Thursday, October 31, 2019

யாகஹிம்ஸை! - அஸ்வமேதபர்வம் பகுதி – 28

Killing in Sacrifices! | Aswamedha-Parva-Section-28 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 13)


பதிவின் சுருக்கம் : வேள்விகளில் நேரும் தீங்கு குற்றமாகாது என்று ஓர் அத்வர்யுவுக்கும் யதிக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்...


பிராமணர், "நான் மணங்களை நுகர்வதில்லை. நான் சுவைகளை உணர்வதில்லை. நான் நிறங்களைக் காண்பதில்லை. நான் தீண்டுவதில்லை. (எழும்) பல்வேறு ஒலிகளையும் நான் கேட்பதில்லை. எவ்வகைக் காரியத்தையும் {தீர்மானத்தையும்} நான் செய்வதில்லை.(1) விரும்பப்படும் பொருட்களை விருப்பம் கொள்வது இயற்கையே; விரும்பப்படாத பொருட்களை வெறுப்புக் கொள்வதும் இயற்கையே. அசைவூட்டமுள்ள உடல்களுக்குள் ஆன்மா நுழையும்போது, மேல் நோக்கியும், கீழ் நோக்கியும் செல்லும் உயிர் காற்றுகளின் {பிராண வாயு மற்றும் அபான வாயுவின்} மூலம் இயற்கையில் இருந்தே விருப்பும், வெறுப்பும் எழுகின்றன[1].(2) அவற்றில் இருந்து பிரிந்த நிலையிலேயே மற்றவை இருக்கின்றன; அவற்றில் நித்திய இயல்புகள் இருக்கின்றன; (இவற்றையும்) அனைத்து உயிரினங்களின் ஆன்மாக்களையும், யோகிகள் உடலில் காண்கின்றனர். அதில் வசிக்கும் நான், ஒரு போதும் ஆசை, கோபம், முதுமை மற்றும் மரணத்தின் மூலம் எழும் எதனிலும் பற்று கொள்வதில்லை.(3)


[1] கும்பகோணம் பதிப்பில், "விருப்பும் வெறுப்பும் உண்டாகாமலிருக்கும் பொழுதும் பிராணனும் அபானனும் இயற்கையாகப் பிராணிகளின் சரீரங்களில் பிரவேசித்து (ஆகாதரத்தைப் பாகம் செய்வது முதலான காரியங்களைச் செய்வது போலப் புத்தி முதலானவைகளின்) இயற்கையே இஷ்டமான பொருட்களை விரும்புகிறது. இயற்கையே பகைக்கத்தக்கவைகளெயெல்லாம் பகைக்கிறது" என்றிருக்கிறது.

தாமரையின் {தாமரை இலையில் உள்ள} நீர்த்துளியில் எந்தக் களங்கமும் இல்லாததைப் போலவே, விரும்பத்தக்க பொருள் எதனிலும் விருப்பமின்மை, தீமை எதனிலும் வெறுப்பின்மை ஆகிய என் இயல்புகளிலும் எந்தக் களங்கமுமில்லை[2].(4) மாறுபட்ட இயல்புகளைக் காணும் நிலையான ஒருவனுக்கு (கொள்கைக்கு) இவை நிலையற்ற உடைமைகளாகின்றன. செயல்பாடுகள் நிகழ்த்தப்பட்டாலும், சூரியக் கதிர்களின் திரள் வானத்தைப் பற்றாததைப் போல {அவன் அனுபவிக்கும்} இன்பங்களின் திரளும் அவற்றுடன் அவனைப் பற்றுகொள்ளச் செய்யாது. இது தொடர்பாக ஓர் அத்வர்யுவுக்கும், ஒரு யதிக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது. ஓ! புகழ்பெற்ற பெண்மணியே, அதைக் கேட்பாயாக.(5,6)

[2] கும்பகோணம் பதிப்பில், "விரும்பத்தக்கவைகளையெல்லாம் விரும்பாதவனும், தோஷங்களையெல்லாம் பகைக்காதவனுமான எனக்கு ஜலத்திவலைக்குத் தாமரையிலைகளில் பற்றுதலுண்டாகாதது போல ஸ்வபாவங்களில் பற்றுதலுண்டாகிறதில்லை" என்றிருக்கிறது.

