Wednesday, November 20, 2019

ஏகத்வம், நானாத்வம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 48

Unity and Diversity! | Aswamedha-Parva-Section-48 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 33)


பதிவின் சுருக்கம் : யோகிகளின் வகைகளையும், மோக்ஷத்தை விரும்புகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு கருத்துகளையும் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்...


பிரம்மன், "{பிரம்மமே உலகம் என்று சொல்லும்} சிலர் பிரம்மத்தை {பிரபஞ்சம் என்ற} மரமாகக் கருதுகின்றனர். சிலர் பிரம்மத்தை பெருங்காடாக {பிரபஞ்சமாகக்} கருதுகின்றனர். {பிரம்மம் உலகம் ஆவதில்லை, உலகமே பிரம்மத்தில் இருந்து தோன்றுகிறது என்று சொல்லும்} சிலர் கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டுக் கடந்த நிலையாக அதை {பிரம்மத்தைக்} கருதுகின்றனர்.(1) இவை யாவும் புலப்படாததில் {அவ்யக்தத்தில்} இருந்து உண்டாகி ஈர்க்கப்படுகிறது என்று அவர்கள் {ஸாங்கியர்கள்} நினைக்கின்றனர். {பிரம்மமே உலகம் என்று சொல்லும்} எவன் தன் முடிவு வருங்காலத்தில் ஒரேயொரு மூச்சுவிடும்பொழுதில் ஆன்மாவை அடைந்து {அதனுடன்} ஒரே நிலையை அடைகிறானோ அவன் இறவாமைக்குத் தகுந்தவனாகிறான். கண்ணிமைக்கும் காலத்திற்குள்ளாக சுயத்தைச் சுயத்தில் அடக்கும் ஒருவன் {பிரம்மத்தில் இருந்தே உலகம் உண்டாகிறது என்று சொல்பவன்} தன் அமைதியின் மூலம் ஞானிகளால் அடையப்படும் வற்றாத உடைமையை {மோக்ஷத்தை} அடைகிறான். பிராணாயாமம்[1] என்றழைக்கப்படும் வழிமுறையின்படி உயிர் மூச்சுகளை மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்துவதன் மூலமும்,(2-4)பத்து, அல்லது பனிரெண்டின்[2] மூலமும் அவன் இருபத்து நான்கையும் கடந்திருப்பதை அடைகிறான்.



[1] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, புத்தி, மனம் இப்பன்னிரண்டையும் அடக்கும் உபாயம் என்பது பழைய உரை" என்றிருக்கிறது.

[2] "பத்து அல்லது பனிரெண்டு என்பதன் மூலம் சொல்லப்படும் கருத்தில் உரையாசிரியர்கள் வேறுபடுகிறார்கள். நீலகண்டர், யோகத்தின் எட்டு சிறப்பியல்புகளான யமம், நியமம், ஆஸனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், ஸமாதி, தாரகை {யுக்தி}, வைராக்யம் ஆகிய பத்து என்று நினைக்கிறார். பனிரெண்டு என்பது ஏற்கனவே சொன்னவற்றில் முதல் எட்டுடன், மைத்திரீ, கருணை, முதிதை, உபேக்ஷை ஆகிய நான்கையும் சேர்த்து வருவதாகும். பத்து அல்லது பனிரெண்டு என்று கொள்ளாமல் இது மொத்தம் இருபத்தி இரண்டு என்று எடுத்துக் கொண்டால், யமத்தின் ஐந்து வழிமுறைகள், நியமத்தில் ஐந்து வழிமுறைகள், ஆசனம் தொடங்கிச் சமாதி வரைய யோகத்தில் எஞ்சியுள்ள ஆறு, மைத்திரீயுடன் தொடங்கும் நான்கு மற்றும் தாரகை மற்றும் வைராக்கியம் என்ற இரண்டும் எனக் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பத்து அல்லது பன்னிரண்டு விதமான பிராணாயாமங்களால் அடிக்கடி பிராணன்களை அடக்கி இருபத்து நான்காவ(தான அவ்யக்தத்)தைக் காட்டிலும் மேலான (இருபத்தைந்தாமவனான) புருஷனை அடைவான்" என்றிருக்கிறது.

