Saturday, November 30, 2019

பாலைவன நீர்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 55

Water in desert! | Aswamedha-Parva-Section-55 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 40)


பதிவின் சுருக்கம் : உதங்கருக்கு விஷ்வரூப தரிசனம் அளித்த கிருஷ்ணன்; உதங்கர் பெற்ற வரம்; சண்டாள வடிவில் வந்த இந்திரன் கொடுத்த அமிர்தத்தை மறுத்த உதங்கர்; பாலைவனத்திலும் நீர்கிடைக்கும் வரத்தை உதங்கருக்கு அளித்த கிருஷ்ணன்...


உதங்கர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! ஜனார்த்தனா, அண்டத்தைப் படைத்தவன் நீ என்பதை நான் அறிவேன். நீ என்னிடம் கொண்ட கருணையின் விளைவே இந்த ஞானம் என்பதில் ஐயமில்லை.(1) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, என் மனம் உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டிருப்பதால் உற்சாகம் நிறைந்து அமைதியின் வசப்பட்டதாக இருக்கிறது. ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, இதற்கு மேலும் என் இதயம் உன்னைச் சபிக்க விரும்பவில்லை என்பதை அறிவாயாக.(2) ஓ! ஜனார்த்தனா, அற்பக் கருணையையாவது உன்னிடம் அடையத்தகுந்தவனாக நான் இருந்தால், உன் இறை வடிவை {விஷ்ணு ரூபத்தை} எனக்கு ஒருமுறை காட்டுவாயாக" என்று கேட்டார்".(3)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவரிடம் நிறைவடைந்த அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, பெரும் நுண்ணறிவைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} கண்ட நித்தியமான வைஷ்ணவ வடிவை உதங்கருக்குக் காண்பித்தான்.(4) உதங்கர், உயர் ஆன்ம வாசுதேவனை வலிமைமிக்கக் கரங்களுடன் கூடியவனாக அண்ட வடிவில் கண்டார். அந்த வடிவின் பிரகாசம் சுடர்மிக்க நெருப்பைப் போன்றோ, ஆயிரம் சூரியர்களைப் போன்றோ இருந்தது. அது {அவ்வடிவம்} வெளிமுழுவதையும் நிறைத்தபடி அவரது முன்பு நின்றது. அனைத்துப் பக்கங்களிலும் முகங்களைக் கொண்டிருந்தது.(5) அந்தப் பிராமணர் உதங்கர், உயர்ந்ததும், அற்புதம் நிறைந்ததுமான விஷ்ணுவின் அந்த வைஷ்ணவ வடிவைக் கண்டு, உண்மையில் (அத்தோற்றத்தில்) பரமனையே கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தார்.(6)

உதங்கர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! அண்டத்தையே கைவினையாய் கொண்டவனே, ஓ! அண்டத்தின் ஆன்மாவே, ஓ! அனைத்துப் பொருட்களின் பிறப்பிடமே நான் உன்னை வணங்குகிறேன். உன் பாதத்தால் மொத்த பூமியையும் மறைத்தும், தலையால் ஆகாயத்தை நிறைத்தும் இருக்கிறாய்.(7) பூமிக்கும், ஆகாயத்திற்கும் இடையில் இருப்பதை உன் வயிறு நிறைத்திருக்கிறது. திசைப்புள்ளிகள் அனைத்தும் உன் கைகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஓ! மங்கா மகிமை கொண்டவனே, இவை யாவும் நீயே.(8) சிறப்பானதும், அழிவற்றதுமான இந்த வடிவை விலக்குவாயாக. நான் இப்போது உன்னை நித்தியமான (மனித) வடிவில் காண விரும்புகிறேன்" என்றார்".(9)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஜனமேஜயா, நிறைவடைந்த ஆன்மாவைக் கொண்ட கோவிந்தன், அவரிடம் {உதங்கரிடம்}, "வரம் ஏதும் கேட்பீராக" என்ற இந்த வார்த்தைகளைச் சொன்னான்.

