித்துச் சொல்லப் போகிறேன். உலகில் உள்ள பாம்புகள் அனைத்தும் அந்த ஆசானால் போதிக்கப்பட்டே எப்போதும் பகையுணர்வு உள்ளவையாக இருக்கின்றன.(5)

[3] "இங்கே சொல்லப்படும் ஸ்ரோதம் என்பது ஆசான் அல்லது ஐயங்களை அகற்றுபவர் என்ற பொருளைத் தரும். அமரத்வம் என்பது தேவர்கள் அனைவருக்கும் தலைமையான நிலை என்பதைக் குறிக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "(அவர்) ஒருவரே கேட்பவர். அவரைக் காட்டிலும் இரண்டாமவர் இல்லை. எவர் ஹிருதயத்தில் இருக்கிறாரோ அவரைக் குறித்து நான் சொல்லுகிறேன். குருவான அவரிடத்தில் இந்திரன் குருவினத்தில் வஸிப்பதுபோல வாஸம் செய்து எல்லா உலகங்களுக்கும் தேவனாக இருக்கும் தன்மையை அடைந்தான்" என்றிருக்கிறது.

இது தொடர்பாக உயிரினங்கள் அனைத்தின் தலைவனிடம் {பிரம்மனிடம்} இருந்து பாம்புகள் {பன்னகர்கள்}, தேவர்கள் மற்றும் முனிவர்கள் பெற்ற போதனை குறித்த பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(6) உயிரினங்கள் அனைத்தின் தலைவனைச் சுற்றி அமர்ந்திருந்த தேவர்கள், முனிவர்கள், பாம்புகள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் அவனிடம், "எங்களுக்கான உயர்ந்த நன்மை அறிவிக்கப்படட்டும்" என்றனர்.(7)

அந்தப் புனிதமானவன் {பிரம்மன்}. உயர்ந்த நன்மையைக் குறித்துக் கேட்ட அவர்களிடம் ஓரசை {ஓரெழுத்துப்} பிரம்மமான ஓம் என்ற சொல்லை மட்டுமே சொன்னான். இதைக் கேட்ட அவர்கள் பல்வேறு திசைகளில் ஓடிச் சென்றனர்.(8) இவ்வாறு அனைத்துத் திசைகளிலும் ஓடிச் சென்றவர்களுக்கு மத்தியில் ஆசையில் இருந்து எழுந்த தற்போதனையில் இருந்து, முதலில் பாம்புகளிடம் கடிக்கும் மனோநிலை {தன்மை} உண்டானது.(9) அசுரர்களிடம், தங்கள் இயல்பிலேயே பிறந்த பகட்டும், செருக்கும் கூடிய மனோநிலை எழுந்தது. தேவர்கள் கொடைகள் அளிக்கும் தன்மையையும், பெரும் முனிவர்கள் தற்கட்டுப்பாட்டையும் அடைந்தனர்.(10) ஓர் ஆசானிடம் சென்று, ஒரு சொல்லால் போதிக்கப்பட்ட (தூய்மையாக்கப்பட்ட) பாம்புகளும், தேவர்களும், முனிவர்களும், தானவர்களும் பல்வேறு மனநிலைகளை {தன்மைகளை} அடைந்தனர்.(11) தான் பேசுவதைத் தானே கேட்டு, அதை முறையாக ஒருவன் புரிந்து கொள்கிறான். மீண்டும் அவன் பேசும்போது மேலும் கேட்கிறான். {தன்னைத் தவிர அவனுக்கு} இரண்டாவதாக வேறோர் ஆசான் இல்லை[4].(12)

