Saturday, December 07, 2019

அபிமன்யுவின் வாரிசு - பரிக்ஷித்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 70

Parikshit - The heir of Abhimanyu! | Aswamedha-Parva-Section-70 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 55)


பதிவின் சுருக்கம் : காரணத்துடன் குழந்தைக்குப் பெயர் சூட்டிய கிருஷ்ணன்; பொற்சுமையுடன் பாண்டவர்கள் வந்து கொண்டிருப்பதைக் கேட்டு வரவேற்கச் சென்ற கிருஷ்ணன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கிருஷ்ணனால் பிரம்மாயுதம் விலக்கப்பட்ட {உபஸம்ஹாரம் செய்யப்பட்ட} அந்த நேரத்தில், உன் தந்தையின் {பரிக்ஷித்தின்} சக்தியால் அந்தப் பேற்றறை {பிரசவ அறை} ஒளி பொருந்திற்று.(1) (அங்கே வந்திருந்த) ராட்சசர்கள் அனைவரும் அந்த அறையைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் {ராட்சசர்களில்} பலர் அழிவையும் அடைந்தனர். ஆகாயத்தில் ஒரு குரல், "நன்று, ஓ! கேசவா, நன்று" என்று சொல்வது கேட்டது.(2) சுடர்மிக்க அந்தப் பிரம்மாயுதம் (உலகங்கள் அனைத்தின்) பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} திரும்பிச் சென்றது. ஓ! மன்னா, உன் தந்தை தன் உயிர்மூச்சைத் திரும்பப் பெற்றான்.(3)


அந்தக் குழந்தை தன் சக்தி மற்றும் வலிமைக்குத் தகுந்தபடி அசைந்தது. பாரதப் பெண்மணிகள் அனைவரும் இன்பத்தால் நிறைந்தனர்.(4) கோவிந்தனுடைய ஆணையின் பேரில், பிராமணர்கள் ஆசிகள் கூறினர் {ஸ்வஸ்திவாசனம் செய்தார்கள்}. இன்பத்தில் நிறைந்திருந்த பெண்கள் அனைவரும் ஜனார்த்தனனைப் புகழ்ந்தனர்.(5) உண்மையில், பாரதச் சிங்கங்களின் மனைவியரான குந்தி, துருபதன் மகள் {திரௌபதி}, சுபத்திரை, உத்தரை ஆகியோரும் மற்றும் மனிதர்களில் சிங்கங்களாகத் திழ்ந்தவர்களின் மனைவிமாரும், (உடைந்த கப்பலிலிருந்து) படகை அடைந்து, கரையை எட்டியவர்களைப் போலப் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.(6)

அப்போது மல்லர்கள் {மற்போர்புரிபவர்கள்}, நடிகர்கள் {நடர்கள்}, கணிகர்கள் {சோதிடர்கள்}, (இளவரசர்களின்) உறக்கத்தைக் குறித்து விசாரிப்பவர்கள்,(7) சூதர்கள், மாகதர்கள், துதிபாடிகள் ஆகியோர் அனைவரும், ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, குரு குலத்தின் புகழால் நிறைந்த நல்லாசிகளைக் கூறியபடியே ஜனார்த்தனனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்தனர்.(8) தன் கைகளில் தன் குழந்தையைச் சுமந்தபடி தகுந்த காலத்தில் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எழுந்த உத்தரை, யதுகுலத்தைத் திளைக்கச் செய்பவனை {கிருஷ்ணனை} மதிப்புடன் வணங்கினாள்.(9)

பெரிதும் மகிழ்ச்சியடைந்த கிருஷ்ணன், மதிப்புமிக்க ரத்தினங்கள் பலவற்றைக் குழந்தைக்குப் பரிசாக வழங்கினான். விருஷ்ணி குலத்தைச் சேர்ந்த வேறு தலைவர்களும் அதையே செய்தனர். அப்போது, ஓ! ஏகாதிபதி, பலமிக்கவனும், வாய்மையை உறுதியாகக் கடைப்பிடிப்பவனுமான ஜனார்த்தனன், உன் தந்தையான அந்தக் குழந்தைக்கு ஒரு பெயரைச் சூட்டினான். {கிருஷ்ணன்}, "அபிமன்யுவின் குழந்தையான இவன், தன் குலம் கிட்டத்தட்ட அழிந்து போகும் நேரத்தில் பிறந்ததால்,(10,11) இவனது பெயர் பரிக்ஷித் என்றிருக்கட்டும்" என்றான்[1]. இதையே அவன் சொன்னான். பிறகு, ஓ! மன்னா, ஓ! பாரதா, உன் தந்தை வளரத் தொடங்கி,(12) மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தான்.

