Monday, December 02, 2019

ரைவதகத் திருவிழா! - அஸ்வமேதபர்வம் பகுதி – 59

The festival of Raivataka! | Aswamedha-Parva-Section-59 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 44)


பதிவின் சுருக்கம் : ரைவதக மலைக்குச் சென்ற கிருஷ்ணன்; அங்கு நடந்த விளையாட்டுகள்; துவாரகைக்கு வந்து பெற்றோரை வணங்கிய கிருஷ்ணன்...


இன்றைய குஜராத்தில் உள்ள கிர்நார் மலை - அன்றைய ஆநர்த்த நாட்டு ரைவதக மலை
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உதங்கருக்கு வரமளித்த பிறகு வலிமைமிக்கக் கரங்களையும், பெரும்புகழையும் கொண்ட கோவிந்தன் அடுத்து என்ன செய்தான்?" என்று கேட்டான்.(1)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "உதங்கருக்கு வரமளித்த கோவிந்தன், சாத்யகியின் துணையுடன், பெரும் வேகம் கொண்ட பெரிய குதிரைகளால் இழுக்கப்பட்ட தன் தேரில் துவாரகைக்குச் சென்றான்.(2) தடாகங்கள், ஆறுகள், காடுகள் மற்றும் மலைகளைக் கடந்து சென்ற அவன், இறுதியாக இனிமை நிறைந்த துவாராவதி நகரத்தை அடைந்தான்.(3) ஓ! மன்னா, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் {கிருஷ்ணன்} தன் தோழனான சாத்யகியுடன் ரைவதகத்திற்கு வந்த நேரத்தில் அங்கே திருவிழா {ரைவதக உற்சவம்} தொடங்கியிருந்தது.(4) ஓ! மன்னா, அந்த ரைவதக மலை பல அழகிய பொருட்களால் அலங்கரிக்கப்பட்டும், ரத்தினங்களால் செய்யப்பட்ட பல்வேறு கோஷங்களால் {கவசங்களால்} மறைக்கப்பட்டும் பெருங்காந்தியுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(5)

அந்த உயர்ந்த மலை, சிறந்த தங்க மாலைகளாலும், அழகிய மலர்த்தோரணங்களாலும், இந்திரனின் தோட்டத்தில் உள்ள கல்ப மரங்களைப் போலத் தெரிந்த பெரும் மரங்கள் பலவற்றாலும்,(6) பகலும் இரவும் அழகுடன் ஒளிரும் வகையில் விளக்குகள் பொருத்தப்பட்ட தங்கத் தூண்கள் பலவற்றாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குகைகள் மற்றும் அருவிகள் இருந்த இடங்கள் பகல் நேரத்தைப் போல எப்போதும் பேரொளியுடன் திகழ்ந்தன.(7) அனைத்துப் பக்கங்களிலும் சிறு மணிகளுடன் கூடிய அழகிய கொடிகள் தொடர்ந்து கிங்கிணி ஒலியுடன் காற்றில் பறந்து கொண்டிருந்தன. மொத்த மலையும் ஆண்கள் மற்றும் பெண்களின் மெல்லிசைப் பாடல்களை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(8) ரைவதகம் அனைத்து ரத்தினங்களுடன் மேரு போன்று மிகக் கவர்ச்சியாகக் காட்சியளித்தது. ஓ! பாரதா, மகிழ்ச்சியில் நிறைந்தத் திளைப்பில் இருந்த ஆண்களும், பெண்கள் உரக்கப் பாடினார்கள்.(9) 