இவ்வாறே முதலில் அமைதியான ஆன்மாவை அடையும் {நிர்மலமான சத்வ குணமுள்ள} ஒருவன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையையும் அடைகிறான்.(5) புலப்படாததில் இருந்து எழுவதில் {அவ்யக்தத்தில்} நல்லியல்பின் {சத்வ} குணம் அதிக ஆதிக்கம் செலுத்தும்போது அவன் இறவாமையை அடைய {அமிருதனாக இருக்கத்} தகுந்தவனாகிறான். நல்லியல்பை அறிந்தவர்கள், நல்லியல்பைக் காட்டிலும் உயர்ந்தது வேறேதுமில்லை என்று சொல்லி அதை உயர்வாகப் புகழ்கின்றனர்.(6) புருஷன் நல்லியல்பைச் சார்ந்திருக்கிறான் என்பதை நாம் உள்ளுணர்வின் மூலம் அறிகிறோம். மறுபிறப்பாளர்களே, வேறு எந்த வழிமுறைகளின் மூலமும் புருஷனை அடைவது சாத்தியமில்லை.(7)


மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துணிவு {தைரியம்}, தீங்கிழையாமை {கொல்லாமை / அஹிம்ஸை}, சீர்மை {ஸமமாக இருப்பது}, வாய்மை {உண்மை}, நேர்மை, அறிவு {ஞானம்}, கொடை {தியாகம்}, துறவு {ஸந்யாஸம்} ஆகியன நல்லியல்பில் இருந்து எழும் ஒழுக்க நடைமுறையின் சிறப்பியல்புகளாக {ஸத்வத்தின் கார்யங்களெனச்} சொல்லப்படுகின்றன.(8) இந்த உள்ளுணர்வின் மூலமே ஞானிகள், புருஷன் மற்றும் நல்லியல்பின் அடையாளங்களை {ஒன்றென} நம்புகிறார்கள். இதில் ஐயமேதுமில்லை.(9) ஞானத்தில் அர்ப்பணிப்புள்ள கல்விமான்கள் சிலர், க்ஷேத்ரஜ்ஞன் {புருஷன்} மற்றும் இயற்கைக்கு {சத்வத்திற்கு} இடையிலான ஒற்றுமையை வலியுறுத்திச் சொல்கின்றனர். எனினும், இது சரியல்ல.(10)

இயற்கையானது {சத்வம்}, புருஷனிலிருந்து வேறுபட்டது எனச் சொன்னால், அதுவும் கருத்தின்மையையே குறிக்கும்.(11) உண்மையில், வேற்றுமையும், ஒற்றுமையும் (புருஷனுக்கும், இயற்கைக்கும் பொருந்துவதாக) அறியப்பட வேண்டும். ஒற்றுமையும் {ஏகத்வமும்}, வேற்றுமையும் {நானாத்வமும்} இவ்வாறே விதிக்கப்பட்டிருக்கின்றன. இதுவே கல்விமான்களின் கோட்பாடாகும். கொதுகு {கொசு} மற்றும் அத்திப்பழத்தில் ஒற்றுமையும், வேற்றுமையும் காணப்படுகின்றன.(12) நீரில் இருக்கும் மீன் வேறாக இருப்பதைப் போலவே இவை இரண்டின் (புருஷன் மற்றும் இயற்கையின் {சத்வத்தின்} உறவு இருக்கிறது. உண்மையில் அவற்றின் உறவானது தாமரை இலையில் உள்ள நீர்த்துளிகளைப் போன்றதாகும்" என்றான் {பிரம்மன்}".(13)

ஆசான் தொடர்ந்தார், "{பிரம்மனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், கல்விமான்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான அந்தப் பிராமணர்கள் சில ஐயங்களை உணர்ந்தனர். (எனவே) அவர்கள் மீண்டும் ஒருமுறை (அனைத்துயிரினங்களின்) பெரும்பாட்டனைக் கேள்வி கேட்டனர்" {என்றார் ஆசான்}[3].(14)

[3] "புலப்படாதது அல்லது பிரகிருதி என்ற நிலை நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} ஆகிய மூன்று குணங்களும் கலந்த நிலையாகும். புலப்படாதது என்பது படைப்புக்கு முன் இருக்கும் நிலையாகும். நல்லியல்பு என்ற குறிப்பிட்ட குணம் மேலோங்கும்போது எவனில் இருந்து அனைத்தும் உண்டாகிறதோ அந்தப் புருஷன் எழுகிறான். புருஷன் மற்றும் இயற்கையின் உறவு ஒற்றுமை மற்றும் வேற்றுமை ஆகிய இரண்டுமாகும். கொதுகு மற்றும் அத்திப்பழம், மீன் மற்றும் நீர், நீர்த்துளிகள் மற்றும் தாமரை இலைகள் என்ற மூன்று உதாரணங்களும் புருஷன் மற்றும் இயற்கைக்கு இடையிலான உறவுகள் விளக்குகின்றன. அவன் இயற்கையில் இருக்கிறான், ஆனால் அவன் அதனிலிருந்து வேறுபட்டவனாவான். சேர்தல், பிரிதல் என்ற இரண்டும் இருக்கின்றன. இதுவே இந்தப் பகுதியில் விளக்கப்படும் கருத்தாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அஸ்வமேதபர்வம் பகுதி – 48ல் உள்ள சுலோகங்கள் : 14

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்