ஒரு வேள்விச் சடங்கில் நீர் தெளிக்கப்படும் {புரோக்ஷிக்கப்படும்} விலங்கைக் கண்ட ஒரு யதி {சந்நியாஸி}, அத்வர்யுவிடம் "இஃது உயிர்க்கொலை" என்றார்.(7)

அத்வர்யு {சந்நியாசியிடம்}, "இந்த ஆடு அழிவையடையாது. இக்காரியத்தில் வேத அறிவிப்பு உண்மையானால், (இந்த வேள்வியினால்) இவ்விலங்கு பெரும் நன்மையை அடையும்.(8) பூமியாலான இந்த விலங்கின் பகுதி பூமிக்குச் செல்லும். நீரில் பிறந்த இதன் பகுதி நீருக்குள் நுழையும்.(9) இதன் கண்கள் சூரியனுக்குள்ளும்; இதன் காதுகள் பல்வேறு திசைப்புள்ளிகளிலும், இதன் உயிர் காற்றுகள் ஆகாயத்துக்குள்ளும் நுழையும். சாத்திரங்களைப் பின்பற்றும் நான் (இந்த விலங்கைக் கொல்வதற்குத் துணைபுரிவதால்) எத்தீங்கையும் இழைக்கவில்லை" என்றார்.(10)

யதி {சந்நியாசி அத்வர்யுவிடம்}, "இந்த ஆட்டின் உயிர் காற்றுகளை இவ்வாறு பிரிப்பதில் இத்தகைய நன்மையைக் கண்டால், இந்த வேள்வி ஆட்டுக்கானதாகிறது. இதை நீர் செய்ய வேண்டிய அவசியமென்ன {இதனால் உமக்கென்ன பயன்}?(11) (இந்த ஆட்டின்) சகோதரன், தந்தை, தாய் மற்றும் நண்பன் ஆகியோர் இதில் தங்கள் அனுமதியை உமக்கு அளிக்க வேண்டும். (அவற்றிடம்) இஃதை {இந்த ஆட்டை} அழைத்துச் சென்று அவற்றுடன் {அந்த ஆடுகளுடன்} ஆலோசிப்பீராக. இந்த ஆடானது குறிப்பாகச் சுதந்திரமற்றதாகும் {அவற்றை [அந்த ஆடுகளைச்] சார்ந்திருப்பதாகும்}.(12) இதில் தங்கள் ஒப்புதலை அளிக்கக்கூடியவர்களைப் பார்ப்பதே உமக்குத் தகும். அவற்றின் ஒப்புதலைக் கேட்ட பிறகே, இக்காரியம் கருத்தில் கொள்ளத் தகுந்ததாகும்.(13) இந்த ஆட்டின் உயிர்க்காற்றுகள் தங்கள் தங்களுக்குரிய மூலங்களிடம் திரும்பிச் செல்கின்றன. உயிரற்ற உடல் மட்டுமே எஞ்சுகிறது. இதையே நான் நினைக்கிறேன்.(14)

