Saturday, November 02, 2019

க்ஷேத்ரஜ்ஞன் நானே! - அஸ்வமேதபர்வம் பகுதி – 34

Kshetrajna is I myself! | Aswamedha-Parva-Section-33 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 15)


பதிவின் சுருக்கம் : பிராமணரும், அவரது மனைவியும், மனமும் புத்தியும் என்பதை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...


பிராமணரின் மனைவி {பிராம்மணி}, "அற்பு புத்தி உள்ளவனும், தூய்மையற்ற ஆன்மா கொண்டவனுமான ஒரு மனிதனால் இதைப் புரிந்து கொள்ள முடியாது. என் புத்தியானது மிகச் சிறியதாகவும், சுருக்கமானதாகவும், குழம்பியதாகவும் இருக்கிறது.(1) (நீர் சொல்லும்) ஞானத்தை அடைவதற்குரிய வழிமுறைகளை எனக்குச் சொல்வீராக. ஞானம் பாயும் அந்த ஊற்றுக் கண்ணைக் குறித்து நான் உம்மிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்" என்றாள்.(2)


பிராமணர், "பிரம்மத்தில் அர்ப்பணிப்புள்ள புத்தியானது கீழ் அரணி என்றும்; ஆசான் மேல் அரணி என்றும், தவங்களும், சாத்திரங்களில் நல்ல அறிவும் {அந்த அரணிக்கட்டைகளுக்குள்} உராய்வை ஏற்படுத்தும் காரணிகள் என்றும் அறிவாயாக. அதனிலிருந்து ஞானமெனும் நெருப்பு உண்டாகும்.(3)" என்றார்.(3)

பிராமணரின் மனைவி, "இந்தப் பிரம்ம அடையாளத்தைப் பொறுத்தவரையில், எது க்ஷேத்ரஜ்ஞன் என்று பெயரிடப்படுகிறது? உண்மையில், அதை {அந்த அடையாளத்தைப்} பற்றக்கூடிய {அதைக் குறித்த} விளக்கம் எங்கே தோன்றுகிறது.?" என்று கேட்டாள்[1].(4)

[1] கும்பகோணம் பதிப்பில், "க்ஷேத்திரஜ்ஞனென்று பெயருள்ள பிரம்மத்தினுடைய எந்த ஸ்வரூபத்தை எந்த லக்ஷணத்தால் அறியலாமோ அந்தப் பிரம்ம ஸ்வரூபத்தின் அந்த லக்ஷணத்தைச் சொல்லும்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "’க்வநு’ என்னும் வேறுபாடம் கொண்டு, ‘க்ஷேத்ரஜ்ஞனென்று பெயருள்ள ஜீவன் பிரம்மத்தின் ஸ்வரூபமாவது எவ்விதம்? எதனால் எது அறிய முடியுமோ அஃது எவ்விதம் அதன் ஸ்வரூபமாகும்? (அதைச் சொல்லும்)’ என்பது பழையவுரை" என்றிருக்கிறது.

பிராமணர், "அவன் {க்ஷேத்திரஜ்ஞன்} அடையாளங்கள் அற்றவனாகவும், குணங்களற்றவனாகவும் இருக்கிறான். அவனே எனக் கருதப்படக்கூடிய எந்தக் காரணமும் இல்லை. எனினும், அவனைக் கைப்பற்றவோ, கைப்பாற்றாதிருக்கவோ உரிய வழிமுறைகளை உனக்குச் சொல்லப் போகிறேன்.(5)

நல்ல வழிமுறைகளைக் காணலாம்; வண்டுகளால் (உணரப்படும் மலர்களைப் போல) அவற்றை உணரலாம். அந்த வழிமுறைகள் செயல்களால் தூய்மையாக்கப்பட்ட புத்தியைக் கொண்டவையாகும். தூய்மையடையாத புத்தியைக் கொண்டோர், தங்கள் அறியாமையின் மூலம், அந்த உட்பொருள் ஞானம் மற்றும் பிறவற்றின் குணங்களோடு இருப்பதாகக் கருதுகிறார்கள்[2].(6) இது செய்யப்படவேண்டும், அல்லது இது செய்யப்படக்கூடாது என்று விடுதலையை {முக்தியை} அடைவதற்கான விதிகள் வகுக்கப்படவில்லை. எவரிடம் ஆன்ம அறிவு எழுகிறதோ அவனால் மட்டுமே காணவும், கேட்கவும் முடியும்[3].(7) புரிந்து கொள்ளும் திறன் கொண்ட ஒருவன், வெளிப்பட்டவற்றையும், வெளிப்படாதவற்றையும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பல பகுதிகளாகப் புரிந்து கொள்ள வேண்டும்.(8) உண்மையில் ஒருவன் வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட பல்வேறு பொருட்களையும், நேரடியாக உணரக்கூடிய அனைத்துப் பொருட்களையும் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது, எதற்கு மேல் எதுவும் இல்லையோ அது {பிரம்மஜ்ஞானம்}, (தியானம், தற்கட்டுப்பாடு முதலிய) பயிற்சிகளில் இருந்து உண்டாகும்" என்றார்[4]".(9)

