Friday, November 01, 2019

அஹிம்ஸை! - அஸ்வமேதபர்வம் பகுதி – 29

Abstention from killing! | Aswamedha-Parva-Section-29 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 14)


பதிவின் சுருக்கம் : கார்த்தவீரியனுக்கும் பெருங்கடலுக்கும் இடையில் நடந்த உரையாடலையும், பரசுராமரின் கதையையும் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்...


பிராமணர், "இது தொடர்பாகக் கார்த்தவீரியனுக்கும், பெருங்கடலுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) ஆயிரங்கரங்களையும், கார்த்தவீரியார்ஜுனன் என்ற பெயரையும் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். அவன் தனது வில்லைக் கொண்டு, பெருங்கடலின் கரைகள் வரை விரிந்திருக்கும் பூமியை வென்றான்.(2) ஒரு காலத்தில், தன் வலிமையில் செருக்குடன் இருந்த அவன் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, நீரின் அந்தப் பெருங்கொள்ளிடத்தின் {பெருங்கடலின்} மேல் நூற்றுக்கணக்கான கணைகளை மழையாகப் பொழிந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3)


கூப்பிய கரங்களுடன் அவனை வணங்கிய அந்தப் பெருங்கடல் {ஸமுத்திரம்}, "ஓ! வீரா, (என் மீது) உன் கணைகளை ஏவாதே. நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக.(4) ஓ! மன்னர்களில் புலியே, என்னிடம் உறைவிடத்தை அடைந்திருக்கும் உயிரினங்கள், உன்னால் ஏவப்பட்டும் இந்த வலிமைமிக்கக் கணைகளால் கொல்லப்படுகின்றன. ஓ! தலைவா, அவற்றுக்குப் பாதுகாப்பை நல்குவாயாக" என்றது.(5)

அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, "போரில் எனக்கு இணையாகக் களத்தில் என்னை எதிர்த்தது நிற்கக் கூடிய வில்லாளி வேறு எவனும் இருந்தால் அவனது பெயரை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(6)

பெருங்கடல், "ஓ! மன்னா, பெரும் முனிவர் ஜமதக்னியைக் குறித்து நீ கேள்விப்பட்டிருப்பாய், அவருடைய மகன் {பரசுராமர்} உன்னை விருந்தினராக முறையாக வரவேற்கத் தகுந்தவராவார்" என்றது.(7)

அப்போது பெருங்கோபத்தில் நிறைந்த அந்த மன்னன் அங்கிருந்து புறப்பட்டான். அந்த ஆசிரமத்தை அடைந்து, ராமரை {பரசுராமரை} அவன் கண்டான்.(8) ராமருக்குப் பகையான செயல்கள் பலவற்றை அவன் தன் உறவினர்களைக் கொண்டு செய்து, மேலும் மேலும் அந்த உயர் ஆன்ம வீரருக்குத் தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.(9) ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவளே, அந்த ராமரின் அளவிடமுடியாத சக்தி, சுடர்விட்டெரிந்து பகைவனின் துருப்புகளை எரித்தது.(10) போர்க்கோடரியை எடுத்துக் கொண்டு தன் சக்தியைத் திடீரென வெளிப்படுத்திய ராமர், பல கிளைகளைக் கொண்ட மரம் போல இருந்தவனும், ஆயிரம் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரனை வெட்டினார்.(11) கொல்லப்பட்டுப் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் அவனைக் கண்ட அவனது உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி, தங்கள் ஈட்டிகளை {சக்தி ஆயுதங்களை} எடுத்துக் கொண்டு, அங்கே அமர்ந்திருந்த ராமரை நோக்கி அனைத்துப் புறங்களில் இருந்தும் விரைந்தனர்.(12)

