Friday, December 06, 2019

கிருஷ்ணனிடம் வேண்டிய உத்தரை! - அஸ்வமேதபர்வம் பகுதி – 68

Uttara's prayer to Krishna! | Aswamedha-Parva-Section-68 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 53)


பதிவின் சுருக்கம் : குழந்தையை உயிர்ப்பிக்குமாறு கிருஷ்ணனிடம் வேண்டிய உத்தரை...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா, (தங்கையாலும், பிறராலும்) இவ்வாறு சொல்லப்பட்டதும், கேசியைக் கொன்றவனான அவன் {கிருஷ்ணன்}, பெருந்துயரில் பீடிக்கப்பட்டவனாக, "அப்படியே ஆகட்டும்" என்றான். போதுமான உரப்புடன் சொல்லப்பட்ட இந்தச் சொற்கள், அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்தோர் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தது.(1) பலமிக்கவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான கிருஷ்ணன், வியர்வையால் பீடிக்கப்பட்டவன் மீது குளிர்ந்த நீரை ஊற்றுவதைப் போல இந்தச் சொற்களைச் சொன்னதன் மூலம், அங்கே இருந்தோர் அனைவரையும் மகிழ்ச்சியடைச் செய்தான்.(2) பிறகு அவன் {கிருஷ்ணன்}, உன் தந்தை {பரிக்ஷித்} பிறந்த அந்தப் பேற்றறைக்குள் {பிரசவ அறைக்குள்} விரைவாக நுழைந்தான். ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, வெண்மலர் மாலைகள் பலவற்றால்;(3) அனைத்துப் பக்கங்களிலும் முழுவதும் நிறைந்த பல நீர்க்குடங்கள்; ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நெய்யில் ஊறிய திந்துக மரக்கரி மற்றும் கடுகு;(4) அனைத்துப் பக்கங்களிலும் உரிய முறையில் அடுக்கப்பட்ட ஒளிரும் ஆயுதங்கள் மற்றும் பல நெருப்புகள் ஆகியவற்றால் அது {அந்தப் பிரசவ அறை} புனிதப்பட்டிருந்தது. (உன் பாட்டிக்கு {உத்தரைக்குப்} பணிவிடை செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்த இனிய மூதன்னைகள் பலர் அங்கே இருந்தனர்.(5)


ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவனே, நன்கு திறம்பெற்ற புத்திசாலி மருத்துவர்களால் அது சூழப்பட்டிருந்தது. பெருஞ்சக்தியுடன் கூடிய அவன், ராட்சசர்களை அறிந்த மனிதர்களால் அவர்களுக்கு அழிவை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். உன் தந்தை பிறந்த பேற்றறை இவ்வாறு ஆயத்தமாக இருப்பதைக் கண்ட ரிஷிகேசன், மிகவும் மகிழ்ச்சியடைந்து, "நன்று, நன்று" என்று சொன்னான்.(6,7)

விருஷ்ணிகுலத்தோன் இவ்வாறு சொல்லி, மகிழ்ச்சிநிறைந்த தன் முகத்தைக் காட்டிய போது, அங்கே பெரும் வேகத்துடன் வந்த திரௌபதி, விராடன் மகளிடம் {உத்தரையிடம்},(8) "ஓ! அருளப்பட்ட பெண்ணே, உன் கணவனின் தாய்மாமனும், சிந்தனைக்கு எட்டாத ஆன்மா கொண்ட புராதன முனிவனும், வெல்லப்பட முடியாதவனுமான மதுசூதனன் {கிருஷ்ணன்} வந்திருக்கிறான்" என்றாள்.(9)

தன் கண்ணீரை அடக்கிக் கொண்ட விராடன் மகள் {உத்தரை}, துயரால் அடைபட்ட குரலில் இந்தச் சொற்களைச் சொன்னாள். அந்த இளவரசி, முறையாகத் தன்னை மறைத்துக் கொண்டு, கிருஷ்ணனுக்காக மதிப்புடன் காத்திருக்கும் தேவர்களைப் போலவே காத்திருந்தாள்.(10) துயரில் கலங்கிய இதயத்துடன் இருந்த ஆதரவற்றவளான அந்தப் பெண், கோவிந்தன் வருவதைக் கொண்டு இவ்வாறு ஒப்பாரி வைத்தாள்.(11) அவள், "ஓ! தாமரைக் கண்ணரே, பிள்ளையை இழந்த எங்கள் இருவரையும் பாரும். ஓ! ஜனார்த்தனரே, {என் கணவர்} அபிமன்யுவும், நானும் ஒன்றாகக் கொல்லப்பட்டோம்.(12) ஓ! விருஷ்ணிகுலத்தவரே, ஓ! மதுசூதனரே, ஓ! வீரரே, உமக்குத் தலைவணங்கி உம்மை நிறைவடையச் செய்ய முனைகிறேன். துரோணர் மகனின் ஆயுதத்தால் எரிக்கப்பட்ட என்னுடைய இந்தக் குழந்தையை மீட்பீராக.(13)

