Thursday, December 05, 2019

கிருஷ்ணனிடம் வேண்டிய குந்தி! - அஸ்வமேதபர்வம் பகுதி – 66

Kunti's prayer to Krishna! | Aswamedha-Parva-Section-66 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 51)


பதிவின் சுருக்கம் : சுபத்திரை, பலராமன் முதலியோருடன் ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பி வந்த கிருஷ்ணன்; இறந்த குழந்தையை உத்தரை ஈன்றது; குழந்தையை உயிர்ப்பிக்குமாறு கிருஷ்ணனை வேண்டிய குந்தி...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அதேவேளையில், விருஷ்ணிகளுடன் கூடிய பெருஞ்சக்தி கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தான்.(1) தன் சொந்த நகரமான துவாரகை திரும்புவதற்காக அந்த நகரத்தைவிட்டுச் சென்ற போது, மீண்டும் திரும்பி வருமாறு தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} அவன் வேண்டப்பட்டான். எனவே, குதிரை வேள்விக்கெனக் குறிக்கப்பட்ட வேளை வருவதை அறிந்த அந்த மனிதர்களில் முதன்மையானவன் (குரு தலைநகரத்திற்குத்) திரும்பி வந்தான்.(2) ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, யுயுதானன் {சாத்யகி}, சாருதேஷ்ணன், சாம்பன், கதன், கிருதவர்மன், சாரணன், நிசடன், உன்முகன் ஆகியோருடனும், சுபத்திரையுடனும், அணிவகுப்பின் தலைமையில் பலதேவனுடனும் வாசுதேவன் {கிருஷ்ணன்} வந்தான்.(4)


உண்மையில் திரௌபதி, உத்தரை, பிருதை {குந்தி} மற்றும் தங்கள் பாதுகாவலர்களை இழந்த புகழ்பெற்ற க்ஷத்திரியப் பெண்மணிகளுக்கு ஆறுதலளிப்பதற்காக அந்த வீரன் {கிருஷ்ணன்} வந்தான்.(5) அந்த வீரர்கள் வருவதைக் கண்ட மன்னன் திருதராஷ்டிரனும், உயர் ஆன்ம விதுரனும் அவர்களை உரிய கௌரவத்துடன் வரவேற்றனர்.(6) மனிதர்களில் முதன்மையானவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான கிருஷ்ணன், விதுரன் மற்றும் யுயுத்சுவால் நன்கு துதிக்கப்பட்டு, குருவின் தலைநகரில் வசித்து வந்தான்.(7) ஓ! ஜனமேஜயா, ஓ! மன்னா, அவ்வாறு விருஷ்ணி வீரர்கள் குருவின் நகரில் வசித்துக் கொண்டிருந்தபோதுதான் உன் தந்தை {பரிக்ஷித்} பிறந்தான்.(8)

ஓ! ஏகாதிபதி (அஸ்வத்தாமனின்) பிரம்ம ஆயுதத்தால் பீடிக்கப்பட்ட அரசன் பரிக்ஷித், கருவறையை விட்டு வெளியே வந்தபோது, உயிரற்றவனாக இருந்த காரணத்தால் அசைவற்றுக் கிடந்தான். தனது பிறப்பால் குடிமக்கள் அனைவருக்கும் அவன் மகிழ்ச்சியூட்டியிருந்தாலும் மிகவிரைவில் அவர்களைத் துயரில் ஆழச் செய்தான்.(9) இளவரசன் பிறந்ததைக் கேட்ட குடிமக்கள் சிங்க முழக்கம் செய்தனர். கிட்டத்தட்ட திசைப்புள்ளிகள் ஒவ்வொன்றின் விளிம்புகளையும் அவ்வொலி அடைந்தது. எனினும் விரைவில் (இளவரசன் உயிரற்றவனாக இருப்பதை அறிந்தபோது) அவ்வொலி அடங்கியது.(10) கணிசமான அளவுக்கு உணர்வுகளும், மனமும் பாதிக்கப்பட்ட கிருஷ்ணன், யுயுதானனுடன் {சாத்யகியுடன்} கூடியவனாக, அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் விரைவாக நுழைந்தான்.(11) தன் அத்தை (குந்தி) உரக்க அழுதுகொண்ட மீண்டும் மீண்டும் தன்னை {கிருஷ்ணா ஓடிவா என்று} அழைத்துக் கொண்டே வருவதை அவன் கண்டான்.(12) அவளுக்குப் பின்னால், திரௌபதி, புகழ்பெற்ற சுபத்திரை, பாண்டவர்களுடைய உறவினர்களின் மனைவிமார் ஆகியோர் பரிதாபகரமாக அழுது கொண்டிருந்தனர்.(13)

ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, போஜ குல மகளான குந்தி கிருஷ்ணனைச் சந்தித்து, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அவனிடம் இந்தச் சொற்களில்,(14) "ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, உன்னை {கருவறையில்} சுமந்ததன் மூலம் தேவகி சிறந்த தாயாகக் கருதப்படுகிறாள். எங்கள் புகலிடமும், எங்கள் மகிமையும் நீயே. (பாண்டுவின்) இந்தக் குலம் தன் பாதுகாவலனாகக் கொண்ட உன்னையே சார்ந்திருக்கிறது.(15) ஓ! யாதவ வீரா, ஓ! பலமிக்கவனே, உன் தங்கை {சுபத்திரை} மகனுடைய இந்தக் குழந்தை கருவறையில் இருந்து அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டு வெளியே வந்திருக்கிறான்.(16) ஓ! யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, ஓ! பலமிக்கவனே, அஸ்வத்தாமன், வலிமைமிக்க சக்தி கொண்ட பிரம்மாயுதத்தைப் புல்லில் ஈர்த்தபோது, நீ ஏற்ற உறுதி மொழி இதுவே. ஓ! கேசவா, நீ சொன்ன சொற்கள் இவையே. இந்தக் குழந்தை கருவறையில் இருந்து இறந்து பிறந்தால், நான் அவனை உயிர்ப்பிப்பேன் என்று நீ சொன்னாய்.(17)

ஓ! மகனே, அந்தக் குழந்தை இறந்து பிறந்திருக்கிறான். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அவனைப் பார். ஓ! மாதவா, உத்தரை, சுபத்திரை, திரௌபதி ஆகியோரையும், என்னையும், தர்மனின் மகனையும் (யுதிஷ்டிரனையும்), பீமன், பல்குனன் {அர்ஜுனன்}, நகுலன், தடுக்கப்பட முடியாதவனான சகாதேவன் ஆகியோரையும் நீயே காக்க வேண்டும்.(18,19) பாண்டவர்களின் உயிர்மூசும் மற்றும் என் உயிமூச்சும் இந்தக் குழந்தையிலேயே பிணைந்திருக்கின்றன. ஓ! தாசார்ஹ குலத்தோனே, நீ அருளப்பட்டிருப்பாயாக, {என் கணவரான} பாண்டு, என் மாமனார் {விசித்திரவீரியன்} ஆகியோரின் ஈமப்பிண்டமும்,(20) உனக்கு மிகப் பிடித்தவனான உன் அன்புக்குரிய மருமகன் அபிமன்யுவின் ஈமப்பிண்டமும் இவனையே சார்ந்திருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் நன்மையானதை நீ இன்று செய்வாயாக. ஓ! ஜனார்த்தனா, நான் உன்னை உள்ளார்வத்துடன் தூண்டுகிறேன்.(21)

ஓ! பகைவரைக் கொல்பவனே, உத்தரை தன்னிடம் அபிமன்யு சொன்ன சொற்களையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஓ! கிருஷ்ணா, அந்தச் சொற்கள் அவளுக்கு நிச்சயம் மிக இனிமையானவை.(22) ஓ! தாசார்ஹ குலத்தோனே {கிருஷ்ணா}, அர்ஜுனனின் மகன் {அபிமன்யு}, விராடனின் மகளிடம் {உத்தரையிடம்}, "ஓ! அருளப்பட்ட பெண்ணே {கல்யாணி}, உன் மகன், என் தாய்மாமன்களிடம் செல்லப் போகிறான்.(23) விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் வசிப்பிடத்திற்குச் செல்லும் அவன், அங்கே ஆயுத அறிவியலையும் {தனுர் வேதத்தையும்}, உண்மையில் அற்புதம் நிறைந்த ஆயுதங்களையும் {விசித்திரமான அஸ்திரங்களையும்}, அரசியல் மற்றும் அறநெறிகள் குறித்த மொத்த அறிவியலையும் {நீதி சாஸ்திரங்களையும்} அடைவான்" என்று சொல்லியிருக்கிறான்.(24)

ஓ! மகனே, பகைவீரர்களைக் கொல்பவனும், தடுக்கப்பட முடியாத வீரனுமான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, உத்தரையிடம் கொண்ட அன்பினால் இந்தச் சொற்களை அவளிடம் சொல்லியிருக்கிறான்.(25) ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, அபிமன்யுவின் அந்தச் சொற்கள் உண்மையாக நாங்கள் உன்னை வேண்டி வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். காலத்தைக் கருத்தில் கொண்டு உயர்ந்த நன்மையை நீ செய்வாயாக" என்றாள் {குந்தி}.(26)

அகன்ற கண்களைக் கொண்ட குந்தி, விருஷ்ணி குல வீரனிடம் {கிருஷ்ணனிடம்} இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, மற்ற பெண்களுடன் சேர்ந்து தன் இரு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தியவாறு பூமியில் விழுந்தாள்.(27)

கண்ணீரால் கலங்கிய கண்களுடன் கூடிய அவர்கள் {அந்தப் பெண்கள்} அனைவரும், "ஐயோ, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மருமகன் இறந்தே பிறந்தான்" என்று மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.(28)

குந்தி இவ்வாறு சொன்னதும், அவளைத் தன் கரங்களில் பற்றி, பூமியில் இருந்து மெல்ல உயர்த்தி, பின்வருமாறு அவளைத் தேற்றினான்" {என்றார் வைசம்பாயனர்}.(29)

அஸ்வமேதபர்வம் பகுதி – 66ல் உள்ள சுலோகங்கள் : 29

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்