Friday, December 06, 2019

குழந்தையை உயிர்ப்பித்த கிருஷ்ணன்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 69

Krishna revived the child! | Aswamedha-Parva-Section-69 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 54)


பதிவின் சுருக்கம் : குழந்தையைப் பார்த்து ஒப்பாரியிட்ட உத்தரை; குழந்தையின் உயிர் மீட்ட கிருஷ்ணன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஆதரவற்றவளான உத்தரை, தன் குழந்தையைத் திரும்பப் பெற விரும்பி, இந்தப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டு அறிவற்ற ஓர் உயிரினத்தை {பயித்தியம் பிடித்தவளைப்} போலத் துன்பத்துடன் பூமியில் விழுந்தாள்.(1) தன் மகனை இழந்த அந்த இளவரசி {உத்தரை}, மறைக்கப்படாத உடலுடன் பூமியில் கிடப்பதைக் கண்ட குந்தியும், பாரதப் பெண்மணிகள் (பிறர்) அனைவரும் ஆழ்ந்த துயரத்தில் உரக்க அழத் தொடங்கினர்.(2) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒப்பாரிக் குரலை எதிரொலித்துக் கொண்டிருந்த பாண்டவர்களின் மாளிகை, விரையில் எவரும் இருக்க முடியாத துக்கமாளிகையானது[1].(3)


[1] கும்பகோணம் பதிப்பில், "புத்திரனையும், பந்துக்களையும் இழந்தவளும், (பூமியில்) விழுந்திருப்பவளுமான அந்த உத்தரையை (பார்த்துத்) துக்கத்தால் பீடிக்கப்பட்ட குந்தியும் எல்லாப் பரதஸ்திரீகளும் அழுதார்கள். அழுகை சத்தத்தால் ஒலியுள்ளதாகச் செய்யப்பட்ட பாண்டவர்களின் வீடானது ஒரு முகூர்த்த காலம் பார்க்ககூடாததாக இருந்தது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இறந்த மகனுடன் கூடிய அவள், ஆடை கலைந்தவளாகக் கீழே விழுந்து கிடப்பதைக் கண்ட குந்தியும், வேறு பாரதப் பெண்மணிகள் அனைவரும் துயரத்தால் பீடிக்கப்பட்டு ஓலமிட்டனர். ஓ! மன்னா, குறுகிய காலத்தில் பாண்டவர்களின் அந்த வசிப்பிடம் காணத்தகாததானது. அஃது ஒப்பாரியொலிகளை எதிரொலித்துக் கொண்டிருந்தது" என்றிருக்கிறது.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, மகனின் இழப்பால் துன்பத்தில் மிகவும் பீடிக்கப்பட்ட விராடனின் மகள் {உத்தரை}, துக்கத்தாலும், மனவாட்டத்தினாலும் மூர்ச்சையடைந்தவளாகத் தெரிந்தாள்.(4) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, நனவு மீண்ட உத்தரை தன் குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு, இந்த வார்த்தைகளில்,(5) "அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரின் {அபிமன்யுவின்} குழந்தை நீ. விருஷ்ணி குலத்தில் முதன்மையானவரான இவரைக் கண்டும் நீ வணங்காமல் இருப்பதால் பாவத்தை இழைக்கிறாய் என்ற உணர்வு உனக்கில்லையா?(6)

ஓ! மகனே {பரீக்ஷிதே}, உன் தந்தையிடம் {அபிமன்யுவிடம்} சென்று, "என் கணவரான உம்மை இழந்தும், இப்போது என் குழந்தையை இழந்தும், மங்கலமான மற்றும் மதிப்புமிக்க ஏதும் இல்லாத நான் சாகாமல் வாழ்ந்திருப்பதால், உயிரினங்கள் தங்கள் வேளை வருவதற்கு முன் இறப்பது கடினமானதே.(7,8) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் அனுமதியுடன் நான் ஏதேனும் கடும்நஞ்சை விழுங்கப் போகிறேன், அல்லது சுடர்மிக்க நெருப்பில் என்னை விடப்போகிறேன்.(9) ஓ! ஐயா, கணவரையும், குழந்தையையும் இழந்திருந்தாலும் என் இதயம் ஆயிரம் துண்டுகளாகப் பிளக்காமல் இருப்பதால் என் இதயம் அழிவடைவது கடினமே" என்று நான் சொன்னதாக அவரிடம் சொல்வாயாக.(10)

ஓ! மகனே, எழுவாயாக, உன் பூட்டி {உன் தந்தையின் பாட்டியான குந்தி} துயருறுவதைக் காண்பாயாக. கண்ணீரில் குளித்து ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அவள், பெரும் மனவாட்டம் கொண்டவளாகச் சோகக் கடலில் மூழ்கியிருக்கிறாள்.(11) மதிப்புக்குரிய பாஞ்சால இளவரசியையும் {திரௌபதியையும்}, ஆதரவற்ற சாத்வத குல இளவரசியையும் {சுபத்திரையையும்} காண்பாயாக. வேடனால் துளைக்கப்பட்ட மானுக்கு ஒப்பாகத் துன்பத்தில் மிகவும் பீடிக்கப்பட்டிருக்கும் என்னைக் காண்பாயாக.(12) ஓ! குழந்தாய், எழுவாயாக, பெரும் ஞானம் கொண்டவரும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவரும், ஓய்வற்ற பார்வை கொண்ட உன் தந்தைக்கு {அபிமன்யுவுக்கு} ஒப்பானவருமான இந்த உலகங்களின் தலைவருடைய {கிருஷ்ணரின்} முகத்தைக் காண்பாயாக" என்றாள் {உத்தரை}.(13)

