Friday, November 01, 2019

மன்னன் அலர்க்கன்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 30

King Alarka! | Aswamedha-Parva-Section-30 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 15)


பதிவின் சுருக்கம் : பரசுராமரின் பித்ருக்கள் அவருக்கு அலர்க்கனின் கதையைச் சொன்னது; க்ஷத்திரியக் கொலையை விட்டுக் கடுந்தவம் செய்த பரசுராமர்...


பித்ருக்கள் {பரசுராமரிடம்}, "இது தொடர்பாக ஒரு பழைய வரலாறு குறிப்பிடப்படுகிறது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அதைக் கேட்டுவிட்டு அதன்படியே செயல்படுவாயாக.(1) கடும் தவங்களுடன் கூடியவனும், அலர்க்கன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஓர் அரச முனி இருந்தான். கடமைகள் அனைத்தையும் அறிந்தவனும், உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனுமான அவன், பேச்சில் வாய்மையுடனும், தன் நோன்பில் மிக உறுதியுடையவனுமாக இருந்தான்.(2) கடல்கள் வரை விரிந்திருக்கும் மொத்த உலகையும் வென்று கடுஞ்சாதனையைச் செய்த அவன், நுட்பமானதில் தன் மனத்தை நிறுவினான்.(3) ஓ பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, அந்தப் பெருஞ்சாதனைகள் அனைத்தையும் கைவிட்டு ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது, நுட்பமானதை நோக்கி தன் மனத்தைத் திருப்பினான்.(4)


அலர்க்கன், "என் மனம் வலுவாக இருக்கிறது. மனத்தை வென்ற பிறகு ஒருவனின் வெற்றி நிரந்தரமானதாகிறது. பகைவர்களால் சூழப்பட்டிருந்தாலும் நான் (இது முதல்) என் கணைகளைப் பிற பொருட்களின் மீது ஏவுவேன்.(5) நிலையின்மையின் விளைவால் மனிதர்கள் அனைவரையும் செயல்களை நிறைவேற்றுவதில் நிறுவும் மனத்தின் மீது நான் மிகக் கூரிய கணைகளை ஏவப்போகிறேன்" என்றான்.(6)

மனம், "ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும். உன் முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்ட நிலையில் நீ மரணமடைவாய்.(7) என்னை அழிப்பதற்குரிய வேறு கணைகளைத் தேடுவாயாக" என்றது. {மனத்தின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(8)

அலர்க்கன், "இது (மூக்கு) மணங்கள் பலவற்றை நுகர்ந்து அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கிறது. எனவே, கணைகளைக் கூராக்கி மூக்கின் மேல் ஏவப்போகிறேன்" என்றான்.(9)

மூக்கு, "ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(10) என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக" என்றது. {மூக்கின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(11)

அலர்க்கன், "இது (இந்த நாக்கு), சுவைமிக்கச் சுவைகளை அனுபவித்து அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கிறது. எனவே, கணைகளைக் கூராக்கி நாக்கின் மேல் ஏவப்போகிறேன்" என்றான்.(12)

நாக்கு, "ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(13) என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக" என்றது. {நாக்கின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(14)

அலர்க்கன், "தீண்டலுக்குரிய பல்வேறு பொருட்களைத் தொடும் தோலானது {துவக்கானது}, அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கிறது. எனவே, கங்க {கழுகின்} இறகுகளுடன் கூடிய பல்வேறு கணைகளால் அந்தத் தோலைப் பிளக்கப் போகிறேன்" என்றான்.(15)

தோலானது, "ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(16) என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக" என்றது. {தோலின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(17)

அலர்க்கன், "இவை (காதுகள்) பல்வேறு ஒலிகளைக் கேட்டு அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கின்றன. எனவே, கணைகளைக் கூராக்கிக் காதுகளின் மேல் ஏவப்போகிறேன்" என்றான்.(18)

காதுகள், "ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் எங்களைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(19) எங்களை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக" என்றன. {காதுகளின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(20)

அலர்க்கன், "கண்கள், பல்வேறு நிறங்களைக் கண்டு அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கின்றன. எனவே, கூரிய கணைககைக் கொண்டு கண்களை அழிக்கப்போகிறேன்" என்றான்.(21)

கண்கள், "ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் எங்களைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(22) எங்களை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக" என்றது. {நாக்கின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(23)