விறகுடன் ஒப்பிடக்கூடிய (ஒரு விலங்கின்) உயிரற்ற உடலின் மூலம் இன்பமடைய விரும்புவோருக்கு (வேள்விக்கான) விறகே அந்த விலங்குதான்.(15) தீங்கிழையாமையே {கொல்லாமையே} கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாகும். இதுவே நம் பெரியோர் சொல்லிக் கொடுத்ததாகும். கொடுமையற்ற செயலே செய்யப்பட வேண்டும் என்பதே நாம் அறிவதாகும். அதில் (உயிரினங்களைக்) கொல்லாமை என்பதே கருத்தாகும். நான் மேலும் ஏதாவது சொன்னால், பல்வேறு வகையான குற்றச் செயல்களை உம்மால் செய்ய முடியும் (என்று அப்போது தோன்றும்).(17) அனைத்து உயிரினங்களிடமும் எப்போதும் கொடுமை தவிர்த்தலே நமக்கு ஏற்புடையதாகும். நேரடியாக உணக்கூடியவற்றிலிருந்து நாம் இதை நிறுவுகிறோம். நேரடியான அகப்பார்வையை {கருத்தைக்} கடந்திருப்பதை நாம் சார்ந்திருக்கவில்லை[3]" என்றார் {யதி}.(18)

[3] கும்பகோணம் பதிப்பில், "எல்லாத் தர்மங்களுள்ளும் அஹிம்ஸை (சிறந்தது) என்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள். எந்தக் கர்மமானது ஹிம்ஸையற்றதாகுமோ அதுவே செய்யத்தக்கது என்று அறிகிறோம். இது அஹிம்ஸைதான் என்று பிரதிஜ்ஞை செய்வதானால், அதற்கு மேல் சொல்வேன். உம்மால் கார்யங்களைப் பலவிதமாகத் தூஷித்துக் கூற முடியும். எக்காலத்திலும் எந்தப்பிராணிகளுக்கும் ஹிம்ஸை செய்யாமலிருப்பதே எங்கள் விருப்பம். பிரத்யக்ஷமாக (உண்டாகும் ஹிம்ஸையை ஹிம்ஸையாகக்) கூறுகிறோம். கண்ணுக்குப்புலப்படாததை (ஹிம்ஸையாகக்) கருதுகிறோமில்லை" என்றிருக்கிறது.

அத்யர்யு, "பூமிக்குச் சொந்தமான மணத்தின் குணங்களை நீர் அனுபவிக்கிறீர். நீர் தொடர்புடைய சுவைகளைப் பருகுகிறீர். ஒளியுடல்களுக்குச் சொந்தமான நிறங்களைக் காண்கிறீர். காற்றைத் தோற்றுவாயாகக் கொண்ட குணங்களைத் தீண்டுகிறீர்.(19) வெளி (அல்லது ஆகாயத்தைத்) தோற்றுவாயாகக் கொண்ட ஒலிகளைக் கேட்கிறீர். மனத்தால் எண்ணங்களைச் சிந்திக்கிறீர். இந்த உட்பொருட்கள் (பூதங்கள்) அனைத்தும் உயிருள்ளவை என்பதே உமது கருத்தாகும்.(20) அப்போது அந்த உயிர்களை எடுக்காமல் நீர் தவிர்ப்பதில்லை. உண்மையில் நீர் கொலையிலேயே ஈடுபடுகிறீர். கொலையில்லாமல் எந்த இயக்கமும் நடைபெறாது {ஹிம்ஸை இன்றி ஒரு காரியமுமில்லை}. அல்லது, ஓ! மறுபிறப்பாளரே, வேறென்ன நீர் நினைக்கிறீர்?" என்று கேட்டார்.(21)

யதி, "அழிவற்றது {அக்ஷரம்} மற்றும் அழியக்கூடியது {க்ஷரம்} என்பன ஆன்மாவின் இரட்டை வெளிப்பாடாக அமைகின்றன. இவற்றில் அழிவற்றதே இருப்பில் உள்ளது. அழியக்கூடியது அதிக அளவில் இருப்பில் இல்லாததெனச் சொல்லப்படுகிறது.(22) உயிர்க்காற்று, நாக்கு, மனம், நல்லியல்பின் {சத்வ} குணம், ஆசை {ரஜோ} குணம் ஆகிய அனைத்தும் இருப்பில் உள்ளவை. இருப்பிலுள்ள இவற்றில் இருந்து விடுபட்டவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவனும், எந்த எதிர்பார்ப்பையும் வளர்க்காதவனும்,(23) அனைத்து உயிரினங்களிடமும் ஒரே வகையில் {சமமாக} நடந்து கொள்பவனும், மமதையில் இருந்து விடுபட்டவனும், தற்கட்டுப்பாடுடையவனும், தன் சுற்றுச்சூழலில் இருந்து விடுபட்டவனுமான ஒருவனுக்கு எதனிடமும் அச்சம் ஏற்படுவதில்லை[4]" என்றார்.(24)