[4] "ஆசானும், சீடனும் ஒருவனே என்று குறிப்பிடப்படுவதை இங்குத் தெளிவாக உணரலாம். தெலங்க் அவர்கள் இந்த ஸ்லோஹத்திற்குத் தவறாகப் பொருள் கொண்டிருக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எல்லா ஸர்ப்பங்களும், அஸுரர்களும், தேவர்களும், ரிஷிகளும் ஒரு குருவை அடைந்து, ஒரு சப்தத்தால் உபதேசிக்கப்பட்டுப் பலவித நிச்சயத்தை அடைந்தனர். இந்த நாராயணரோ சொல்லப்படுவதைக் கேட்கிறார்; உள்ளபடி அறிகிறார்; கேட்பவர்களுக்கு அவற்றை மறுபடியும் உபதேசிக்கிறார். (ஆகையால்) இவரைக் காட்டிலும் வேறான குரு இல்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவர்கள் ஒரே வகைப் போதனையையும், தூய்மையாக்கப்பட்ட ஒரே சொல்லையும்தான் பெற்றனர். எனினும், பாம்புகள், தேவர்கள், முனிவர்கள் மற்றும் தானவர்கள் ஆகியோர் அனைவரும் பல்வேறு மனநிலைகளை அடைந்தனர். சொல்லப்படுவதை ஒருவன் முறையான வழியில் பெறும்போது மட்டுமே அவன் அதைக் கேட்கிறான். அவன் மீண்டும் கேட்டாலும் அஃது உண்மையே ஆகும். வேறு ஓர் ஆசான் நினைக்கப்படுவதில்லை" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ஓர் ஆசானின் சொற்களைப் புரிந்து கொள்வதில் சுயமே உண்மையான ஆசானாக இருக்கிறது" என்றிருக்கிறது.

அவனது ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்தே பின்னர்ச் செயல்பாடு தோன்றுகிறது. சொல்பவன், புரிந்து கொள்பவன், கேட்பவன், பகைவன் ஆகியோர் இதயத்தில் நிறுத்தப்படுகின்றனர்.(13) உலகில் பாவகரமாகச் செயல்படுவதன் மூலம் ஒரு மனிதன் பாவம் நிறைந்த செயல்களைச் செய்தவனாகிறான். இவ்வுலகில் மங்கலமாகச் செயல்படுவதன் மூலம் ஒரு மனிதன் மங்கலச் செயல்களைச் செய்தவனாகிறான்.(14) ஆசையால் தூண்டப்பட்டுப் புலனின்பங்களுக்கு அடிமையாவதன் மூலம் ஒரு மனிதன் கட்டுப்பாடில்லா ஒழுக்கம் கொண்டவனாகிறான் {காமசாரியாகிறான்}. தன் புலன்களை அடக்குவதிலேயே எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ள ஒருவன் பிரம்மச்சாரியாகிறான்.(15) நோன்புகள் மற்றும் செயல்பாடுகளைக் கைவிடும் அவன் பிரம்மத்தை மட்டுமே அடைக்கலமாகக் கொள்கிறான். எப்போதும் தன்னைப் பிரம்மத்துடன் அடையாளக் கண்டு, இவ்வுலகில் திரிபவன் பிரம்மச்சாரியாகிறான்.(16)

பிரம்மமே அவனது விறகாகும்; பிரம்மமே அவனது நெருப்பாகும்; பிரம்மமே அவனது தோற்றமாகும்; பிரம்மமே அவனது நீராகும்; பிரம்மமே அவனது ஆசான் ஆகும்; பிரம்மத்திலேயே அவன் மூழ்கியிருக்கிறான்.(17) ஞானிகளால் புரிந்து கொள்ளப்படும் வகையில் உள்ள பிரம்மச்சரியம் இவ்வளவு நுட்பமானதே. அதைப் புரிந்து கொண்டு, க்ஷேத்ரஜ்ஞனால் போதிக்கப்படும் அவர்கள் அதையே பின்பற்றுகிறார்கள்" என்றார் {பிராமணர்}.(18)

அஸ்வமேதபர்வம் பகுதி – 26ல் உள்ள சுலோகங்கள் : 18

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்