Saturday, November 02, 2019

தர்மச்சக்கரம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 32

Wheel of Dharma! | Aswamedha-Parva-Section-32 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 17)


பதிவின் சுருக்கம் : மமதை விலக்கல் குறித்து ஒரு பிராமணனுக்கும் மன்னன் ஜனகனுக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்...


பிராமணர், "ஓ! பெண்ணே, இது தொடர்பாக ஒரு பிராமணருக்கும், (மன்னன்) ஜனகனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) மன்னன் ஜனகன், (ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில்) குற்றம் புரிந்த ஒரு பிராமணனைத் தண்டிக்க விரும்பி, அவனிடம், "நீ என் ஆட்சிப்பகுதிகளில் வசிக்கலாகாது" என்றான்.(2)


இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணன், மன்னர்களில் சிறந்தவனான அவனிடம் {ஜனகனிடம்}, "ஓ! மன்னா, உன் ஆளுகைக்குள் உள்ள ஆட்சிப்பகுதிகளின் எல்லைகளை எனக்குச் சொல்வாயாக.(3) ஓ! தலைவா, நான் மற்றொரு மன்னனின் ஆட்சிப்பகுதிக்குள் வசிக்க விரும்புகிறேன். ஓ! பூமியின் தலைவா, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் உன் ஆணைக்குக் கீழ்ப்படிய நான் விரும்புகிறேன்" என்றான்.(4)

புகழ்பெற்ற பிராமணனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மன்னன், மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டும், வெப்பப் பெருமூச்சுகளை விட்டபடியே ஒரு சொல்லையும் மறுமொழியாகச் சொல்லாதிருந்தான்.(5) சூரியனை விழுங்கும் கோளை {ராஹுவைப்} போல, அளவிலா சக்தி கொண்ட அந்த மன்னனின் புத்தித் திடீரென மயங்கியதால், அவன் சிந்தனையில் மூழ்கியவாறு அமர்ந்தான்.(6) அந்தப் புத்தி மயக்கம் தெளிந்ததும், ஆறுதலடைந்த அந்த மன்னன், ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு அந்தப் பிராமணனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(7)

ஜனகன், "மூதாதையர் வழியாக எனதாக இருக்கும் இந்த நாட்டுக்குள் வசிப்பதற்குரிய ஒரு (பெரிய) நிலப்பரப்பு இருந்தாலும், மொத்த பூமியில் தேடினாலும் என் ஆட்சிப்பகுதியை நான் காணத் தவறுகிறேன்.(8) பூமியில் அதைக் காண நான் தவறியபோது, (அதை) மிதிலையில் தேடினேன். மதிலையில் நான் அதைக் காணத் தவறியபோது, என் பிள்ளைகளுக்கு மத்தியில் அதைத் தேடினேன்.(9) அங்கேயும் நான் அதைக் காணத் தவறியபோது, எனக்குப் புத்தி மயக்கம் ஏற்பட்டது. அந்தப் புத்தி மயக்கம் தெளிந்ததும், நுண்ணறிவு எனக்குத் திரும்பக் கிடைத்தது.(10) அப்போது எனக்கென ஆட்சிப்பகுதி ஏதுமில்லை, அல்லது அனைத்தும் என் ஆட்சிப்பகுதியே என நினைத்தேன். இந்த உடலும் எனதில்லை, அல்லது மொத்த பூமியும் எனதே.(11) அதே நேரத்தில், ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, அது பிறருக்குச் சொந்தமான அளவுக்கு எனக்கும் சொந்தம் என நினைக்கிறேன். எனவே, விரும்பியவரை நீ (இங்கேயே) வசிப்பாயாக. விரும்பிய வரையில் அனுபவிப்பாயாக" என்றான்.(12)

