Wednesday, December 04, 2019

இமயப்பயணம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 63

Journey to Himavat! | Aswamedha-Parva-Section-63 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 48)


பதிவின் சுருக்கம் : வியாசரின் ஆணைப்படி தம்பிமாருடன் ஆலோச்சித்த யுதிஷ்டிரன்; வேள்விக்குத் தேவையான செல்வத்தைக் கொண்டு வர இமய மலைக்குச் சென்றது...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே, குதிரை வேள்வி குறித்து உயர் ஆன்ம வியாசரால் சொல்லப்பட்ட சொற்களைக் கேட்டு யுதிஷ்டிரனால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?(1) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, மருத்தன் பூமிக்கடியில் புதைத்து வைத்த செல்வத்தை அடைவதில் மன்னன் வென்றது எவ்வாறு?" என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தீவில் பிறந்த தவசியின் {வியாசரின்} சொற்களைக் கேட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகளான அர்ஜுனன், பீமசேனன் மற்றும் மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகிய அனைவரையும் உரிய நேரதில் அழைத்து, அவர்களிடம் (பின்வரும் சொற்களில்),(3) "வீரர்களே, உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவரும், உயர் ஆன்மாவுமான கிருஷ்ணர் {வியாசர்}[1], குருக்களிடம் கொண்ட நட்பின் நிமித்தமும், அவர்களுக்கு நன்மை செய்ய விரும்பியும் சொன்ன சொற்களைக் கேட்டீர்கள். உண்மையில், அபரிமிதமான தவங்களைச் செய்தவரும், நண்பர்களுக்குச் செழிப்பை வழங்கவல்லவரும்,(4,5) நேர்மையான ஒழுக்கம் கொண்ட ஆசானும், அற்புதச் செயல்களைச் செய்தவருமான அந்தப் பெருந்தவசியால் {வியாசரால்} சொல்லப்பட்ட அந்தச் சொற்களைக் கேட்டீர்கள்.

[1] "இங்கே கிருஷ்ணர் என்பது வியாசரைக் குறிக்கும். அந்தப் பெரும் முனிவர் தீவில் பிறந்த கிருஷ்ணர் என்றழைக்கப்பட்டார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பீஷ்மர் சொன்னதையும், பெரும் நுண்ணறிவைக் கொண்ட கோவிந்தன் {கிருஷ்ணன்} சொன்னதையும் நீங்கள் கேட்டீர்கள்.(6) பாண்டுவின் மகன்களே, அச்சொற்களை நினைவுகூரும் நான் அவற்றுக்கு முறையாகக் கீழ்ப்படிய விரும்புகிறேன். அவர்களுடைய சொற்களுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் உங்கள் அனைவருக்கும் பேரருள் கிட்டும்.(7) பிரம்மத்தை ஓதுபவர்களால் சொல்லப்படும் சொற்கள் (அந்தச் சொற்களுக்குக் கீழ்ப்படிவது) குறிப்பிடத்தக்க நன்மையை நிச்சயம் கொண்டு வரும். குரு குலத்தைத் தழைக்கச் செய்பவர்களே, பூமாதேவி செல்வத்தை இழந்தவளாக இருக்கிறாள்.(8) எனவே மன்னர்களே, (பூமிக்குள் புதைந்து கிடக்கும்) மருத்தனின் செல்வத்தைக் குறித்து வியாசர் நமக்குச் சொன்னார். அந்தச் செல்வம் அதிகமானது, அல்லது போதுமானது என நீங்கள் நினைத்தால்,(9) அதை நாம் (நமது தலைநகருக்குக்) கொண்டு வருவது எவ்வாறு? ஓ! பீமா, இது குறித்து நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டான்.

ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே {ஜனமேஜயா}, மன்னன் இச்சொற்களைச் சொன்ன போது,(10) பீமசேனன் தன் கரங்களைக் குவித்து, மறுமொழியாக இந்தச் சொற்களில், "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, வியாசரால் குறிப்பிடப்பட்டச் செல்வத்தைக் கொண்டு வருவது குறித்து நீர் சொன்ன சொற்களை நான் ஏற்கிறேன். ஓ! பலமிக்கவரே, அவிக்ஷித்தின் மகனால் {மருத்தனால்} அங்கே வைக்கப்பட்ட செல்வத்தை அடைவதில் நாம் வென்றால்,(11,12) ஓ! மன்னா, அப்போது நம்மால் கருதப்படும் இந்த வேள்வியை எளிதாக நடத்தலாம். இதையே நான் நினைக்கிறேன். எனவே, நாம் உயர் ஆன்ம கிரீசனுக்கு {சிவனுக்கு} தலைவணங்கி,(13) அந்தத் தேவனுக்கு உரிய காணிக்கையளித்து, அந்தச் செல்வத்தைக் கொண்டுவருவோம். நீர் அருளப்பட்டிருப்பீராக. தேவர்களுக்குத் தேவனையும் {சிவனையும்}, அவனது தோழர்கள் மற்றும் தொண்டர்களையும் {பூதகணங்களையும்}, சொல்லாலும், எண்ணத்தாலும், செயலாலும் நிறைவடையச் செய்து, நிச்சயம் நாம் அந்தச் செல்வத்தை அடையப் போகிறோம். காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தப் பெருந்தேவன் {சிவன்} நம்மிடம் நிறைவடைந்தால், அந்தப் புதையலைப் பாதுகாக்கும் பயங்கர முகத்தோற்றம் கொண்ட கின்னரர்களும் நிச்சயம் நம் வசப்படுவார்கள்" என்றான்.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, பீமனால் சொல்லப்பட்ட இந்தச் சொற்களைக் கேட்டவனும்,(14-16) தர்மனின் மகனுமான மன்னன் யுதிஷ்டிரன் உயர்வான நிறைவை அடைந்தான். அதே நேரத்தில், அர்ஜுனனின் தலைமையிலான பிறரும் {மற்ற தம்பிகளும்}, "அப்படியே ஆகட்டும்" என்றனர்.(17)

