Thursday, December 05, 2019

அகழப்பட்ட புதையல்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 65

Treasure excavated! | Aswamedha-Parva-Section-65 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 50)


பதிவின் சுருக்கம் : பூதகணங்களுடன் கூடிய சிவனைக் காணிக்கைகளால் நிறைவடையச் செய்த யுதிஷ்டிரன்;.இமயத்தில் இருந்து செல்வத்தை எடுத்துக் கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்பியது...


பிராமணர்கள், "உயர் ஆன்மாவான முக்கண் மஹாதேவனுக்குக் காணிக்கைகள் அளிக்கப்படட்டும். ஓ! மன்னா, அந்தக் காணிக்கைகளை முறையாக அர்ப்பணித்த பின்னர் நாம் நமது நோக்கத்தை ஈட்ட முனைவோம்" என்றனர்.(1)


அந்தப் பிராமணர்களின் சொற்களைக் கேட்ட யுதிஷ்டிரன், மலைச்சாரலில் கிடக்க விரும்பும் அந்தத் தேவனுக்கு {சிவனுக்கு} காணிக்கைகளை முறையாக அளிக்கச் செய்தான்.(2) விதிப்படி (ஆகுதியான) புனித நெய்யால் (வேள்வி) நெருப்பை நிறைவடையச் செய்த புரோகிதர் (தௌமியர்) மந்திரங்களின் உதவியால் சருவைச் சமைத்து தேவையான சடங்குகளைச் செய்தார்.(3) ஓ! மன்னா, அவர் மலர்கள் பலவற்றை எடுத்து மந்திரங்களால் அவற்றைப் புனிதப்படுத்தினார். மோதகங்கங்கள், பாயஸம் மற்றும் இறைச்சியை அவர் அந்தத் தேவனுக்குக் காணிக்கையளித்தார்.(4) வேதங்களில் நன்கு திறம்பெற்ற தௌமியர், பல்வேறு வகை மலர்கள், மிக மேன்மையான வகைச் சார்ந்த பொரிகள் ஆகியவற்றைக் கொண்டு எஞ்சிய சடங்குகளை {ஸ்விஷ்டகிருத் என்னும் ஹோமத்தை முழுதும் விதிப்படி} செய்தார்.(5)

அடுத்ததாக அவர் மஹாதேவனின் அணிவகுப்பில் அமையும் கிங்கரர்களுக்கு விதிப்படியான காணிக்கைகளை அளித்தார். அடுத்ததாக யக்ஷர்களின் தலைவனான குபேரனுக்கும், மாணிபத்ரனுக்கும் காணிக்கைகள் வழங்கப்பட்டன.(6) அந்தப் புரோஹிதர் {தௌமியர்}, உணவு, கிருஸரம், இறைச்சி மற்றும் எள்ளுடன் கலந்த நிவாபங்கள் {தர்ப்பண நீர்} ஆகியவற்றைப் பல குடங்களில் நிறைத்து, வேறு யக்ஷர்களுக்கும், மஹாதேவனின் தோழர்களான பூதங்களில் முதன்மையாவர்களுக்கும் {பூதபதிகளுக்கும்} முறையான வழிபாட்டைக் காணிக்கையாக்கினார். மன்னன் {யுதிஷ்டிரன்} பிராமணர்களுக்கு ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடையளித்தான்.(7,8)

அதன் பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, (மஹாதேவனுடன் வாழும்) இரவுலாவிகளுக்கு {கணங்களுக்கு} உரிய சடங்குகளின்படி காணிக்கைகளை அளிக்கச் செய்தான். தூப மணத்தால் பரவியிருந்ததும், மலர்களின் நறுமணத்தால் நிறைந்திருந்ததும்,(9) தேவர்களின் தேவனுக்குப் புனிதமானதுமான அந்தப் பகுதி இனிமை நிறைந்ததாக ஆனது. ருத்திர வழிபாடு மற்றும் கணங்கள் அனைத்திற்குமான வழிபாடுகளைச் செய்த பிறகு,(10) வியாசரை முன்னிலையில் நிறுத்திய மன்னன் {யுதிஷ்டிரன்}, புதையல் புதைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றான். பல்வேறு வகை மலர்கள், பிண்டங்கள் மற்றும் கிருஸரம்[1] ஆகியவற்றைக் கொண்ட மதிப்புடனும் அவனை வணங்கி, மீண்டும் கருவூலங்களின் தலைவனை முறையாக வழிபட்டு, சங்கம் மற்றும் நிதி என்ற முதன்மையான ரத்தினங்களையும், ரத்தினங்களின் தலைவர்களான அந்த யக்ஷர்களையும் வழிபட்டு[2],(11,12) பிராமணர்களில் முதன்மையானோர் பலரை வழிபட்டு, அவர்களை ஆசி கூற {ஸ்வஸ்திவாசனம் செய்யச்} செய்த பெரும் பலம் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பிராமணர்களின் சக்தி மற்றும் மங்கல ஆசிகளின் மூலம் வலுவடைந்து,(13) அந்த இடத்தை அகழ {தோண்டச்} செய்தான்.