எனினும் உதங்கர்,(10) "ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, ஓ! கிருஷ்ணா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, உன்னுடைய இந்த வடிவைக் கண்டதே எனக்குப் போதுமான வரமாகும்" என்றார்.(11)

எனினும், கிருஷ்ணன் மீண்டும் அவரிடம், "இக்காரியத்தில் தயங்காதீர். இது செய்யப்பட வேண்டும். என் வடிவைக் கண்டது கனியற்றதாகக் கூடாது" என்றான்.(12)

உதங்கர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! தலைவா, எது செய்யப்பட வேண்டுமென நீ நினைக்கிறாயோ, அதை நான் நிறைவேற்ற வேண்டும். நான் எங்கெல்லாம் நீரை விரும்புவேனோ அங்கெல்லாம் அஃதை அடைய விரும்புகிறேன். இத்தகைய பாலைவனங்களில் நீர் கிடைப்பது அரிதாகும்" என்றார்.(13)

அந்தச் சக்தியை விலக்கிக் கொண்ட பரமன், அப்போது உதங்கரிடம், "எங்கெல்லாம் உமக்கு நீர் தேவைப்படுகிறதோ, அங்கே என்னை நினைப்பீராக" என்று சொன்னான். இவ்வாறு சொல்லிவிட்டு அவன் துவாரகையை நோக்கிச் சென்றான்.(14)

அதன் பிறகு ஒரு நாள் சிறப்புமிக்கவரான உதங்கர், பாலைவனத்தில் மிகுந்த தாகத்துடன் நீர் வேண்டித் திரிந்தார். அவ்வாறு திரியும்போது, மங்கா மகிமை கொண்ட கிருஷ்ணனை நினைத்தார்.(15) அப்போது, அந்த நுண்ணறிவுமிக்க முனிவர் {உதங்கர்}, அந்தப் பாலைவனத்தில், உடல்முழுவதும் புழுதி படர்ந்தவனும், நாய்க்கூட்டத்தால் சூழப்பட்டவனுமான, (சண்டாள வகையைச் சேர்ந்த) ஒரு நிர்வாண வேடனை {புலையனைக்}[1] கண்டார்.(16) மிகக் கடுந்தோற்றத்தில் இருந்த அவன், ஒரு வாளையும், வில்லையும், கணைகளையும் தரித்திருந்தான். அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர், அந்த வேடனின் சிறுநீர் உறுப்பில் இருந்து {காலருகில் உள்ள தோற்பையில்} அபரிமிதமான நீர் வருவதை {இருப்பதைக்} கண்டார்[2].(17)

[1] மலைசார்ந்த இடங்களில் திரியும் வேடனைக் குறித்த மதங்கன் என்ற சொல் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. புலையன் என்று கும்பகோணம் பதிப்பில் இருக்கிறது.

[2] கும்பகோணம் பதிப்பில், "பிராம்மண ஸ்ரேஷ்டரான உதங்கர் அவனுடைய கால்பக்கத்திலுள்ள தோற்பையில் அதிக ஜலமிருக்கக்கண்டார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது. இங்கே மொழிமயக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், கும்பகோணம் பதிப்பின் உரையே சரியாகத் தெரிகிறது. இங்கே சிறுநீர் உறுப்பு என்று கொள்ளாமல் தோற்பை என்று கொள்வதே சரியாக இருக்கும். மூலச் சொற்கள் பின்வருமாறு, "பீஷணம் பத்தனிஸ்த்ரிம்ஸம் பாணகார்முகதாரிணம் தஸ்யாத ஸ்ரோதஸோ (அ)பஶ்யத்வாரி பூரி த்விஜோத்தம bhīṣaṇaṃ baddhanistriṃśaṃ bāṇakārmukadhāriṇam tasyādhaḥ srotaso 'paśyad vāri bhūri dvijottamaḥ". - https://sacred-texts.com/hin/mbs/mbs14054.htm

உதங்கர் கிருஷ்ணனை நினைத்ததும், அந்த வேடன் சிரித்துக் கொண்டே அவரிடம், "ஓ! உதங்கரே, ஓ! பிருகு குலத்தவரே, இந்த நீரை என்னிடம் இருந்து நீர் பெறுவீராக.(18) தாகத்தால் பீடிக்கப்பட்ட உம்மிடம் பெருங்கருணை கொள்கிறேன்" என்றான்.

வேடனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்த நீரை ஏற்கும் விருப்பம் எதையும் அந்தத் தவசி வெளிக்காட்டவில்லை.(19) நுண்ணறிவுமிக்க உதங்கர், மங்கா மகிமை கொண்ட கிருஷ்ணனை நிந்திக்கவும் தொடங்கினார். எனினும் அந்த வேடன் மீண்டும் மீண்டும் அம்முனிவரிடம் "பருகுவீராக" என்றான்.(20) அந்தத் தவசி, இவ்வாறு அளிக்கப்பட்ட நீரைப் பருக மறுத்தார். மறுபுறம், பசி மற்றும் தாகத்தால் பீடிக்கப்பட்ட அவர் கோபவசப்பட்டார். ஓ! மன்னா, அந்த உயர் ஆன்மா முனிவரின் தீர்மானத்தால் அவமதிக்கப்பட்ட அந்த வேடன், தன் நாய் கூட்டத்துடன் அங்கேயே அப்போதே மறைந்து போனான். (அற்புதம் நிறைந்த) அந்த மறைதலைக் கண்ட உதங்கர் நாணத்தால் நிறைந்தார்.(22) அவர், பகைவர்களைக் கொல்பவனான கிருஷ்ணனால் (அவன் கொடுத்த வரத்தால்) தாம் வஞ்சிக்கப்பட்டதாகவும் நினைத்தார்.

மிக விரைவில், சங்கு சக்கரக் கதாதாரி {கிருஷ்ணன்} அந்த (வேடன் வந்த) வழியிலேயே உதங்கரிடம் வந்தான். கிருஷ்ணனிடம் பேசிய அந்தப் பிராமணர் {உதங்கர்}, "ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, ஓ! தலைவா, பிராமணர்களில் முதன்மையான ஒருவனுக்கு ஒரு வேடனின் சிறுநீர் வடிவில் {தோற்பையிலுள்ள} நீரை அளிப்பது முற்றிலும் தகாததாகும்" என்றார்[3].

[3] கும்பகோணம் பதிப்பில், "நீர் பிராம்மண ஸ்ரேஷ்டர்களுக்குப் புலையனுடைய தோற்பையிலுள்ள அவிதமான ஜலத்தைக் கொடுப்பது யுக்தம் அன்று" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.

பெரும் நுண்ணறிவுமிக்க ஜனார்த்தனன், இச்சொற்களைச் சொன்ன உதங்கருக்கு ஆறுதலளிக்கும் வகையில் மென்மையான சொற்கள் பலவற்றைச் சொல்லி, "எந்த வடிவில் நீரை உமக்கு அளிப்பது முறையோ அந்த வடிவிலேயே உமக்கு நீர் அளிக்கப்பட்டது. ஐயோ, ஆனால் நீர் அதைப் புரிந்து கொள்ளவில்லை. உமக்காக வஜ்ரதாரியான புரந்தரன் என்னால் வேண்டிக்கொள்ளப்பட்டான்.(23-27)

பலமிக்க அந்தத் தேவனிடம், "நீரின் வடிவில் உதங்கருக்கு அமுதத்தை அளிப்பாயாக" என்பதே நான் சொன்ன சொற்களாகும். அப்போது தேவர்களின் தலைவன் என்னிடம், "இறக்கக்கூடிய ஒருவன் இறவாதவன் {அமரன்} ஆவது முறையாகாது.(28) உதங்கருக்கு வேறேதும் வரத்தைக் கொடுப்பாயாக" என்றான்.