பிராமணன், "மூதாதையர் வழியாக உனதாக இருக்கும் இந்த நாட்டுக்குள் வசிப்பதற்குரிய ஒரு (பெரிய) நிலப்பரப்பு இருக்கும்போது, எந்தப் புத்தியைச் சார்ந்து, {எனதென்ற} அந்த மமதையை விட்டாய் என்பதை எனக்குச் சொல்வாயாக.(13) அனைத்தும் உன் ஆட்சிப்பகுதியாக அமைகிறது என்ற தீர்மானத்திற்கு எந்தப் புத்தியைச் சார்ந்து நீ வந்தாய்? உண்மையில், எந்தக் கருத்தின் மூலம் உனக்கு ஆட்சிப்பகுதி ஏதுமில்லை, அல்லது {எந்தக் கருத்தின் மூலம்} அனைத்தும் உனது ஆட்சிப்பகுதியாகிறது?" என்று கேட்டான்.(14)

ஜனகன், "அனைத்துக் காரியங்களிலும் இங்கே உள்ள {செழுமை மற்றும் வறுமை என்ற} கட்டுவரம்புகள் அனைத்தும் முடிவுள்ளவை என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே, எனதென்று அழைக்கப்படக்கூடிய எதையும் என்னால் காண முடியவில்லை.(15) இது யாருடையது என்று (கருதி), எவருடைய உடைமையையும் குறித்த வேத உரையை நினைத்தேன். எனவே, எனது என்ற (என்று அழைக்கக்கூடிய) எதையும் என் புத்தியைக் கொண்டு என்னால் காண முடியவில்லை[1].(16) இந்தக் கருத்தைச் சார்ந்தே நான் மமதையைக் கைவிட்டேன். நான் எங்கும் ஆட்சிப் பகுதியைக் கொண்டுள்ளேன் என்ற தீர்மானத்திற்கு வர நான் சார்ந்திருக்கும் கருத்தென்ன என்பதை இப்போது கேட்பாயாக.(17) என் மூக்கில் உள்ள மணங்களையும் எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட பூமியானது எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(18) என் நாவுடன் தொடர்புடைய சுவைகளை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட நீர் எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(19)

[1] "இது தெளிவற்றதாக இருக்கிறது. இங்கே குறிப்பிடப்படும் வேத உரையானது, "எவனுடைய உடைமையிலும் விருப்பம் கொள்ளாதே" என்பதாகும் என நீலகண்டர் கருதுகிறார். அடுத்தவரின் உடைமையை விரும்புவதைத் தவிர்க்க நினைக்கும் நான் எது பிறருக்குரியது என்பதில் உறுதியடைய நினைத்தேன் என ஜனகன் சொல்ல வருவதாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

என் கண்களுக்குத் தொடர்புடைய நிறம் அல்லது ஒளியை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட ஒளி எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(20) என் தோலுடன் தொடர்புடைய தீண்டல் உணர்வுகளை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட காற்று, எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(21) என் காதுகளுடன் தொடர்புடைய ஒலிகளை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட ஒலிகள் எப்போதும் என் ஆளுகைக்குட்பட்டவையே.(22) என் மத்தில் எப்போதும் உள்ள மனத்தை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட மனமானது எப்போதும் என் ஆளுகைக்குட்பட்டதே.(23) நான் செய்யும் இந்தச் செயல்கள் அனைத்தும், தேவர்கள், பித்ருக்கள், பூதங்கள் மற்றும் விருந்தினர்களுக்கானவையே" என்றான் {ஜனகன்}.(24)

அப்போது புன்னகைத்த அந்தப் பிராமணன் மீண்டும் ஜனகனிடம், "நான் தர்மன், உன்னைச் சோதிக்கவே இன்று இங்கே வந்தேன்.(25) பிரம்மத்தை உந்தியாகக் கொண்டதும், புத்தியை ஆரங்களாகக் கொண்டதும், ஒழிவடையாததும், நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தைச்} சுற்றளவாகக் கொண்டதுமான இந்தச் சக்கரத்தை {தர்மச்சக்கரத்தை} இயக்கத்தில் நிறவக்கூடியவன் நீயே" என்றான்.(26)

அஸ்வமேதபர்வம் பகுதி – 32ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்