Thursday, November 07, 2019

முக்குணம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 39

Three qualities! | Aswamedha-Parva-Section-39 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 24)


பதிவின் சுருக்கம் : முக்குணங்களைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்...


பிரம்மன், "குணங்கள் அனைத்தையும் ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாக அறிவிக்க இயலாது. ஆசை {ரஜஸ்}, நல்லியல்பு {சத்வம்} மற்றும் இருள் {தமஸ் குணங்கள்} ஒன்று கலந்த நிலையிலேயே காணப்படுகின்றன.(1) அவை ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. அவை ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. அவை ஒன்றையொன்று தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளன. அதே போல அவை ஒன்றையொன்று பின்தொடர்கின்றன.(2) நல்லியல்பு {சத்வம்} இருக்கும்வரை ஆசையும் {ரஜஸும்} நீடித்திருக்கிறது. இதில் ஐயமேதும் இல்லை. இருளும் {தமஸும்}, நல்லியல்பும் {சத்வமும்} இருக்கும்வரை ஆசையும் {ரஜஸும்} நீடித்திருக்கிறது.(3) அவை ஒன்றாக இணைந்தும், கூட்டாக நகர்ந்தும் தங்கள் பயணத்தைச் செய்கின்றன. உண்மையில் காரணத்தோடோ, காரணமில்லாமலோ செயல்படும்போது அவரை ஒரே அமைப்பாகவே செயல்படுகின்றன.(4)


வளர்ச்சியில் எவ்வளவு வேறுபட்டாலும் ஒன்றோடொன்று சேர்ந்து செயல்படும் இவை அனைத்தும் பெருகும் வகையையும், குறையும் வகையையும் இப்போது அறிவிக்கப் போகிறேன்.(5) எங்கே (எடுத்துக்காட்டாக) தாழ்ந்த உயிரினங்களில் அதிக அளவில் இருள் {தமஸ்} இருக்கிறதோ, அங்கே ஆசை {ரஜஸ்} குறைவான அளவிலும், நல்லியல்பு {சத்வம்} அதைவிடக் குறைந்த அளவிலும் இருக்கிறது.(6) எங்கே நடுநிலை உயிரினங்களில் அதிக அளவில் ஆசை {ரஜஸ்} இருக்கிறதோ, அங்கே இருள் {தமஸ்} சிறிய அளவிலும், நல்லியல்பு {சத்வம்} அதைவிடச் சிறிய அளவிலும் இருக்கிறது.(7) எங்கே மேல்நோக்கான போக்குக் கொண்ட உயிரினங்களில் அதிக அளவில் நல்லியல்பு {சத்வம்} இருக்கிறதோ, அங்கே இருள் {தமஸ்} குறைந்த அளவிலும், ஆசை {ரஜஸ்} அதைவிடக் குறைந்த அளவிலும் இருக்கிறதென அறியப்பட வேண்டும்.(8)

நல்லியல்பானது {சத்வம் என்பது} புலன்களில் மாற்றங்களை விளைவிக்கும் ஊற்றாகும். மேலும் அதுவே சிறந்த அறிவொளியாகவும் இருக்கிறது. நல்லியல்பைவிட உயர்ந்த கடமை வேறேதும் விதிக்கப்படவில்லை.(9) நல்லியல்பில் {சத்வத்தில்} நிலைத்திருப்பவர்கள் மேல்நோக்கிச் செல்கிறார்கள். ஆசையில் {ரஜஸில்} நிலைத்திருப்பவர்கள் நடுவில் இருக்கிறார்கள். இருளில் {தமஸில்} நிலைத்திருப்பவர்கள், தாழ்ந்த குணங்களால் வகைப்படுத்தப்பட்டுக் கீழ்நோக்கி மூழ்குவார்கள்.(10) இருள் {தமஸ்} சூத்திரனில் நிகழ்கிறது; ஆசை {ரஜஸ்} க்ஷத்திரியனிலும், உயர்ந்ததாக இருக்கும் நல்லியல்பு {சத்வம்} பிராமணனிலும் நிகழ்கின்றன. இவ்வாறே மூன்று குணங்களும் மூன்று வகைகளிலும் {வர்ணங்களிலும்} இருக்கின்றன.(11) தொலைவில் இருந்து கண்டாலும், இருள், நல்லியல்பு மற்றும் ஆசை என்ற குணங்கள் மூன்றும் கலந்த நிலையிலும், கூட்டாகவும் காணப்படுகின்றன. அவை ஒருபோதும் தனியான நிலையில் காணப்படுவதில்லை[1].(12)

