Monday, December 02, 2019

போர்ச்சுருக்கம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 60

Brief account of the war! | Aswamedha-Parva-Section-60 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 45)


பதிவின் சுருக்கம் : போர் குறித்த விபரம் கேட்ட வசுதேவர்; பதினெட்டு நாட்கள் நடந்த குருக்ஷேத்திரப் போரை மிகச் சுருக்கமாகச் சொன்ன கிருஷ்ணன்; வருத்தமடைந்த விருஷ்ணிகள்...


வசுதேவர் {கிருஷ்ணனின் தந்தை}, "ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, (குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற) அற்புதம் நிறைந்த போரைக் குறித்து மனிதர்கள் பேசுவதை நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.(1) எனினும், ஓ! வலிமைநிறைந்த கரங்களைக் கொண்டவனே, நீ உன் கண்களாலேயே அதைக் கண்டிருக்கிறாய். எனவே, ஓ! பாவமற்றவனே, அந்தப் போரைக் குறித்து விரிவாக நீ விளக்குவாயாக.(2) உண்மையில், (ஒரு தரப்பில் இருந்த) உயர் ஆன்ம பாண்டவர்களுக்கும், (மறுதரப்பில் இருந்த) பீஷ்மர், கர்ணன், கிருபர், துரோணர், சல்லியன் மற்றும் பிறர் ஆகியோருக்கிடையிலும்,(3) உண்மையில் முகத்தோற்றம் மற்றும் ஆடைகளில் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்களும், ஆயுதங்களில் திறன்மிக்கவர்களும், பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து வந்தவர்களுமான எண்ணற்ற வெவ்வேறு க்ஷத்திரியர்களுக்கிடையிலும் அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார் {வசுதேவர்}".(4)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் {கிருஷ்ணன்}, தன் தாயாரின் {தேவகியின்} முன்னிலையில், தன் தந்தையால் {வசுதேவரால்} இவ்வாறு கேட்கப்பட்டதும், போரில் கௌரவ வீரர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை உரைத்தான்.(5)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, "அந்த உயர் ஆன்ம க்ஷத்திரியர்களால் அடையப்பட்ட சாதனைகள் உயர்ந்த அற்புதம் நிறைந்தவையாகும். பெரும் எண்ணிக்கையில் இருந்ததன் விளைவால், நூறு வருடங்களானாலும் அவர்களைப் பட்டியலிட இயலாது.(6) எனினும், நான் அவர்களில் முதன்மையானோரைக் குறித்து மட்டுமே சொல்லப் போகிறேன். எனவே, ஓ! தேவரைப் போன்ற காந்தியைக் கொண்டவரே, பூமியின் மன்னர்களால் அடையப்பட்ட அந்தச் சாதனைகளைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பீராக.(7)

தேவர்ப்படையில் வாசவனைப் போல, குரு குலத்தின் பீஷ்மர், பதினோரு பிரிவுகளாக {அக்ஷௌஹிணிகளாக}[1] இருந்த கௌரவ இளவரசர்களைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்ட படைத்தலைவரானார்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட சிகண்டி, அருள்நிறைந்த அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்டவனாகப் பாண்டு மகன்களின் ஏழு பிரிவுகளுக்கு {அக்ஷௌஹிணிகளுக்குத்} தலைவனானான்.(9) (இந்தத் தலைவர்களின் கீழ்) குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற போரானது பத்து நாட்கள் நீடித்தது. அது மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் வண்ணம் கடுமையானதாக இருந்தது.(10) பிறகு, பெரும்போரில் காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} துணையைக் கொண்ட சிகண்டி, துணிவுடன் போரிட்டுக் கொண்டிருந்த கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எண்ணற்ற கணைகளைக் கொண்டு வீழ்த்தினான்.(11) வீரரான பீஷ்மர், தெற்கு நோக்கிய பாதையில் இருந்து சூரியன் வடக்குப் போக்கில் நுழையும் வரை ஒரு தவசியைப் போலக் கணைப்படுக்கையில் காத்திருந்து தன் உயிர் மூச்சுகளைக் கைவிட்டார்.(12)

