Friday, December 20, 2019

யுதிஷ்டிரனின் அரசாட்சி! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 01

The reign of Yudhishthira! | Asramavasika-Parva-Section-01 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 01)


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் அரசாட்சி; காந்தாரியிடம் குந்தி கொண்ட மதிப்பு; பீமனைத் தவிர ஏனையோர் யுதிஷ்டிரனின் கட்டளையை ஏற்றுத் திருதராஷ்டிரனை மதித்தது...


ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "என் பாட்டன்மார்களான பாண்டவர்கள், தங்கள் நாட்டை அடைந்த பிறகு, உயர் ஆன்ம மன்னனான திருதராஷ்டிரனிடம் எவ்வாறு நடந்து கொண்டனர்?(1) உண்மையில், மகன்களும், அமைச்சர்களும் கொல்லப்பட்டவனும், புகலிடமேதும் அற்றவனும், செல்வாக்கை இழந்தவனுமான அந்த மன்னன் எவ்வாறு நடந்து கொண்டான்? பெரும்புகழைக் கொண்டவளான காந்தாரி எவ்வாறு நடந்து கொண்டாள்?(2) உயர் ஆன்மாக்களான என் பாட்டன்மார்கள் எத்தனை வருடங்கள் நாட்டை ஆண்டனர்? இவையனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான்.(3)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தங்கள் பகைவர்கள் அனைவரையும் கொன்று, தங்கள் நாட்டைத் திரும்பப் பெற்ற அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள், திருதராஷ்டிரனைத் தலைமையாகக் கொண்டு பூமியை ஆண்டனர்.(4) விதுரன், சஞ்சயன், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், திருதராஷ்டிரனின் வைசிய மனைவிக்குப் பிறந்த மகனுமான யுயுத்சு ஆகியோர் திருதராஷ்டிரனுக்குப் பணிவிடை செய்தனர்.(5) அனைத்துக் காரியங்களிலும், பாண்டவர்கள் அந்த மன்னனின் {திருதராஷ்டிரனின்} கருத்தைக் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். உண்மையில், பதினைந்து வருட காலம் அவர்கள் அந்த முதிர்ந்த மன்னனின் ஆலோசனையின் பேரிலேயே அனைத்துக் காரியங்களையும் செய்தனர்.(6) அந்த வீரர்கள், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் விருப்பங்களுக்கு ஏற்புடைய வகையில், அந்த ஏகாதிபதியிடம் {திருதராஷ்டிரனிடம்} அடிக்கடி சென்று, அவனது பாதங்களை வழிப்பட்டு, அவன் அருகில் அமர்ந்தனர்.(7) தங்கள் தலைகளை அன்புடன் முகர்ந்து பார்க்கும் திருதராஷ்டிரனின் ஆணையின் பேரிலேயே அவர்கள் அனைத்தையும் செய்தனர்.

குந்திபோஜனின் மகளும் {குந்தியும்} அனைத்துக் காரியங்களிலும் காந்தாரிக்குக் கீழ்படிந்தாள்.(8) திரௌபதி, சுபத்திரை மற்றும் பாண்டவப் பெண்கள் பிறரும், அந்த முதிர்ந்த மன்னனும், ராணியும் தங்கள் மாமனாரும், மாமியாருமாக இருப்பதைப் போல அவர்களிடம் நடந்து கொண்டனர்.(9) அரச பயன்பாட்டுக்குத் தகுந்த மேன்மையான வகையைச் சேர்ந்தவையும், விலைமதிப்புமிக்கவையும், படுக்கைகள், ஆடைகள், ஆபரணங்கள், உணவு, பானங்கள் மற்றும் அனுபவிக்கத்தகுந்த பிற பொருட்கள்(10) மன்னன் யுதிஷ்டிரனால் திருதராஷ்டிரனுக்குக் கொடுக்கப்பட்டன. அதே போலக் குந்தியும் மூத்தோரிடம் நடந்து கொள்வதைப் போலக் காந்தாரியிடம் நடந்து கொண்டாள்.(11) ஓ! குரு குலத்தோனே, மகன்கள் கொல்லப்பட்டவனான அந்த முதிர்ந்த மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} விதுரன், சஞ்சயன், யுயுத்சு ஆகியோர் பணிவிடை செய்தனர்.(12) மிக மேன்மையான பிராமணரான துரோணரின் அன்புக்குரிய மைத்துனரும், வலிமைமிக்க வில்லாளியுமான கிருபரும் மன்னனைக் கவனித்துக் கொண்டார்.(13) புனித வியாசரும் அந்த முதிர்ந்த மன்னனை {திருதராஷ்டிரனை} அடிக்கடிச் சந்தித்து, பழங்கால முனிவர்கள், தெய்வீகத் தவசிகள், பித்ருக்கள் மற்றும் ராட்சசர்களின் வரலாறுகளை அவனுக்குச் சொல்லி வந்தார்.(14)

