Monday, November 18, 2019

ஞானம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 44

Knowledge! | Aswamedha-Parva-Section-44 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 29)


பதிவின் சுருக்கம் : ஞானமே மோக்ஷஸாதனம் என்பது குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்...


பிரம்மன், "தொடக்கம், நடுநிலை, முடிவு ஆகியவற்றையும், பெயர் மற்றும் சிறப்பியல்புகளைக் கொண்டவை அனைத்தையும், அவற்றை அடைவதற்குரிய வழிமுறைகளுடன் நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(1) முதலில் பகல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பிறகே இரவு எழுந்தது. மாதங்களில் வளர்பிறை நாட்கள் முதன்மையானவை என்று சொல்லப்படுகிறது. விண்மீன் கூட்டங்கள் சிரவணத்தை {திருவோணம் நட்சத்திரத்தைத்} தங்களில் முதன்மையானதாகக் கொண்டுள்ளன; பருவ காலங்கள் தங்களில் பனிக் காலத்தை (குளிர் காலத்தை) முதன்மையானதாகக் கொண்டுள்ளன.(2) மணங்கள் அனைத்தின் பிறப்பிடமாகப் பூமியும், சுவைகள் அனைத்தின் பிறப்பிடமாக நீரும் இருக்கின்றன. நிறங்கள் அனைத்தின் பிறப்பிடமாகச் சூரிய ஒளியும், தீண்டல் உணர்வுகளின் பிறப்பிடமாகக் காற்றும் {வாயுவும்} இருக்கின்றன.(3) அதே போல ஒலியின் பிறப்பிடமாக வெளி (அல்லது வானம்) இருக்கிறது. இவையே பூதங்களின் குணங்களாகும். இனி, பொருட்கள் அனைத்திலும் முதன்மையானவற்றையும், உயர்ந்தவற்றையும் நான் அறிவிக்கப் போகிறேன்.(4)


ஒளிகள் {தேஜஸுகள்} அனைத்திலும் சூரியனே முதன்மையானவன். பூதங்கள் அனைத்திலும் நெருப்பே முதன்மையானது {அக்னியே முதன்மையானவன்}. கல்விக்கிளைகள் {வித்தைகள்} அனைத்திலும் சாவித்ரியே முதன்மையானவள். தேவர்கள் அனைவரிலும் பிரஜாபதியே முதன்மையானவன்.(5) வேதங்கள் அனைத்திலும் ஓம் என்ற அசையே முதன்மையானது, காற்றுகள் {வாயுக்கள்} அனைத்திலும் உயிர் காற்றான பிராணனே முதன்மையானது. இவ்வுலகில் பரிந்துரைக்கப்படும் அனைத்தும் சாவித்ரி என்றழைக்கப்படுகிறது[1].(6) சந்தஸ்கள் அனைத்திலும் காயத்ரி முதன்மையானது; (வேள்வி) விலங்குகள் அனைத்திலும் ஆடு முதன்மையானது. நான்கு கால் உயிரினங்களில் பசுக்களே முதன்மையானவை. மனிதர்கள் அனைவரிலும் இருபிறப்பாளர்கள் முதன்மையானவர்கள்.(7)

[1] "பிராமணர்கள் முதலியவர்களாலும், மிலேச்சர்களாலும் நோற்கப்படும் வழிபாட்டு முறைகள் அனைத்தையும் குறிக்கும் வகையில் சாவித்ரி என்ற சொல் இங்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நீலகண்டர் விளக்குகிறார். முன்பு பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லுக்குத் விளக்கம் சொல்லத் திரும்புவது, சிங்கத்தைப் போலத் திரும்பிப் பார்க்கும் தருணமாகச் சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எல்லாவித்தைகளுக்கும் ஸாவித்ரி ஆதியாகவுள்ளது. இவ்வுலகில் ஜபிக்கத்தகுந்தவையெல்லாம் ஸாவித்ரி என்று சொல்லப்படுகின்றது" என்று அடுத்தடுத்து வருகிறது. கங்குலியில் அவ்வாறு இல்லை.

பறவைகள் அனைத்திலும் பருந்தே முதன்மையானது. வேள்விகளில் நெருப்பில் தெளிந்த நெய்யை ஊற்றுவதே {ஹோமமே} முதன்மையானது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, ஊர்வனவற்றில் பாம்பே முதன்மையானது.(8) யுகங்கள் அனைத்திலும் கிருதமே முதன்மையானது; இதில் ஐயமேதும் இல்லை. மதிப்புமிக்கப் பொருட்கள் அனைத்திலும் பொன்னே முதன்மையானது.(9) செடிகள் அனைத்திலும் யவம் {வாற்கோதுமை} முதன்மையானது. உண்ணத்தக்க, அல்லது விழங்கத்தக்க அனைத்துப் பொருட்களிலும் உணவே முதன்மையானது. பருகத்தகுந்த நீர்மங்கள் அனைத்திலும் நீரே முதன்மையானது.(10)