அந்த முதன்மையான மலையில் இவ்வாறு எழுந்த இசைப் பெருக்கம் சொர்க்கங்களையே எட்டுவதாகத் தோன்றியது. உற்சாகத்தின் அனைத்து நிலைகளிலும் இருந்த மனிதர்களின் ஒலிகளும், உரத்த குரல்களும் எங்கும் கேட்டுக் கொண்டிருந்தன.(10) ஆயிரக்கணக்கான குரல்களின் கொக்கரிப்பு அந்த மலையை இனிமை நிறைந்ததாகவும், அழகானதாகவும் ஆக்கியது. பல்வேறு உணவுப் பொருட்களும், அனுபவிக்கத்தகுந்த பொருட்களும் நிறைந்த பல கடைகள் மற்றும் நிலையங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(11) துணிகள் மற்றும் மாலைகளின் குவியல்களும் ஆங்காங்கே கிடந்தன, வீணைகள், புல்லாங்குழல்கள், மிருதங்கங்கள் ஆகியவற்றின் இசை எங்கும் கேட்கப்பட்டன. பல்வேறு வகை மதுபானங்கள் {கள் மற்றும் சாராயம்} கலந்த உணவு ஆங்காங்கே தேக்கப்பட்டிருந்தன.(12) 

துன்பமடைந்தவர்கள், குருடர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இடைவிடாமல் கொடைகள் வழங்கப்பட்டன. இவையாவற்றின் விளைவால் அந்த மலையின் திருவிழா மங்கலம் நிறைந்ததாக இருந்தது.(13) ஓ! வீரா, அறச்செயல்கள் செய்யும் மனிதர்கள் பலர் வசிப்பதற்குரிய புனித வசிப்பிடங்கள் பலவும் அந்த மலையின் சாரலில் கட்டப்பட்டிருந்தன. இவ்வாறே ரைவதகத் திருவிழாவில் விருஷ்ணி குல வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.(14) அந்த மாளிகைகளுடன் கூடிய அந்த மலை இரண்டாவது சொர்க்கத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் வந்ததும், ஓ! பாரதக் குலத்தின் தலைவா,(15) அந்த மலைகளின் இளவரசன் இந்திரனின் அருளப்பட்ட வசிப்பிடத்திற்கு ஒப்பானது.

(தன் உறவினர்களால்) வழிபடப்பட்டவனான கிருஷ்ணன் ஓர் அழகிய மாளிகைக்குள் நுழைந்தான். சாத்யகியும் திளைத்த ஆன்மாவுடன் தன் பகுதிக்குள் நுழைந்தான். தானவப் படைக்கு மத்தியில் வாசவனைப் போலப் பெருங்கடின சாதனைகளை நிறைவேற்றிய கோவிந்தன், நீண்ட காலம் இல்லாத பிறகு தன் வசிப்பிடத்திற்குள் நுழைந்தான். போஜ, விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் வீரர்கள் அனைவரும், நூறு வேள்விகளைச் செய்தவனை {இந்திரனை} வரவேற்க முன்னேறும் தேவர்களைப் போல அந்த உயர் ஆன்மாவை {கிருஷ்ணனை} வரவேற்க முன்வந்தனர்.(16-18) 

பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான அவன், பதிலுக்கு அவர்களைக் கௌரவித்து, அவர்களுடைய நலம் குறித்து விசாரித்தான். நிறைவடைந்த இதயத்துடன் கூடிய அவன் {கிருஷ்ணன்} தன் தாயையும் தந்தையையும் வணங்கினான்.(19) வலிய கரங்களைக் கொண்ட அந்த வீரன் அவர்கள் இருவரையும் தழுவிக் கொண்டு (எண்ணற்ற அன்புச் சான்றுகளின் மூலம்) அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் செய்தான். பிறகு அவன், தன்னைச் சூழ்ந்து அமர்ந்திருந்த விருஷ்ணிகளுடன் சேர்ந்து அமர்ந்தான்.(20) தன் கால்களைக் கழுவி களைப்பை விலக்கியவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனுமான கிருஷ்ணன் அங்கே அமர்ந்த போது, தன் தந்தையால் {வசுதேவரால்} தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அந்தப் பெரும்போரின் முக்கிய நிகழ்வுகளை நினைவுகூர்ந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(21)

அஸ்வமேதபர்வம் பகுதி – 59ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்