[2] "தெளிவாகப் புரிந்து கொள்வதற்கான நான் இந்தச் சுலோகத்தைச் சற்றே விரிவாக்கியிருக்கிறேன். சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் பின்வருமாறு இஃது அமையக்கூடும். "வண்டுகள் உணர்வதைப் போல நல்ல வழிமுறைகளைக் கண்டடையலாம். செயல்களால் (தூய்மையாக்கப்பட்ட) புத்தி; மடமையின் மூலம் ஞானத்தின் அடையாளங்களுடன் கூடியது என்றறியும்". தெலங்க் அவர்கள் சொல்வதைப் போலக் கர்ம புத்தி என்பது ஒருபோதும் செயலும், ஞானமும் என்ற பொருளைத் தராது. அபுத்திவாத் எனபது "அறியாமையின் மூலம்" என்ற பொருளைத் தரும். செயல்களால் தூய்மையாக்கப்படாத புத்தியைக் கொண்டோரிடம் இந்த அறியாமை இருக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கர்மங்களில் பற்றின புத்தியுள்ளவன் (பிரம்மத்தைப் பற்றிய) புத்தியில்லாததினால் ஞானஸ்வரூபியான பிரம்மத்தினிடமிருந்து விலக்கப்பட்டவனாவான்" என்றிருக்கிறது.

[3] "வேறு காரியங்களில் உள்ளதைப் போல விடுதலையை அடையும் காரியத்தில், நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை. ஒருவன் சொர்க்கத்தை அடைய விரும்பினால் அவன் இது செய்யப்பட வேண்டும், இது தவிர்க்கப்பட வேண்டும் என்று இருக்கிறது. எனினும், விடுதலை அடைவதற்கோ காண்பதும், கேட்பதும் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. காண்பது தியானத்தையும், கேட்பது ஆசான்களின் அறிவுரைகளையும் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] "நேரடியாக உணரக்கூடிய பூமி முதலிய பொருட்களை முதலில் ஒருவன் ஆழ்ந்து சிந்திக்க {தியானிக்க} வேண்டும் எனவும், அதன் பிறகே, புலப்படாத பொருட்களை மனத்தின் இயக்கமாகத் தியானிக்க வேண்டும் எனவும் இங்கே பேசிக் கொண்டிருப்பவர் சொல்ல விரும்புகிறார். அத்தகைய தியானம் படிப்படியாகப் பரமனிடம் செல்ல வழிவகுக்கும். தெலங் அவர்களின் பதிப்பில் உள்ள இந்த 8 மற்றும் 9ம் ஸ்லோகங்கள் எந்தப் பொருளையும் தெளிவாக அமைக்கவில்லை என்று நான் கருதுகிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இது விஷயத்தில் எல்லா அனுமானங்களோடுங் கூடினவைகளும் பிரத்யக்ஷத்தைக் காரணமாகக் கொண்டவைகளுமான அவ்யக்தமாக இருப்பவைகளையும், வ்யக்தமான ஸ்வரூபமுள்ளவைகளையும் எல்லாவற்றையும் எவ்வளவு அம்சங்களாப் பிரிக்க முடியுமோ அவ்வளவு அம்சங்களாக நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் பிரிக்க வேண்டும். எதற்கு மேலானது இல்லையோ அந்தப் பிரம்மஜ்ஞானமானது (சமமுதலியவைகளை) அப்யஸித்தால் உண்டாகும்" என்றிருக்கிறது.

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "அப்போது, க்ஷேத்திரஜ்ஞன் அழிந்ததும் அந்தப் பிராமணரின் மனைவியுடைய மனமானது, க்ஷேத்திர ஞானத்தின் விளைவால் க்ஷேத்திரஜ்ஞனைக் கடந்த ஒன்றானது" என்றான்[5].(10)

[5] "அவளுடைய தனிப்பட்ட ஆன்மாவானது பரமாத்மாவுக்குள் கலந்தபோது, அவள் பிரம்மத்தோடு அடையாளம் காணப்பட்டாள். இது க்ஷேத்திரஜ்னிலிருந்து தனிப்பட்ட க்ஷேத்திர அறிவின் மூலம் நடந்தது என்பது இங்கே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அந்தப் பிராம்மண ஸ்திரீயினுடைய புத்தியானது ஜீவாத்மாவைப் பரமாத்மாவினிடம் லயிக்கச் செய்வதற்காக க்ஷேத்ர (மென்னும் சரீர)த்தை அறிந்து கொண்டு ஜீவர்களைவிட மேலான பரமாத்மாவிடம் சென்றது" என்றிருக்கிறது.

அர்ஜுனன், "உண்மையில், ஓ! கிருஷ்ணா, இத்தகைய வெற்றியை அடைந்தவர்களான அந்தப் பிராமணனின் மனைவியும், அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரும் எங்கே இருக்கின்றனர். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, இது குறித்து எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(11)

அருள்நிறைந்த அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன}, "என் மனமே அந்தப் பிராமணன் என்றும், என் புத்தியே அந்தப் பிராமணனின் மனைவி என்றும் அறிவாயாக. ஓ! தனஞ்சயா, க்ஷேத்ரஜ்ஞன் என்று சொல்லப்படுபவன் நானே" என்றான்.(12)

அஸ்வமேதபர்வம் பகுதி – 34ல் உள்ள சுலோகங்கள் : 12

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்