Wednesday, November 20, 2019

பிரம்மவிருக்ஷம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 47

Tree of Brahma! | Aswamedha-Parva-Section-47 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 32)


பதிவின் சுருக்கம் : மோக்ஷஸாதனங்களான துறவு, அறிவு, தவம் ஆகியவற்றைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்...


பிரம்மன், "குறிப்பிட்ட உண்மையைச் சொன்னவர்களான புராதனர்கள், துறவே தவம் என்று சொல்கின்றனர். பிரம்மத்தைப் பிறப்பிடமாகக் கொண்டதில் வசிக்கும் பிராமணர்கள், ஞானமே உயர்ந்த பிரம்மம் என்று புரிந்து கொள்கிறார்கள்[1].(1) பிரம்மம் மிகத் தொலைவிலிருக்கிறது, அஃதை அடைவது வேத ஞானத்தைச் சார்ந்திருக்கிறது. அது முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்ததாகவும், குணங்கள் ஏதும் அற்றதாகவும், நித்தியமானதாகவும், எண்ணமுடியாத குணங்களைக் கொண்டதாகவும், உயர்ந்ததாகவும் இருக்கிறது.(2) ஞானிகள் தங்கள் ஞானம் மற்றும் தவத்தின் மூலமே அந்த உயர்ந்ததைக் காண்கின்றனர். உண்மையில், களங்கமற்ற மனங்களைக் கொண்டவர்களும், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவர்களும், ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருள் {தமோ குணம்} ஆகியவற்றைக் கடந்தவர்களுமாக அவர்கள் இருக்கின்றனர் (அவர்களே அதைக் காண்பதில் வெல்கிறார்கள்).(3)


[1] "பிரம்மத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது என்பது வேதங்களைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நிச்சயமாகச் சொல்லும் பெரியோர்கள், ஸந்யாஸத்தைத் தவமென்று சொல்லுகின்றனர். வேதத்தை நன்கு உணர்ந்த பிராம்மணர்கள் ஞானத்தைப் பரப்பிரம்மமாகக் கருதுகின்றனர்" என்றிருக்கிறது.

எப்போதும் துறவில் அர்ப்பணிப்புள்ளவர்களும், வேதங்களை அறிந்தவர்களுமான அவர்கள், இன்பம் மற்றும் அமைதியின் பாதையில் அடையாளம் காணப்படும் உயர்ந்த தலைவனை {பரமேஸ்வரனை} தவத்தின் உதவியால் அடைவதில் வெல்கிறார்கள்.(4) தவம் ஒளி {சிறந்த தீபம்} என்று சொல்லப்படுகிறது. ஒழுக்கம் பக்திக்கு வழிவகுக்கிறது {தர்மத்திற்கு ஸாதமாகும்}. ஞானம் உயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. துறவே சிறந்த தவமாகும்.(5) அனைத்தையும் துல்லியமாகத் தீர்மானிப்பதன் மூலம் கலக்கமற்றதும், ஞானத்தோடு அடையாளம் காணப்படுவதும், அனைத்துப் பொருட்களிலும் வசிப்பதுமான சுயத்தை {ஆன்மாவைப்} புரிந்து கொள்ளும் ஒருவன் எங்கும் செல்வதில் வெல்கிறான் {அனைத்தையும் அறிந்தவனென்று இவ்வுலகில் சொல்லப்படுகிறான்}.(6)

சேர்தல் மற்றும் பிரிதல், வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றைக் காணும் கல்விமான் துன்பத்தில் இருந்து விடுபடுகிறான்.(7) எதையும் விரும்பாதவனும், எதையும் இகழாதவனுமான ஒருவன் இவ்வுலகில் வசிக்குபோதே பிரம்மத்துடன் கலப்பதற்குத் தகுந்தவனாகிறான்.(8) பிரதானத்தின் குணங்கள் குறித்த உண்மைகளை அறிந்து, அனைத்துப் பொருட்களிலும் பிரதானம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்பவனும், நான் என்ற மமதையிலிருந்தும், அகங்காரத்தில் இருந்தும் விடுபட்டவனுமான ஒருவன் நிச்சயம் விடுதலை {முக்தி} அடைகிறான்.(9)

முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், எவருக்கும் தலைவணங்காதவனும், ஸ்வதா சடங்குகளைக் கடந்தவனுமான ஒருவன், எது முரண்பட்ட இரட்டைகளில் இருந்து விடுபட்டதாக இருக்கிறதோ, எது நித்தியமானதோ, எது குணங்களற்றதாக இருக்கிறதோ அஃதை அமைதியான மனநிலையின் துணையால் மட்டுமே அடைந்து விடுகிறான்.(10) குணங்களில் இருந்து வளர்ந்து வரும் நல்லவையோ, அல்லவையோவான செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, வாய்மை, பொய்மை ஆகிய இரண்டையும் கைவிடும் ஓர் உயிரினம் நிச்சயம் விடுதலையடைகிறது {முக்தியடைகிறது}.(11) 

புலப்படாததைத் தன் பிறப்பிடமாகக் கொண்டதும், புத்தியைத் தண்டாக {அடிமரமாகக்} கொண்டதும், அகங்காரம் என்ற பெருங்கோட்பட்டை கிளைகளாகக் கொண்டதும், புலன்களைச் சிறு தளிர்கள் முளைக்கும் பொந்துகளாகக் கொண்டதும்,(12) (ஐந்து) பெரும்பூதங்களைப் பெருங்கிளைகளாகக் கொண்டதும், புலன்நுகர் பொருட்களை எப்போதும் இலைகளுடனும், அலங்கரிக்கும் மலர்களுடனும் கூடியதும், இனிமையான மற்றும் இனிமையற்ற கனிகளை உண்டாக்கக்கூடிய சிறு கிளைகளாகக் கொண்டதுமான(13) நித்தியமான பிரம்ம மரமே அனைத்து உயிரினங்களையும் ஆதரிக்கும் அமைப்பாகிறது. வாய்மையில் ஞானம் என்ற வாளைக் கொண்டு அம்மரத்தை வெட்டிப் பிளக்கும் ஞானமுள்ள மனிதன்,(14) பற்றில் உண்டானவையும், பிறப்பு, முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றை உண்டாக்குபவையுமான கட்டுகளை {பந்தங்களைக்} கைவிட்டு, நான் எனது என்ற மமதை மற்றும் அகங்காரத்தில் இருந்து விடுபட்டு நிச்சயம் விடுதலையை {முக்தியை} அடைவான்[2].(15)

[2] கும்பகோணம் பதிப்பில், "மாயையாகி விதையினின்று உண்டானது, புத்தியாகி அடிமரமுள்ளதும், பெரியதும் மஹத்தத்துவமும், அஹங்காரமுமாகிற தளிர்களுள்ளதும், இந்திரியங்களிருக்கும் இடங்களாகிற பொந்துகளுள்ளதும், மஹாபூதங்களாகிற பெரிய கிளைகளுள்ளதும், பேதஜ்ஞானமாகிற சிறிய கிளைகளுள்ளதும், எப்பொழுதும் இலைகளுள்ளதும், எப்பொழுதும் மலர்களுள்ளதும், புண்ணியப் பாபங்களாகிற கனிகளின் உற்பத்தியுள்ளதும் எல்லாப் பிராணிகளுக்கும் அடுத்துப் பிழைக்கத்தக்கதும் ஸநாதனமுமான பிரம்மமாகி விருக்ஷத்தைத் தத்துவஜ்ஞானமாகிற கத்தியினால் வெட்டிப் பிளந்து மரணத்தையும், ஜன்மத்தையும், ஜரையையும் கொடுக்கக்கூடியவைகளான பற்றுதல்களென்னும் பாசங்களைவிட்டு மமதையும் அஹங்காரமுமற்ற பண்டிதன் முக்தி பெறுவான்; இதில் ஸம்சயமில்லை" என்றிருக்கிறது.

