Friday, November 29, 2019

உதங்கர்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 53

Utanka! | Aswamedha-Parva-Section-53 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 38)


பதிவின் சுருக்கம் : துவாரகைக்குச் செல்லும் வழியில் உதங்கரைக் கண்ட கிருஷ்ணன்; கௌரவர்கள் அழிக்கப்பட்டதற்காகச் சபிக்கப் போவதாகச் சொன்ன உதங்கர்; உதங்ருக்கு உண்மையைச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} துவாரகைக்குப் புறப்படும்போது, பகைவர்களைத் தண்டிப்பவனும், பாரதக் குல இளவரசர்களில் முதன்மையானவனும் ஆனவன் {அர்ஜுனன்} அவனைத் தழுவி கொண்டு, தன் பணியாட்களுடன் சேர்ந்து திரும்பினான்.(1) விருஷ்ணி வீரனை மீண்டும் மீண்டும் தழுவிய பல்குனன் {அர்ஜுனன்}, அவன் தன் பார்வையின் வரம்புக்குள் உள்ள வரை மீண்டும் மீண்டும் தன் கண்களை அவனை நோக்கிச் செலுத்தினான்.(2) கோவிந்தன் மேல் விழுந்த தன் பார்வையைப் பெருங்கடினத்துடன் பிருதையின் மகன் {அர்ஜுனன்} விலக்கினான். வெல்லப்பட முடியாதவனான கிருஷ்ணனும் அவ்வாறே செய்தான் (அதையே செய்தான்).(3) அந்த உயர் ஆன்மா புறப்படும்போது வெளிப்பட்ட அறிகுறிகளை {சகுனங்களை} நான் உனக்கு விரிவாகச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(4)


தேருக்கு முன் பெருவேகத்துடன் வீசிய காற்றானது, பாதையில் இருந்து மணற்துகள்கள், புழுதி மற்றும் முட்களை அகற்றியது.(5) வாசவன் {இந்திரன்}, அந்தச் சாரங்கதாரிக்கு {கிருஷ்ணனுக்கு} முன்பு நறுமணமிக்க தெய்வீக மலர்மாரியைப் பொழிந்தான்.(6) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்} இவ்வாறு சென்று கொண்டிருந்தபோது, நீரில்லாத பாலைவனத்தை அடைந்தான். அங்கே அளவற்ற சக்தி கொண்டவரும், உதங்கர் என்ற பெயரைக் கொண்டவருமான முதன்மையான தவசியைக்[1] கண்டான்.(7) பெரிய கண்களையும், பெருஞ்சக்தியையும் கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்} அந்தத் தவசியை வணங்கினான். பதிலுக்கு அந்தத் தவசியாலும் வணங்கப்பட்டான். அப்போது வாசுதேவன் அவரது நலத்தை விசாரித்தான்.(8)

[1] ஆதிபர்வம் பகுதி 3-ல் கண்ட உதங்கரின் கதையும், இங்கே குறிப்பிடப்படும் உதங்கரின் கதையும் கிட்டத்தட்ட ஒன்று போல் தெரிகிறது. இருவரும் ஒருவராகவே இருக்க வேண்டும்.

பிராமணர்களில் முதன்மையானவரானவரும், மாதவனால் மென்மையாக விசாரிக்கப்பட்டவருமான உதங்கர், முறையாக {பதிலுக்கு} அவனைக் கௌரவித்து, இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(9) அவர் {உதங்கர்}, "ஓ! சௌரியே, குருக்கள் மற்றும் பாண்டவர்களின் மாளிகைகளுக்குச் சென்று சகோதரர்களுக்கிடையில் நீடிக்க வேண்டிய நீடித்த புத்தியை நிறுவுவதில் வெற்றி கண்டாயா? அனைத்தையும் எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்.(10) ஓ! கேசவா, ஓ! விருஷ்ணி குலத்தில் முதன்மையானவனே, உன் உறவினர்களும், உனக்கு எப்போதும் அன்பானவர்களுமான அவர்களை அமைதியடையவும், ஒற்றுமையடையவும் செய்தாயா?(11) ஓ! பகைவர்களை எரிப்பவனே, பாண்டு மகன்கள் ஐவரும், திருதராஷ்டிரன் பிள்ளைகளும் இவ்வுலகில் இன்பமாக உன்னுடன் விளையாடினார்களா?(12) கௌரவர்கள் உன்னால் தணிக்கப்பட்டதன் விளைவால் மன்னர்கள் அனைவரும் தங்கள் தங்கள் நாடுகளில் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்களா?(13) ஓ! மகனே, நான் உன்னிடம் கொண்ட நம்பிக்கை கௌரவர்களைப் பொறுத்தவரையில் கனி கொடுத்ததா {பயனளித்ததா}?" என்று கேட்டார்.(14)