அசையாத பொருட்கள் அனைத்திலும் வேறுபாடில்லாமல், பிரம்மனின் நித்திய புனிதக் களமான பிலக்ஷமே {ப்லக்ஷமரமே [அரசமரமே]} முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது[2].(11) பிரஜாபதிகள் அனைவரிலும் நானே முதன்மையானவன். இதில் ஐயமேதும் இல்லை. நினைத்தற்கரிய ஆன்மாவும், தானே இருப்பவனுமான விஷ்ணு என்னிலும் உயர்ந்தவனாகச் சொல்லப்படுகிறான்[3].(12) மலைகள் அனைத்திலும் பெரும் மேருவே முதலில் பிறந்ததெனச் சொல்லப்படுகிறது. அடிவானத்தின் முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்திலும் கிழக்கே முதன்மையானதாகவும், முதலில் பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது.(13)

[2] கும்பகோணம் பதிப்பில், "ஸ்தாவரங்களான எல்லா இடங்களுள்ளும் வேற்றுமையின்றிப் பிரம்மக்ஷேத்ரம் புண்ணியமானது. ஸ்தாவரங்களான எல்லா விருக்ஷங்களுள்ளும் ப்லக்ஷமரம் மிகச் சிறந்ததென்று கருதப்படுகிறது" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "அசையாத இடங்கள் அனைத்திற்கும் மத்தியில் எவ்வித விதிவிலக்கும் இல்லாமல் எப்போதும் பிலக்ஷமே முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது. இதுவே பிரம்மக்ஷேத்ரம் எனப்படும் புனிதப்பகுதியாகும்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ஏழு த்வீபங்களில் ஒன்றான பிலக்ஷத்வீபத்தை இது குறிக்கலாம். எனினும், குருக்ஷேத்திரமே பிரம்மக்ஷேத்ரம் என்று எப்போதும் சொல்லப்படுகிறது. குருக்ஷேத்திரத்தில் வளரும் பிலக்ஷ மரத்தையும் இது குறிக்கலாம்" என்றிருக்கிறது.

[3] கும்பகோணம் பதிப்பில், "சிந்திக்க முடியாத ஸ்வபாவமுள்ளவரும், தாமாக ஆவிர்ப்பவருமான விஷ்ணுவானவர் எனக்கு மேலானவரென்று நன்கு கருதப்பட்டவர்" என்றிருக்கிறது.

ஆறுகள் அனைத்திலும், மூன்று ஓடைகளைக் கொண்ட கங்கையே முதலில் பிறந்தவளாகச் சொல்லப்படுகிறாள். அதே போலக் கிணறுகள் மற்றும் நீரின் கொள்ளிடங்கள் அனைத்திலும் பெருங்கடலே முதலில் பிறந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(14) தேவர்கள், தானவர்கள், பூதங்கள், பிசாசங்கள், பாம்புகள் {உரகர்கள்}, ராட்சசர்கள், மனிதர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள் ஆகியோர் அனைவருக்கும் உயர்ந்த தலைவனாக {பிரபுவாக} ஈஸ்வரன் இருக்கிறான்.(15) பிரம்மம் நிறைந்தவனும், மூவுலகங்களிலும் தனக்கு உயர்ந்தவர் எவரும் இல்லாதவனுமான பெரும் விஷ்ணுவே {மஹாவிஷ்ணுவே} அண்டமனைத்திலும் முதன்மையானவனாக இருக்கிறான்.(16)

வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்திலும் இல்லற வாழ்வுமுறையே {கிருஹஸ்தாஸ்ரமமே [இல்லறமே]} முதன்மையானதாகும். இதில் ஐயமேதுமில்லை. புலப்படாததே {அவ்யக்தமானதே} அனைத்திற்கும் பிறப்பிடமாகவும் முடிவாகவும் உள்ளது.(17) சூரியன் மறைவில் பகலும், சூரியன் எழுச்சியில் இரவும் முடிகின்றன. இன்பத்தின் முடிவு கவலையாகவும், கவலையின் முடிவு இன்பமாகவும் எப்போதும் இருக்கிறது.(18) ஒன்றுதிரளும் அனைத்தும் வெளிப்படுவதையும், ஏற்றங்கள் அனைத்தும் வீழ்ச்சியையும் தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன. தொடர்புகள் அனைத்தும் தொடர்பறுதலையும், பிறப்பு இறப்பையும் தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன.(19)

செயல்கள் அனைத்தும் அழிவையே தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன, பிறந்தவை அனைத்தும் நிச்சயம் இறப்பைச் சந்திக்கின்றன. அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் இவ்வுலகில் நிலையற்றவையாக இருக்கின்றன.(20) வேள்வி {யாகம்}, கொடைகள் {தானம்}, தவங்கள், கல்வி {அத்யயனம்}, நோன்புகள் {விரதங்கள்}, நியமங்கள் அனைத்தும் அழிவையே தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன. ஞானம் மட்டுமே முடிவற்றதாகும் {ஞானத்திற்கு நாசமில்லை}.(21) எனவே, அமைதியான ஆன்மாவைக் கொண்டவனும், புலன்களை அடக்கியவனும், நான், எனது என்ற மமதையில் இருந்து விடுபட்டவனும், அகங்காரமற்றவனுமான ஒருவன் தூய அறிவால் {சுத்தமான ஞானத்தால்} பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்" என்றான் {பிரம்மன்}.(22)

அஸ்வமேதபர்வம் பகுதி – 44ல் உள்ள சுலோகங்கள் : 22

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்