திருதராஷ்டிரனின் ஆணையின் பேரில் விதுரன், அறத்தகுதிகளுக்குரிய செயல்கள் அனைத்தையும், நீதி நிர்வாகம் தொடர்புடைய அனைத்தையும் கண்காணித்துவந்தான்.(15) விதுரனுடைய சிறந்த கொள்கையின் மூலமாக {நல்ல நீதியினால்}, நிலப்பிரப்புகள் மற்றும் தொண்டர்களிடம் {ஸாமந்தர்களிடம் / பக்கத்து நாட்டரசர்களிடம்} இருந்து ஏற்புடைய எண்ணற்ற தொண்டுகளைச் சொற்ப செல்வத்தைச் செலவாகக் கொண்டே பாண்டவர்கள் பெற்றனர்.(16) மன்னன் திருதராஷ்டிரன், கைதிகளை விடுவித்து, மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை மன்னித்தான். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இதில் ஒருபோதும் எதனையும் சொல்லாமல் இருந்தான்.(17) அம்பிகையின் மகன் {திருதராஷ்டிர்ன} இன்பச் சுற்றுலாக்களுக்குச் சென்ற சந்தர்ப்பங்களில், பெரும் சக்தி கொண்ட குரு மன்னன் யுதிஷ்டிரன் அனுபவிக்கத் தகுந்த இன்பொருட்கள் அனைத்தையும் அவனுக்குக் கொடுத்தனுப்பினான்.(18) ஆராலிகர்கள், பழச்சாறு செய்பவர்கள் {ஸூபகாரர்கள்}, ராககாண்டவர்கள் {ராகஷாடவிகர்கள்} ஆகியோர் முன்பு போலவே மன்னன் திருதராஷ்டிரனுக்குப் பணிவிடைகளைச் செய்தனர்[1].(19)

[1] "ஆராலிகர் என்பதற்கான விரிவு நீலகண்டரால்இவ்வாறு விளக்கப்படுகிறது: கீரைகள், ஆரா என்றழைக்கப்படும் ஒருவகை ஆயுதத்தால் வெட்டப்படும். அந்தக் கீரைகளைச் சமைப்பதில் நிபுணர்கள் ஆராலிகர்கள் என்று அழைக்கப்பட்டனர். ராககாண்டவம் என்பது திப்பிலி, சுக்கு, சர்க்கரை மற்றும் உளுந்துச் சாறு {உளுந்து ரசம்} ஆகியவற்றால் செய்யப்படுவதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஆராலிர்களும், ஸூபகாரர்களும், ராகஷாடவிகர்களும் திருதராஷ்டிரராஜனை முன்போல் உபசரித்தனர்" என்றிருக்கிறது. "ஆராலிகர்கள்" என்பதன் அடிக்குறிப்பில், "’சாக விசேஷங்களைச் சமைப்பவர்கள்’ என்பது பழைய உரை" என்றும், "ஸூபகாரர்கள்" என்பதன் அடிக்குறிப்பில், "பருப்பைச் சமைப்பவர்கள்" என்றும், "ராகஷாடவிகர்கள்" என்பதன் அடிக்குறிப்பில், "திப்பிலியும், சுக்கும், சர்க்கரையும் சேர்ந்த பருப்பு ரஸம்’ என்பது பழையவரை" என்றும் இருக்கிறது.

பாண்டுவின் மகன்கள், விலைமதிப்புமிக்க ஆடைகளையும், பல்வேறு வகை மாலைகளையும் திரட்டி அவற்றை முறையாகத் திருதராஷ்டிரனுக்கு அளித்தனர்.(20) அந்த முதிர்ந்த மன்னன் செழிப்புடன் இருந்த காலத்தைப் போலவே, மைரேய மது வகைகளையும்[2], பல்வேறு வகை மீன்களையும், நறும்பானங்கள் மற்றும் தேனையும், (பல்வேறு பொருட்களைக்) கலந்து பல்வேறு இனிய வகை உணவுகளையும் செய்து அவனுக்குக் கொடுக்கச் செய்தனர்.(21) அங்கே அடுத்தடுத்து வந்த பூமியின் மன்னர்களும், முன்பு போலவே முதிர்ந்த குரு ஏகாதிபதிக்குக் காத்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.(22)

[2] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்புகளில், மைரேயம் என்பது "மிரையென்னும் தேசத்திலுண்டானதும், கருப்பஞ்சாற்றினால் செய்ததுமான கள்" என்றும், வேறு வகை மது "இலுப்பைப் பூவினால் செய்த கள்" என்றும் இருக்கின்றன.

குந்தி, திரௌபதி, பெரும்புகழைக் கொண்ட சாத்வதக் குலத்தவள் {சுபத்திரை}, பாம்புத் தலைவனின் மகளான உலூபி, ராணி சித்ராங்கதை,(23) ஓ! மனிதர்களின் தலைவா, திருஷ்டகேதுவின் தங்கை, ஜராசந்தனின் மகள் ஆகியோரும், இன்னும் பல பெண்களும்,(24) அனைத்துப் பணிகளையும் செய்யும் பணிப் பெண்களைப் போலச் சுபலனின் மகளிடம் {காந்தாரியிடம்} காத்திருந்தனர் {பணிவிடை செய்து கொண்டிருந்தனர்}. தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்த திருதராஷ்டிரன் எக்காரியத்தினாலும் வருத்தமடையக் கூடாது,(25) என்பதையே யுதிஷ்டிரன் தன் தம்பிகளிடம் எப்போதும் கவனிக்கச் சொல்வான். அவர்களும் தங்கள் பங்குக்கு, மன்னன் யுதிஷ்டிரனிடம் இருந்து பெறும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆணைகளைக் கேட்டு, அந்த முதிர்ந்த மன்னனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருந்தனர்.(26) எனினும், ஒரேயொரு விதிவிலக்கு இருந்தது. {அந்த விதிவிலக்கு} அது பீமசேனனைத் தழுவியது. திருதராஷ்டிரனின் தீய புத்தியின் மூலம் நடந்த பகடையாட்டத்தைப் பின்தொடர்ந்து நடந்த அனைத்தும் அந்த வீரனின் இதயத்தில் இருந்து மறையவில்லை. (அவன் இன்னும் அந்த நிகழ்வுகளைத் தன் நினைவில் கொண்டிருந்தான்)" என்றார் {வைசம்பாயனர்}.(27)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 01ல் உள்ள சுலோகங்கள் : 27

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்