[1] "சம்மு என்று இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் பொதுவாக ஒரு பிரிவு என்பதைக் குறிப்பதாகும். உண்மையில் அஃது ஓர் அக்ஷௌஹிணியைக் குறிப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பிறகு, ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரும், தைத்தியர்களின் தலைவனுக்குக் காவியரை {சுக்கிராச்சாரியரைப்} போன்றவரும், துரியோதனனின் கீழ் இருந்த மனிதர்களில் பெரியவருமான துரோணர் படைத்தலைவரானார்.(13) போரில் தமதாற்றல் மீது எப்போதும் செருக்கு கொண்ட அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர், கௌரவப்படையில் எஞ்சியிருந்த ஒன்பது அக்ஷௌஹிணிகளாலும் ஆதரிக்கப்பட்டு, கிருபர், விருஷன் {கர்ணன்} மற்றும் பிறரால் பாதுகாக்கப்பட்டார்.(14) வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றை அறிந்தவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னன், பாண்டவர்களின் தலைவனானான். மித்ரனால் பாதுகாக்கப்பட்ட வருணனைப் போல அவன் பீமரால் பாதுகாக்கப்பட்டான்.(15) தன் பலத்தை எப்போதும் துரோணருடன் அளவிட விரும்பும் அந்த உயர் ஆன்ம வீரன் {திருஷ்டத்யும்னன்}, (எஞ்சியிருந்த) பாண்டவப் படையால் ஆதரிக்கப்பட்டு, தன் தந்தைக்கு (பாஞ்சாலர்களின் மன்னனான துருபதனுக்குத் துரோணரால்) இழைக்கப்பட்ட குற்றங்களை நிறைவு கூர்ந்து, போரில் பெரும் சாதனைகளைச் செய்தான்.(16) துரோணருக்கும், பிருஷதன் மகனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்} இடையில் நடைபெற்ற மோதலில் பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து அங்கு திரண்டிருந்த மன்னர்கள் கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டனர்.(17) அந்தக் கடும்போர் ஐந்து நாட்கள் நீடித்தது. அந்தக் காலத்தின் இறுதியில் திருஷ்டத்யும்னனிடம் துரோணர் வீழ்ந்தார்.(18)

அதன்பிறகு, துரியோதனனின் படைக்குக் கர்ணன் படைத்தலைவனானான். கௌரவப் படையில் எஞ்சியிருந்த ஐந்து அக்ஷௌஹிணிகளால் போரில் அவன் ஆதரிக்கப்பட்டான்.(19) பாண்டவர்களிடம் அப்போது மூன்று அக்ஷௌஹிணிகள் இருந்தன. எண்ணற்ற வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு, அர்ஜுனனால் பாதுகாப்பட்ட அவர்கள் போரிட வந்தனர்.(20) சூதனின் மகனான கர்ணன், சீற்றமிகு போர்வீரனாக இருப்பினும், சுடர்மிக்க நெருப்புடன் மோதும் ஒரு பூச்சியைப் போல இரண்டாம் நாளில் தன் முடிவை அடைந்தான்.(21)

கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு உற்சாகத்தை இழந்த கௌரவர்கள் தங்கள் சக்தி அனைத்தையும் இழந்தனர். எண்ணிக்கையில் மூன்று அக்ஷௌஹிணிகளாக இருந்த அவர்கள், மத்ர ஆட்சியாளனை {சல்லியனைச்} சூழ்ந்து திரண்டனர்.(22) தேர்வீரர்கள் பலரையும், யானைகளையும், குதிரைவீரர்களையும் இழந்து எண்ணிக்கையில் ஓர் அக்ஷௌஹிணியாக எஞ்சியிருந்த பாண்டவப் படை உற்சாகத்தை இழந்தவர்களாக (தங்கள் தலைவரான) யுதிஷ்டிரரை ஆதரித்தனர்.(23) குரு மன்னனான யுதிஷ்டிரர், தொடர்ந்து நடந்த போரில் செயற்கரிய சாதனைகளைச் செய்து, அரை நாளுக்கு முன்பே மத்ரர்களின் மன்னனை {சல்லியனைக்} கொன்றார்.(24)