மாற்றமில்லாதவையும், நண்பர்களும், புத்தியற்றவையாக அறியப்பட வேண்டியவையுமான இரு பறவைகள் இருக்கின்றன. இவையிரண்டில் இருந்து வேறுபட்ட மற்றொன்று புத்தி என்றழைக்கப்படுகிறது.(16) ஞான இயல்பற்றதும், புத்தியற்றதுமான சுயம் {ஆன்மா}, எது இயற்கைக்கும் மேலானதோ அதை அறியும்போது, க்ஷேத்திரத்தைப் புரிந்து கொண்டு, குணங்கள் அனைத்தையும் கடந்த புத்தியுடன் கூடியதாக அனைத்தையும் தெரிந்து கொண்டு பாவங்கள அனைத்தில் இருந்து விடுதலை அடைகிறது[3]" என்றான் {பிரம்மன்}.(17)

[3] கும்பகோணம் பதிப்பில், "(இந்த மரத்தில்) நித்யமானவைகளும், அடங்கினவைகளும், அசேதனங்களுக்குமான இரண்டு பறவைகள் இருக்கின்றன. எவன் இவைகளைவிட மேலானவனும், வேறானவனுமாயிருக்கிறானோ அவன் சைதன்யமுள்ளவனென்று சொல்லப்படுகிறான். அசேதனன் போன்றவனும், ஜீவர்களுக்குரிய உபாதிகளால் விடப்பட்டவனும், புத்தியைக் காட்டிலும் மேலானவனும், சைதன்யத்தை உண்டுபண்ணுகிறவனும், அந்தராத்மாவும், க்ஷேத்ரஜ்ஞனும் எல்லாப் புத்திகளுக்கும் ஸாக்ஷியும் குணங்களைக் கடந்தவனுமான ஜீவன் எல்லாப் பாவங்களாலும் விடப்படுகிறான்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "புலப்படாதது படைப்பின் வித்தாக இருக்கிறது. புத்தியே பெரும் அடிமரமாக இருக்கிறது. பேரஹங்காரம் அதன் கிளைகளாகவும், புலன்கள் அவற்றுக்குள் உள்ள பொந்துகளாகவும் இருக்கின்றன. பெரும்பூதங்கள் சிறுகிளைகளாகவும், அதனிலும் சிறு கிளைகளாகவும் இருக்கின்றன. இதுவே பிரம்மமெனும் நித்திய மரமாகும். அதில் எப்போதும் இலைகளும், மலர்களும் நிறைந்திருக்கின்றன. அது நல்ல மற்றும் தீய கனிகளைத் தருகிறது. அஃது அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வாதாரத்தைத் தருகிறது. ஞானமெனும் உயர்ந்த இருக்கையின் மூலம் ஒருவனால் இம்மரத்தை வெட்டிப் பிளக்க முடியும். அப்போது அவன் இறப்பு, பிறப்புடன் கூடிய தொடர்பைக் கைவிட்டு இறவாமையை அடைகிறான். அத்தகைய மனிதன் உரிமையென்ற உணர்வற்றவனாகவும், அகங்காரமற்றவனாகவும் இருக்கிறான். அவன் விடுதலையடைந்தவன் என்பதில் ஐயமில்லை. அங்கே நண்பர்களான இரு பறவைகள் எப்போதும் இருக்கின்றன. இவற்றில் ஒன்று மயக்கம் {ஜீவாத்மா} என்றும் மற்றொன்று நனவு {பரமாத்மா} என்றும் சொல்லப்படுகின்றன. மயக்கம் கொண்ட ஆவி {மனம்} சச்சரவு நிறைந்ததாக இருக்கிறது. புத்தியுள்ள ஆவியான {மனமான} மற்றொன்று ஆத்மாவுக்குள் இருக்கிறது. ஆவிகளுக்குள் {மனங்களுக்குள்} உள்ள சச்சரவை க்ஷேத்ரஜ்ஞன் {ஆன்மா} புத்தியைப் பயன்படுத்திப் புரிந்து கொள்கிறான். அவன் குணங்களைக் கடந்து, மரணக் கயிற்றில் இருந்து விடுபடுகிறான்" என்றிருக்கிறது.

அஸ்வமேதபர்வம் பகுதி – 47ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்