அலர்க்கன், "இது (இந்தப் புத்தி), ஆராயும் முறையின் {பிரஜ்ஞையினால்} துணை கொண்டு பல தீர்மானங்களை {பலவித நிச்சயங்களை} எட்டுகிறது. எனவே, கணைகளைக் கூராக்கி இந்தப் புத்தியின் மேல் ஏவப்போகிறேன்" என்றான்.(24)

புத்தி, "ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய். என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக" என்றது {என்றனர் பித்ருக்கள்}".(25)

{பித்ருக்குள் சொன்னதாகப்} பிராமணர் தொடர்ந்தார், "அப்போது, செய்வதற்கரிய கடுந்தவங்களை அங்கேயே செய்த அலர்க்கன், (தன் தவங்களின்) உயர்ந்த சக்தியின் மூலமும், இந்த ஏழையும் அழிப்பதற்குரிய கணைகளை அடையத் தவறினான்.(26) பலம் கொண்ட அவன், அப்போது குவிந்த மனத்துடன் சிந்திக்கத் தொடங்கினான். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே {பரசுராமா}, நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையான அலர்க்கன், நீண்ட காலம் சிந்தித்தும் யோகத்தைவிடச் சிறந்த வேறெதையும் அடையத் தவறினான். ஒரே நோக்கத்தில் தன் மனத்தை நிறுவிய அவன், யோகத்தில் ஈடுபட்டவாறே முற்றிலும் அசையாதிருந்தான்[1].(27,28) சக்தியுடன் கூடிய அவன், யோகத்தின் மூலமாகத் தன் ஆன்மாவுக்குள் நுழைந்து, ஒரே கணையால் தன் புலன்கள் அனைத்தையும் கொன்று, அதன் மூலம் உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(29)

[1] "’ஓ மறுப்பிறப்பாளர்களில் முதன்மையானவரே’ என்ற விளி ஜமதக்னியின் மகனுக்கானதாகும். இவ்வுரையோ பித்ருக்களுடையது. எனினும், அனைத்துப் பதிப்புகளிலும் இது பிராமணர் தம் மனைவியிடம் பேசும் உரையாகவே இருக்கிறது. உண்மையில் பித்ருக்கள் ராமரிடம் சொன்னதையே பிராமணர் தம் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இங்கே பேசப்படும் யோகம் ராஜயோகம் என்று நீலகண்டர் விளக்குகிறார். முன்னர் அலர்க்கன் ஈடுபட்டுக்கொண்டிருந்தது ஹடயோகமானது அதைப் பயிலும் மனிதர் லயமடைந்ததும் முடிந்துவிடும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஆச்சரியத்தால் நிறைந்த அந்த அரசமுனி அப்போது இந்த ஸ்லோகத்தைப் பாடினான்: {அலர்க்கன்}, "ஐயோ, புறச்செயல்கள் அனைத்தையும் நாம் நிறைவேற்ற வேண்டும் என்பது பரிதாபத்திற்குரியது.(30) ஐயோ, இதற்கு முன்பு இன்பங்களில் தாகத்துடன் ஆசையுள்ள நாம் அரசுரிமையை (அரசுரிமையின் இன்பங்களை) விரும்பினோம். அதன்பிறகு நான் இதைக் கற்றிருக்கிறேன். யோகத்தைவிட உயர்ந்த மகிழ்ச்சி வேறேதும் இல்லை" {என்றான் அலர்க்கன்}.(31) ஓ! ராமா, இஃதை அறிவாயாக. க்ஷத்திரியர்களைக் கொல்வதை நிறுத்துவாயாக. கடுந்தவங்களைப் பயில்வாயாக. அப்போது நீ நன்மையை அடைவாய்" என்றனர் {பித்ருக்கள்}.(32)

இவ்வாறு தமது பாட்டன்மாரால் சொல்லப்பட்ட ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, கடுந்தவங்களைப் பயின்றார். அவற்றைப் பயின்ற அந்த உயர்ந்த அருளைக் கொண்டவர் {பரசுராமர்}, அடைவதற்கரிதான வெற்றியை அடைந்தார்" {என்றார் பிராமணர்}.(33)

அஸ்வமேதபர்வம் பகுதி – 30ல் உள்ள சுலோகங்கள் : 33

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்