இவ்வாறு ஒப்பாரியில் ஈடுபட்டுப் பூமியில் விழுந்த உத்தரையைக் கண்ட அந்தப் பெண்கள் அனைவரும் அவளை உயர்த்தி அமரச் செய்தனர்.(14) மத்யர்களின் மன்னனுடைய {விராடனின்} மகளான அவள், எழுந்து அமர்ந்ததும், பொறுமையை வரவழைத்துக் கொண்டு, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட கேசவனை {கிருஷ்ணனை} வணங்குவதற்காக, மதிப்புடன் கரங்களைக் கூப்பிக் கொண்டு, தன் தலையால் பூமியைத் தீண்டினாள்.(15) இதயம் பிளக்கும் அவளுடைய ஒப்பாரிகளைக் கேட்ட அந்த முதன்மையானவன் {கிருஷ்ணன்}, நீரைத் தீண்டி {ஆஸமனஞ்செய்து}, அந்தப் பிரம்மாயுதத்தை (அதன் சக்தியை} திரும்பப் பெற்றான் {விலக்கினான் / உபஸம்ஹாரம் செய்தான்}[2].(16)

[2] "இந்துக்கள், எந்தச் சடங்கையோ, முக்கியச் செயலையோ செய்வதற்கு முன்னர், ஆஸமனம் என்றழைக்கப்படும் நீரைத் தீண்டும் செயலைச் செய்ய வேண்டும். வலது கையின் உள்ளங்கையில் சிறிதளவு நீரை எடுத்துக் கொண்டு, உதடுகள், மூக்கின் துளைகள், காதுகள் மற்றும் கண்களைத் தீண்டுவதே ஆஸமனம் என்றழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தசார்ஹ குலத்தைச் சேர்ந்த மங்கா மகிமை கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்}, அந்தக் குழந்தைக்குத் தன் உயிரைக் கொடுப்பதாக உறுதியளித்தான். அதன் பிறகு, தூய ஆன்மா கொண்ட அவன் மொத்த அண்டமே கேட்கும் வகையில் இந்தச் சொற்களைச் சொன்னான்.(17) {கிருஷ்ணன்}, "ஓ! உத்தரா, ஒருபோதும் நான் பொய் சொல்லேன். என் சொற்கள் உண்மையாகும். அனைத்து உயிரினங்களின் முன்னிலையிலும் நான் இக்குழந்தையின் உயிரை மீட்பேன்.(18) இதற்கு முன் எப்போதும் கேலிக்காகக் கூடப் பொய் பேசியவனல்லன். போரில் ஒருபோதும் புறமுதுகிட்டவனல்லன். (அந்தச் செயல்களின் தகுதியின் {புண்ணியத்தின்} மூலம்) இந்தக் குழந்தையின் உயிர் மீளட்டும்.(19) அறம் எனதன்புக்குரியதாக இருப்பதைப் போல {இருப்பது உண்மையானால்}, பிராமணர்கள் பேரன்புக்குரியவர்களாக இருப்பதைப் போல {இருப்பது உண்மையானால்}, இறந்தே பிறந்த இந்த அபிமன்யு மகனின் உயிர் (என்னுடைய அந்த மனநிலையின் தகுதியால் {புண்ணியத்தால்}) மீளட்டும்.(20)

எனக்கும், என் நண்பனான விஜயனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் ஒருபோதும் கருத்துவேறுபாடு எழுந்ததில்லை. இறந்த இக்குழந்தையின் உயிர் அந்த உண்மையின் மூலம் மீளட்டும்.(21) வாய்மையும், அறமும் எப்போதும் என்னில் நிறுவப்பட்டிருப்பதைப் போல {நிறுவப்பட்டிருப்பது உண்மையானால்} அபிமன்யுவின் இந்த இறந்த குழந்தையுடைய உயிர் (அந்தத் தகுதிகளால் {புண்ணியங்களால்}) மீளட்டும்.(22) கம்சனும், கேசியும்  என்னால் அறம்சார்ந்து கொல்லப்பட்டதைப் போல {அறம் சார்ந்து கொல்லப்பட்டது உண்மையானால்}, அந்த உண்மையினால் இன்று இந்தக் குழந்தையின் உயிர் மீளட்டும்" என்றான் {கிருஷ்ணன்}.(23)

ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, ஓ! ஏகாதிபதி, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இந்தச் சொற்கள் சொல்லப்பட்ட பிறகு, அந்தக் குழந்தை {பரீக்ஷித்} உயிரூட்டம் பெற்றுப் படிப்படியாக {மெல்ல மெல்ல} அசையத் தொடங்கினான்" என்றார் {வைசம்பாயனர்}[3].(24)

[3] கும்பகோணம் பதிப்பில் இதன்பிறகு, "தாமரைக் கண்ணரான வாஸூதேவர் இவ்விதம் சொல்லிவிட்டு, பிறகு, தாமரை மலர் போலப் பிரகாசிக்கின்றதும், பிரம்மாவினாலும், ருத்திரராலும் பூஜிக்கப்பட்டதுமான பாதத்தால் அக்குழந்தையைக் கால் முதல் தலைவரையில் தடவினார். பரத ஸ்ரேஷ்டரே, மஹாராஜரே, கிருஷ்ணர் தொட்டவுடன், அந்தக் குழந்தை மெள்ள மெள்ளப் பிரஜ்ஞை அடைந்தது. மஹாராஜரே, பிரஜ்ஞையை அடைந்து மெள்ள மெள்ள அசைந்தது" என்றிருக்கிறது. ஆனால், கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் கிருஷ்ணன் தன் பாதத்தால் குழந்தையைத் தடவிப் பிழைக்கச் செய்த செய்தியேதும் இல்லை.

அஸ்வமேதபர்வம் பகுதி – 69ல் உள்ள சுலோகங்கள் : 24

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்