ஓ! தாமரைக் கண்ணரே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரோ, பீமசேனரோ, நீரோ அந்தச் சந்தர்ப்பத்தில்,(14) "(அஸ்வத்தாமனால் பிரம்ம ஆயுதமாக ஈர்க்கப்பட்ட) இந்தப் புல், தன்னினைவற்ற தாயை அழிக்கட்டும்" என்று சொல்லியிருந்தால், ஓ! பலமிக்கவரே, நான் அழிந்திருப்பேன், இந்த (துயர நிகழ்வும்) நடந்திருக்காது.(15)

ஐயோ, துரோணரின் மகன், தன் பிரம்மாயுதத்தால், கருவறையில் உள்ள குழந்தையை அழிக்கும் இந்தக் கொடுஞ்செயலைச் செய்ததன் மூலம் அறுவடை செய்த நன்மையென்ன?(16) ஓ! பகைவரைக் கொல்பவரே, அதே தாயான நான் இப்போது தலைவணங்குவதன் மூலம் உம்மை நிறைவடையச் செய்ய முனைகிறேன். ஓ! கோவிந்தரே, இந்தக் குழந்தையை மீட்க முடியாமல் போனால் நிச்சயம் நான் என் உயிர்மூச்சைக் கைவிடுவேன்.(17) ஓ! அறம் சார்ந்தவரே, பல எதிர்பார்ப்புகளை நான் அவனில் வைத்திருந்தேன். ஐயோ, ஓ! கேசவரே, துரோணர் மகனால் அவை கெடுக்கப்பட்ட போது, எனக்கு உயிரின் சுமையைச் சுமக்கும் தேவையென்ன இருக்கிறது?(18)

ஓ! கிருஷ்ணரே, ஓ! ஜனார்த்தனரே, மடியில் குழந்தையுடன் நான் உம்மை மதிப்புடன் வணங்குவேன் என்ற நம்பிக்கையை நான் வளர்த்திருந்தேன். ஐயோ, ஓ! கேசவரே, அந்த நம்பிக்கை அழிந்தது.(19) ஓ! அனைத்திலும் முதன்மையானவரே, ஓய்வற்ற கண்களைக் கொண்ட அபிமன்யுவின் வாரிசான இவன் இறந்ததும், என் நெஞ்சில் இருந்த நம்பிக்கைகள் அனைத்தும் அழிந்தன.(20) ஓ! மதுசூதனரே, ஓய்வற்ற கண்களைக் கொண்ட அபிமன்யும் உமது பெரும் அன்புக்குரியவராக இருந்தார். அவருடைய {அபிமன்யுவினுடைய} மகனான இவன் பிரம்மாயுதத்தால் கொல்லப்பட்டதைப் பாரும்.(21)

பாண்டவர்களின் செழிப்பையும், செல்வாக்கையும் அலட்சியம் செய்து யமலோகம் சென்றதன் மூலம் இந்தக் குழந்தையும் அவனது தந்தையைப் போலவே நன்றியற்றவனாகவும், இதயமற்றவனாகவும் இருக்கிறான்.(22) ஓ! கேசவரே, ஓ! வீரரே, போர்க்களத்தில் அபிமன்யு வீழ்ந்தால், தாமதமில்லாமல் நானும் அவரைப் பின்தொடர்வேன் என்று நான் உறுதிமொழியேற்றிருந்தேன்.(23) எனினும், உயிர் மீது அன்பு கொண்ட கொடுமைக்காரியான நான், என் உறுதிமொழியைக் காக்கவில்லை. இப்போது நான் அந்தப் பல்குனர் மகனிடம் {அர்ஜுனர் மகனான அபிமன்யுவிடம்} சென்றால், உண்மையில் அவர் என்ன சொல்வாரோ?" என்று கேட்டாள் {உத்தரை}".(24)

அஸ்வமேதபர்வம் பகுதி – 68ல் உள்ள சுலோகங்கள் : 24

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்