[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "கிருஸரம் என்பது கோதுமை மாவு, அரிசி மற்றும் எள் ஆகியவற்றால் செய்யப்படுவதாகும்" என்றிருக்கிறது.

[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "நிதி என்பது குபேரனுக்குச் சொந்தமான கருவூலம். இவ்வாறு ஒன்பது நிதிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றே இந்தச் சங்கம். ஒவ்வொரு நிதிக்கும் ஒரு காவலன் {யக்ஷத்தலைவன்} உண்டு" என்றிருக்கிறது.

பல்வேறு இனிய வடிவங்களிலான எண்ணற்ற  பாத்திரங்கள்,(14) பிருங்காரங்கள், கடாஹங்கள், கலசங்கள், வர்தமானகங்கள், அழகிய வடிவிலான எண்ணற்ற பாஜனங்கள் {அன்னப்பாத்திரங்கள், சிறிய குடங்கள், கரண்டிகள், குடங்கள், அண்டாக்கள்,  பானைகள்} ஆகியவை நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் அகழ்ந்து {தோண்டி} எடுக்கப்பட்டன. இவ்வாறு அகழப்பட்ட செல்வங்கள், பாதுகாப்புக்காகப் பெரிய கரபூதங்களில் {மடக்குகளில்} வைக்கப்பட்டன[3].(15,16) அந்தச் செல்வத்தின் ஒரு பகுதி, தராசின் இருமுனைகளைப் போன்ற மரக்கூடைகளுடன் கூடிய தடித்த மர நிலுவைகளில் மனிதர்களின் தோள்களில் சுமக்கச் செய்யப்பட்டன. உண்மையில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, பாண்டு மகனின் அந்தச் செல்வத்தைச் சுமந்து செல்வதற்கு வேறு வழிமுறைகளிலான செல்கலன்களும் {விலங்குகள் பூட்டப்பட்ட வண்டிகளும்} இருந்தன[4].(17) ஓ! ஏகாதிபதி, அங்கே அறுபதாயிரம் ஒட்டகங்களும், ஒருலட்சத்து இருபதாயிரம் குதிரைகளும், ஒரு லட்சம் யானைகளும் இருந்தன.(18) அதே அளவு {ஒரு லட்சம்} தேர்களும், அதே அளவு வண்டிகளும், அதே அளவு பெண் யானைகளும் இருந்தன. கோவேறு கழுதைகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை சொல்ல {எண்ண} முடியாததாக இருந்தது.(19)

[3] "கரபூதம் என்பது சங்கிலி அல்லது கயிறுகளால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரு மரவறைகளைக் கொண்டதாகும். அஃது ஒட்டகங்கள் மற்றும் இளங்காளைகள் சுமப்பதற்கு ஏற்றது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அப்பொழுது, தர்மராஜரான யுதிஷ்டிரர் அதிலிருந்து பலவகையானவைகளும், அழகாக இருப்பவைகளுமான அன்னமெடுக்கக்கூடிய பெரிய பாத்திரங்களையும், சின்னக்குடங்களையும், கரண்டிகளையும், அண்டாக்களையும், குடங்களையும், மடக்குகளையும் அநேக விசித்ரமான பாத்திரங்களையும் ஆயிரக்கணக்காக எடுத்தார். மன்னரே, மனிதரைக் காப்பவரே, அவற்றை ரக்ஷிப்பதற்காகப் பெரிதும் ஸம்புடம் போன்ற வடிவமுள்ளதும், மூடிபோட்டதும் அரைத்துலாம் நிறையுள்ளதுமான ஒரு பாத்திரமும் இருந்தது" என்றிருக்கிறது.

[4] "17ம் ஸ்லோகத்தின் முதல் வரியைப் புரிந்து கொள்ள மிகக் கடினமாக உள்ளது. சொல்லுக்குச் சொல் பொருள் கொண்டால், ஒவ்வொரு பாத்திரமும் மற்றொன்றோடு இணைக்கப்பட்டு, தராசு போலத் தொங்கும் (மொத்த) எடையில் பாதியாக இருந்தது" என்ற பொருள் வரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அரைத்துலாம் நிறையுள்ள ஒரு பாத்திரமும் இருந்தது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மன்னன் ஒரு கம்பத்தின் இரண்டு முனையிலும் இந்தப் பாத்திரங்களில் இருந்து மூன்று லட்சம் பாத்திரங்களை வைத்தான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது. கங்குலியின் உரையே பொருள் கொள்ளக்கூடியதாகத் தெரிகிறது.