ஓ! பிருகுவின் மகனே, இச்சொற்களே மீண்டும் மீண்டும் எனக்குச் சொல்லப்பட்டன. எனினும், "உதங்கருக்கு அமுதம் கொடுக்கப்பட வேண்டும்" என்ற இந்தச் சொற்களால் மீண்டும் சச்சியின் தலைவன் {இந்திரன்} என்னால் வேண்டிக் கொள்ளப்பட்டான்.(29)

தேவர்களின் தலைவன், எனக்கு ஆறுதலளிக்கும் வகையில், "ஓ! பெரும் நுண்ணறிவு மிக்கவனே, அவருக்கு அமுதம் கொடுக்கப்பட வேண்டுமெனில்,(30) நான் ஒரு வேடனின் வடிவை ஏற்று உயர் ஆன்மா கொண்ட அந்தப் பிருகு குலக் கொழுந்துக்கு அதைக் கொடுப்பேன். அவ்வாறே அந்தப் பிருகுவின் மைந்தர் அதை ஏற்றுக் கொள்வாரெனில்,(31) ஓ! தலைவா, நான் அவருக்கு அதைக் கொடுக்கச் செல்வேன். எனினும், அவர் அலட்சியத்தால் என்னைத் திருப்பி அனுப்பினால் எக்காரணத்தினாலும் நான் அவருக்கு அதைக் கொடுக்க மாட்டேன்" என்றான்[4].(32)

[4] இங்கே சிறுநீர் வடிவில் அமுதத்தைக் கொடுக்கப்போகிறேன் என இந்திரன் கிருஷ்ணனிடம் சொல்லவில்லை. சண்டாள வடிவில் சென்று அமுதத்தைக் கொடுக்கப் போகிறேன் என்றே சொல்கிறான். எனவே, மற்ற மூன்று பதிப்புகளிலும் சிறுநீர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தாலும், கும்பகோணம் பதிப்பில் உள்ளது போலத் தோற்பையிலுள்ள நீர் என்பதே சரியானதாக இருக்க வேண்டும்.

என்னிடம் இந்த உடன்பாட்டைச் செய்து கொண்ட வாசவன் {இந்திரன்}, அமுதத்தைக் கொடுப்பதற்காகவே அந்தத் தோற்றத்தில் உம் முன் தோன்றினான். எனினும், அந்தச் சிறப்புமிக்கவன் சண்டாளத் தோற்றத்தில் இருப்பதைக் கொண்டு நீர் அவனை அலட்சியம் செய்து அனுப்பிவிட்டீர். உமது பிழை பெரியதாகும். உமது விருப்பத்தைப் பொறுத்தவரையில் என் அதிகாரத்திற்கு உட்பட்டு என்னால் செய்ய முடிந்ததைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உண்மையில், துன்பம் நிறைந்த உமது தாகத்தைத் தணிக்க நான் ஏற்பாடு செய்கிறேன். ஓ! மறுபிறப்பாளரே, நீர் நீரை விரும்பும் நாட்களில்,(33-35) நீருண்ட மேங்கங்கள் இந்தப் பாலைவனத்தில் எழும். ஓ! பிருகு குல மைந்தரே, அந்த மேகங்கள் உமக்குச் சுவைமிக்க நீரை அளிக்கும். உண்மையில், அம்மேகங்கள் உதங்க மேகங்கள் என்று உலகில் அறியப்படும்" என்றான் {கிருஷ்ணன்}.(36)

கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கர், மகிழ்ச்சியால் நிறைந்தார். ஓ! பாரதா {ஜனமேஜயா}, இந்த நாள் வரையிலும் வறண்ட பாலைவனங்களில் உதங்க மேகங்கள் (தோன்றி) மழையைப் பொழிகின்றன" {என்றார் வைசம்பாயனர்}.(37)

அஸ்வமேதபர்வம் பகுதி – 55ல் உள்ள சுலோகங்கள் : 37

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்