[1] கும்பகோணம் பதிப்பில், "மஹாராஜரே, பிறகு, வ்ருஷ்ணிகளுள் சிறந்தவரும், பிரபுவும், ஸத்யஸந்தருமான கிருஷ்ணர், ஸந்தோஷமடைந்து, அந்த உத்தரைக்கு மிகுதியான ரத்தினங்களைக் கொடுத்து, அப்பொழுது உம்முடைய தகப்பனாருக்கு, ’இந்த அபிமன்யுவின் புத்திரன், குலமானது பரிக்ஷீணமான பொழுது பிறந்ததால் இவனுக்குப் பெயர் "பரிக்ஷித்"’ என்று சொல்லிப் பெயரிட்டார்" என்றிருக்கிறது.

ஓ! வீரா {ஜனமேஜயா}, உன் தந்தை {பரிக்ஷித்} ஒரு மாதக் குழந்தையாக இருந்தபோது, அபரிமிதமான செல்வத்துடன் பாண்டவர்கள் தங்கள் தலைநகருக்கு {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பி வந்தனர். பாண்டவர்கள் அருகில் வந்துவிட்டனர் என்பதைக் கேள்விப்பட்ட விருஷ்ணி குலத்தில் முதன்மையானவர்கள் வெளியே புறப்பட்டுச் சென்றனர்.(14) குடிமக்கள், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்தை {ஹஸ்தினாபுரத்தைப்} பெரும் எண்ணிக்கையிலான மலர்மாலைகளாலும், அழகிய கொடிகளாலும், பல்வேறு வகையான கொடிக்கம்பங்களாலும் அலங்கரித்தனர்.(15)

ஓ! மன்னா, அந்தக் குடிமக்கள் தங்கள்தங்களுக்குரிய மாளிகைகளையும் அலங்கரித்தனர். பாண்டு மகன்களுக்கு நன்மையைச் செய்ய விரும்பிய விதுரன், கோவில்களில் நிறுவப்பட்டிருந்த அந்தந்த {கோவில்} தெய்வங்களுக்குப் பல்வேறு வகையான வழிபாடுகளைச் செய்யும்படி ஆணையிட்டான். நகரத்தின் முக்கிய வீதிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டன.(16,17) உண்மையில், தொலைவில் உள்ள கடல் அலைகளின் மென்முழக்கங்களுக்கு ஒப்பான ஆயிரங்குரல்களின் ஹுங்காரத்தால் அந்த நகரம் {ஹஸ்தினாபுரம்} நிறைந்திருந்தது. தங்கள் தங்கள் தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆடற்கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் குரலுடன் கூடியதாக இருந்த அந்த (குரு) நகரம்},(18) அப்போது வைஸ்ரவணனின் {குபேரனின்} மாளிகைக்கு ஒப்பானதாக இருந்தது[2].

[2] "வைஸ்ரவணனின் வசிப்பிடம் அளகை என்று அழைக்கப்படுகிறது. வைஸ்ரவணன் என்பவன், கருவூலங்களின் தலைவனும், மஹாதேவனின் நண்பனும், யக்ஷர்களின் தலைவனுமான குபேரன் ஆவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அழகிய பெண்களுடன் கூடிய வந்திகள் மற்றும் துதிபாடிகள்,(19) அந்த நகரத்தின் பல்வேறு இடங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்த கொடிகள், அடிவானத்தின் தெற்கு மற்றும் வடக்குத் திசைப்புள்ளிகளைக் காண்பிப்பதைப் போல, காற்றால் இனிமையான மிதக்கச் செய்யப்பட்டன. அரசு அலுவலர்கள் அனைவரும், ரத்தினர்கள் மற்றும் பிற மதிப்பு மிக்கப் பொருட்களைக் கொண்டு வரும் பணியில் வெற்றியடைந்ததன் குறியீடாக மொத்த நாட்டுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய நாளாக அது விளங்குவதாக உரக்க அறிவித்தனர் {பறையறிவித்தனர்}" {என்றார் வைசம்பாயனர்}.(20,21)

அஸ்வமேதபர்வம் பகுதி – 70ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்