சல்லியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அளவிலா ஆற்றலைக் கொண்ட உயர் ஆன்ம சகாதேவன், (பாண்டவர்களுக்கும், குருக்களுக்கும் இடையில்) சச்சரவை உண்டாக்கிய சகுனியைக் கொன்றான்.(25)

சகுனியின் வீழ்ச்சிக்குப் பிறகு, பேரிழப்பை அனுபவித்த படையைக் கொண்டவனும், அதன் காரணமாக உற்சாகத்தை இழந்தவனும், கதாயுதம் தரித்தவனுமான திருதராஷ்டிரரின் அரச மகன் {துரியோதனன்} களத்தைவிட்டுத் தப்பி ஓடினான்.(26) அப்போது பேராற்றலைக் கொண்ட பீமசேனர், கோபத்தால் நிறைந்து அவனைத் தொடர்ந்து சென்று துவைபாயனத் தடாகத்தின் நீருக்கடியில் அவனைக் கண்டுபிடித்தார்.(27) எஞ்சியிருந்த தங்கள் படையுடன் கூடிய பாண்டவர்கள் அந்தத் தடாகத்தைச் சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாக நீருக்குள் மறைந்திருந்த துரியோதனனிடன் போரிட்டனர்.(28) அவர்களுடைய சொற்கணைகள் நீருக்குள் ஊடுருவிச் சென்று துரியோதனனைத் துளைத்தன. அந்தத் தடாகத்தில் இருந்து எழுந்த அவன் {துரியோதனன்}, போரிட விரும்பியவனாகக் கதாயுதம் தரித்துப் பாண்டவர்களை அணுகினான்.(29) அப்போது தொடர்ந்து நடந்த பெரும்போரில் பல மன்னர்களின் முன்னிலையில் பேராற்றலை வெளிப்படுத்திய பீமசேனரால் திருதராஷ்டிரரின் அரச மகன் கொல்லப்பட்டான்.(30)

அதன்பிறகு எஞ்சியிருந்த பாண்டவப் படையினர் முகாமில் உறங்கிக் கொண்டிருந்தபோது, (திருஷ்டத்யும்னன் கைகளால்) தன் தந்தை கொல்லப்பட்டதைப் பொறுத்துக் கொள்ளப்பட முடியாத துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} அந்த இரவு நேரத்தில் கொல்லப்பட்டனர்.(31) மகன்கள் கொல்லப்பட்டவர்களும், படைகள் கொல்லப்பட்டவர்கள், நண்பர்கள் கொல்லப்பட்டவர்களுமான பாண்டவர்கள் ஐவரும், நானும், யுயுதானனும் {சாத்யகியும்} மட்டுமே உயிருடன் இருக்கிறோம்.(32) கௌரவப்படையில் கொல்லப்படாமல் எஞ்சியிருப்பவர்கள், கிருபர், போஜ இளவரசனான கிருதவர்மன் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோராவர். திருதராஷ்டிரரின் மகனான யுயுத்சுவும் பாண்டவர்களின் தரப்பை ஏற்றதால் கொல்லப்படாமல் தப்பினான்.(33)

கௌரவ மன்னன் (சுயோதனன்) தன் தொண்டர்கள் மற்றும் கூட்டாளிகள் அனைவருடன் சேர்த்துக் கொல்லப்பட்ட பிறகு, விதுரரும், சஞ்சயனும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் முன்னிலைக்கு வந்தனர்.(34) இவ்வாறே, ஓ! தலைவரே, அந்தப் போர் பதினெட்டு நாட்கள் நீடித்தது. பூமியின் மன்னர்கள் பலர் அங்கே கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்" என்றான் {கிருஷ்ணன்}".(35)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தப் பயங்கரக் கதையைக் கேட்ட விருஷ்ணிகள், துயரம், சோகம் மற்றும் வருத்தத்தால் நிறைந்தனர்".(36)

அஸ்வமேதபர்வம் பகுதி – 60ல் உள்ள சுலோகங்கள் : 36

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்