அருளப்பட்ட அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, "கௌரவர்களைப் பொறுத்தவரையில் {அவர்களுக்கு} நல்ல புத்தியைக் கொண்டு வருவதற்கு என்னால் முடிந்த அளவுக்கு முதலில் நான் முயன்றேன். எவ்வழிமுறையினாலும் அவர்களில் அமைதியை நிறுவச் செய்ய முடியாதபோது,(15) உற்றார் உறவினருடன் கூடிய அவர்கள் அனைவரும் மரணமடைய நேர்ந்தது. புத்தியாலோ, பலத்தாலோ விதியைக் கடப்பது சாத்தியமல்ல.(16) ஓ! பெரும் முனிவரே, ஓ! பாவமற்றவரே, இதுவும் நீர் அறியாததல்ல. என்னைக் குறிப்பிட்டு பீஷ்மர் மற்றும் விதுரர் செய்த ஆலோசனைகள் அனைத்தையும் அவர்கள் (கௌரவர்கள்) மீறினர்[2].(17) ஒருவரோடொருவர் மோதிக் கொண்ட அவர்கள் யமனுடைய வசிப்பிடத்திற்கு விருந்தினர்களாகச் சென்றனர். நண்பர்கள் அனைவரும், பிள்ளைகள் அனைவரும் கொல்லப்பட்ட நிலையில் கொல்லப்படாமல் எஞ்சியவர்கள் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே. பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் கூடிய திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்" என்றான் {கிருஷ்ணன்}.(18)

[2] "மஹயம் என்று இங்கே குறிப்பிடப்படுவது என்னுடைய தெய்வீக இயல்பைக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு என்பதற்கு நிகரானது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவர்கள், நானும், பீஷ்மரும், விதுரரும் சொன்ன புத்தியைக் கேட்கவில்லை" என்றிருக்கிறது.

கிருஷ்ணன் இந்தச் சொற்களைச் சொன்ன போது, உதங்கர் கோபத்தில் நிறைந்தவராக, சினத்தில் கண்களை அகல விரித்தவராக இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(19)

உதங்கர், "ஓ! கிருஷ்ணா, உன் உறவினர்களும், உனக்கன்பானவர்களுமான குரு குலத்தின் முதன்மையானவர்களைக் காக்க இயன்றவனாக இருந்தும் நீ மீட்கவில்லை என்பதால் நான் நிச்சயம் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(20) ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, வலுக்கட்டாயமாகப் பொறுத்துச் செல்லுமாறு அவர்களை நீ வற்புறுத்தாததால் கோபத்தில் நிறைந்திருக்கும் நான் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(21) ஓ! மாதவா, குருக்களில் முதன்மையான அவர்களைக் காக்க முழுமையாக இயன்றவனாக இருந்தும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, கபடத்தில் மூழ்கி, அவர்களிடம் நீ அக்கறையற்றவனாக இருந்ததால்தான் அவர்கள் அனைவரும் அழிவை அடைந்திருப்பதாகத் தெரிகிறது" என்றார்.(22)

வாசுதேவன் {கிருஷ்ணன் உதங்கரிடம்}, "ஓ! பிருகு குலக் கொழுந்தே, நான் விரிவாகச் சொல்வதைக் கேட்பீராக. நான் சொல்லும் சமாதானங்களையும் நீர் ஏற்பீராக. ஓ! பிருகு குலத்தவரே {பார்க்கவரே} நீர் ஒரு தவசியாவீர்.(23) ஆன்மா தொடர்புடைய என் சொற்களைக் கேட்ட பிறகு நீர் என்னைச் சபிக்கலாம். அற்பமான தவத்தகுதியைக் கொண்டு எந்த மனிதனாலும் என்னை அவமதிக்க முடியாது.(24) ஓ! தவசிகளில் முதன்மையானவரே, உமது தவங்கள் அனைத்தும் அழிவடைவதைக் காண நான் விரும்பவில்லை. நீர் பெருமளவில் சுடர்மிக்கத் தவங்களைச் செய்தவராவீர். நீர் உமது ஆசான்களையும், பெரியோர்களையும் நிறைவடையச் செய்துள்ளீர்[3].(25) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நீர் குழந்தைப் பருவத்திலிருந்தே பிரம்மச்சரிய விதிகளை நோற்று வருவதை நான் அறிவேன். எனவே, பெரும் துன்பத்துடன் தவங்களின் மூலம் நீர் அடைந்தவற்றுக்குக் குறைவு ஏற்படவோ, உமது தவங்கள் அழிவடையவோ நான் விரும்பவில்லை" என்றான் {கிருஷ்ணன்}.(26)

[3] "சரியாகவோ, தவறாகவோ மற்றொருவனைச் சபிப்பதன் மூலம் ஒரு தவசி தன் தவங்களை இழக்கிறார். எனவே, தவசிகளாக இருந்த பிராமணர்களால் எப்போதும் மன்னிக்கும் தன்மை {பொறுமை} கடைப்பிடிக்கப்பட்டது. ஒரு பிராமணரின் பலம் மன்னிக்கும் தன்மையில் இருந்தது. அவர் எவ்வளவு மன்னிக்கும் தன்மையுடன் இருந்தாரோ அவ்வளவு சக்தி மிக்கவராகத் திகழ்வார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அஸ்வமேதபர்வம் பகுதி – 53ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்