அந்தச் செல்வத்தைக் கொண்டு வருவது எனத் தீர்மானித்த பாண்டவர்கள், துருவ நட்சத்திரம் மற்றும் அதே பெயரால் {துருவம் என்ற பெயரால்} அழைக்கப்படும் நாளில் தங்கள் படைகளை அணிவகுக்க ஆணையிட்டனர்[2].(18) அந்தப் பாண்டுவின் மகன்கள், பிராமணர்களைத் தங்களுக்கு ஆசிகூற {ஸ்வஸ்திவாசனம் செய்யும்படிச்} செய்து, பெருந்தேவனான மஹேஸ்வரனை முறையாக வழிபட்டு (தங்கள் காரியத்திற்குப்) புறப்பட்டுச் சென்றனர்.(19) மோதகங்கள், பாயஸம், இறைச்சியால் செய்யப்பட்ட பிண்டங்கள் {மாம்ஸம், ஆபூபங்கள்} ஆகியவற்றைக் கொண்டு அந்த உயர் ஆன்ம தேவனை நிறைவடையச் செய்த பாண்டுவின் மகன்கள், உற்சாகமிக்க இதயங்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.(20)

[2] "துருபம் என்பது ரோஹிணி மற்றும் மூன்றாவது நட்சத்திரமான உத்தரத்தைக் குறிக்கும். மேலும் ஞாயிற்றுக்கிழமை துருவ நாள் என்றழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பாண்டவர்களெல்லாரும் ரத்னங்களைக் கொண்டுவர நிச்சயித்து, ரோஹிணீநக்ஷத்திரம் கூடிய பானு வாரத்தில் ஸேனையை ( புறப்படும்படி) கட்டளையிட்டார்கள்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "நக்ஷத்ரே(அ)ஹனி ச த்ருவே என்பது மூலம், உத்தரமும் ஞாயிறுங் கூடிய அம்ருதஸித்த யோக்கத்தில் என்பது பழைய உரை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவர்கள் ஒரு நல்ல நட்சத்திரத்தின் கீழ், ஒரு துருவ நாளில் புறப்பட வேண்டும் எனப் படைவீரர்களுக்குக் கட்டளையிட்டார்கள்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "துருவனின் நாள் என்பது ஞாயிற்றுக் கிழமையைக் குறிக்கும்" என்றிருக்கிறது.

அவர்கள் அவ்வாறு புறப்பட்டுச் சென்றபோது, குடிமக்களும், பிராமணர்களில் முதன்மையானோர் பலரும், உற்சாகமிக்க இதயங்களுடன் (அவர்களுடைய தலைகளில் {கைவைத்து}) மங்கல ஆசிகளைக் கூறினர்.(21) பாண்டவர்கள், தங்கள் தங்கள் நெருப்புகளை நாள்தோறும் வழிபடும் பிராமணர்கள் பலரை வலம் வந்து, அவர்களுக்குத் தலைவணங்கி தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.(22) மகன்களின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டிருந்த மன்னன் திருதராஷ்டிரன், அவனது ராணி (காந்தாரி) மற்றும் நீண்ட கண்களைக் கொண்ட பிருதை {குந்தி} ஆகியோரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு,(23) திருதராஷ்டிரன் மகனான கௌரவ இளவரசன் யுயுத்சுவை தலைநகரில் {ஹஸ்தினாபுரத்தில்} நிறுவிய அவர்கள், குடிமக்களாலும், பெரும் ஞானம் கொண்ட பிராமணர்கள் பலராலும் வழிபடப்பட்டுப் புறப்பட்டுச் சென்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(24)

அஸ்வமேதபர்வம் பகுதி – 63ல் உள்ள சுலோகங்கள் : 24

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்