Saturday, November 30, 2019

காதுகுண்டலங்கள்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 57

Ear-rings! | Aswamedha-Parva-Section-57 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 42)


பதிவின் சுருக்கம் : உதங்கரை உண்ண முயன்ற ஸௌதாஸன்; குருதக்ஷிணை அளித்துவிட்டுத் திரும்ப வருவதாகச் சொல்லி அவனது மனைவியின் குண்டலங்களை வேண்டிய உதங்கர்; குண்டலத்தின் சிறப்பைச் சொல்லி சௌதாசனின் அனுமதியை வேண்டிய ராணி...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, பிராமணரான உதங்கர், பயங்கரம் நிறைந்த முகத்தோற்றத்துடனும், மனிதக் குருதியால் நனைந்திருந்த நீண்ட தாடியுடனும் கூடிய மன்னனைக் {ஸௌதாஸனை} கண்டும் கலக்கமடையவில்லை.(1) ஒவ்வொருவரின் நெஞ்சிலும் அச்சத்தைத் தூண்டுபவனும் இரண்டாவது யமனைப் போலத் தெரிந்தவனும், பெருஞ்சக்தியைக் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி, எழுந்திருந்து உதங்கரிடம்,(2) "ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நாளின் ஆறாம் காலத்தில் நான் உணவு தேடிக் கொண்டிருக்கும்போது நற்பேற்றினாலேயே நீ என்னிடம் வந்தாய்" என்றான்.(3)


உதங்கர் {ஸௌதாஸனிடம்}, "ஓ! மன்னா, நான் என் ஆசானின் நிமித்தமாகத் திரிந்து கொண்டிருக்கும்போது இங்கே வந்தேன் என்பதை அறிவாயாக. ஒருவன் தன் ஆசானின் நிமித்தமான வேலையில் ஈடுபட்டிருக்கும்போது அவனுக்குத் தீங்கிழைக்கக்கூடாது என்று ஞானிகள் சொல்கின்றனர்" என்றார்.(4)

மன்னன் {ஸௌதாஸன்}, "ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நாளின் ஆறாம் காலத்தில் எனக்கான உணவு விதிக்கப்பட்டிருக்கிறது. நான் பசித்திருக்கிறேன். எனவே, இன்று நான் உன்னைத் தப்பவிட இயலாது" என்றான்.(5)

உதங்கர், "ஓ! மன்னா, அவ்வாறே ஆகட்டும். என்னுடன் இந்த உடன்பாட்டைச் செய்து கொள்வாயாக. என் ஆசானுக்காகத் திரிவதை நான் நிறுத்திய பிறகு, நான் மீண்டும் உன்னிடம் வந்து, என்னை உன் ஆளுகையில் வைப்பேன்.(6) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, என் ஆசானுக்காக நான் வேண்டும் பொருள் உன் கட்டுப்பாட்டில் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். எனவே, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நான் அதை உன்னிடம் வேண்டுகிறேன்.(7) நீ மேன்மையான பிராமணர்களுக்கு நாள்தோறும் முதன்மையான ரத்தினங்களைக் கொடையளிக்கிறாய். ஓ! மனிதர்களின் தலைவா, கொடைகளை எவரிடம் இருந்து ஏற்கலாமோ அந்தக் கொடையாளியாக நீ இருக்கிறாய். ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உன் முன் இருக்கும் நானும் ஈகைக்குத் தகுந்தவனே என்பதை அறிவாயாக.(8) ஓ! மன்னா, உன் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப் பொருளை என் ஆசானுக்கான கொடையாக ஏற்றுச் சென்று,(9) என் உடன்பாட்டின் விளைவால் மீண்டும் உன்னிடமே வந்து என்னை நான் உன் ஆதிக்கத்தின் கீழ் நிறுத்திக் கொள்வேன். இதை நான் உண்மையாகவே உனக்கு உறுதி கூறுகிறேன். இதில் பொய்ம்மையேதுமில்லை. கேலிக்காகக் கூட நான் இதற்கு முன் எப்போதும் பொய்யேதும் பேசியவனில்லை. அவ்வாறிருக்கையில் பிறந்த சந்தர்ப்பங்களைக் குறித்துச் சொல்வதற்கென்ன இருக்கிறது?" என்றார் {உதங்கர்}.(10)

ஸௌதாஸன், "உன் ஆசானுக்காக நீ வேண்டும் பொருளை என்னால் உன் கரத்தில் வைக்க முடியுமென்றால், கொடையேற்கத் தகுந்தவனாக நீ கருதப்படுகிறாய் என்றால், அந்தப் பொருள் என்ன என்பதை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(11)

உதங்கர், "ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, ஓ! சௌதாஸா, கொடைகளை எவரிடம் இருந்து பெறலாமோ என் கணிப்பின்படி அதற்கு மிகத் தகுந்தவன் நீ. எனவே, நான் (உனது ராணி அணிந்திருக்கும்) காது குண்டலங்களை இரந்து பெற உன்னிடம் வந்திருக்கிறேன்" என்றார்.(12)

ஸௌதாஸன், "ஓ! கல்விமானும், மறுபிறப்பாளனுமான முனிவா, அந்தக் காது குண்டலங்கள் என் மனைவிக்கு உரியவை. அவற்றை அவளிடமே கேட்க வேண்டும். எனவே, நீ என்னிடம் இருந்து வேறு ஏதாவது கேட்பாயாக. ஓ! அற்புத நோன்புகளைக் கொண்டவனே, நான் உனக்கு அதைக் கொடுப்பேன்" என்றான்.(13)