யுதிஷ்டிரனால் அகழ்ந்தெடுக்கப்பட்ட அந்தச் செல்வம் அவ்வளவு அதிகமானதாக இருந்தது. ஒவ்வொரு ஒட்டகத்தின் முதுகிலும் பதினாறாயிரம்; ஒவ்வொரு தேரிலும் எட்டாயிரம்; ஒவ்வொரு யானையிலும் இருபத்து நான்காயிரம்; (அதேவேளையில், குதிரைகள், கழுதைகளின் முதுகுகளிலும், மனிதர்களின் முதுகுகள், தோள்கள் மற்றும் தலைகளிலும் மேற்கண்ட எண்ணிக்கையின் விகிதாச்சார அளவில்) {பொன்} நாணயங்கள் வைக்கப்பட்டன[5].(20) இந்த வாகனங்களை அந்தச் செல்வத்தால் நிறைத்த பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் பெருந்தேவனான சிவனை வழிபட்ட பிறகு, தீவில் பிறந்த முனிவரின் {வியாசரின்} அனுமதியுடனும், தன் புரோகிதரான தௌமியரை முன்னணியில் விட்டும், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டுச் சென்றான். மனிதர்களில் முதன்மையானவனும், பாண்டுவின் அரச மகனுமான அவன், ஒரு கோயுதத்தால் (4 மைல்கள் {6.5 கி.மீ.}) அளக்கப்படும் குறுகிய பயணங்களையே ஒவ்வொரு நாளும் மேற்கொண்டான்[6].(21,22) ஓ! மன்னா, சுமந்த சுமையால் பீடிக்கப்பட்ட அந்தப் பெரும்படை, குரு குலத்தைத் தழைக்கச் செய்பவர்கள் அனைவரின் இதயங்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் வகையில், அந்தச் செல்வத்தைச் சுமந்து கொண்டு, தலைநகரம் {ஹஸ்தினாபுரம்} நோக்கித் திரும்பியது" என்றார் {வைசம்பாயனர்}.(23)

[5] கும்பகோணம் பதிப்பில், "யுதிஷ்டிரர் எடுத்த இந்தத் தனம் பதினாறு எட்டு இருபத்துநான்கு ஆயிரம் பாரமாக இருந்தன" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ஓர் ஒட்டகத்திற்கு எட்டாயிரம் பொன்னும், ஒரு வண்டிக்குப் பதினாறாயிரம் பொன்னும், ஒரு யானைக்கு இருபத்துநாலாயிரம் பொன்னும் பார அளவென்றும், இப்படியே குதிரை, கழுதை மனிதர்களுக்கு ஏற்றபடி பாரம் என்றும் பழைய உரை கூறுகிறது" என்றிருக்கிறது.

[6] கும்பகோணம் பதிப்பில், "புருஷஸ்ரேஷ்டரான பாண்டவர், அந்தத் திரவியத்தை இவற்றின் மீது எடுத்துக் கொண்டு மறுபடியும் மஹாதேவரைப் பூஜித்து வியாஸரால் அனுமதி கொடுக்கப்பட்டுப் புரோஹிதரை முன்னிட்டுக் கொண்டு ஹஸ்தினாபுரத்தைக் குறித்து இரண்டு குரோச தூரத்திற்கொருமுறை தங்கியிருந்து சென்றார்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "வேறுபாடம், ஒரு நாளுக்கு இரண்டு குரோசம் வீதம் சென்றாரென்பது" என்றிருக்கிறது. ஒரு குரோசம் என்பது 3 கி.மீ. அல்லது 1.91 மைல்களாகும். பிபேக்திப்ராய் பதிப்பில், "அந்த மனிதர்களில் காலை ஒவ்வொரு நாளும் ஒரு கோவ்யுதி அளவு தொலைவுக்கு அணிவகுத்துச் சென்று அதன்படியே முகாமை அமைத்துக் கொண்டான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "கோவ்யுதி என்பது தொலைவின் அளவீடாகும். இஃது ஒரு பசுவின் ஒலி கேட்கும் தொலைவாகும். எனவே, ஒரு கோவ்யுதி என்பது குத்துமதிப்பாக நான்கு மைல்களாகும்" என்றிருக்கிறது. ஒவ்வொரு பதிப்பிலும் அளவின் பெயர் மாறுபட்டாலும், தொலைவின் அளவு {4 மைல்கள் / 6.5 கி.மீ.} ஒன்றாகவே இருக்கிறது.

அஸ்வமேதபர்வம் பகுதி – 65ல் உள்ள சுலோகங்கள் : 23

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்