[1] "’தொலைவில் இருந்து கண்டாலும்’ என்பது, ’நுட்பமாக ஆய்வு செய்யாமல் மேம்போக்கான பார்வையில் கண்டாலும் கூட’ என்ற பொருளைத் தரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தீச்செயல் செய்யும் மனிதர்கள், சூரியன் எழுவதைக் கண்டு அச்சத்தால் பீடிக்கப்படுகிறார்கள். பயணிகள் தங்கள் வழியில் வெப்பத்தால் பீடிக்கப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.(13) சூரியன் நல்லியல்பில் வளர்ந்தது; தீச்செயல் புரியும் மனிதர்கள் இருளை {தமஸைக்} குறிக்கின்றனர்; பயணிகள் தங்கள் வழியில் உணரும் வெப்பம் ஆசை {ரஜஸ்} குணம் என்று சொல்லப்படுகிறது.(14) ஒளியைக் குறிக்கும் சூரியன் நல்லியல்பாகும் {ஸத்வமாகும்}; வெப்பம் ஆசை {ரஜஸ்} குணம் கொண்டதாகும்; பர்வன் நாட்களில் சூரியன் மறைவது (அல்லது கிரஹணம்} இருளை {தமஸைக்} குறிக்கும் என்று அறியப்பட வேண்டும்.(15) இவ்வாறே இந்த முக்குணங்களும் ஒளியுடல்கள் அனைத்திலும் இருக்கின்றன. அவை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வழிகளில் மீண்டும் மீண்டும் செயல்படுகின்றன.(16)

அசைவில்லா பொருட்களின் மத்தியில் இருள் {தமஸ்} குணம் அதிக அளவில் இருக்கிறது. ஆசை {ரஜஸ்} தொடர்புடைய குணங்கள், தொடர் மாற்றங்களுக்கு உட்படும் {அழகு, உறைப்பு, புளிப்பு உள்ளிட்ட} குணங்களாக அவற்றில் {அந்த அசைவற்ற பொருட்களில்} இருக்கின்றன. அவற்றின் எண்ணெய் தன்மையுள்ள குணங்கள், நல்லியல்பின் {சத்வத்தின்} தொடர்புடையனவாகும்[2].(17) பகலை மூன்று வகையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இரவு மூன்று வகையாக இருக்குமாறே விதிக்கப்பட்டிருக்கிறது. பிறைநாட்கள் {பக்ஷங்கள்}, மாதங்கள், வருடங்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்}, ஸந்திகள்[3] ஆகியவையும் மூன்று வகையாக அறியத்தக்கவையே.(18) கொடுக்கப்படும் கொடைகள் மூன்று வகையாகும். அவற்றில் உண்டாகும் வேள்விகள் மூன்று வகையாகும். உலகங்கள் மூன்று வகையாகும்; தேவர்கள் மூன்று வகையாவர்; ஞானம் மூன்று வகையாகும்; பாதை அல்லது கதியும் மூன்று வகையாகும்.(19) கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், அறம், பொருள், இன்பம், பிராணன், அபானன், உதானன் ஆகியவையும் முக்குணங்களால் நிறைந்தவையே.(20)