உதங்கர், "நமக்கு ஏதும் அதிகாரம் இருக்குமெனக் கருதப்பட்டால், இந்தச் சாக்குபோக்கு சொல்வதை நிறுத்துவாயாக. அந்தக் காது குண்டலங்களை எனக்குக் கொடுப்பாயாக. ஓ! மன்னா, வாக்கில் வாய்மை நிறைந்தவனாக இருப்பாயாக" என்றார்".(14)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன், மீண்டும் உதங்கரிடம், "ஓ! மனிதர்களில் சிறந்தவனே, என் சொல்லின் அடிப்படையில் மதிப்புமிக்க என் ராணியிடம் சென்று,(15) "கொடுப்பாயாக" என அவளிடம் கேட்பாயாக. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, தூய நோன்புகளைக் கொண்டவளான அவள் இவ்வாறு உன்னால் கேட்கப்பட்டால், என் ஆணையின் பேரில் அந்தக் காதுகுண்டலங்களை நிச்சயம் உனக்குக் கொடுப்பாள்" என்றான்.(16)

உதங்கர், "ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நான் உன் ராணியை எங்கே சந்திக்க இயலும்? ஏன் நீயே அவளிடம் செல்லாமல் இருக்கிறாய்?" என்று கேட்டார்.(17)

ஸௌதாஸன், "நீ இப்போது அவளை ஒரு காட்டாற்றின் அருகில் காணலாம். நாளின் ஆறாவது காலமாகையால் என்னால் இன்று அவளைக் காண முடியாது" என்றான்".

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கர் அந்த இடத்தை விட்ட அகன்றார். மதயந்தியைக் கண்டு, இக்காரியம் குறித்து அவளுக்குச் சொன்னார்.(19)

சௌதாஸனின் ஆணையைக் கேட்டவளும், அகன்ற கண்களைக் கொண்டவளுமான அந்தப் பெண்மணி, ஓ! ஜனமேஜயா, உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட உதங்கரிடம் இந்தச் சொற்களைச் சொன்னாள்,(20) "ஓ! மறுபிறப்பாளரே, இஃது இவ்வாறே இருக்கிறது. எனினும், ஓ! பாவமற்றவரே, நீர் பொய் சொல்வதில்லை என்று எனக்கு உறுதிகூற வேண்டும். என் கணவரிடம் இருந்து ஏதாவதொரு அடையாளத்தை எனக்குக் கொண்டு வருவதே உமக்குத் தகும்.(21) மதிப்புமிக்க ரத்தினங்களால் செய்யப்பட்ட இந்தத் தெய்வீகக் காது குண்டலங்கள், அபகரித்துச் செல்லும் வாய்ப்புக்காகத் தேவர்கள், யக்ஷர்கள் மற்றும் பெரும் முனிவர்களாலும் எப்போதும் கண்காணிக்கப்படுவையாக இருக்கின்றன.(22) இந்த மதிப்புமிக்கப் பொருளை எந்தக் காலத்திலும் கீழே வைத்தால் நாகர்களால் இது களவாடப்படும். உண்பதன் விளைவால் தூய்மையற்றிருக்கும் ஒருவரால் அணியப்பட்டால் அது யக்ஷர்களால் எடுத்துக் கொள்ளப்படும். (இந்த மதிப்புமிக்கக் காதுகுண்டலங்களில் கவனம் இல்லாமல்) இவற்றை அணிந்திருப்பவர் உறங்கினால் தேவர்கள் அபகரித்துச் செல்வர்.(23) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, அத்தகைய வாய்ப்புகள் அமையும்போது, விழிப்புணர்வற்றவர்களால் அணியப்பட்டால் தேவர்கள், ராட்சசர்கள் மற்றும் நாகர்களாலும் களவாடப்படக்கூடியவையா இந்தக் காது குண்டலங்கள் இருக்கின்றன.(24)

ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, இந்தக் காதுகுண்டலங்கள், இரவும் பகலும் தங்கத்தை உற்பத்தி செய்கின்றன. இறவில் நட்சத்திர மற்றும் விண்மீன் கூட்டங்களின் கதிர்களை ஈர்க்கும் வகையில் அவை பிரகாசமாக ஒளிர்கின்றன.(25) ஓ! புனிதமானவரே, இவற்றை அணிபவர் எவரும், பசி, தாகம் மற்றும் அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் விடுபடுவர். இந்தக் காது குண்டலங்களை அணிபவர், நஞ்சு, நெருப்பு மற்றும் அனைத்து வகை ஆபத்துகளில் எழும் அச்சங்களில் இருந்தும் விடுபடுவர்.(26) குட்டையான ஒருவர் அணிந்தால் இவை சிறியனவாகும். நெட்டையான ஒருவன் அணிந்தால் இவை அளவில் வளரும்.(27) என்னுடைய இந்தக் காது குண்டலங்கள் இத்தகைய குணங்களைக் கொண்டவையாகும். இவை எங்கும் புகழவும், மதிக்கவும் படுகின்றன. உண்மையில், இவை மூவுலகங்களில் அறியப்பட்டிருக்கின்றன. எனவே, (என் கணவரிடமிருந்து) ஏதாவதொரு அடையாளத்தை எனக்குக் கொண்டு வருவீராக" என்றாள் {மதயந்தி}.(28)

அஸ்வமேதபர்வம் பகுதி – 57ல் உள்ள சுலோகங்கள் : 28

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்