ராமரும் தமது வில்லை எடுத்துக் கொண்டு, விரைவாகத் தமது தேரிலேறி கணைமாரியைப் பொழிந்து அந்த மன்னனின் படையைத் தண்டித்தார்.(13) அப்போது, ஜமதக்னி மகனிடம் {பரசுராமரிடம்} கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்ட க்ஷத்திரியர்கள் சிலர் சிங்கத்தால் பீடிக்கப்பட்ட மான்களைப் போல மலைக்காடுகளுக்குள் நுழைந்தனர்.(14) ராமரிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகத் தங்கள் வகைக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் சரியாக வெளிப்படுத்த இயலாத அவர்களின் சந்ததியினர், பிராமணர்களைக் காண இயலாததால் {சூத்திரத்தன்மையைக் கொண்ட} விருஷலர்களானார்கள்[1].(15) இவ்வகையில் க்ஷத்திரியர்களான திரவிடர்கள், ஆபீரர்கள், புண்ட்ரர்கள், சபரர்கள் ஆகியோர், (பிறப்பின் மூலம்) க்ஷத்திரியர்களுக்கான கடமைகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் (தங்கள் வகைக்கான கடமைகளைச் செய்யாமல்) வீழ்ச்சியையடைந்து விருஷலர்களானார்கள்.(16) வீரப்பிள்ளைகளை இழந்திருந்த க்ஷத்திரியப் பெண்கள் பிராமணர்களின் மூலம் ஈன்றெடுத்த க்ஷத்திரியர்களும் மீண்டும் மீண்டும் அந்த ஜமதக்னியின் மகனால் {பரசுராமரால்} கொல்லப்பட்டனர்.(17) இவ்வகையில் இருபத்தோரு முறை படுகொலைகள் நடந்தேறின.

[1] "க்ஷத்திரியர்களின் செயல்களில் துணைபுரிவதற்கு எப்போதும் பிராமணர்கள் அவசியம் தேவை. இந்தக் குறிப்பிட்ட க்ஷத்திரியர்கள், ராமரிடம் கொண்ட அச்சத்தால் காடுகளுக்கும், மலைகளுக்கும் தப்பி ஓடின். அதன் காரணமாக அவர்களுக்குப் துணைபுரிவதற்குரிய பிராமணர்களை அவர்களால் காண இயலவில்லை. எனவே, அவர்களின் பிள்ளைகள் க்ஷத்திரிய நிலையில் இருந்து விழுந்து விருஷலர்கள், அல்லது சூத்திரர்களானார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அதன் இறுதியில், உடலற்ற ஒரு குரல் சொர்க்கத்தில் இருந்து எழுந்து, மக்கள் அனைவரும் கேட்கும் வகையில் ராமரிடம் இனிமையாக,(18) "ஓ! ராமா, ஓ! ராமா, இதைத் தவிர்ப்பாயாக. ஓ! மகனே, தாழ்ந்தவர்களாக இருக்கும் க்ஷத்திரியர்களை இவ்வாறு மீண்டும் மீண்டும் அழிப்பதில் என்ன தகுதியை {பயனை} நீ காண்கிறாய்?" என்றது[2].(19)

[2] "பிரம்ம பந்து என்பது பிராமணர்களில் இழிவானவர்களைக் குறிப்பதைப் போல இங்கே குறிப்பிடப்படும் க்ஷத்திரிய பந்து என்பது இழிந்த க்ஷத்திரியர்களைக் குறிக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இவ்வழியிலேயே, ஓ! அருளப்பட்ட மங்கையே, ரிசீகரின் தலைமையிலான அவரது பாட்டன்கள் அந்த உயர்ஆன்மாவிடம், "இதைத் தவிர்ப்பாயாக" என்றனர்.(20)

எனினும், தமது தந்தை கொலை செய்யப்பட்டதை மன்னிக்க முடியாத ராமர் {பரசுராமர்}, அந்த முனிவர்களிடம், "என்னைத் தடுப்பது உங்களுக்குத் தகாது" என்றார்.(21)

அப்போது, பித்ருக்கள், "ஓ! வெற்றியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, க்ஷத்திரியர்களில் இழிவான இவர்களைக் கொல்வது உனக்குத் தகாது. ஒரு பிராமணனாக இருக்கும் நீ இந்த மன்னர்களைக் கொல்வது முறையாகாது" என்றனர்.(22)

அஸ்வமேதபர்வம் பகுதி – 29ல் உள்ள சுலோகங்கள் : 22

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்