[4] "உயிர்க்காற்றானது பல்வேறு புலன்களின் செயல்பாடுகளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. உணர்வுப் புலன்கள் மற்றும் உணர்வுக்கருத்துக்கள் அனைத்திற்காகவும் நிற்கும் நாவு, அக இயக்கங்கள் அனைத்திற்கான மனம், இன்பங்கள் அனைத்திற்கான நல்லியல்பின் குணம், துன்பங்கள் அனைத்திற்கான ஆசை குணம் ஆகியவற்றின் செயல்பாடுகளை உயிர்க்காற்றுக் குறிப்பிடுகிறது. எனவே, இவை அக மற்றும் புற உலகங்கள் முழுவதையும் சேர்ந்தவையாகும். இவற்றில் இருந்து விடுபட்டால் பாவங்கள் அழிகின்றன என்பதாலும், அந்த விடுதலையை அடைவதற்கான வழிமுறையாக இருப்பது ஞானம் என்பதாலும் இவற்றில் இருந்து விடுபட்டவன் பாவத்தைக் கடந்தவனாகிறான் என்பதே இங்கே சொல்லப்படும் கருத்தாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

கும்பகோணம் பதிப்பில், "பிராணனும், நாக்கும், மனமும், புத்தியும், மாயையினால் இருப்பவைகளாகின்றன. இந்தப் பதார்த்தங்களால் விடப்பட்டவனும், துவந்துவமற்றவனும், விருப்பமற்றவனும், எல்லாப் பிராணிகளிடத்திலும் ஸமமாக இருப்பவனும், மமதையற்றவனும், மனத்தை ஜயித்தவனும் எல்லா விஷயங்களினாலும் விடப்பட்டவனுமான மனினுக்கு ஓரிடத்திலும் பயமில்லை என்றிருக்கிறது.

அத்யர்யு, "ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, ஒருவன் நல்லோருடன் வசிக்க வேண்டும். உமது கருத்துகளைக் கேட்பதால் என் புத்தி ஒளியுடன் ஒளிர்கிறது.(25) ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! மறுபிறப்பாளரே, உம்மை ஒரு தேவனாக நம்பும் நான், மந்திரங்களின் உதவியால் இந்தச் சடங்குகளைச் செய்வதன் மூலம் என்னிடம் குற்றமுண்டாவதில்லை என்று சொல்கிறேன்" என்றார்".(26)

பிராமணர் தொடர்ந்தார், "இந்தத் தீர்மானத்திற்குப் பிறகு யதி அமைதியாக இருந்தார். அத்யர்யுவும் மாயையில் இருந்து விடுபட்டு அந்தப் பெரும் வேள்வியைச் செய்தார்.(27) பிராமணர்கள், மிக நுட்பமான விடுதலையை {முக்தியை} இவ்வகையிலேயே புரிந்து கொள்கிறார்கள்; அதைப் புரிந்து கொண்டு, அதற்கு இணக்கமாகவும், அனைத்தையும் காணும் க்ஷேத்ரஜ்ஞனால் வழிநடத்தப்பட்டும் வாழ்கிறார்கள்" {என்றார் பிராமணர்}.(28)

அஸ்வமேதபர்வம் பகுதி – 28ல் உள்ள சுலோகங்கள் : 28

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்