[2] "அண்டத்தில் உள்ள அசையாத பொருட்களிலும் முக்குணங்கள் இருக்கின்றன. இருளைப் பொருத்தவரையில் அஃது அவற்றில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆசையைப் பொருத்தவரையில், அது சமைத்தல், அல்லது கலத்தலின் விளைவால் காலத்திற்குக் காலம் மாறும் இயல்பைக் கொண்ட உறைப்பு, புளிப்பு, இனிப்பு முதலியவையாக இருக்கிறது. அவற்றின் எண்ணெய் தன்மைகள் நல்லியல்பின் தொடர்புடையனவாகச் சொல்லப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸ்தாவரங்களான பதார்த்தங்களில் தமஸ் அதிகமாக இருக்கிறது. (அழகு, உறைப்பு, புளிப்பு முதலான) ராஜஸ குணங்களும் மாறுகின்றன. (நெருப்பை உண்டுபண்ணிப் பிரகாசிக்கச் செய்வதால்) ஸ்நேஹமென்னும் ஸாத்விக குணமும் இருக்கிறது" என்றிருக்கிறது.

[3] "சந்திகள் என்பன, ஒரு பருவகாலம் முடிந்து மற்றொன்று தொடங்கும் இரு காலமும் இணைந்த பகுதியாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இவ்வுலகில் உள்ள எந்தப் பொருளிலும், அதில் உள்ள அனைத்திலும் முக்குணங்கள் நிறைந்திருக்கின்றன. அனைத்துப் பொருட்களிலும், அனைத்துச் சூழ்நிலைகளிலும் இந்த முக்குணங்களும் மாறி மாறி செயல்படுகின்றன.(21) உண்மையில், இந்த முக்குணங்களும் வெளிப்படாத ஒரு வடிவத்திலேயே எப்போதும் செயல்படுகின்றன. நல்லியல்பு {ஸத்வம்}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்கள் மூன்றின் படைப்பும் நித்தியமானவையே.(22) முக்குணங்களையும் உள்ளடக்கிய புலப்படாதது {அவ்யக்தமானது}, இருள் {தமஸ்}, காணப்படாதது {அவ்யக்தம்}, புனிதமானது {சிவம்}, நிலையானது {தாம்}, பிறப்பற்றது {ரஜஸ்}, கருவறை {யோனி}, நித்தியமானது {ஸநாதனம்}, இயற்கை {பிரகிருதி}, மாற்றம் அல்லது திருத்தம் {விகாரம்}, அழிவு {பிரளயம்}, பிரதானம், உற்பத்தி {பிரபவம்} மற்றும் ஈர்த்தல் {அப்யயம்}, வளர்ச்சியின்மை {அனுத்ரிக்தம்}, சிறிதல்லாதது (அதாவது பெரியது) {அநூனம்}, கலக்கமற்றது {அகம்பம்}, அசையாதது {அசலம்}, நிலையானது {த்ருவம்}, இருப்பில் உள்ளது {ஸத்}, இருப்பற்றது {அஸத்} என்று சொல்லப்படுகிறது.(23,24)

ஆன்மா தொடர்புடைய காரியங்களைத் தியானிப்போரால் இந்தப் பெயர்கள் அறியப்பட வேண்டும்.(25) புலப்படாததன் {அவ்யக்தத்தின்} பெயர்கள் அனைத்தையும், குணங்களையும், (அந்தக் குணங்களின்) தூய இயக்கங்களையும் {கதிகளையும்} மிகச் சரியாக அறிந்தவனும், பிரிவுகள் அனைத்தின் உண்மைகளையும் நன்கறிந்தவனும், உடலில் இருந்து விடுபட்டவனுமான {தேஹாபிமானம் விலகியவனுமான} மனிதன், குணங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு {கெடுதியற்றவனாகி} முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்கிறான்" என்றான் {பிரம்மன்}.(23)

அஸ்வமேதபர்வம் பகுதி – 39ல் உள்ள சுலோகங்கள் : 23

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்